search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "opening"

    • தீபாவளி கூட்ட நெரிசலை தவிர்க்க திருச்சியில் தற்காலிக பேருந்து நிலையம் திறக்கப்பட்டது
    • 15-ந் தேதி வரை செயல்படும் என்று அறிவிப்பு

    திருச்சி, 

    தீபாவளி, பொங்கல் ஆகிய பண்டிகை தினங்க ளில் அதிக அளவிலான பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல் வது வழக்கம். இதற்காக கூடுதல் அரசு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்ப டும்.

    அவ்வாறான நேரங்களில் பயணிகளின் கூட்ட நெரி சலை தடுக்கும் வகையில் திருச்சியில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுவது வழக்கம்.

    அந்த வகையில் வருகிற 12-ந் தேதி கொண்டா டப்படும் தீபாவளி பண்டி கையை முன்னிட்டு தற்கா லிக பேருந்து நிலையங்கள் அமைப்பதற்கான ஏற்பாடு கள் நடந்தன.

    இதையடுத்து திருச்சியில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை மார்க்கமாக செல்லும் பேருந்துகளுக்காக மத்திய பஸ் நிலையம் அருகேயுள்ள சோனா மீனா திரையரங்கம் அருகே தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.

    அதேபோல் மதுரை மற்றும் புதுக்கோட்டை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மன்னார்புரத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைத்து அங்கிருந்து இயக்கப்பட உள்ளது.

    இதனைத் தொடர்ந்து இதன் தொடக்க விழா இன்று காலை நடைபெற்றது.

    விழாவில் மாநகர காவல்துறை ஆணையர் காமினி கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். போக்குவரத்து கழக பொது மேலாளர் இளங்கோவன், துணை மேலாளர் (வணிகம்) சங்கர், நகர கோட்ட மேலாளர் புகழேந்திராஜ், மற்றும் துணை மேலாளர் (தொழில்நுட்பம்) கார்த்திகேயன், புறநகர் கோட்ட மேலாளர் யேசுராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இன்று (9-ந்தேதி) முதல் 15-ந் தேதி வரை செயல்படும் இந்த தற்காலிக பேருந்து நிலையங்களில், பயணிகள் வசதிக்கான மின்விளக்குகள், கழிவறை, குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.

    • கரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் விற்பனை மையம் திறப்பு விழா நடைபெற்றது
    • கரூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா திறந்து வைத்து பார்வையிட்டார்

    கரூர்,

    கரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கூட்டுறவு நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்கள் விற்பனை மையம் திறக்கப்பட்டது. கோவாப்மார்ட் என்ற இந்த விற்பனை நிலையம் மற்றும் இசேவை மையம் ஆகியவற்றை கரூர் ஜவஹர் பஜாரில், கரூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா திறந்து வைத்து பார்வையிட்டார்.

    கரூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் தயாரிக்கும் அனைத்து பொருட்களும் கோவாப்மார்ட்டில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் இசேவை மையமும் துவங்கப்பட்டுள்ளது. இந்த இசேவை மையத்தில் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் அனைத்து சான்றிதழ்களும் பொதுமக்கள் குறைந்த கட்டணத்தில் பெற்றுப்பயனயடைலாம் எனவும் இணைப்பதிவாளர் தெரிவித்தார். திறப்பு விழாவில் கரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மேலாண்மை இயக்குநரும், பொதுவிநியோகத்திட்ட துணைப்பதிவாளருமான அபிராமி, கரூர் சரக துணைப்பதிவாளர் ஆறுமுகம் மற்றும் சங்கப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கறம்பக்குடி அருகே பகுதி நேர கால்நடை மருத்துவமனை திறக்கப்பட்டது
    • முத்துராஜா எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் கரு கீழத்தெரு மற்றும் வளம் கொண்டான் விடுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அப்பகுதிகளில் பகுதி நேர கால்நடை மருத்துவமனை அமைக்கப்பட்டது.

    இந்த மருத்துவமனை களை புதுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் முத்து ராஜா திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவரும் கறம்பக்குடி தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும் ஊராட்சி மன்ற தலைவருமான தவ பாஞ்சாலன், கறம்பக்குடி ஒன்றிய பெருந்தலைவரும் மாவட்ட மகளிர் அணி தலைவியுமான மாலா ராஜேந்திர துரை, மலையூர் வட்டார கால்நடை மருத்துவ அலுவலர் முத்தழகு,

    கறம்பக்குடி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், ரமேஷ் மற்றும் அரசு ஒப்பந்தக்காரர் கருக்கா குறிச்சி பரிமளம், ஊராட்சி மன்ற தலைவர்கள் சிந்தாமணி முருகேசன், லட்சுமி கோவிந்தன் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள், தி.மு.க. நிர்வாகிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி தந்த எம்எல்ஏவுக்கும், தமிழக அரசுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

    • ஆதிரா’ஸ் பேக்கரிஸ் புதிய கிளையை நகர சபை தலைவர் ஆர்.கே.கார்மேகம் திறந்து வைத்தார்.
    • அனைத்து வகையான இனிப்பு, காரவகைகள் மற்றும் பாதாம் பால், பருத்திப்பால் உள்ளிட்ட பானங்களும் ஆர்டரின் பேரில் குறித்த நேரத்தில் தயாரித்து வழங்க உள்ளோம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பழைய பஸ் நிலையம் ரெயில்வே ஸ்டேஷன் அருகில் ஆதிரா'ஸ் பேக்கரிஸ் புதிய கிளை திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.

    ராமநாதபுரம் தி.மு.க வடக்கு நகர செயலா ளரும், நகரசபை தலைவருமான ஆர்.கே.கார்மேகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.முன்னதாக திறப்பு விழா விற்கு வருகை தந்த நகரசபை தலைவர் உள்ளிட்ட முக்கிய பிரமு கர்களை பேக்கரி உரிமை யாளர்கள் பூங்கொத்து மற்றும் சால்வை அணிவித்து கவுரவித்தனர்.

    ஆதிரா'ஸ் பேக்கரிஸ் உரிமையாளர் சிவசண்மு கம், சசிக்குமார், சதீஷ்குமார் ஆகியோர் 'மாலைமலர்' நிருபரிடம் கூறியதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் எங்களது ஆதி'ராஸ் குழு மங்களின் கிளை தொடர்ந்து வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களின் பேராதர வுடன் நன்மதிப்பை பெற்று செயல்பட்டு வருகிறது.தொடர்ந்து புதிய கிளையை ராமநாதபுரத்தில் தொடங்கி உள்ளோம். வீட்டு விஷே சங்களுக்கு தேவையான அனைத்து வகையான இனிப்பு, காரவகைகள் மற்றும் பாதாம் பால், பருத்திப்பால் உள்ளிட்ட பானங்களும் ஆர்டரின் பேரில் குறித்த நேரத்தில் தயாரித்து வழங்க உள்ளோம்.

    ராமநாதபுரம் நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களின் பேராதரவை வேண்டு கிறோம் என்றார். திறப்பு விழா நிகழ்ச்சியில் ஆதிரா'ஸ் பேக்கரிஸ் உரிமையாளர்கள் சிவ சண்முகம், சசிக்குமார்,நகர் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், ஐஸ்வர்யா குழுமங்களின் உரிமையாளர் தொழிலதிபர் சுப்பு, பேக்கரி உரிமையாளர்கள் சங்க தலைவர் கேணிக்கரை பாலன் ஹோட்டல் உரிமையாளர் சோமு, தி.மு.க அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளர் பழ. பிரதீப் உள்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

    • சென்னை மொபைல்ஸ் புதிய கிளை திறப்பு விழா நாளை நடக்கிறது.
    • பட்டன் போன்‌ வாங்கும் வாடிக்கை யாளர்களுக்கு வெள்ளி நாணயமும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் நகர் சாலை தெருவில் சென்னை மொபைல்ஸ் புதிய கிளை திறப்பு விழா நாளை

    (1-ந்தேதி) நடைபெறுகிறது.

    ராமநாதபுரம் மாவட்டம், தெற்குத்தரவை ஊராட் சியை சேர்ந்த உரிமையாளர் முகமது சாபிர் கூறியதாவது:-

    ராமநாதபுரம் நகர் சாலை தெருவில் சென்னை மொபைல்சின் புதிய கிளை நாளை திறக்கப்பட உள்ளது.

    திறப்பு விழா சிறப்பு சலுகையாக ஸ்மார்ட் போன் வாங்கும் வாடிக்கை யாளர்களுக்கு தங்க நாணயம் மற்றும் பட்டன் போன் வாங்கும் வாடிக்கை யாளர்களுக்கு வெள்ளி நாணயமும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

    தெற்குத்தரவை ஜமாத் தார்கள், ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு கடையை திறந்து வைக்க உள்ளனர்.பொது மக்கள் மற்றும் வாடிக்கை யாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்கு மாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குளித்தலையில் தூய்மை பாரத இயக்க சமுதாய சுகாதார வளாகம் திறக்கப்பட்டது
    • மாணிக்கம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

    குளித்தலை,

    கரூர் மாவட்டம், குளித்தலை அருகே ராஜேந்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட பரளி 8-வது வார்டு பகுதியில் தூய்மை பாரத இயக்கத்தின் சார்பாக ரூ 5 லட்சத்து 25 ஆயிரத்தில் புதியதாக கட்டப்பட்ட சமுதாய கழிப்பறையை மாணிக்கம் எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கேற்றியும் திறந்து வைத்தார், விழாவில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேன்மொழி தியாகராஜன், குளித்தலை மேற்கு ஒன்றிய செயலாளர் பொய்யாமணி தியாகராஜன், ராஜேந்திரம் ஊராட்சி மன்றத் தலைவர் ரத்தினவள்ளி சண்முகம், ஒன்றிய கவுன்சிலர் சங்கீதா பூபதி, துணை தலைவர் வசந்தி பூமிநாதன், தொழிலதிபர் வாளாந்தூர் பழனிச்சாமி , குளித்தலை நகர துணைச் செயலாளர் செந்தில்குமார், பரளி குமார், செந்தில் வேலன், மேட்டு மருதூர் ஆறு பாஸ்கர், ராமசாமி, பன்றி மருதை, பூமிநாதன், சின்னதுரை, பரளி முருகானந்தம், மணிகண்டன், மற்றும் ராஜேந்திரன் ஊராட்சி செயலாளர் பன்னீர்செல்வம் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • புத்தூர் ஊராட்சியில் ரூ.22 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் ஊராட்சி அலுவலக கட்டிடம் கட்டப்பட்டது.
    • மாதானம் ஊராட்சியில் ரூ.11 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே எருக்கூர் ஊராட்சியில் ரூ.42 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி கிராம செயலக கட்டிடம், புத்தூர் ஊராட்சியில் ரூ.22 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் கட்ட ப்பட்ட ஊராட்சி அலுவலக கட்டிடம், மாதானம் ஊராட்சி யில் ரூ.11 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் ஆகிய 3 புதிய கட்டிடங்களை அமைச்சர் மெய்யநாதன் பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.

    விழாவிற்கு கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார்.

    எம்.எல்.ஏ.க்கள் பன்னீர்செல்வம், நிவேதா முருகன், ஒன்றிய ஆணையர் தியாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் ராமலிங்கம் எம்.பி., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் மலர்விழி திருமாவளவன், செல்லசேது ரவிக்குமார், ஊராட்சி தலைவர்கள், காந்திமதி சிவராமன், முத்தமிழ் செல்வி சுப்பையன், வசந்தி முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பூலாம்பாடியில் தினசரி காய்கறி சந்தை திறப்பு விழா நடைபெற்றது
    • அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திறந்துவைத்தார்

    அரும்பாவூர் அக் 26

    பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூரில் சுற்றுப்பகுதியில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் போல் பிளஸ்மேக்ஸ் உழவர் உற்பத்தியாளர் நிறுவன தினசரி காய்கறி சந்தை அமைக்கப்பட்டு உள்ளது.

    இதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பிளஸ் மேக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோ பிரகதீஸ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட கலெக்டர் கற்பகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷியாம்ளாதேவி, பிரபாகரன் எம்.எல்.ஏ., மாவட்ட வன அலுவலர் குகனேஷ், ரோவர் வேளாண் கல்லூரி துணைத்தாளாளர் ஜான்அசோக் வரதராஜன், ஓய்வுபெற்ற டி.ஜி.பி. ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மாநில விவசாயிகள் சங்கச் செயலாளர் எ.கே.ராமசாமி வரவேற்றுப்பேசினார். இதில் சிறப்பு அழைப்பாளராக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு காய்கறி சந்தையை திறந்து வைத்தார். 

    அதனைத்தொடர்ந்து டத்தோ பிரகதீஸ்குமாருக்கு விவசாயிகள் பொதுமக்கள் மாலை மற்றும் சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர். நிறைவாக பிளஸ்மேக்ஸ் உழவர் உற்பத்தியாளர் நிறுவன தினசரி காய்கறிசந்தை ஆலோசகர் விஐபி ராஜா அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.விழாவில் டத்தோ பிரகதீஸ்குமாரின் தந்தை சூரிய பிரகாசம், கோட்டாட்சியர் நிறைமதி, பிளஸ்மேக்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் நந்தினி பிரகதீஸ்குமார், பெரம்பலூர் நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் டி.சி.பி பாஸ்கரன், வேப்பந்தட்டை ஒன்றியக்குழு தலைவர் ராமலிங்கம், பூலாம்பாடி, வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லத்தம்பி, தலைமை செயற்குழு உறுப்பினர் என்.ராஜேந்திரன், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், பேருராட்சித்தலைவர் பாக்கியலட்சுமி, பூலாம்பாடி கவுன்சிலர்கள், மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். 

    • கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பஞ்சப்பட்டி ஊராட்சி மன்ற அலுவல கட்டிடம் திறப்பு
    • குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் திறந்து வைத்தார்

    குளித்தலை, 

    கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பஞ்சப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ரூ.23.57 லட்சத்தில் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்தை, குளித்தலை எம்.எல்.ஏ. இரா.மாணிக்கம் திறந்து வைத்தார்.

    விழாவில் பஞ்சப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி சத்தியமூர்த்தி தலைமை வகித்தார், தொடர்ந்து விழாவில், கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கரிகாலன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாலமுருகன், தி.மு.க. மாணவரணி செயலாளர் கோபிநாத், ஒன்றிய தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி சிவா, அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் பத்மா பொன்ன ம்பலம், குளித்தலை நகர பொருளாளர் தமிழரசன், வைகைநல்லூர் ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் பெரியசாமி, மற்றும் பஞ்சப்பட்டி ஊராட்சி மன்ற உறுப்பி னர்கள் ராஜ்குமார், பழனி யம்மாள், ஜெயலலிதா, கவிதா, செல்வகுமார், காளி தேவி, சேகர், அம்சவல்லி மற்றும் ஊராட்சி செயலா ளர் ராமசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இ சேவை மையம் திறக்கப்பட்டது
    • அமைச்சர் மெய்ய நாதன் திறந்து வைத்தார்

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இ சேவை மையம் தொடக்க விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் மெய்ய நாதன் கலந்து கொண்டு மையத்தை திறந்து வைத்து கணினி இயக்குனர்களிடம் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:-கலைஞர் உரிமைத்தொகை கிடைக்க பெறாமல் இருப்பவர்கள் குறித்து அவர்களது விண்ணப்பத்தை பரிசோதனை செய்து எந்த நிலையில் உள்ளது என்று பிரிண்ட் எடுத்து அந்த மனுவில் இணைத்து வைக்க வேண்டும்.இவ்வாறாக நாள் ஒன்றுக்கு ஒரு ஊராட்சி என்றும், பேரூராட்சியின் விண்ணப்பங்களையும் சேகரித்து விண்ணப்பித்த அனைவருக்கும் கலைஞர் உரிமைத் தொகை கிடைக்கும் அளவில் பணி செய்ய வேண்டும் என்றார்.நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவர் ராசி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் தங்கமணி, நகர செயலாளர் பழனிகுமார், துணை செயலாளர் செங்கோல், கவுன்சிலர்கள் சஷ்டி முருகன், சையது இப்ராகிம், கருணாநிதி, லெட்சுமணன், தி.மு.க. பொறுப்பாளர்கள் ராஜேந்திரன், சுப்பிரமணியன், ஆசைத்தம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதிய மகளிர் சுகாதார வளாகம் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    • சட்ட மன்ற உறுப்பினர் நிதியிலிருந்து குளியல் தொட்டி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டுக் கொண்டார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரநாச்சியார்புரம் கிராமத்தில் மகளிர் சுகாதார வளாகம் அமைத்து தர வேண்டும் என தங்க பாண்டியன் எம்.எல்.ஏ.விடம் பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    அதன்படி சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்து மகளிர் சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டது. இதனை தங்க பாண்டியன்எம்.எல்.ஏ. மகளிர் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    அப்போது அவர் அங்கிருந்த பெண்களிடம் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைத்து விட்டதா? என கேட்டார். அவர்கள் கிடைத்து விட்டது என கூறினர்.

    இந்த சுகாதார வளா கத்தில் அமைக்கப்பட்ட குளியல் தொட்டியை பார்வையிட்ட எம்.எல்.ஏ., அதுபோல் ராஜபாளையம் தொகுதியில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சட்ட மன்ற உறுப்பினர் நிதியிலிருந்து குளியல் தொட்டி அமைக்க நடவடிக்கை மேற்கொள் ளுமாறு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டுக் கொண்டார்.

    இந்நிகழ்வில் ஊரக வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் வசந்தகுமார், ராம மூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் காளியம்மாள், துணை தலைவர் காந்தி, கிளைச்செயலாளர்கள் ஆரோக்கியராஜ் லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருலோகி நெடுந்திடலில் 2 வகுப்பறை கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டது.
    • ரூ.1 கோடியே 89 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள் கட்டி திறக்கப்பட்டது.

    கும்பகோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் அடுத்த வீராக்கன் ஊராட்சி, திருவாய்பாடியில் வானவில் பாலின வள மையம் மற்றும் மற்றும் திருலோகி நெடுந்திடலில் 2 வகுப்பறை கட்டிடங்கள், கூத்தனூர் ஊராட்சியில் அங்கன்வாடி கட்டிடம், இருமூளை ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் உள்பட 9 இடங்களில் ரூ.1 கோடியே 89 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடங்கள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

    விழாவில் மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப், எம்.பி.க்கள் ராமலிங்கம், கல்யாணசுந்தரம், சண்முகம், அரசின் தலைமை கொறடா கோவி. செழியன், ஒன்றியக்குழு தலைவர் தேவி ரவிசந்திரன், துணை தலைவர் அண்ணாதுரை, ஒன்றிய செயலாளர்கள் மிசா மனோகரன், ரவி. உதயசந்திரன், பேரூராட்சி தலைவர் வனிதா ஸ்டாலின், துணை தலைவர் கலைவாணி சப்பாணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜன், நந்தினி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் இளவரசி, ஊராட்சி தலைவர் பிரதாப் சிங் மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×