search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடலூர் கோடமூலா பகுதியில் அங்கன்வாடி மையம் திறப்பு
    X

    கூடலூர் கோடமூலா பகுதியில் அங்கன்வாடி மையம் திறப்பு

    • ஆதிவாசிகள் நலச்சங்கம், ஊட்டி லவ்டேல் பள்ளி நிா்வாகம் இணைந்து கட்டிக் கொடுத்தது
    • எம்.எல்.ஏ பொன்.ஜெயசீலன் கட்டிடத்தை திறந்து வைத்தாா்

    ஊட்டி

    கூடலூா் நகராட்சியில் உள்ள கோடமூலா பழங்குடி கிராமத்துக்கு ஆதிவாசிகள் நலச்சங்கம், ஊட்டி லவ்டேல் லாரன்ஸ் பள்ளி நிா்வாகம் ஆகியவை இணைந்து அங்கன்வாடி மையம் கட்டிக் கொடுத்து உள்ளன. இந்த கட்டடத்தின் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

    கூடலூா் எம்.எல்.ஏ பொன்.ஜெயசீலன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் கூடலூா் கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா, டி.எஸ்.பி செல்வராஜ், லாரன்ஸ் பள்ளி நிா்வாகி டேவிட் மற்றும் பழங்குடி மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனா்.

    Next Story
    ×