search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பகுதி நேர கால்நடை மருத்துவமனை திறப்பு
    X

    பகுதி நேர கால்நடை மருத்துவமனை திறப்பு

    • கறம்பக்குடி அருகே பகுதி நேர கால்நடை மருத்துவமனை திறக்கப்பட்டது
    • முத்துராஜா எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் கரு கீழத்தெரு மற்றும் வளம் கொண்டான் விடுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அப்பகுதிகளில் பகுதி நேர கால்நடை மருத்துவமனை அமைக்கப்பட்டது.

    இந்த மருத்துவமனை களை புதுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் முத்து ராஜா திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவரும் கறம்பக்குடி தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும் ஊராட்சி மன்ற தலைவருமான தவ பாஞ்சாலன், கறம்பக்குடி ஒன்றிய பெருந்தலைவரும் மாவட்ட மகளிர் அணி தலைவியுமான மாலா ராஜேந்திர துரை, மலையூர் வட்டார கால்நடை மருத்துவ அலுவலர் முத்தழகு,

    கறம்பக்குடி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், ரமேஷ் மற்றும் அரசு ஒப்பந்தக்காரர் கருக்கா குறிச்சி பரிமளம், ஊராட்சி மன்ற தலைவர்கள் சிந்தாமணி முருகேசன், லட்சுமி கோவிந்தன் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள், தி.மு.க. நிர்வாகிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி தந்த எம்எல்ஏவுக்கும், தமிழக அரசுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

    Next Story
    ×