என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Anganwadi Centers"
- சமுதாயக்கூடம்- அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டது.
- மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.
விருதுநகர்
விருதுநகர் யூனியன் ஆமத்தூர் கிராமத்தில் ரூ. 25 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம், ரூ. 23.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ள 2 அங்கன்வாடி மைய கட்டிடங்களை விருதுநகர் யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர் தலைமையில் சீனிவாசன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
இந்த விழாவில் விருதுநகர் யூனியன் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சீனிவாசன், கற்பக வல்லி, யூனியன் கவுன்சிலர் அமுதா செல்வராஜ், ஆமத்தூர் பஞ்சாயத்து தலைவர் குறிஞ்சி மலர், அழகர்சாமி, வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆவுடையம்மாள் மற்றும் பஞ்சாயத்து கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீனிவாசன் எம்.எல்.ஏ. பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு குறைகளை கேட்டறிந்தார். பின்னர் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.
- 632 அங்கன்வாடி மையங்களுக்கு சுகாதார பொருட்களை கலெக்டர் வழங்கினார்.
- விருதுநகர் மாவட்டத்தில் கை கழுவும் பழக்கத்ைத ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்டது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் படிக்கும் குழந்தைகளுக்கு, கை கழுவும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் 11 வட்டாரங்களில் உள்ள 1,504 அங்கன்வாடி மையங்களுக்கும் சுமார் ரூ.20 லட்சம் மதிப்பில் சுகாதார பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
முதல்கட்டமாக அருப்புக்கோட்டை, காரியாப்பட்டி, நரிக்குடி, திருச்சுழி, சாத்தூர், வெம்பக்கோட்டை மற்றும் விருதுநகர் வட்டாரங்களில் உள்ள 867 அங்கன்வாடி மையங்களுக்கு சுகாதார பொருட்கள் வழங்கப்பட்டன.
மீதமுள்ள ராஜபாளையம் ஊரகப்பகுதிகளில் உள்ள 136 அங்கன்வாடி மையங்க ளுக்கும், ராஜபாளையம் நகர்ப்பகுதிகளில் உள்ள 62 அங்கன்வாடி மையங்களுக்கும், சிவகாசி வட்டாரத்தில் உள்ள 181 அங்கன்வாடி மையங்களுக்கும், ஸ்ரீவில்லி புத்தூர் வட்டாரத்தில் உள்ள 156 அங்கன்வாடி மையங்களுக்கும், வத்திராயிருப்பு வட்டாரத்தில் உள்ள 102 அங்கன்வாடி மையங்களுக்கும் என மொத்தம் 637 அங்கன்வாடி மையங்களுக்கு சுகாதார பொருட்களை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.
இதில் அவர் பேசியதாவது:-
கல்விக்கு நிகராக சுகாதாரமும் முக்கியமான தாகும். கைகளை தண்ணீர் மற்றும் சோப்பு கொண்டு சுத்தம் செய்வது குழந்தைகளை நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்க எளிய வழியாகும். பள்ளிகளிலும் அங்கன்வாடி மையங்களிலும் முக்கியமான நேரங்களில் கை கழுவும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் விருதுநகர் மாவட்ட நிர்வாகம், சானிடேஷன் பர்ஸ்ட் தொண்டு நிறுவ னத்துடன் இணைந்து சுகாதார பொருட்களை வழங்குகிறது.
இந்த சுகாதார பெட்ட கத்தில் சோப்பு திரவம், கட்டி சோப்புகள் மற்றும் சோப்பு காகிதங்கள், கை கழுவும் வழிமுறைகள் கொண்ட ஸ்டிக்கர் உள்ளன. இவை குழந்தைகளிடையே கை கழுவும் பழக்கத்தை ஊக்குவிக்க உதவும்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு கை கழுவும் பழக்கத்தை ஊக்குவித்து, சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சானிடேசன் பர்ஸ்ட் நிறுவன தலைமை அலுவலர் பத்மபிரியா, மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம்) ராஜம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 1504 அங்கன்வாடி மையங்களிலும் கைத்தூய்மை தினம் அனுசரிக்கப்பட்டது.
- குழந்தைகள் மற்றும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், ரோசல்பட்டி ஊராட்சி, முத்தால் நகர், மகாலிங்கம் தெரு அங்கன்வாடி மையத்தில் உலக கைத்தூய்மை தின நிகழ்ச்சி நடந்தது. இைதயொட்டி கைத்தூய்மையின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர் மேகநாதரெட்டி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
உலக கைத்தூய்மை தினமான இந்த நாளில், பல வகையில் கைகளை சுத்தமாக வைத்து கொள்ள விழிப்புணர்வைத் தந்து நலம் காப்பதே கைத்தூய்மை தினத்தின் நோக்கம் ஆகும். உலக அளவில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் சுகாதாரக் குறைபாடுகளினாலும், தன் சுத்த செயல்பாடுகளை முறையாக கடைப்பிடிக்காததாலும் சுமார் 1½ கோடி குழந்தைகள் இறக்கின்றனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதனை அறிந்த உலக சுகாதார நிறுவனம் 2008-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15-ம் தேதியை ''உலக கைத்தூய்மை தினமாக'' அனுசரிக்க ஆணை பிறப்பித்தது. உணவை உண்ணும் முன்பு, கழிவறை சென்று வந்த பின்பு, வெளியே சென்று வீட்டுக்கு வந்து சிறு குழந்தைகளைத் தூக்கும் முன்பு, மூக்கை சீந்திய பின்பு, தும்மும் போது கைகளை பயன்படுத்திய பின்பு, குப்பைகளை அப்புறப்ப டுத்திய பின்பு, சமைக்கும் முன்பு, சாப்பாட்டை பரிமாறும் முன்பு, மாடி கைப்பிடி பிடித்த வந்த பின்பு, நோயாளிகள், அடிபட்டவர்களுக்கு சிகிச்சை செய்த பின்பு, வீட்டு உபயோகப் பொருட்களை சுத்தம் செய்த பின்பு, செல்லப் பிராணிகளை தொட்ட பின்பு, நூலகங்களில் புத்தகங்களை தேடி எடுத்த பின்பு, தலைக்கு எண்ணை தேய்த்து குழந்தைகளுக்கு தலை வாரிய பின்பு என பல வேலைகளைச் செய்த பிறகு கட்டாயம் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
அனைவரும் கைகளை தூய்மையுடன் பராமரித்து நல்ல வாழ்க்கையை பெறுவோம். விருதுநகர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின்கீழ் செயல்படும் 1504 அங்கன்வாடி மையங்களிலும் உலக கைத்தூய்மை தினம் அனுசரிக்கப்பட்டு, குழந்தைகள் மற்றும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்