search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "municipal meeting"

    • கடையநல்லூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடந்தது.
    • கூட்டத்தில் 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடந்தது. நகர் மன்ற துணைத் தலைவர் ராசையா, ஆணையாளர் (பொறுப்பு) தென்காசி பாரிஜான், மேலாளர் சண்முகவேல், இளநிலை பொறியாளர் ரவிச்சந்திரன், நகர அமைப்பு அலுவலர் காஜாமைதீன், சுகாதார ஆய்வாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் லீக் அக்பர் அலி, அ.தி.மு.க. உறுப்பினர் பூங்கோதை கருப்பையா தாஸ், சுபா ராஜேந்திரன் எஸ்.டி.பி.ஐ. உறுப்பினர் யாசர்கான் உட்படப் பலர் பேசினார்.

    அப்போது தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தை அனைத்து வார்டுகளுக்கும் வழங்க வேண்டும் என்றனர். உறுப்பினர்களின் கேள்விக்கு கடையநல்லூர் நகர் முழுவதும் அனைத்துப் பகுதிகளுக்கும் தாமிரபரணி குடிநீரை வழங்குவதற்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்ட பணிகள் நடப்பதாக நகர மன்ற தலைவர் மூப்பன் ஹபிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

    • சங்கரன்கோவில் நகராட்சி கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடந்தது.
    • நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் நகராட்சி கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடந்தது. நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ஹரிஹரன் முன்னிலை வகித்தார். இதில் இலவச மின்சாரத்தை விசைத்தறியாளர்களுக்கு 750 யூனிட்டில் இருந்து 1000 யூனிட் ஆகவும், 1000 யூனிட்டிக்கு மேல் பயன்படுத்தும் மின்சாரத்தில் 500 யூனிட் மின்சாரத்திற்கு 50 சதவீத மின் கட்டணத்தை குறைத்தும் வழங்கி உத்தரவிட்டு நெசவுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்த முதல்-அமைச்சருக்கும், மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், கைத்தறி துறை அமைச்சர் காந்திக்கும், சங்கரன்கோவில் பகுதியில் மிக பிரதான தொழிலான விசைத்தறி தொழிலுக்கு உள்ள தேவைகள் குறித்து சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்த சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜாவுக்கும் நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் நகராட்சி துணை சேர்மன் மற்றும் கவுன்சிலர்கள், மேலாளர் மாரியம்மாள், சுகாதார அலுவலர் பாலச்சந்தர் உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • நகரசபை கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
    • பல்வேறு தீர்மானம் நிறைவேற்றம்

    ஆம்பூர்:

    ஆம்பூர் நகராட்சியில் உள்ள நகர மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடந்த அவசர கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் ஏஜாஸ் அஹ்மத் தலைமை தாங்கினார்.

    நகராட்சி துணைத் தலைவர் ஆறுமுகம், நகராட்சி ஆணையாளர் ஷகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் வரும் ஓராண்டிற்கு தனியார் மூலம் ரூ.6.64 கோடி மதிப்பில் குப்பை சேகரிக்கும் பணியை மேற்கொள்வது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதைத் தொடர்ந்து நடந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:-

    வசந்த ராஜ் திமுக கவுன்சில் ஆம்பூர் ஏ-கஸ்பா சாலை பாதாள திட்டப் பணிகளால் மிகவும் சேதமடைந்து வாகனங்கள் சென்றுவர முடியாத சூழ்நிலை உள்ளது.

    எனவே உடனடியாக புதிய சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பொறியாளர். பணி மேற்கொள்ளப்படும் என்று பதில் அளித்தார்.ரமேஷ் திமுக ஆம்பூர் பஜார் பகுதியில் உள்ள கடைகளில் ஆக்கிரமிப்பு காரணமாக போக்குவரத்து இடையூறாக அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.

    எனவே அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆம்பூர் பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது இதனால் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சித் தலைவர் சம்பந்தப்பட்ட துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அதேபோல பல்வேறு கட்சியை சேர்ந்த நகர் மன்ற உறுப்பினர்கள் தங்கள் வார்டு பிரச்சினை குறித்து கோரிக்கையை முன்வைத்து பேசினார்கள்.நகராட்சி தலைவர் அனைத்தும் பரிசிலனை செய்வதாக உறுதி கூறினார்.

    இந்த கூட்டத்திற்கு 36 வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

    • தென்காசி நகராட்சி உறுப்பினர்கள் கூட்டம் தலைவர் சாதிர் தலைமையில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு கவுன்சிலர்கள் தங்களது பகுதியில் சரிவர குப்பைகள் சேகரிக்க ஆள் வரவில்லை என கூறினார்கள்.

    தென்காசி:

    தென்காசி நகராட்சி உறுப்பினர்கள் கூட்டம் தலைவர் சாதிர் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் சுப்பையா, ஆணையாளர் பாரி ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 7 தீர்மானங்கள் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. மேலும் நகராட்சியில் செயல்படுத்தப்பட இருக்கும் அடிப்படை வசதிகள் மற்றும் தூய்மை பணிகள் குறித்தும் விவாதம் செய்யப்பட்டது.

    கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு கவுன்சிலர்கள் தங்களது பகுதியில் சரிவர குப்பைகள் சேகரிக்க ஆள் வரவில்லை என கூறினார்கள். இதற்கு பதில் அளித்த நகர் மன்ற தலைவர் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை பொதுமக்கள் பிரித்துக் கொடுக்காத சூழ்நிலையில் அவற்றை தூய்மை பணியாளர்களே பிரித்து குப்பை கிடங்கிற்கு எடுத்துச் செல்வதால் நேர விரையம் ஏற்படுகிறது. பொதுமக்களின் ஒத்துழைப்பால் மட்டுமே தூய்மை பணியாளர்கள் தங்களது பணியை திறம்பட செய்ய முடியும் எனவே அனைத்து கவுன்சிலர்களும் தங்களது பகுதி பொதுமக்களிடம் குப்பைகளை தனித்தனியாக பிரித்து வழங்க ஆலோசனை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் காதர் மைதீன், ஆசிக் முபினா ,சையது சுலைமான் ரபிக், வசந்தி வெங்கடேஸ்வரன், சுப்பிரமணியன், சங்கர சுப்பிரமணியன், ராசப்பா, நாகூர் மீரான் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
    • ரூ.18.80 லட்சத்தில் மழை நீர் கால்வாய் பணிகள் மேற்கொள்ள முடிவு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் முதல்நிலை பேரூராட்சி சாதாரணக் கூட்டத்தில் நமக்கு நாமே திட்டத்தில் ரூ.18 லட்சத்தில் தொடக்கப் பள்ளி இரு வகுப்பறை கட்டிடங்கள் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் முதல்நிலை பேரூராட்சி சாதாரணக் கூட்டம் நேற்று அதன் தலைவர் சங்கீதா மகேஷ் தலைமையில் நடைபெற்றது.துணைத் தலைவர் உஷாராணி அண்ணாதுரை, பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி இளநிலை உதவியாளர் மனோகரன் வரவேற்றார். கூட்டத்தில் தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அதன் விவரம் வருமாறு:-

    இந்த சாதாரண கூட்டத்தில் அம்மூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதியதாக 2022-2023 ம் ஆண்டு நமக்கு நாமே திட்டத்தில் ரூ.18 லட்சத்தில் இரு வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவது.மேலும் அம்மூர் பேரூராட்சி வளம் மீட்பு பூங்காவில் ரூ.7.95 லட்சம் மதிப்பீட்டில் வின்ட்ரோ பிளாட்பாரம் மற்றும் மேற்கூரை அமைப்பது.

    மேலும் பேரூராட்சி பொது நிதியில் ரூ.18.80 லட்சத்தில் மழை நீர் வடிகால்வாய் கல்வெட்டு பணிகள் மேற்கொள்வது. அம்மூர் பேரூராட்சி பகுதியில் சிசிடிவி கேமராக்கள் அமைப்பது, பல்வேறு பகுதிகளில் தெரு மின்விளக்குகள் தெருக்களுக்கு பெயர் உடன் கூடிய பலகைகள் வைப்பது, அம்மூர் பேரூராட்சியில் உள்ள ரயில்வே பாலத்தின் மூலம் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாலும் எதிர்கா லத்தின் நலனை கருத்தில் கொண்டு போக்குவரத்து நெரிசலை போக்க மாற்று ஏற்பாடு செய்ய மாவட்ட கலெக்டர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வது, மழைநீர் வடிகால்வாய் அமைத்தல் சுடுகாடு பாதைக்கு வேலி அமைத்தல் சிறு பாலம் அமைத்தல், பைப் லைன் அமைத்து சிறு மின்விசை பம்பு அமைத்தல், சாலை அமைத்தல் சுகாதார வளாகம் சீரமைத்தல் தெருவிளக்குகள் அமைத்தல் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • தேவகோட்டையில் நகராட்சி கூட்டத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது குறித்து கடும் விவாதம் நடந்தது.
    • ஆணையாளர் போல் போலி கையெழுத்து போட்டது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி சாதாரண கூட்டம் நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

    துணைத்தலைவர் ரமேஷ்:-தற்போது ஆக்கிர மிப்பு அகற்றியதில் பூ கடைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பஸ் நிலையம் விரிவாக்கத்தில் பூக்கடைகளுக்கு இடம் வழங்க வேண்டும். ஆணை யாளர் போல் போலி கையெழுத்து போட்டு மின் இணைப்பு வாங்கியது பற்றி விசாரணை நடத்த வேண்டும்.

    தலைவர்:- ஆணையாளர் போல் போலி கையெழுத்து போட்டது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    நகர் மன்ற உறுப்பினர் பாலமுருகன் (தி.மு.க.):- பஸ் நிலையம் உட்புறம் நகராட்சி சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டது. தற்போது அவை செயல்படவில்லை. இதனால் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

    தலைவர்:- உடனடியாக பராமரிப்புப் பணிகள் செய்து பஸ் நிலையத்தில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    நகர்மன்றத் உறுப்பினர் கமலக்கண்ணன் (அ.ம.மு.க):- ஆக்கிரமிப்பு அகற்றியது நகராட்சியா? அல்லது காவல்துறையா? இதில் காவல்துறை ஏன் தனியாக செயல்படுகிறது?

    தலைவர்:-இது குறித்து காவல்துறையில் கேட்ட போது அதிகாரம் உள்ளது என்கிறார்கள்.

    இவ்வாறு விவாதம் நடந்தது. 

    • கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் தலைமை தாங்கினார்.
    • ஸ்ரீதரன் உள்பட வார்டு கவுன்சிலர் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    தாராபுரம் :

    தாராபுரம் நகராட்சி கவுன்சிலர் கூட்டம் அலுவலக மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ரவிச்சந்திரன், ஆணையர் ராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நடந்த கவுன்சிலர்களின் விவாதங்கள் வருமாறு:-

    முபாரக் அலி (தி.மு.க):- எனது வார்டில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகளை கூட கடித்து ஆஸ்பத்திரிக்கு சென்று உள்ளனர். நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    தலைவர் கு.பாப்புகண்ணன்:- தெரு நாய்களை பிடிக்க அரசுக்கு எழுதியுள்ளோம். விதிமுறைக்குட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

    சீனிவாசன் (தி.மு.க):- எனது வார்டில் குளத்துபுஞ்சை தெரு அருகேயுள்ள மழைநீர்வடிகால் முற்றிலும் பழுதடைந்துள்ளது. அதை சரி செய்யவேண்டும்.

    தலைவர்:-நடவடிக்கை எடுக்கப்படும்.

    நாகராஜ் (அ.தி.மு.க):- எல்.இ.டி விளக்குகள் பொருத்தும்பணி எப்போதும் தொடங்கும்

    தலைவர்:-எல்.இ.டி பல்புகள் வந்துவிட்டது.உடனடியாக பொருத்தும் பணி தொடங்கப்படும்.

    ஸ்ரீதரன் (திமுக):- அமராவதி ரவுண்டானாவில்அமராவதி ஆற்றின் சிறப்பை வலியுறுத்தும் அமராவதி அன்னை சிலை எப்போது அமைக்கப்படும்.

    தலைவர்:- தனியார் பங்களிப்பை தவிர்த்து நகராட்சி சார்பிலேயே வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தாராபுரம் நகராட்சி வளர்ச்சி பணிகளுக்கு ரூ.2 கோடியே 73 லட்சம் நிதி மின்விளக்குகள் மற்றும் மார்க்கெட் கட்டிடம் கட்ட நிதி வழங்கிய முதல்-அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. மன்ற பொருளாக 37 தீர்மானங்கள் வைக்கப்பட்டிருந்தது. அவை அனைத்தும் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் நகராட்சி கவுன்சிலர்கள் ராஜேந்திரன், ஹைடெக் அன்பழகன், எஸ்.டி.நாகராஜ், துரை சந்திரசேகர், முபாரக் அலி, உஷ்–சானா பானுஷேக்பரித், சக்திவேல், ஸ்ரீதரன் உள்பட வார்டு கவுன்சிலர் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • நகா்மன்றத் தலைவா் ந.சூரியபிரகாஷ் தலைமை வகித்தாா்.
    • நகராட்சி ஊழியா்கள், நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

    காங்கயம் : 

    காங்கயம் நகா்மன்றத்தின் சாதாரணக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் ந.சூரியபிரகாஷ் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் வெங்கடேஷ்வரன் முன்னிலை வகித்தாா். இதில், நகராட்சிப் பகுதியில் குடிநீா்க் குழாய்கள் அமைத்தல், சிறு பாலங்கள் அமைத்தல் உள்ளிட்ட 40 தீா்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் நகராட்சி ஊழியா்கள், நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். 

    • நகராட்சி கூட்டத்திற்கு சேர்மன் உமாமகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில் குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் நகராட்சி கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு சேர்மன் உமாமகேஸ்வரிசரவணன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் ஹரிகரன், மேலாளர் மாரியம்மாள், சுகாதார அலுவலர் பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் பேசிய நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி சரவணன் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் மருத்துவ மையத்தை திறந்து வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், சங்கரன்கோவிலுக்கு வழங்கிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கும், இங்கே வருவதற்கு முயற்சி எடுத்த தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ.வுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

    தொடர்ந்து இந்த கூட்டத்தில் குடிநீர் பிரச்சினை, சங்கரன்கோவிலில் அதிகளவில் சுற்றி தெரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்துவது குறித்தும், நகராட்சி பகுதிகளில் பேவர் பிளாக் சாலைகள் அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் 8-வது வார்டு கவுன்சிலர் சரவணகுமார், மேலாளர் மாரியம்மாளை அவதூறாக பேசியதால் அவரை கூட்ட அரங்கில் இருந்து வெளியேறும்படி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் உத்தரவிட்டார். தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • செங்கோட்டை நகர்மன்ற கூட்ட அரங்கில் புதிய சொத்துவரி உயர்வு தொடர்பான அவரசக் கூட்டம் நடந்தது
    • அ.தி.மு.க. கவுன்சிலர் ஜெகன் கூட்டத்திற்கான அஜன்டா தனக்கு காலதாமதமாக வந்ததை கண்டித்து வெளிநடப்பு செய்தார்

    செங்கோட்டை:

    செங்கோட்டை நகர்மன்ற கூட்ட அரங்கில் புதிய சொத்துவரி உயர்வு தொடர்பான அவரசக் கூட்டம் நடந்தது.

    நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி தலைமை தாங்கினார். துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன், ஆணையாளா் பார்கவி, என்ஜினீயர் ஜெயப்ரியா, மேலாளா் ரத்தினம், சுகாதார அலுவலா் ராமச்சந்திரன், ஆய்வாளா் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனா்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர் ஜெகன் கூட்டத்திற்கான அஜன்டா தனக்கு காலதாமதமாக வந்ததை கண்டித்து வெளிநடப்பு செய்தார்.

    அதனைதொடர்ந்து தி.மு.க. உறுப்பினா்கள் தங்களது வார்டு பகுதிகளில் உள்ள குறைகளை சரிவர தீர்க்காமலும், பாரபட்சமாக நடப்பதாகவும் கூறி ரஹீம் தலைமையில் இசக்கித்துரை பாண்டியன், மேரிஅந்தோணிராஜ், பினாஷா, சரவண கார்த்திகை, பேபிரெசவுபாத்திமா ஆகியோர் வெளிநடப்பு செய்தனா்.

    பின்னா் தமிழக அரசின் புதிய சொத்துவரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, மின்கட்டண உயர்வு, பால்விலை உயர்வை கண்டித்து பா.ஜ.க. உறுப்பினா்கள் பொன்னுலிங்கம் என்ற சுதன், வேம்புராஜ், செண்பகராஜன், ராஜ்குமார் ஆகியோர் வெளிநடப்பு செய்தனா். அதனைதொடா்ந்து புதிய சொத்துவரி உயர்வு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினா்கள் சுடர்ஒளி ராமதாஸ், ராதா, சரஸ்வதி, சுகந்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    • திருச்செங்கோடு நகராட்சி கூட்டம் நேற்று நகராட்சி கூட்டரங்கில் நடந்தது.
    • குறுக்கிட்ட ஆணையாளர் கணேசன், நகராட்சி கூட்டத்தில் கண்ணிய குறைவான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தினார்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு நகராட்சி கூட்டம் நேற்று நகராட்சி கூட்டரங்கில் நடந்தது. நகராட்சி தலைவர் நளினி சுரேஷ்பாபு கூட்டத்தை தொடங்கி வைத்தார்.

    கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து 13-வது வார்டு கவுன்சிலர் சினேகா எழுந்து தனது கணவர் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு காரணமானவர்களை ஒருமையில் பேசியதாகவும் தெரிகிறது.

    அப்போது குறுக்கிட்ட ஆணையாளர் கணேசன், நகராட்சி கூட்டத்தில் கண்ணிய குறைவான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து பேசிய கவுன்சிலர் சினேகா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார். அப்போது 23-வது வார்டு கவுன்சிலர் புவனேஸ்வரி எழுந்து சினேகாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் கோபம் அடைந்த கவுன்சிலர் சினேகா நகராட்சி துணைத்தலைவர் கார்த்திகேயன் மீது செருப்பை வீச முயன்றார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து கூட்டம் முடிந்துவிட்டதாக கூறி தலைவர் நளினி சுரேஷ்பாபு மற்றும் ஆணையாளர் கணேசன் ஆகியோர் தங்களது இருக்கைகளை விட்டு எழுந்து சென்றனர். ஆனால் இதன் பின்னரும் கவுன்சிலர்கள் இடையே காரசார வாதம் நீடித்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற திருச்செங்கோடு நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சமாதானம் அடைந்த கவுன்சிலர்கள் அங்கிருந்து சென்றனர்.

    • பல்வேறு தீர்மானம் நிறைவேற்றம்
    • அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

    ஆம்பூர்:

    ஆம்பூர் நகராட்சி அவசர கூட்டம் நகர மன்ற தலைவர் ஏஜாஸ் அகமது தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் நகர பொது நிதி செலவினங்கள் நிர்வாக மேம்பாடு குறித்து தீர்மானம் மற்றும் செலவி னங்கள் தீர்மானங்களுக்கு அங்கீகாரம் கோரப்பட்டது. நகர்ப்புற கிராம சபா குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் நகர மன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை கூறினார்கள் இதற்கு நகர மன்ற தலைவர் விரைவில் அனைத்து கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார்.

    நகராட்சி ஆணையர் ஷகிலா நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ×