என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கடையநல்லூர் நகராட்சி கூட்டம்
- கடையநல்லூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடந்தது.
- கூட்டத்தில் 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .
கடையநல்லூர்:
கடையநல்லூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடந்தது. நகர் மன்ற துணைத் தலைவர் ராசையா, ஆணையாளர் (பொறுப்பு) தென்காசி பாரிஜான், மேலாளர் சண்முகவேல், இளநிலை பொறியாளர் ரவிச்சந்திரன், நகர அமைப்பு அலுவலர் காஜாமைதீன், சுகாதார ஆய்வாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் லீக் அக்பர் அலி, அ.தி.மு.க. உறுப்பினர் பூங்கோதை கருப்பையா தாஸ், சுபா ராஜேந்திரன் எஸ்.டி.பி.ஐ. உறுப்பினர் யாசர்கான் உட்படப் பலர் பேசினார்.
அப்போது தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தை அனைத்து வார்டுகளுக்கும் வழங்க வேண்டும் என்றனர். உறுப்பினர்களின் கேள்விக்கு கடையநல்லூர் நகர் முழுவதும் அனைத்துப் பகுதிகளுக்கும் தாமிரபரணி குடிநீரை வழங்குவதற்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்ட பணிகள் நடப்பதாக நகர மன்ற தலைவர் மூப்பன் ஹபிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்