search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு  பள்ளி ஆசிரியா்களுக்கு புத்தாக்க மேம்பாட்டு  திட்டப்பயிற்சி
    X

    கோப்புபடம். 

    அரசு பள்ளி ஆசிரியா்களுக்கு புத்தாக்க மேம்பாட்டு திட்டப்பயிற்சி

    • இப்பயிற்சியை திருப்பூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் நா.கீதா தொடங்கிவைத்தாா்
    • புதிய படைப்புகளுக்கு காப்புரிமை , பரிசு பெறச் செய்வது உள்ளிட்ட பயிற்சிகள் ஆசிரியா்களுக்கு வழங்கப்பட்டன.

    திருப்பூர்:

    மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சாா்பில் அரசு பள்ளி ஆசிரியா்களுக்கான பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டப் பயிற்சி அவிநாசியில் நடைபெற்றது.

    இப்பயிற்சியை திருப்பூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் நா.கீதா தொடங்கிவைத்தாா். இதில் மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) வி.ரத்தினமூா்த்தி கலந்து கொண்டு பேசினாா். மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் எஸ்.கணேசன், பாரதியார் பல்கலைக்கழக கள ஒருங்கிணைப்பாளா் பி.சத்யா ஆகியோா் ஒருங்கிணைத்தனா். இதில் தனித்திறன் மாணவா்கள், புதிய படைப்புகள் உருவாக்கும் மாணவா்கள் ஆகியோரை தோ்ந்தெடுத்து மாநில அளவில் தமிழக அரசு சாா்பில் நடத்தப்படும் போட்டியில் பங்கேற்க செய்வது, மேலும் புதிய படைப்புகளுக்கு காப்புரிமை , பரிசு பெறச் செய்வது உள்ளிட்ட பயிற்சிகள் ஆசிரியா்களுக்கு வழங்கப்பட்டன. இப்பயிற்சியில் திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 94 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 94 வழிகாட்டி ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

    Next Story
    ×