search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "national award"

    • சமூக முன்னேற்றத் திற்கான நூலக தகவல் அறிவியல் அமைப்பான சாலிஸ், ஆண்டுதோறும் மாவட்டம், மாநிலம், தேசிய அளவில் சிறப்பாக செயலாற்றி வரும் நூலகர்களுக்கு டாக்டர் வெங்கிடுசாமி தேசிய நல்நூலகர் என்ற விருதை வழங்கி வருகிறது.
    • 2020-ம் ஆண்டிற்கான டாக்டர் வெங்கிடுசாமி தேசிய நல்நூலகர் விருதிற்கு தென்காசி வ.உ.சி. வட்டார நூலக நூலகர் பிரம்மநாயகத்தை சாலிஸ் நிறுவனர் டாக்டர் ஹரிகரன் தலைமையிலான தேர்வுக்குழு தேர்ந்தெடுத்து உள்ளது.

    தென்காசி:

    சென்னையில் செயல்பட்டு வரும் சமூக முன்னேற்றத் திற்கான நூலக தகவல் அறிவியல் அமைப்பான சாலிஸ், ஆண்டுதோறும் மாவட்டம், மாநிலம், தேசிய அளவில் சிறப்பாக சேவையுடன் செயலாற்றி வரும் நூலகர்களுக்கு டாக்டர் வெங்கிடுசாமி தேசிய நல்நூலகர் என்ற விருதை வழங்கி வருகிறது.

    2020-ம் ஆண்டிற்கான டாக்டர் வெங்கிடுசாமி தேசிய நல்நூலகர் விருதிற்கு தென்காசி வ.உ.சி. வட்டார நூலக நூலகர் பிரம்மநாயகத்தை சாலிஸ் நிறுவனர் டாக்டர் ஹரிகரன் தலைமையிலான தேர்வுக்குழு தேர்ந்தெடுத்து உள்ளது.

    இவ்விருது அடுத்த மாதம் 14-ந்தேதி திருசெங்கோட்டில் நடைபெறும் தேசிய மாநாட்டில் வழங்கப்பட உள்ளது.


    தமிழக அரசின் மாநில நல்நூலகர் விருதினை கடந்த 1994-ம் ஆண்டும், 2002-ம் ஆண்டு நல்நூலகர் விருதினையும் பிரம்மநாயகம் பெற்றுள்ளார்.

    மேலும் நூலக வளர்ச்சிப் பணிகள், போட்டிதேர்வு, மாணவர்களுக்கு இலவச பயிற்சி தேர்வு, பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டிகள், புத்தக கண்காட்சி, நூலக வாரவிழாக்கள் உள்ளிட்ட நூலக வளர்ச்சிப் பணிகளுக்கு அங்கீகாரம் வழங்கிடும் வகையில் தற்போது அவரை தேர்வு செய்துள்ளனர்.

    பிரம்மநாயகத்திற்கு மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சிசுந்தரம், கண்காணிப்பாளர் சங்கரன், ஆய்வாளர் கணேசன், நூலகர்கள் சுந்தர், ஜீலியாராஜசெல்வி, நிஹ்மத்துன்னிஸா, வாசகர் வட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் சேகர், துணைத்தலைவர்கள் அருணாசலம், மைதீன், மயிலேறும் பெருமாள், நிர்வாகிகள் சலீம்முகம்மதுமீரான், குழந்தைஜேசு, முருகேசன் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • தேசிய விருது வென்ற ஆசிரியர்களுடன் இன்று மாலை பிரதமர் மோடி கலந்துரையாடல்.
    • அனைத்து ஆசிரியர்களுக்கும் குடியரசுத் தலைவர் வாழ்த்து.

    தொடக்கநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சிறந்த ஆசிரியர்களுக்கு தேசிய விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த விருதுக்காக இந்த ஆண்டு இணைய தளம் வாயிலாக வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்ற மூன்று கட்ட நடைமுறைகள் மூலம் தமிழ்நாடு, புதுச்சேரி, பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, இமாச்சல் பிரதேசம் உள்பட நாடு முழுவதிலுமிருந்து 46 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு 46 ஆசிரியர்களுக்கு தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கி கவுரவிக்கிறார். டெல்லியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மத்திய கல்வித்துறை அமைச்சகம் செய்துள்ளது. இதனை தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு டெல்லி லோக் கல்யாண் மார்க்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    முன்னதாக ஆசிரியர் தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:

    இந்த சந்தர்ப்பத்தில் சிறந்த ஆசிரியரும், தத்துவ மேதையும், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவருமான எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன். மாணவர்களிடம் அறிவு மட்டுமின்றி, மனிதநேய விழுமியங்களை விதைக்க முயற்சிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் அவர் ஒரு முன்னுதாரணம்.

    புதிய ஆராய்ச்சிகள், சோதனைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் மூலம் நமது ஆசிரியர்கள் தொடர்ந்து தங்கள் திறன்களையும் திறமையையும் மேம்படுத்த முயற்சிக்கின்றனர். தேசிய கல்விக் கொள்கை மூலம் நமது கல்வி முறையில் மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. உன்னதமான ஆசிரியத் தொழிலில் அதிக திறமைசாலிகள் சேருவார்கள் என்று நம்புகிறேன்.

    நாட்டின் நலனுக்காக எல்லா வகையிலும் உழைக்கத் தயாராக இருக்கும் பொறுப்புள்ள குடிமக்கள் உருவாகுவதற்கு அவர்களின் முயற்சிகள் காரணமாகும். அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதேபோல் ஆசிரியர்களுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

    • நஞ்சம்மாள் பாடிய பாடல் பட்டி, தொட்டி எங்கும் பிரபலமானது.
    • அட்டப்பாடியில் உள்ள பழங்குடி இனத்தை சேர்ந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கோவை:

    கேரள மாநிலம் அட்டப்பாடியை சேர்ந்தவர் நஞ்சம்மாள். பழங்குடி இனத்தை சேர்ந்த இவர் அட்டப்பாடி பழங்குடியின இளைஞர்கள் 18 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கிய இசைக்குழுவில் கிராமிய பாடகராக இணைந்து பல இசை நிகழ்ச்சிகளில் பாடி வந்தார்இந்த நிலையில் அய்யப்பனும், கோஷியும் என்ற மலையாள திரைப்படத்தை எடுக்க அட்டப்பாடிக்கு இயக்குனர் சச்சி வந்தார். அப்போது அவர் தன்னுடைய படத்தின் கிராமிய பாடல் ஒன்றை பாடுவதற்கு ஒருவரை தேடி உள்ளார்.

    அப்போது தான் அவர் நஞ்சம்மாளை சந்தித்து அவரின் குரல் நன்றாக இருக்கவே அவரை தனது படத்தில் பாட வைத்துள்ளார். படம் வெளியாகி நஞ்சம்மாள் பாடிய பாடல் பட்டி, தொட்டி எங்கும் பிரபலமானது.

    இதற்காக கடந்த ஆண்டு கேரள மாநில விருதை பெற்றார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் மத்திய அரசு அறிவித்த திரைப்படங்களுக்கான தேசிய விருது பட்டியலில் அய்யப்பனும் கோஷியும் படத்தில் பாடிய நஞ்சம்மாளை சிறந்த பின்னணி பாடகியாக தேர்வு செய்துள்ளது.

    இந்த தகவல் வெளியானது முதல் அட்டப்பாடியில் உள்ள பழங்குடி இனத்தை சேர்ந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இந்த நிலையில் இந்த விருதினை பெற்ற நஞ்சம்மாளுக்கு பழங்குடியின குழந்தைகள் படிக்க கூடிய அப்துல்கலாம் ஆதிவாசிகள் உண்டு உறைவிட பள்ளி சார்பில் பாரம்பரிய இசை கருவிகள் முழங்க மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.விருது குறித்து நஞ்சம்மா பேசியதாவது:-

    விருது வாங்கினது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இதனை இயக்குனர் சட்சிக்கும், பழங்குடியினர் மக்களுக்கும் சமர்ப்பிக்கிறேன். எல்லா மக்களுக்குள்ளும் நான் இருக்கிறேன். எனக்கு விருது கிடைக்க காரணமாக அனைத்து மக்களுக்கும், அரசுக்கும் நன்றி.

    நான் யாருன்னு தெரியாதப்ப, கண்டிப்பாக நீ எல்லோருக்கும், தெரிவேன்னு,சொன்ன இயக்குநர் சச்சி சரோட வாக்கு பலித்திருக்கிறது. அவர் எனக்கு கடவுள். இந்த மக்களிடம் என்னை கொண்டு சேர்த்தவர், அவர் இருந்து பார்க்க வேண்டியது, மறைந்துவிட்டார். அவர் என்னுள்ளே இருக்கிறார். இந்த விருதை வைத்து,அவராகவே பார்ப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விருதை பழங்குடி இனத்தை சேர்ந்த கிராமிய பாடல் பாடக்கூடிய நஞ்சம்மாள் பெற்றதன் மூலம் தங்களுடைய பாரம்பரிய கலை உயிர்ப்புடன் மீண்டும் அடுத்த தலைமுறை குழந்தைகள் கற்றுக்கொள்ளும் வா–ய்ப்பாக அமைந்துள்ளதாக ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி கூறினார்.

    • 68- வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன.
    • 2020-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கு விருதுகளை அறிவித்தது மத்திய அரசு.

    கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கம் இருந்ததால் தேசிய விருது அறிவிப்புகள் தள்ளிப்போனது. இந்நிலையில், 2020-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    மடோன் அஷ்வின் இயக்கத்தில் யோகி பாபு, ஷீலா, சங்கிலி முருகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மண்டேலா'. இத்திரைப்படம் முதலில் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு, பின்பு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.


    மண்டேலா

    'மண்டேலா'  திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, சிறந்த திரைக்கதை வசன எழுத்தாளர் மற்றும் சிறந்த அறிமுக இயக்குனருக்கான இந்திரா காந்தி விருது இயக்குனர் மடோன் அஷ்வினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    நிலநடுக்கம், வெள்ளம், தீவிபத்து உள்ளிட்ட பேரிடர் மீட்பு பணியின்போது சிறப்பாக செயல்படுபவர்களுக்கு ஆண்டுதோறும் நேதாஜி விருது வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். #PMModi #Netajiaward
    புதுடெல்லி:

    டெல்லியில் இன்று நடைபெற்ற காவலர்கள் வீரவணக்க நாள் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

    நாட்டுக்காக உழைப்பதில் காவலர்கள் மட்டுமின்றி நிலநடுக்கம், வெள்ளம், தீவிபத்து உள்ளிட்ட பேரிடர் மீட்பு பணியின்போது சிறப்பாக செயல்படும் தேசிய - மாநில பேரிடர் மீட்புப் படையினரின் பங்களிப்பும் அபாரமானது. அவர்களும் நமது வீரம்மிக்க காவலர்கள்தான் என அவர் குறிப்பிட்டார்.



    அவர்களின் வீரத்தை மட்டுமின்றி, அர்ப்பணிப்புணர்வு, தியாகம் ஆகியவற்றை நாடு மறந்துவிடாது. தீவிபத்து, கட்டிட விபத்து, வெள்ளப்பெருக்கில் இருந்து நம்மை காப்பாற்றியவர்கள் யார்? என்பது காப்பாற்றப்பட்டு, உயிர் பிழைத்தவர்களுக்கே தெரியாது என உணர்ச்சி மேலோங்க கூறிய மோடி, இந்த ஆண்டில் இருந்து பேரிடர் காலத்தில் சிறப்பாக சேவையாற்றும் வீரர்களுக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரால் தேசிய விருதுகள் வழங்கப்படும் என அறிவித்தார்.

    ஒவ்வொரு ஆண்டும் நேதாஜியின் பிறந்தநாளான ஜனவரி மாதம் 23-ம் தேதி இந்த விருதுக்கு தேர்வானவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். #PMModi #Netajiaward
    கல்விப் பணியில் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்திய ஆசிரியர்கள் தேசிய விருதுக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம் என மத்திய மனிதவள மேம்பாட்டு மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். #NationalAward #Teachers #Javadekar
    புதுடெல்லி:

    மத்திய மனிதவள மேம்பாட்டு மந்திரி பிரகாஷ் ஜவடேகர் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    கல்விப் பணியில் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்திய மற்றும் தங்களுக்கே உரிய பாணியில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் 50 பேருக்கு வழங்கப்படும் தேசிய விருதுகளை இந்த ஆண்டு முதல் நேரடியாக தேர்வு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான வீடியோ பதிவுகளை ஆசிரியர்கள் ஆன்லைன் மூலம் நேரடியாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.

    ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து 3 ஆசிரியர்களும், மாநிலத்தில் இருந்து 6 பேரும் இவர்களில் இருந்து இறுதியாக 50 ஆசிரியர்களும் தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

    அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா, நவோதயா, சைனிக், சி.பி.எஸ்.இ., சி.ஐ.எஸ்.சி.இ. மற்றும் பள்ளிகள் திபெத்தியர்களுக்கான மத்திய அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் இந்த விருதுக்கு தகுதியானவர்கள்.

    விருதுக்குரிய ஆசிரியர்களை தேசிய அளவிலான நடுவர் ஒருவர் சுதந்திரமான முறையில் தேர்வு செய்வார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுவரை மாநில அரசு பரிந்துரைக்கும் ஆசிரியர்களே தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  #NationalAward #Teachers #Javadekar #tamilnews 
    ×