search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Project Training"

    • இப்பயிற்சியை திருப்பூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் நா.கீதா தொடங்கிவைத்தாா்
    • புதிய படைப்புகளுக்கு காப்புரிமை , பரிசு பெறச் செய்வது உள்ளிட்ட பயிற்சிகள் ஆசிரியா்களுக்கு வழங்கப்பட்டன.

    திருப்பூர்:

    மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சாா்பில் அரசு பள்ளி ஆசிரியா்களுக்கான பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டப் பயிற்சி அவிநாசியில் நடைபெற்றது.

    இப்பயிற்சியை திருப்பூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் நா.கீதா தொடங்கிவைத்தாா். இதில் மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) வி.ரத்தினமூா்த்தி கலந்து கொண்டு பேசினாா். மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் எஸ்.கணேசன், பாரதியார் பல்கலைக்கழக கள ஒருங்கிணைப்பாளா் பி.சத்யா ஆகியோா் ஒருங்கிணைத்தனா். இதில் தனித்திறன் மாணவா்கள், புதிய படைப்புகள் உருவாக்கும் மாணவா்கள் ஆகியோரை தோ்ந்தெடுத்து மாநில அளவில் தமிழக அரசு சாா்பில் நடத்தப்படும் போட்டியில் பங்கேற்க செய்வது, மேலும் புதிய படைப்புகளுக்கு காப்புரிமை , பரிசு பெறச் செய்வது உள்ளிட்ட பயிற்சிகள் ஆசிரியா்களுக்கு வழங்கப்பட்டன. இப்பயிற்சியில் திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 94 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 94 வழிகாட்டி ஆசிரியா்கள் பங்கேற்றனா். 

    • அவிநாசி கருப்புசாமி, அந்தியூா் குணசேகரன், அவல்பூந்துறை செல்வம், சண்முகம் ஆகியோா் பயிற்சி வழங்கினா்.
    • பயிற்சி வகுப்பை அவிநாசி பேருராட்சித் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி தொடங்கி வைத்தாா்

    அவிநாசி:

    அவிநாசியில் பேரூராட்சி செயல் அலுவலா்களுக்கு தூய்மைப் பணியாளா்கள் மேம்பாட்டுத் திட்டப் பயிற்சி நடைபெற்றது.பயிற்சி வகுப்பை அவிநாசி பேருராட்சித் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி தொடங்கி வைத்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் இந்துமதி தலைமை வகித்தாா்.இதில் அவிநாசி கருப்புசாமி, அந்தியூா் குணசேகரன், அவல்பூந்துறை செல்வம், சண்முகம் ஆகியோா் பயிற்சி வழங்கினா். தூய்மைப்பணியாளா்களின் விவரங்களை சேகரிப்பது, முக்கிய தூய்மைப் பணியாளா்களை கண்டறிவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.அவிநாசி, குன்னத்தூா் மற்றும் சாமளாபுரம் பேரூராட்சி செயல் அலுவலா்கள், மேற்பாா்வையாளா்கள், பேரூராட்சிகளின் பரப்புரையாளா்கள், மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் ஆகியோா் பயிற்சி பெற்றனா்.

    • பாடத்திற்கான செயலியை வடிவமைத்தல் மற்றும் மதிப்பிடுதல்" என்ற தலைப்பில் பேசினார்.
    • உடுமலை வட்டாரக் கல்வி அலுவலர் ஆறுமுகம் வாழ்த்தி பேசினார்.

    உடுமலை :

    தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின்கீழ் இயங்கும் மாநிலக்கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படிதிருப்பூர் மாவட்டம், திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும்பயிற்சி நிறுவனத்தின் சார்பாக மாவட்டம் சார்ந்த ஆராய்ச்சிச் செயல்திட்டத்திற்கான பணிமனை உடுமலை கச்சேரி வீதி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் சரவணகுமார் 2022 –- 23 ஆம் கல்வி ஆண்டிற்கான மாவட்டம் சார்ந்த ஆராய்ச்சி செயல் திட்டத்தை "கற்றல் விளைவுகளில் திறன் அடைவைப்பெற தமிழ்ப் பாடத்திற்கான செயலியை வடிவமைத்தல் மற்றும் மதிப்பிடுதல்" என்ற தலைப்பில் பேசினார். அதன் ஒருபகுதியாக உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஆசிரியர்களுக்குக் கற்றல் விளைவுகள் அடிப்படையில் செயல்பாடுகள் மற்றும் மதிப்பீட்டு வினாக்கள் உருவாக்குதல் பணிமனை நடைபெற்றது.

    அதனை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் சங்கர் தொடங்கி வைத்து கற்றல் விளைவுகளின் முக்கியத்துவம் குறித்து ஆசிரியர்களிடம் விளக்கிக் கூறினார். உடுமலை வட்டாரக் கல்வி அலுவலர் ஆறுமுகம் வாழ்த்தி பேசினார்.

    • இடைநிலை ஆசிரிய–ர்களுக்கான “எண்ணும் எழுத்தும்” திட்ட பயிற்சி நடைபெற்றது.
    • இப்பயிற்சியில் ஆர்வத்துடன் கீழையூர் ஒன்றிய பகுதிகளில் உள்ள ஆசிரியர்கள் பங்கேற்று பள்ளி மாணவர்கள் விரும்பி கல்வி கற்க ஏதுவான துணை உபகரண பொருட்களை உருவாக்கினர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம், பிரதாபராமபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரிய–ர்களுக்கான "எண்ணும் எழுத்தும்" திட்ட பயிற்சி நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன் பங்கேற்று பயிற்சியை துவங்கி வைத்தார்.

    அதனைத் தொடர்ந்து குருக்கத்தி ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் காமராஜ் பார்வையிட்டார். பள்ளி கோடை விடுமுறை நாட்களிலும் 5 நாட்கள் நடைபெறும் இப்பயிற்சியில் ஆர்வத்துடன் கீழையூர் ஒன்றிய பகுதிகளில் உள்ள ஆசிரியர்கள் பங்கேற்று பள்ளி மாணவர்கள் விரும்பி கல்வி கற்க ஏதுவான துணை உபகரண பொருட்களை உருவாக்கினர்.

    மாணவர்களுக்குகல்வி மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தும் வகையில் பாடல், கதை, படைப்பாற்றல், கைவண்ணம், பொம்ம–லாட்டம் உள்ளிட்ட செயல்பாடுகள் மூலம் எவ்வாறு எளிமையாக கல்வியை மாணவர்கள் மத்தியில் எடுத்துச் செல்வது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இப்பயிற்சிக்கு கீழையூர் வட்டார கல்வி அலுவலர்கள் லீனஸ், ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இப்பயிற்சிக்கு கருத்தா ளர்களாக ஆசிரியர் பயிற்றுநர்கள் மாட்டின் பாக்யராஜ், மகிமை ரூபஸ் ஆகியோர் பல்வேறு செயல்பாடுகள் குறித்து விளக்கினர். இதில் பள்ளி இடைநிலை ஆசிரியர்களான ராபர்ட் கென்னடி, மாட்டின் சகாயராஜ், அன்பழகன், கலைச் செல்வம், செந்தில் வேல், தமிழ் ராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×