search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "opening"

    • கந்தர்வகோட்டையில் இ சேவை மைய திறப்பு விழா நடைபெற்றது
    • சின்னத்துரை எம்எல்ஏ திறந்து வைத்தார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இ சேவை மையத்தை சட்டமன்ற உறுப்பினர் எம் சின்னத்துரை திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் முருகேசன் முருகேசன்,வட்டாட்சியர் வரத. ராமசாமி, திமுக மாவட்ட கழகச் செயலாளர் கே கே செல்லபாண்டியன்,வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் தமிழ் அய்யா,கந்தர்வகோட்டை நகரச் செயலாளர் ராஜா |ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி,சிவரஞ்சனி சசிகுமார், தாமரை. பழனிவேலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஒன்றியக்குழு தலைவர் சுமதி கண்ணதாசன் அனைவரையும் வரவேற்றார்.
    • கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த் திட்டம் குறித்து விளக்க உரை ஆற்றினார்.

    கபிஸ்தலம்:

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அடுத்த கபிஸ்தலத்தில் வேளாண்மை துறை சார்பில் புதிதாக கட்டப்பட்ட துணை விவசாய விரிவாக்கம் மையம், திருமண்டங்குடி ஊராட்சியில் சண்முகம் எம்.பி. நிதியில் இருந்து கட்டப்பட்ட பொது விநியோக மையம், கூனஞ்சேரி, திருவைகாவூர் ஊராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ஊராட்சி அலுவலக கட்டிடங்கள், கொந்தகை ஊராட்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தாமரைச்செல்வன் நிதியில் இருந்து கட்டப்பட்ட பொது விநியோக கட்டிடம் உள்பட ரூ.1 கோடியே 15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 5 புதிய கட்டிடங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார். முன்னதாக ஒன்றியக்குழு தலைவர் சுமதி கண்ணதாசன் அனைவரையும் வரவேற்றார். கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த் திட்டம் குறித்து விளக்க உரை ஆற்றினார்.

    இதில் எம்.பி.க்கள். கல்யாணசுந்தரம், ராமலிங்கம், சண்முகம், அரசு தலைமை கொறடா செழியன், ஜவாஹிருல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தாமரைச்செல்வன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் நாசர், ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவகுமார், சுதா, ஒன்றிய குழு உறுப்பினர்கள் விஜயன், ஹாஜா மைதீன், சுரேஷ், ஊராட்சி தலைவர்கள் பிரபாகரன், பாலசுப்பி ரமணியன், பவுனம்மாள் பொன்னுசாமி, மகாலிங்கம், மகாலட்சுமி பாலசுப்பி ரமணியன், ராஜேந்திரன், வேளாண்மை இணை இயக்குனர் நல்ல முத்துராஜா, பாபநாசம் உதவி வேளாண்மை இயக்குனர் மோகன், வேளாண்மை துணை இயக்குனர் மத்திய திட்டம் ஈஸ்வர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோமதி தங்கம், மற்றும் வேளாண்மை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் பழனிச்சாமி நன்றி கூறினார்.

    • குளித்தலையில் வேப்பம்புண்ணாக்கு அரவை ஆலை தொடங்கப்பட்டது
    • கரூர் மண்டல இணைப்பதிவாளர் கந்தராஜா தொடங்கி வைத்தார்

    கரூர்,

    கரூர் மாவட்டத்தில் குளித்தலை சரகத்தில் குளித்தலை வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் சார்பில் அயன் சிவாயம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் "வேப்பம்புண்ணாக்கு அரவை ஆலை மற்றும் விற்பனையகம்" கரூர் மண்டல இணைப்பதிவாளர் கந்தராஜா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் குளித்தலை சரக துணைப்பதிவாளர் பொறுப்பு ஆறுமுகம் , கரூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் மேலாண்மை இயக்குநர் சந்திரன், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய களஅலுவலர் ரமேஷ், தோகைமலை கள அலுவலர் குமார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் செயலாளர்கள், சங்க உறுப்பினர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

    • மாநகராட்சி சார்பில் ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சிறுபாலங்களை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்.
    • ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் லேக் ஏரியாவி லும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 2 பாகங்கள் கட்டப்பட்டன.

    மதுரை

    மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள டி.எம்.நகர், லேக் ஏரியா பகுதிகளில் மழை காலத்தில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் அமைச்சர் மூர்த்தியிடம் மனு கொடுத்தனர்.

    இதையடுத்து அமைச்ச ரின் உத்தரவுப்படி மாநகராட்சி அதிகாரிகள், மாவட்ட நிர்வாக அலுவ லர்கள் அந்த பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதி மக்கள் இங்கு சிறு பாலம் அமைத்தால் பயன் உள்ளதாக இருக்கும் என அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். எங்கள் பகுதிக்கு பாலம் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து அமைச்சர் மூர்த்தியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் பாலம் அமைப்பதற்கான பணிகளை தொடங்கும்படி அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

    அதன்படி ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் டி.எம். நகரி லும், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் லேக் ஏரியாவி லும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 2 பாகங்கள் கட்டப் பட்டன. இந்த நிலையில் இந்த பாலங்களின் திறப்பு விழா நடந்தது. அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு பாலங்களை திறந்து வைத்தார்.

    பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று அரசு உடனடியாக அதில் கவனம் செலுத்தி நிறைவேற்றி தந்துள்ளது.

    மேலும் வண்டியூரில் இருந்து ரிங் ரோடு வரை சாலை விரிவாக்க பணிகள் செய்யப்பட்டுள்ளது. வருகிற சட்டமன்ற கூட்ட தொடரில் பத்திர பதிவுத்துறையில் மக்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி பொன்வசந்த், பூமிநாதன் எம்.எல்.ஏ., மாநகராட்சி ஆணையாளர் பிரவீன் குமார், மண்டல தலைவர் வாசுகி சசிகுமார், நகர் நல அலுவலர் அரசு, முன்னாள் எம்.எல்.ஏ. கதிரவன், தி.மு.க. பகுதி செயலாளர் சசிகுமார், மதுரை வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இளங்கோ, இந்து சமய மண்டல அறங்காவலர் குழு தலைவர் ரவிச்சந்திரன், குடியிருப் போர் நல சங்க நிர்வாகிகள் பிரகலாதன், பிரேம்சந்த், தினகரன், வக்கீல் இளங்கோ வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ரிங் ரோட்டில் இருந்து கல்மேடு வரை அமைக்கப்பட்டுள்ள புதிய சாலையையும் அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்.

    • ஆதிவாசிகள் நலச்சங்கம், ஊட்டி லவ்டேல் பள்ளி நிா்வாகம் இணைந்து கட்டிக் கொடுத்தது
    • எம்.எல்.ஏ பொன்.ஜெயசீலன் கட்டிடத்தை திறந்து வைத்தாா்

    ஊட்டி

    கூடலூா் நகராட்சியில் உள்ள கோடமூலா பழங்குடி கிராமத்துக்கு ஆதிவாசிகள் நலச்சங்கம், ஊட்டி லவ்டேல் லாரன்ஸ் பள்ளி நிா்வாகம் ஆகியவை இணைந்து அங்கன்வாடி மையம் கட்டிக் கொடுத்து உள்ளன. இந்த கட்டடத்தின் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

    கூடலூா் எம்.எல்.ஏ பொன்.ஜெயசீலன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் கூடலூா் கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா, டி.எஸ்.பி செல்வராஜ், லாரன்ஸ் பள்ளி நிா்வாகி டேவிட் மற்றும் பழங்குடி மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனா். 

    • பாலமேடு பேரூராட்சியில் ரூ.29.60 லட்சம் மதிப்பீட்டில் நவீன பூங்கா, கழிப்பறை வசதியை வெங்கடேசன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.
    • இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் சுமதி பாண்டியராஜன் தலைமை தாங்கினார்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சி பகுதியில் உள்ள மஞ்சமலை நகரில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக சமுதாய கழிப்பறை வசதி மற்றும் பேரூராட்சி அருகே உள்ள வேளார் தெருவில் ரூ.14.60 லட்சம் மதிப்பீட்டில் நவீன சிறுவர் பூங்கா அமைக்கப் பட்டு உள்ளது.

    இதனை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் சுமதி பாண்டியராஜன் தலைமை தாங்கினார். துணை தலைவர் ராமராஜ், செயல் அலுவலர் தேவி, திமுக மாவட்ட அவை தலைவர் பால சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், நகர் செயலாளர்கள் மனோகரவேல் பாண்டியன், ரகுபதி, அலங்காநல்லூர் பேரூராட்சி சேர்மன் ரேணுகா ஈஸ்வரி கோவிந்த ராஜ், துணை சேர்மன் சுவாமிநாதன், ஒன்றிய சேர்மன் பஞ்சு அழகு, ஒன்றிய துணை சேர்மன் சங்கீதா மணிமாறன், விளையாட்டு மேம்பாட்டு அணி பிரதாப், இளைஞரணி சந்தனகருப்பு, அணி அமைப்பாளர்கள் யோகேஷ், தவசதிஷ், ராகுல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தங்கமயில் ஜூவல்லரியின் ‘சில்வர் ஸ்மைல்’ புதிய ஷோரூம் திறப்பு விழா நாளை தொடங்குகிறது.
    • புதிய ஷோரூம் திறப்பு விழாவில் தங்கமயில் நிறுவன தலைவர்களும், வாடிக்கை யாளர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர் என அந்நிறுவ னத்தின் சார்பில் தெரி விக்கப்பட்டு இருக்கிறது.

    மதுரை

    மதுரையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் தங்கமயில் ஜூவல்லரி நிறுவனம் "சில்வர் ஸ்மைல்" என்கிற புதிய கிளையை மதுரை நேதாஜி ரோட்டில் தங்கமயில் ஜூவல்லரி அருகில் நாளை (ஞாயிற்றுக் கிழமை) முதல் தொடங்கு கிறது.

    இந்த புதிய ஷோரூமில் வெள்ளி மோதிரம், காப்பு, தோடு, செயின் டாலர்கள் என லேட்டஸ்ட் டிசைன் களில் உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும் வெள்ளியில் தங்கம் முலாம் பூசப்பட்ட மாலை, நெக்லஸ், வளையல், ஒட்டியாணம் மற்றும் பரிசு பொருட்கள் என இளம் தலைமுறை யினருக்கு பிடித்த பொருட்களை அறிமுகம் செய்கிறது.

    மதுரையின் பெருமை யான மீனாட்சி அம்மனின் திருவுருவம் பதித்த விக்ரகம், படங்கள், பரிசு பொருட்கள் என தனிப்பிரிவை உருவாக்கியுள்ளது. புதிய ஷோரூம் திறப்பு விழாவில் தங்கமயில் நிறுவன தலைவர்களும், வாடிக்கை யாளர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர் என அந்நிறுவ னத்தின் சார்பில் தெரி விக்கப்பட்டு இருக்கிறது.

    • பள்ளி கூடுதல் கட்டிடம் திறக்கப்பட்டது.
    • தலைமை ஆசிரியை ஜீவா, ஒன்றிய கவுன்சிலர் வைத்தீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். போதிய இட வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் தற்போது ரூ.29 லட்சம் செலவில் நவீன வசதிகளுடன் கூடுதல் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த கட்டிடத்தின் திறப்பு விழா கீழடி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடசுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் கட்டிடத்தை திறந்து வைத்தனர். தலைமை ஆசிரியை ஜீவா, ஒன்றிய கவுன்சிலர் வைத்தீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சியில்பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு
    • கட்டிடத்தை பார்வையிட்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

    அகரம்சீகூர்,  

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழப்பெரம்பலூர் நடுநிலைப் பள்ளியில் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் 3 வகுப்பறை கட்டிடம், வ.கீரனூர் நடுநிலைப் பள்ளியில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிடம் ஆகிய புதிய வகுப்பறைக் கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கற்பகம் கீழப்பெரம்பலூர் மற்றும் வ.கீரனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் குத்துவிளக்கு ஏற்றி பள்ளிக் கட்டிடத்தை பார்வையிட்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

    இந்நிகழ்வுகளில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்லலிதா, ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர்கள் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட ஊராட்சிக்குழுத் துணைத்தலைவர் முத்தமிழ்ச்செல்வி மதியழகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகுமார்,செந்தில் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஸ்ரீனிவாச அறக்கட்டளை புனரமைத்து உள்ளது
    • நிகழ்ச்சியில் பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெலாகோட்டை ஊராட்சி, சோலாடி பகுதியில் அங்கன்வாடி மையம் உள்ளது.

    இதனை தற்போது ஸ்ரீனிவாச அறக்கட்டளை புனரமைத்து உள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது.அப்போது கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவி கீர்த்தனா, நெலாக்கோட்டை ஊராட்சி தலைவர் டெர் மிலா, ஸ்ரீனிவாச அறக்கட்டளை செயலாளர் சுந்தர்ரா ஜன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தேவகுமாரி ஆகியோர் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தனர்.

    நிகழ்ச்சியில் சோலடி பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி குழந்தைகள், பெற்றோர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அரியலூரில் ரூ.347 கோடியில் புதிதாக கட்டப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது
    • மருத்துவமனை செயல்பாட்டுக்கு வந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அரியலூர்,

    அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி அரியலூர்-செந்துறை சாலையில் 26 ஏக்கர் பரப்பளவில் ரூ.347 கோடி மதிப்பில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது. இங்கு தரைத்தளம் மற்றும் 2 மாடிகளுடன் கூடிய நிர்வாக அலுவலகம், 6 மாடிகளுடன் கூடிய மருத்துவக்கல்லூரி, வங்கி, அஞ்சல் நிலையம், மருத்துவக்கல்லூரி முதல்வருக்கு தரைத்தளம் மற்றும் முதல் மாடியுடன் கூடிய கட்டிடம், 9 நவீன ஆபரேஷன் தியேட்டர்கள், மாணவ-மாணவிகளுக்கு 5 மாடிகள் கொண்ட விடுதி கட்டிடம், பேராசிரியர்கள், உதவிப்பேராசிரியர்கள், அலுவலர்களுக்கான குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. சுமார் 700 படுக்கை வசதிகள் கொண்ட இந்த மருத்துவமனையில் உள் நோயாளிகளுக்கு மட்டும் பகுதி நேரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்தநிலையில் கடந்த வாரம் முதல் இந்த மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. உள்நோயாளிகளுக்கு பழைய அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிய மருத்துவமனைக்கு உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவு மாற்றப்பட்டுள்ளது. இங்கு எம்.ஆர்.ஐ. சி.டி. ஸ்கேன் அமைக்கும் பணிகள் மட்டும் தற்போது நடந்து வருகிறது. அந்த பணிகளும் விரைந்து முடிக்கப்பட்டு ஒரு வாரத்திற்குள் திறக்கப்படும் என தெரிகிறது.தற்சமயம் பழைய அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டும், குழந்தைகள் சிகிச்சை வார்டும் மட்டும் செயல்பட்டு வருகிறது. கூடிய விரைவில் இந்த வார்டுகளையும் புதிய மருத்துவமனைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதிய மருத்துவமனை தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளதால் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • விராலிமலையில் விஜய் பயிலகம் தொடக்கம்
    • மாவட்ட தலைவர் ஜாபர் பர்வேஸ் திறந்துவைத்தார்

    விராலிமலை, 

    விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விராலிமலையில் தளபதி விஜய் பயிலகம் தொடங்கப்பட்டது. இதில் 1 முதல் 5 வரை படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க ஏற்பாடு செய்யப்ப ட்டுள்ளது.விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கடந்த ஜூன் மாதம் 17-ம் தேதி, 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி நலத்திட்ட உதவிகள் நடிகர் விஜய் வழங்கினார். இதையடுத்து, நிர்வாகிக ளுடன் 3 நாட்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    அப்போது, ஏற்கனவே கடலூரில் ஓராண்டாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் செயல்படுத்த ப்பட்டு வரும் பாடசாலையில் படித்த பல மாணவர்கள் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று ள்ளனர் என நிர்வாகிகள் தெரிவித்தனர். இதைக் கேட்ட விஜய், இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் செய ல்படுத்த முடிவெடுத்தார்.

    அந்த வகையில், காமராஜர் பிறந்த நாளில் இரவு நேர பாடசாலை தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் தொடங்க வேண்டும் என நிர்வாகிக ளுக்கு அறிவுறுத்தினார்.இந்நிலையில், காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ம் தேதி முதற்கட்டமாக தமிழகத்தில் 14 இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தளபதி விஜய் பயிலகம் என்ற பெயரில் இரவு நேர பாடசாலை தொடங்கப்பட்டது.அந்த வகையில் விராலி மலை சட்டப்பே ரவைத் தொகுதிக்குட்பட்ட விராலி மலை தேரடி வீதியில் விஜய் பயிலகம் தொடங்கப்பட்டது. இதை புதுக்கோட்டை மாவட்ட தலைவர் ஜாபர் பர்வேஸ் திறந்துவைத்து 20 மாணவ, மாணவிகளுக்கு பள்ளி பைகள், நோட், புத்தகங்கள், ஸ்டேஷனரி பொருட்களை வழங்கினார். இதில் ஒன்றிய நிர்வாகிகள் தங்கம் பழனி,சரவணன்,வ ரதராஜன்,தர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    ×