என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வத்தலக்குண்டுவில் தியாகி சுப்ரமணிய சிவா சிலை அமைக்க வேண்டும் பேரூராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
- தியாகி சுப்ரமணிய சிவா சிலை அமைக்க வேண்டும் பேரூராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
- பேரூராட்சி சங்கரன் பூங்காவில் சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா சிலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு பேரூராட்சி கூட்டம் பேரூராட்சி தலைவர் சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் தன்ராஜ் முன்னிலை வகித்தார். தலைமை எழுத்தர் செல்லப்பாண்டி தீர்மான அறிக்கை வாசித்தார்.
கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர் ரவிச்சந்திரன், வத்தலக்குண்டு பேரூராட்சி சங்கரன் பூங்காவில் சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா சிலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு செயல் அலுவலர் தன்ராஜ் சிலை வைப்பதற்கு பல அடிப்படை விதிமுறைகள் உள்ளன.
மாவட்ட நிர்வாகத்திடம் கலந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் சுகாதாரம் தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பேரூராட்சி கவுன்சிலர்கள் சின்னத்துரை, சிவா, மணிவண்ணன், தமிழரசி, சுமதி, அழகுராணி, பிரியா, ரமிஜா பேகம், சைதத்நிஷா, சியாமளா ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் சுகாதார ஆய்வாளர் சரவண பாண்டியன் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்