search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது குறித்து கடும் விவாதம்
    X

    தேவகோட்டை நகராட்சி கூட்டம் நகர்மன்றத் தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடந்தது.

    ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது குறித்து கடும் விவாதம்

    • தேவகோட்டையில் நகராட்சி கூட்டத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது குறித்து கடும் விவாதம் நடந்தது.
    • ஆணையாளர் போல் போலி கையெழுத்து போட்டது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி சாதாரண கூட்டம் நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

    துணைத்தலைவர் ரமேஷ்:-தற்போது ஆக்கிர மிப்பு அகற்றியதில் பூ கடைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பஸ் நிலையம் விரிவாக்கத்தில் பூக்கடைகளுக்கு இடம் வழங்க வேண்டும். ஆணை யாளர் போல் போலி கையெழுத்து போட்டு மின் இணைப்பு வாங்கியது பற்றி விசாரணை நடத்த வேண்டும்.

    தலைவர்:- ஆணையாளர் போல் போலி கையெழுத்து போட்டது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    நகர் மன்ற உறுப்பினர் பாலமுருகன் (தி.மு.க.):- பஸ் நிலையம் உட்புறம் நகராட்சி சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டது. தற்போது அவை செயல்படவில்லை. இதனால் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

    தலைவர்:- உடனடியாக பராமரிப்புப் பணிகள் செய்து பஸ் நிலையத்தில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    நகர்மன்றத் உறுப்பினர் கமலக்கண்ணன் (அ.ம.மு.க):- ஆக்கிரமிப்பு அகற்றியது நகராட்சியா? அல்லது காவல்துறையா? இதில் காவல்துறை ஏன் தனியாக செயல்படுகிறது?

    தலைவர்:-இது குறித்து காவல்துறையில் கேட்ட போது அதிகாரம் உள்ளது என்கிறார்கள்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    Next Story
    ×