search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடலூரில் சாலைகளில் கால்நடைகள் சுற்றி திரிவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்-நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை
    X

    கூடலூரில் சாலைகளில் கால்நடைகள் சுற்றி திரிவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்-நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை

    • கூடலூர் நகராட்சியில் டெங்கு கொசுக்கள் பரவாமல் தடுக்க 15 தூய்மை பணியாளர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டு உள்ளனர் என்ப உள்பட பல்வேறு தீர்மனங்கள் வாசிக்கப்பட்டது.
    • குடிநீர் வினியோக ஊழியர்களிடம் தெரிவித்தும் ரப்பர் துண்டுகள் கொண்டு இழுத்துக் கட்டி விட்டு செல்கின்றனர்.

    ஊட்டி:

    கூடலூர் நகராட்சி கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள மன்ற அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் பரிமளா தலைமை தாங்கினார். ஆணையாளர் (பொறுப்பு) காந்திராஜ், துணைத் தலைவர் சிவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடலூர் நகராட்சியில் டெங்கு கொசுக்கள் பரவாமல் தடுக்க 15 தூய்மை பணியாளர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டு உள்ளனர் என்ப உள்பட பல்வேறு தீர்மனங்கள் வாசிக்கப்பட்டது.

    தொடர்ந்து கவுன்சிலர் உஸ்மான் பேசுகையில், நகராட்சியில் 15 தூய்மை பணியாளர்கள் பணியில் உள்ளார்களா என ஆய்வு செய்ய வேண்டும் என்றார். அதற்கு கமிஷனர் காந்திராஜ், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் ஒவ்வொரு நகராட்சிகளிலும் டெங்கு கொசுக்கள் பரவாமல் தடுக்க தூய்மை பணி மேற்கொள்ள 15 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    கவுன்சிலர் வெண்ணிலா பேசும்போது, குடிநீர் குழாய்கள் பெரும்பாலான இடங்களில் உடைந்து தண்ணீர் வீணாகிறது. சம்பந்தப்பட்ட குடிநீர் வினியோக ஊழியர்களிடம் தெரிவித்தும் ரப்பர் துண்டுகள் கொண்டு இழுத்துக் கட்டி விட்டு செல்கின்றனர். மேலும் இலவச பட்டா பெற்று குடியிருக்கும் மக்கள் வசிக்கும் இடங்களில் குடிநீர் முறையாக கிடைப்பது இல்லை.

    மேலும் வாய்க்கால் இல்லாததால் மழைக்காலத்தில் சாலையில் வழிந்தோடும் தண்ணீர் வீடுகளுக்குள் செல்கிறது. இதனால் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இதற்கும் தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கவுன்சிலர் அனூப் பேசுகையில், நகருக்குள் தெரு நாய்கள், ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகள் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றி வருகிறது. எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடுகள், கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி பெற்று உரிய நேரத்தில் கட்ட முடியாமல் காலாவதியானதால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அதற்கு பதில் அளித்து பேசிய கமிஷனர் காந்திராஜ், மாவட்ட கமிட்டியிடம் அனுமதி பெற்று காலாவதியாகி இருந்தால் மீண்டும் அனுமதி வழங்கப்படும். இதேபோல் கால்நடை உரிமையாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நகராட்சி பகுதியில் 730 புதிய விளக்குகள் பொருத்த டெண்டர் விடப்பட உள்ளது.

    தொடர்ந்து துணைத் தலைவர் சிவராஜ் பேசுகையில், கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள அனைத்து கவுன்சிலர்களுக்கும் தலா ரூ.15 லட்சம் நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    இதேபோல் கூடலூர் நகர் பகுதியில் சிறுவர்களிடமும் கஞ்சா பழக்கம் அதிகரித்து வருகிறது. எனவே அதனை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவுன்சிலர் ஆபிதா பேகம் கோரிக்கை விடுத்தார்.அதற்கு பதில் அளித்த ஆணையாளர், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    Next Story
    ×