search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Health Complex"

    • புதிய மகளிர் சுகாதார வளாகம் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    • சட்ட மன்ற உறுப்பினர் நிதியிலிருந்து குளியல் தொட்டி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டுக் கொண்டார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரநாச்சியார்புரம் கிராமத்தில் மகளிர் சுகாதார வளாகம் அமைத்து தர வேண்டும் என தங்க பாண்டியன் எம்.எல்.ஏ.விடம் பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    அதன்படி சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்து மகளிர் சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டது. இதனை தங்க பாண்டியன்எம்.எல்.ஏ. மகளிர் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    அப்போது அவர் அங்கிருந்த பெண்களிடம் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைத்து விட்டதா? என கேட்டார். அவர்கள் கிடைத்து விட்டது என கூறினர்.

    இந்த சுகாதார வளா கத்தில் அமைக்கப்பட்ட குளியல் தொட்டியை பார்வையிட்ட எம்.எல்.ஏ., அதுபோல் ராஜபாளையம் தொகுதியில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சட்ட மன்ற உறுப்பினர் நிதியிலிருந்து குளியல் தொட்டி அமைக்க நடவடிக்கை மேற்கொள் ளுமாறு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டுக் கொண்டார்.

    இந்நிகழ்வில் ஊரக வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் வசந்தகுமார், ராம மூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் காளியம்மாள், துணை தலைவர் காந்தி, கிளைச்செயலாளர்கள் ஆரோக்கியராஜ் லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஏற்காடு ஊராட்சி ஒன்றிய டவுன் ஊராட்சிக்குட்ப்பட்ட ஜெரினாகாடு பகுதிதியில் சுமார் 200 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர்.
    • ஊரக வளர்ச்சி துறை சார்பில் ஆண்கள் பெண்கள் என 2 சுகா தார வளாகங்கள் கட்டப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டது.

    ஏற்காடு:

    ஏற்காடு ஊராட்சி ஒன்றிய டவுன் ஊராட்சிக்குட்ப்பட்ட ஜெரினாகாடு பகுதிதியில் சுமார் 200 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்திற்கு ஏற்காடு ஊரக வளர்ச்சி துறை சார்பில் ஆண்கள் பெண்கள் என 2 சுகா தார வளாகங்கள் கட்டப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டது .

    இதில் கழிவறை, குளியலறை என அனைத்து வசதிகளும் உள்ளது. ஏற்காடு டவுன் ஊராட்சி மன்றம் இதன் பராமரிப்பு பணிகளை கவனித்து வந்தது. அதிகளவில் ஜெரினாகாடு பொது மக்கள் இந்த சுகாதார வளாகத்தை பயன்படுத்தி வந்தனர்.

    பூட்டப்பட்ட வளாகங்கள்

    இந்நிலையில் கடந்த 10 நாட்களாக இந்த சுகாதார வளாகங்கள் பூட்டப்பட்டுள்ளது. இதனால் ஜெரினாகாடு பொது மக்கள் பெருமளவு சிரமப்படுகின்றனர். இது குறித்து ஏற்காடு ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி ரவிசந்திரனிடம் கேட்டபோது:-

    கடந்த 10 நாட்களாக தண்ணீர் தொட்டி மற்றும் எலக்ரீசியன் பணிகள் நடந்தால் இவ்வளாககங்கள் பூட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 10 நாட்களாக சுகாதார வளாகம் பூட்டப்பட்டுள்ளதால் ஜெரினாகாடு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்ப்படுத்தியுள்ளது.

    • ராயலூர் 3-வது வார்டில் 12 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் மற்றும் குழந்தை கள் பயன்பாட்டிற்காக ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது.
    • தண்ணீர் வசதி இல்லாததால் கடந்த சில மாதங்களாக சுகாதார வளாகம் பூட்டியே கிடக்கிறது.

    சங்ககிரி:

    சங்ககிரி சின்னாக் கவுண்டனூர் ஊராட்சி, ராயலூர் 3-வது வார்டில் 12 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் மற்றும் குழந்தை கள் பயன்பாட்டிற்காக ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால் தண்ணீர் வசதி இல்லாததால் கடந்த சில மாதங்களாக சுகாதார வளாகம் பூட்டியே கிடக்கிறது.

    மேலும் பராமரிப்பின்றி கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், பெண்கள், குழந்தைகள் திறந்த வெளிக் கழிப்பிடமாக சாலை ஓரங்களையே பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

    புகார்

    இது குறித்து ஊராட்சி மன்றத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அதிகாரிகள் சுகாதார வளாகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ரூ.1.63 லட்சத்தில் கட்டப்பட்டது
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகில் உள்ள வேப்பேரி கிராமத்தில் 2011-12-ம் ஆண்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் மகளிர் மற்றும் குழந்தைகள் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் ரூ.1.63 லட்சத்தில் கட்டப்பட்டது.

    சிறிது காலம் மக்கள் பயன்பாட்டில் இருந்தது. இதனிடையே, சுகாதார வளாகத்தை மூடி விட்டனர். அங்குள்ள மக்கள் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர்.

    சுகாதார வளாகத்தை திறக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×