search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "COUNCILORS ARGUE"

    • நாட்டறம்பள்ளி பேரூராட்சி கூட்டத்தில் பரபரப்பு
    • சாலை வசதி கேட்டு பொதுமக்கள் முற்றுகை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று சாதாரண கூட்டம் நடைபெற்றது.

    கவுன்சிலர்கள் கேள்வி

    இவ்கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சசிகலா சூரியகுமார் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் நந்தகுமார் அனைவரையும் வரவேற்றார். துணை தலைவர் தனபால் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர் சூரியகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டனர்.

    அப்போது 14-வது வார்டு உறுப்பினர் குருசேவ் தங்கள் வார்டில் குடிநீர் பிரச்சினை உள்ளது தினசரி குடிநீர் வழங்கி வந்த நிலையில் தற்போது 4 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வழங்கப்படுகிறது.

    இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் பிரச்சினை ஏற்படுகிறது மேலும் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே கழிவுநீர் கால்வாய் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன.

    இதனால் சுத்திகரிப்பு ஆலையம் அமைக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார். அப்போது கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என். கே.ஆர்.சூரியகுமார் தற்போது மின்சார கட்டணம் அதிகளவில் வருவதால் தினசரி வழங்குவது கடினம் பேரூராட்சி போதுமான வருவாய் இல்லை என பதில் அளித்தார். இதனால் கவுன்சிலர் குருசேவ் மாவட்ட ஊராட்சி குழு தலைவருக்கு வாக்குவாதம் நடைப்பெற்றது.

    மேலும் 11 வது வார்டு உறுப்பினர் மகேந்திரன் தன்னுடைய வார்டில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தவேண்டும் என கேள்வி எழுப்பினார்.

    அதற்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக பதில் கூறினார். அதன் பிறகு பேரூராட்சி வார்டு உறுப்பினர்களின் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சாதாரண கூட்டம் நடைபெற்றது.

    பொதுமக்கள் முற்றுகை

    அதன் பிறகு பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட தம்பா தெருவில் கடந்த சில ஆண்டுகளாக மண் சாலையாக உள்ளது தார் சாலை அமைக்க கோரிக்கை வைத்தனர். ஆனால் இந்நாள் வரை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை .

    இதனால் தம்பா தெருவில் இருந்த பொது மக்கள் பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்று முறையிட்டனர். இதனால் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என். கே.ஆர்.சூரியகுமார் பொதுமக்களுடைய பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் அங்கிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் நாட்டறம்பள்ளி பகுதியில் மிகவும் பரபரப்பு காணப்பட்டது.

    • ஜெயங்கொண்டம் நகராட்சி கூட்டத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
    • கீழக்குடியிருப்பு மூன்றாவது மற்றும் நான்காவது வார்டுகளில் மயானத்திற்கும், கொம்மேடு பகுதியில் வேட்டைக்கார தெருவில் தார் சாலை, மின்விளக்கு வசதி செய்த தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகர்மன்ற சாதாரண கூட்டம் தலைவர் சுமதி சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் சித்ரா (பொறுப்பு) வரவேற்றார். துணைத் தலைவர் கருணாநிதி முன்னிலை வகித்தார்.

    தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, ஏரி, குளங்கள் தூர்வாருதல் உள்ளிட்ட பொதுமக்களின் அடிப்படை தேவை மற்றும் வசதிகள் நிறைவேற்றுவது குறித்து உறுப்பினர்கள் வலியுறுத்தி பேசினர். இந்த கூட்டத்தில் நகராட்சியின் செலவினங்கள் உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முன்னதாக இளநிலை உதவியாளர் சாவித்திரி தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் நகராட்சி உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கவுன்சிலர் ரங்கநாதன் பேசுகையில், ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் ராஜேந்திர சோழன் நினைவு வளைவு வைக்க வேண்டும், நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குத்தகைக்காரர்கள் நகராட்சி அனுமதி இன்றி போலி ரசீது தயாரித்து வாரச்சந்தை மற்றும் தினசரி வசூல் செய்து வருவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

    சந்தையை மறு குத்தகைக்கு ஏலம் விட வேண்டும், குத்தகைக்காரர்கள் செலுத்த வேண்டிய பணத்தை வசூல் செய்ய வேண்டும்.

    கீழக்குடியிருப்பு மூன்றாவது மற்றும் நான்காவது வார்டுகளில் மயானத்திற்கும், கொம்மேடு பகுதியில் வேட்டைக்கார தெருவில் தார் சாலை, மின்விளக்கு வசதி செய்த தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து பேசினார்.

    6-வது வார்டு கவுன்சிலர் செல்வராஜ், பஸ் நிலையத்தில் ஆவின் பால்கடை ஏலம் விட வேண்டும், 5-வது வார்டு குஞ்சிதபாதபுரம் பகுதியில் மின்விளக்கு வசதியும், கழிவுநீர் வாய்க்காலும் அமைத்து தர வேண்டும், 18-வது வார்டு கவுன்சிலர் கிருபாநிதி, தூய்மை பணியாளர்கள் தூய்மை பணி முறையாக மேற்கொள்ள வேண்டும் கீழத்தெருவிற்கு நீர்த்தேக்க தொட்டி ஒன்று அமைத்து குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    ஒரு கட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கோரிக்கைகள் கால தாமதம் ஆவதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    சுதந்திர தினத்தன்று வீடுகள் தோறும் கொடியேற்றுவதற்கு கவுன்சிலர்கள் தாங்களுக்கு நகராட்சி வழங்கிய படிப்பணத்தை கொடுத்து உதவினர்.

    ×