search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்காலிக பேருந்து நிலையம் திறப்பு
    X

    தற்காலிக பேருந்து நிலையம் திறப்பு

    • தீபாவளி கூட்ட நெரிசலை தவிர்க்க திருச்சியில் தற்காலிக பேருந்து நிலையம் திறக்கப்பட்டது
    • 15-ந் தேதி வரை செயல்படும் என்று அறிவிப்பு

    திருச்சி,

    தீபாவளி, பொங்கல் ஆகிய பண்டிகை தினங்க ளில் அதிக அளவிலான பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல் வது வழக்கம். இதற்காக கூடுதல் அரசு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்ப டும்.

    அவ்வாறான நேரங்களில் பயணிகளின் கூட்ட நெரி சலை தடுக்கும் வகையில் திருச்சியில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுவது வழக்கம்.

    அந்த வகையில் வருகிற 12-ந் தேதி கொண்டா டப்படும் தீபாவளி பண்டி கையை முன்னிட்டு தற்கா லிக பேருந்து நிலையங்கள் அமைப்பதற்கான ஏற்பாடு கள் நடந்தன.

    இதையடுத்து திருச்சியில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை மார்க்கமாக செல்லும் பேருந்துகளுக்காக மத்திய பஸ் நிலையம் அருகேயுள்ள சோனா மீனா திரையரங்கம் அருகே தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.

    அதேபோல் மதுரை மற்றும் புதுக்கோட்டை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மன்னார்புரத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைத்து அங்கிருந்து இயக்கப்பட உள்ளது.

    இதனைத் தொடர்ந்து இதன் தொடக்க விழா இன்று காலை நடைபெற்றது.

    விழாவில் மாநகர காவல்துறை ஆணையர் காமினி கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். போக்குவரத்து கழக பொது மேலாளர் இளங்கோவன், துணை மேலாளர் (வணிகம்) சங்கர், நகர கோட்ட மேலாளர் புகழேந்திராஜ், மற்றும் துணை மேலாளர் (தொழில்நுட்பம்) கார்த்திகேயன், புறநகர் கோட்ட மேலாளர் யேசுராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இன்று (9-ந்தேதி) முதல் 15-ந் தேதி வரை செயல்படும் இந்த தற்காலிக பேருந்து நிலையங்களில், பயணிகள் வசதிக்கான மின்விளக்குகள், கழிவறை, குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×