search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "municipal meeting"

    • மக்கள் நலன் சார்ந்த மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காத ஆளுநரை விடுவிக்க வேண்டும்.
    • மொத்தம் 114 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை நகர்மன்ற சாதாரண கூட்டம் அதன் தலைவர் மு. மத்தீன் தலைமையில் நடந்தது. இதில் ஆணையர் சத்தியநாதன் மற்றும் அனைத்து கவுன்சிலர்களும் பங்கேற்றனர். கூட்ட துவக்கத்தில் துணைத்தலைவர் கலைராஜன் திருக்குறளை வாசித்தார். நகராட்சி தலைவரின் நேர்முக உதவியாளர் ரஞ்சித் தீர்மானங்களை வாசித்தார். இதைத்தொடர்ந்து உடுமலை பொள்ளாச்சி சாலை சந்திப்பில் இருந்து திருப்பூர் வரை விரைவுச்சாலையாக மாற்றியமைக்க வலியுறுத்தி நகர்மன்ற தலைவர் மத்தீன் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

    மேலும் உடுமலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்திற்கு கலைஞர் பெயர் வைக்க வேண்டும் .தமிழகத்தில் மக்கள் நலன் சார்ந்த மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காத ஆளுநரை விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்களை மூத்த கவுன்சிலரும் நகர தி.மு.க. செயலாளருமான வேலுச்சாமி கொண்டு வந்தார். மொத்தம் 114 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டதில் ஒரு தீர்மானம் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டு மற்றவை நிறைவேற்றப்பட்டன.

    • தியாகி சுப்ரமணிய சிவா சிலை அமைக்க வேண்டும் பேரூராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
    • பேரூராட்சி சங்கரன் பூங்காவில் சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா சிலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு பேரூராட்சி கூட்டம் பேரூராட்சி தலைவர் சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் தன்ராஜ் முன்னிலை வகித்தார். தலைமை எழுத்தர் செல்லப்பாண்டி தீர்மான அறிக்கை வாசித்தார்.

    கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர் ரவிச்சந்திரன், வத்தலக்குண்டு பேரூராட்சி சங்கரன் பூங்காவில் சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா சிலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு செயல் அலுவலர் தன்ராஜ் சிலை வைப்பதற்கு பல அடிப்படை விதிமுறைகள் உள்ளன.

    மாவட்ட நிர்வாகத்திடம் கலந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் சுகாதாரம் தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    பேரூராட்சி கவுன்சிலர்கள் சின்னத்துரை, சிவா, மணிவண்ணன், தமிழரசி, சுமதி, அழகுராணி, பிரியா, ரமிஜா பேகம், சைதத்நிஷா, சியாமளா ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் சுகாதார ஆய்வாளர் சரவண பாண்டியன் நன்றி கூறினார்.

    • ஜெயங்கொண்டம் நகராட்சி கூட்டத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
    • கீழக்குடியிருப்பு மூன்றாவது மற்றும் நான்காவது வார்டுகளில் மயானத்திற்கும், கொம்மேடு பகுதியில் வேட்டைக்கார தெருவில் தார் சாலை, மின்விளக்கு வசதி செய்த தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகர்மன்ற சாதாரண கூட்டம் தலைவர் சுமதி சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் சித்ரா (பொறுப்பு) வரவேற்றார். துணைத் தலைவர் கருணாநிதி முன்னிலை வகித்தார்.

    தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, ஏரி, குளங்கள் தூர்வாருதல் உள்ளிட்ட பொதுமக்களின் அடிப்படை தேவை மற்றும் வசதிகள் நிறைவேற்றுவது குறித்து உறுப்பினர்கள் வலியுறுத்தி பேசினர். இந்த கூட்டத்தில் நகராட்சியின் செலவினங்கள் உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முன்னதாக இளநிலை உதவியாளர் சாவித்திரி தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் நகராட்சி உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கவுன்சிலர் ரங்கநாதன் பேசுகையில், ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் ராஜேந்திர சோழன் நினைவு வளைவு வைக்க வேண்டும், நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குத்தகைக்காரர்கள் நகராட்சி அனுமதி இன்றி போலி ரசீது தயாரித்து வாரச்சந்தை மற்றும் தினசரி வசூல் செய்து வருவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

    சந்தையை மறு குத்தகைக்கு ஏலம் விட வேண்டும், குத்தகைக்காரர்கள் செலுத்த வேண்டிய பணத்தை வசூல் செய்ய வேண்டும்.

    கீழக்குடியிருப்பு மூன்றாவது மற்றும் நான்காவது வார்டுகளில் மயானத்திற்கும், கொம்மேடு பகுதியில் வேட்டைக்கார தெருவில் தார் சாலை, மின்விளக்கு வசதி செய்த தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து பேசினார்.

    6-வது வார்டு கவுன்சிலர் செல்வராஜ், பஸ் நிலையத்தில் ஆவின் பால்கடை ஏலம் விட வேண்டும், 5-வது வார்டு குஞ்சிதபாதபுரம் பகுதியில் மின்விளக்கு வசதியும், கழிவுநீர் வாய்க்காலும் அமைத்து தர வேண்டும், 18-வது வார்டு கவுன்சிலர் கிருபாநிதி, தூய்மை பணியாளர்கள் தூய்மை பணி முறையாக மேற்கொள்ள வேண்டும் கீழத்தெருவிற்கு நீர்த்தேக்க தொட்டி ஒன்று அமைத்து குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    ஒரு கட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கோரிக்கைகள் கால தாமதம் ஆவதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    சுதந்திர தினத்தன்று வீடுகள் தோறும் கொடியேற்றுவதற்கு கவுன்சிலர்கள் தாங்களுக்கு நகராட்சி வழங்கிய படிப்பணத்தை கொடுத்து உதவினர்.

    • கீழக்கரையில் தரமற்ற முறையில் தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    • ஒவ்வொரு நகராட்சி கூட்டத்திலும் வரவு- செலவு கணக்குகளை வார்டு கவுன்சிலர்களுக்கு முறையாக காண்பிக்க வேண்டும்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி கூட்டம் தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் ஹமீது சுல்தான் முன்னிலை வகித்தார். கமிஷனர் செல்வராஜ் வரவேற்றார்.

    கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

    துணைத் தலைவர் ஹமீது சுல்த்தான்:-

    ஒவ்வொரு நகராட்சி கூட்டத்திலும் வரவு- செலவு கணக்குகளை வார்டு கவுன்சிலர்களுக்கு முறையாக காண்பிக்க வேண்டும். அதை விடுத்து விட்டு எப்போது கேட்டாலும் பின்னர் தருகிறேன் என்று சொல்லி அதனை காட்டாமல் இருப்பது சரியல்ல.

    இதுகுறித்து பலமுறை பேசியும் பயனில்லை. வார்டு குறைகளை நிவர்த்தி செய்யக்கோரி கூட்டத்தில் கூறினாலும் சரி செய்யப்படுவதில்லை.

    பாதுஷா (சுயேட்சை):-

    நகராட்சியில் முன்வைக்கப்படும் தீர்மானங்களை நிறைவே ற்றாமல் மெத்தனப் போக்கை அதிகாரிகள் கடைப்பிடிக்கின்றனர். பொதுமக்களின் பிரதிநிதிதியாக இருந்து குறைகளை நிவர்த்தி செய்வதற்கு மட்டுமே இக்கூட்டம் நடைபெறுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    சேக் உசேன் (சுயேட்சை):-

    கீழக்கரை வடக்குத்தெருவில் தார்சாலை முறையாக அமைக்காததால் தரமற்று உள்ளது. கமிஷனர் ஆய்வு செய்ய வேண்டும். கவுன்சிலர்களின் கேள்விக்கு முறையாக பதில் சொல்லி பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    துணைத்தலைவர்:-

    கேரளாவில் இருந்து கீழக்கரை நகருக்குள் தினமும்அதிக எண்ணிக்கை யில்சுற்றுலா பஸ்கள், வாகனங்கள் வருகிறது.

    இதனால் காலை, மாலையில் போக்குவரத்து நெரிசலால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். போக்குவரத்து தடைபடுகிறது. இதில் தீர்வு காண போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நகராட்சி தலைவர்:-

    கீழக்கரை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் கேரள வாகனங்கள் பிரச்னை தொடர்பாக போலீசாருடன் கலந்து பேசி பிரச்னைக்கு தீர்வு காணப்படும்.

    சப்ரஸ் நவாஸ்:-

    கீழக்கரையில் உள்ள வார்டுகளில் மற்ற நகராட்சிகளில் குடிநீர் வழங்குவது போன்று லாரிகள் மூலமாக குடிநீர் சப்ளை செய்வதற்கு முன்வர வேண்டும்.

    நகராட்சி தலைவர்:-

    நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் பொதுக்குழாய்கள் 39 உள்ளது.

    இவற்றில் 15 பயன்பாட்டில் இருக்கிறது. மீதமுள்ள 24 குழாய்கள் ஆய்வு செய்யப்பட்டு ஒரு மாத கால அவகாசத்தில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    • துறையூர் நகராட்சி கூட்டத்தில் குடிநீர், சாலைப்பணி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வகையில் 69 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
    • 24 வார்டுகளிலும் குடிநீர் அல்லாத பிற பயன்பாட்டுக்கு அமைக்கப்பட்ட குழாய்கள் பழுதடைந்து உள்ளதால் அதனை மாற்றி அமைப்பது தொடர்பாக வார்டு வாரியாக தலா 3 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் கோர முடிவு

    திருச்சி:

    துறையூர் நகராட்சியின் சாதாரண நகர்மன்றக் கூட்டம் தலைவர் செல்வராணி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு நகர செயலாளரும், நகர்மன்றத் துணைத் தலைவருமான மெடிக்கல் முரளி, நகராட்சி ஆணையர் சுரேஷ்குமார், நகராட்சி மேலாளர் முருகராஜ், நகராட்சி பொறியாளர் தாண்டவமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் துறையூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலும் குடிநீர் அல்லாத பிற பயன்பாட்டுக்கு அமைக்கப்பட்ட குழாய்கள் பழுதடைந்து உள்ளதால் அதனை மாற்றி அமைப்பது தொடர்பாக வார்டு வாரியாக தலா 3 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் கோருவது,

    நகர்மன்ற தலைவருக்கு புதிய வாகனம் வாங்குவது, நகராட்சிக்கு சொந்தமான பள்ளி கட்டடங்களை சீரமைத்து ஸ்மார்ட் கிளாஸ் அமைப்பது உள்ளிட்ட 69 தீர்மானங்கள் மன்றத்தின் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டது.

    பின்னர் கூட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பான்மையான நகர்மன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இக்கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் சுதாகர், கார்த்திகேயன், சுமதி மதியழகன், பாலமுருகவேல், சரோஜா இளங்கோவன் உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • ஜெயங்கொண்டம் நகராட்சி கூட்டத்தில் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுவதாக கவுன்சிலர்கள் பரபரப்பு புகார் தெரிவித்தனர்
    • ஏலம் எடுத்த குத்தகைக்காரர்கள் இதுவரை பணம் கட்டவில்லை, பணம் வசூல் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை, வாரச்சந்தைக்கும் இதே நிலை தான் நீடிக்கிறது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகர்மன்ற அலுவலகத்தில் நகராட்சி கவுன்சிலர்கள் சாதாரன கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் சுமதிசிவகுமார் தலைமை தாங்கினார்.

    துணைத்தலைவர் வெ.கொ.கருணாநிதி முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையர் சித்ரா (பொறுப்பு) வரவேற்று பேசினார்.

    தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, ஏரி, குளங்கள் தூர்வாருதல் உள்ளிட்ட பொதுமக்களின் அடிப்படை தேவை மற்றும் வசதிகள் நிறைவேற்றுவது குறித்து உறுப்பினர்கள் வலியுறுத்தி பேசினர்.

    கூட்டத்தில் 65 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக இளநிலை உதவியாளர் சாவித்திரி தீர்மான அறிக்கையினை வாசித்தார்.

    கூட்டத்தில் தி.மு.க. 9, அ.தி.மு.க. 4, பா.ம.க. 4, விடுதலை சிறுத்தைகள் கட்சி 2, ம.தி.மு.க. 1, சுயேச்சை 1 உள்ளிட்ட 21 நகராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு சென்ற ஆண்டில் 40-க்கும் மேற்பட்ட குத்தகைக்காரர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய ரூ.1 கோடி குத்தகை பணம் பாக்கி இருப்பதாகவும், அதனை வசூல் செய்ய நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நகராட்சி நிர்வாகத்திற்கு பல்வேறு பிரச்சனைகள் இருந்து வருவதாக புகார்கள் கூறப்பட்டன.

    மேலும் பா.ம.க. 2-வது வார்டு கவுன்சிலர் ரெங்கநாதன் பேசுகையில், ஜெயங்கொண்டம் வார சந்தையில் தனி நபர்கள் 50 ஆயிரம், 1 லட்சம் என கடைக்கு அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு உள்வாடகைக்கு விடுவதாகவும்,

    இது சம்பந்தமாக நகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்கு நகராட்சியில் பணிபுரியும் அதிகரிகள் துணை போவதாக பா.ம.க. கவுன்சிலர் தெரிவித்தார்.

    இதுகுறித்து பலமுறை அதிகாரியிடம் தகவல் தெரிவித்தும் அதைப்பற்றி கண்டு கொள்ளவில்லை என தெரிவித்தார். சென்ற ஆண்டில் புதிதாக கட்டப்பட்ட கடைகளை நகராட்சி மூலமாக ஏலம் விடப்பட்டது.

    ஏலம் எடுத்த குத்தகைக்காரர்கள் இதுவரை பணம் கட்டவில்லை, பணம் வசூல் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை, வாரச்சந்தைக்கும் இதே நிலை தான் நீடிக்கிறது.

    பெரும்பலான கவுன்சிலர்கள் கூறும்போது, நகரில் அதிகாலையிலேயே தூய்மை பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    மேலும் வார்டுகளில் எந்த பணிகள் செய்தாலும் வார்டு கவுன்சிலர்களின் ஒப்புதல் பெற்ற பின்னரே பணி செய்ய வேண்டுமென கவுன்சிலர்கள் மன்றத்திற்கு கோரிக்கை வைத்தனர். கவுன்சிலர்கள் இல்லாதபோது அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் கவுன்சிலர்கள் குற்றம் சாட்டி பேசினர்.

    மேற்கண்ட கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கவில்லை என்று கூறியதால் அதிகாரிகளுக்கும், கவுன்சிலர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    அடுத்த முறை நடைபெறும் கவுன்சிலர்கள் சாதாரண கூட்டத்தில் அதிகாரிகள் முறைப்படி செயல்பட வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று கூட்டம் நிறைவுற்றது.

    • கூடலூர் நகராட்சியில் டெங்கு கொசுக்கள் பரவாமல் தடுக்க 15 தூய்மை பணியாளர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டு உள்ளனர் என்ப உள்பட பல்வேறு தீர்மனங்கள் வாசிக்கப்பட்டது.
    • குடிநீர் வினியோக ஊழியர்களிடம் தெரிவித்தும் ரப்பர் துண்டுகள் கொண்டு இழுத்துக் கட்டி விட்டு செல்கின்றனர்.

    ஊட்டி:

    கூடலூர் நகராட்சி கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள மன்ற அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் பரிமளா தலைமை தாங்கினார். ஆணையாளர் (பொறுப்பு) காந்திராஜ், துணைத் தலைவர் சிவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடலூர் நகராட்சியில் டெங்கு கொசுக்கள் பரவாமல் தடுக்க 15 தூய்மை பணியாளர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டு உள்ளனர் என்ப உள்பட பல்வேறு தீர்மனங்கள் வாசிக்கப்பட்டது.

    தொடர்ந்து கவுன்சிலர் உஸ்மான் பேசுகையில், நகராட்சியில் 15 தூய்மை பணியாளர்கள் பணியில் உள்ளார்களா என ஆய்வு செய்ய வேண்டும் என்றார். அதற்கு கமிஷனர் காந்திராஜ், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் ஒவ்வொரு நகராட்சிகளிலும் டெங்கு கொசுக்கள் பரவாமல் தடுக்க தூய்மை பணி மேற்கொள்ள 15 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    கவுன்சிலர் வெண்ணிலா பேசும்போது, குடிநீர் குழாய்கள் பெரும்பாலான இடங்களில் உடைந்து தண்ணீர் வீணாகிறது. சம்பந்தப்பட்ட குடிநீர் வினியோக ஊழியர்களிடம் தெரிவித்தும் ரப்பர் துண்டுகள் கொண்டு இழுத்துக் கட்டி விட்டு செல்கின்றனர். மேலும் இலவச பட்டா பெற்று குடியிருக்கும் மக்கள் வசிக்கும் இடங்களில் குடிநீர் முறையாக கிடைப்பது இல்லை.

    மேலும் வாய்க்கால் இல்லாததால் மழைக்காலத்தில் சாலையில் வழிந்தோடும் தண்ணீர் வீடுகளுக்குள் செல்கிறது. இதனால் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இதற்கும் தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கவுன்சிலர் அனூப் பேசுகையில், நகருக்குள் தெரு நாய்கள், ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகள் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றி வருகிறது. எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடுகள், கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி பெற்று உரிய நேரத்தில் கட்ட முடியாமல் காலாவதியானதால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அதற்கு பதில் அளித்து பேசிய கமிஷனர் காந்திராஜ், மாவட்ட கமிட்டியிடம் அனுமதி பெற்று காலாவதியாகி இருந்தால் மீண்டும் அனுமதி வழங்கப்படும். இதேபோல் கால்நடை உரிமையாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நகராட்சி பகுதியில் 730 புதிய விளக்குகள் பொருத்த டெண்டர் விடப்பட உள்ளது.

    தொடர்ந்து துணைத் தலைவர் சிவராஜ் பேசுகையில், கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள அனைத்து கவுன்சிலர்களுக்கும் தலா ரூ.15 லட்சம் நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    இதேபோல் கூடலூர் நகர் பகுதியில் சிறுவர்களிடமும் கஞ்சா பழக்கம் அதிகரித்து வருகிறது. எனவே அதனை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவுன்சிலர் ஆபிதா பேகம் கோரிக்கை விடுத்தார்.அதற்கு பதில் அளித்த ஆணையாளர், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ×