search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளித்தலையில் சுகாதார வளாகம் திறப்பு
    X

    குளித்தலையில் சுகாதார வளாகம் திறப்பு

    • குளித்தலையில் தூய்மை பாரத இயக்க சமுதாய சுகாதார வளாகம் திறக்கப்பட்டது
    • மாணிக்கம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

    குளித்தலை,

    கரூர் மாவட்டம், குளித்தலை அருகே ராஜேந்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட பரளி 8-வது வார்டு பகுதியில் தூய்மை பாரத இயக்கத்தின் சார்பாக ரூ 5 லட்சத்து 25 ஆயிரத்தில் புதியதாக கட்டப்பட்ட சமுதாய கழிப்பறையை மாணிக்கம் எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கேற்றியும் திறந்து வைத்தார், விழாவில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேன்மொழி தியாகராஜன், குளித்தலை மேற்கு ஒன்றிய செயலாளர் பொய்யாமணி தியாகராஜன், ராஜேந்திரம் ஊராட்சி மன்றத் தலைவர் ரத்தினவள்ளி சண்முகம், ஒன்றிய கவுன்சிலர் சங்கீதா பூபதி, துணை தலைவர் வசந்தி பூமிநாதன், தொழிலதிபர் வாளாந்தூர் பழனிச்சாமி , குளித்தலை நகர துணைச் செயலாளர் செந்தில்குமார், பரளி குமார், செந்தில் வேலன், மேட்டு மருதூர் ஆறு பாஸ்கர், ராமசாமி, பன்றி மருதை, பூமிநாதன், சின்னதுரை, பரளி முருகானந்தம், மணிகண்டன், மற்றும் ராஜேந்திரன் ஊராட்சி செயலாளர் பன்னீர்செல்வம் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×