search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "government school teachers"

    • இப்பயிற்சியை திருப்பூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் நா.கீதா தொடங்கிவைத்தாா்
    • புதிய படைப்புகளுக்கு காப்புரிமை , பரிசு பெறச் செய்வது உள்ளிட்ட பயிற்சிகள் ஆசிரியா்களுக்கு வழங்கப்பட்டன.

    திருப்பூர்:

    மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சாா்பில் அரசு பள்ளி ஆசிரியா்களுக்கான பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டப் பயிற்சி அவிநாசியில் நடைபெற்றது.

    இப்பயிற்சியை திருப்பூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் நா.கீதா தொடங்கிவைத்தாா். இதில் மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) வி.ரத்தினமூா்த்தி கலந்து கொண்டு பேசினாா். மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் எஸ்.கணேசன், பாரதியார் பல்கலைக்கழக கள ஒருங்கிணைப்பாளா் பி.சத்யா ஆகியோா் ஒருங்கிணைத்தனா். இதில் தனித்திறன் மாணவா்கள், புதிய படைப்புகள் உருவாக்கும் மாணவா்கள் ஆகியோரை தோ்ந்தெடுத்து மாநில அளவில் தமிழக அரசு சாா்பில் நடத்தப்படும் போட்டியில் பங்கேற்க செய்வது, மேலும் புதிய படைப்புகளுக்கு காப்புரிமை , பரிசு பெறச் செய்வது உள்ளிட்ட பயிற்சிகள் ஆசிரியா்களுக்கு வழங்கப்பட்டன. இப்பயிற்சியில் திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 94 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 94 வழிகாட்டி ஆசிரியா்கள் பங்கேற்றனா். 

    • ஒரு மாவட்டத்திற்கு சராசரியாக 40 ஆசிரியர்கள் வீதம் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
    • உண்டு உறைவிட பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட உள்ள ஆசிரியர்கள் மன்ற செயல்பாடுகளில் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டிருக்க வேண்டும்

    ஈரோடு:

    தமிழர் நாகரீகம், பண்பாடு, கலாச்சாரம், தொன்மையின் சிறப்பு மற்றும் தமிழகமெங்கும் பரவி இருக்கும் தொல்லியல் தலங்கள் குறித்த தகவல்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சோக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு உண்டு உறைவிடப்பயிற்சி வழங்கப்பட உள்ளது.

    6 நாட்கள் நடைபெற உள்ள இப்பயிற்சிக்கு ஒரு குழுவிற்கு 40 ஆசிரியர்கள் வீதம் 25 குழுவாக மொத்தம் 1.000 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதையடுத்து அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியலை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    ஒரு மாவட்டத்திற்கு சராசரியாக 40 ஆசிரியர்கள் வீதம் இப்பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். உண்டு உறைவிட பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட உள்ள ஆசிரியர்கள் மன்ற செயல்பாடுகளில் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டிருக்க வேண்டும்,

    தமிழர் நாகரீகம், பண்பாடு, தொன்மை, கலாச்சாரம் உள்ளிட்டவைகளை வெளிக்கொணர்வதில் பங்காற்றிய அனுபவம் இருக்க வேண்டும். தொல்லியல் மற்றும் வரலாறு பாடங்களில் ஆர்வமும், விருப்பமும் உள்ளவராக இருக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • செஞ்சி அருகே அரசு பள்ளியில் ஆசிரியர்களை நியமிக்க கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியின் முகப்பு வாயிலை மூடி மாணவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சிட்டாம்பூண்டி கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது, ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 140 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி பயிற்று விப்பதற்காக 5 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர், இப்பள்ளியில் கணித ஆசிரியர் பணியிடங்கள் கடந்த இரண்டு வருடங்களாக காலியாக உள்ள நிலையில் மற்ற ஆசிரியர்கள் கணிதப் படத்தை பயிற்றுவிக்கின்றனர் மேலும் தலைமை ஆசிரியர் 6மாத காலமாக இல்லை எனவும் இதன் காரணமாக மாணவர்களின் கல்வி பாதிப்படைகிறது எனவும், இது சம்பந்தமாக பலமுறை துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கை இல்லை எனவும், உடனடியாக காலியாக உள்ள இடங்களில் ஆசிரியர்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கை வைத்து மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியின் முகப்பு வாயிலை மூடி மாணவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    அரசுப் பள்ளி ஆசிரியர்கள் லாப நோக்கில் டியூசன் எடுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #PrivateTutions #GovtTeachers
    சென்னை:

    பணியிடமாற்றத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

    அரசு பள்ளி ஆசிரியர்கள் பணம் பெற்று லாப நோக்கில் டியூசன் எடுக்கக்கூடாது. டியூசன் எடுக்கும் ஆசிரியர்களை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசிடம் ஊதியம் பெறுபவர்கள் லாப நோக்கத்திற்காக டியூசன் எடுப்பது விதிமீறல். அரசை மிரட்டுவதற்காக ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இளைய சமுதாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆசிரியர்களுக்கு கருணை காட்டக்கூடாது.

    வழக்கு தொடர்ந்த தலைமை ஆசிரியர் ரங்கநாதன் 50 மரக்கன்றுகளை நட உத்தரவிடுகிறேன். மேலும், கோரிக்கை மனு தந்து தலைமையாசிரியையாக ஆன மல்லிகாவும் 50 மரக்கன்றுகளை நடவேண்டும்.



    கல்வி நிலையங்களில் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. எனவே, பள்ளி கல்லூரிகளில்  பாலியல் புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் ஏற்படுத்த வேண்டும். தமிழக அரசு 8 வாரத்தில் இந்த இலவச தொலைபேசி எண்ணை அறிமுகம் செய்யவேண்டும். புகார் கிடைத்த 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். #PrivateTutions #GovtTeachers
    அரசு நிதி உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆதரவாக தி.மு.க. போராட்டம் நடத்த உள்ளதாக புதுவை தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசின் நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகள் மற்றும் சிறுபான்மையினர் பள்ளிகளில் பயிற்றுவிக்கும் நிரந்தர ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு பிரதி மாதம் சம்பளம் வழங்கப்படுவதில்லை. அங்கு 12 ஆண்டு காலம் தற்காலிகமாக பணிபுரியும் ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.

    நிலுவை சம்பளம், பணி நிரந்தரம் கோரி அவர்கள் போராட்டமும் நடத்தி வருகின்றனர். நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை போராட்டத்திற்கு தள்ளிய அரசு அவர்களை அலைகழித்து வருவதை புதுவை மாநில திராவிட முன்னேற்றக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.

    கல்வி உரிமைச்சட்டத்தின் படி அரசு பள்ளியில் பயிற்றுவிக்கும் ஆசியர்களுக்கு என்னென்ன உரிமைகள், சலுகைகள் உள்ளனவோ அவை அத்தனையும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் பொருந்தும். அப்படி இருக்க அரசு நிதி உதவி பெறும் பள்ளியின் 600 நிரந்தர ஆசிரியர்களுக்கு கடந்த 6 மாதமாக சம்பளம் வழங்காமல் இருப்பதுடன் 7-வது ஊதியக்குழு அமல்படுத்தி ஓராண்டாகியும் அவர்களுக்கு வழங்காமல் அரசு அலைகழித்து வருகிறது.

    இதனால் குடும்பச் செலவு, மருத்துவச் செலவு, குழந்தைகளின் கல்வி கட்டணம் ஆகிய அத்தியாவசிய செலவுகளுக்கு அல்லல்படும் நிலைமைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளது வேதனை அளிக்க கூடியதாக உள்ளது.

    இது மட்டுமல்லாமல் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் 244 பேரை பணிநிரந்தரம் செய்ய ஆணை பிறப்பித்தும் அவர்கள் பணிநிரந்தரம் செய்யாமல் அலைகழித்து வருவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.

    இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் அரசு செவிசாய்க்க வில்லை. தமிழகத்தில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு எங்கள் கழக ஆட்சியில் தலைவர் கலைஞர் அவர்கள் 100 சதவீதம் நிதியுதவி வழங்கினார். அது போல் புதுவையிலும் 100 சதவீதம் நிதியுதவி வழங்கி அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

    ஆகவே புதுவை அரசு மற்ற வி‌ஷயங்களில் மெத்தனமாக இருப்பது போல் இந்த விவகாரத்தில் இருக்காமல் அரசு பள்ளிகளுக்கு நிகராக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு சலுகைகள் மற்றும் உரிமைகள் வழங்க வேண்டும், நிலுவை சம்பளம் வழங்க முதல்-அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் அந்த ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் முன்னெடுக்கும் போராட்டத்தை தி.மு.க. தலைமையேற்று நடத்தும் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு சிவா எம்.எல்.ஏ. அறிக்கையில் கூறியுள்ளார்.

    கல்விப் பணியில் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்திய ஆசிரியர்கள் தேசிய விருதுக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம் என மத்திய மனிதவள மேம்பாட்டு மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். #NationalAward #Teachers #Javadekar
    புதுடெல்லி:

    மத்திய மனிதவள மேம்பாட்டு மந்திரி பிரகாஷ் ஜவடேகர் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    கல்விப் பணியில் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்திய மற்றும் தங்களுக்கே உரிய பாணியில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் 50 பேருக்கு வழங்கப்படும் தேசிய விருதுகளை இந்த ஆண்டு முதல் நேரடியாக தேர்வு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான வீடியோ பதிவுகளை ஆசிரியர்கள் ஆன்லைன் மூலம் நேரடியாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.

    ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து 3 ஆசிரியர்களும், மாநிலத்தில் இருந்து 6 பேரும் இவர்களில் இருந்து இறுதியாக 50 ஆசிரியர்களும் தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

    அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா, நவோதயா, சைனிக், சி.பி.எஸ்.இ., சி.ஐ.எஸ்.சி.இ. மற்றும் பள்ளிகள் திபெத்தியர்களுக்கான மத்திய அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் இந்த விருதுக்கு தகுதியானவர்கள்.

    விருதுக்குரிய ஆசிரியர்களை தேசிய அளவிலான நடுவர் ஒருவர் சுதந்திரமான முறையில் தேர்வு செய்வார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுவரை மாநில அரசு பரிந்துரைக்கும் ஆசிரியர்களே தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  #NationalAward #Teachers #Javadekar #tamilnews 
    ×