என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆம்பூர் நகராட்சி அவசர கூட்டம்
- பல்வேறு தீர்மானம் நிறைவேற்றம்
- அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்
ஆம்பூர்:
ஆம்பூர் நகராட்சி அவசர கூட்டம் நகர மன்ற தலைவர் ஏஜாஸ் அகமது தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் நகர பொது நிதி செலவினங்கள் நிர்வாக மேம்பாடு குறித்து தீர்மானம் மற்றும் செலவி னங்கள் தீர்மானங்களுக்கு அங்கீகாரம் கோரப்பட்டது. நகர்ப்புற கிராம சபா குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் நகர மன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை கூறினார்கள் இதற்கு நகர மன்ற தலைவர் விரைவில் அனைத்து கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார்.
நகராட்சி ஆணையர் ஷகிலா நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story






