search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி கவுன்சிலர்கள் வாக்குவாதம்
    X

    மாவட்ட ஊராட்சி குழு தலைவரிடம் பொதுமக்கள் பேச்சுவார்த்தை நடத்திய போது எடுத்த படம்.

    குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி கவுன்சிலர்கள் வாக்குவாதம்

    • நாட்டறம்பள்ளி பேரூராட்சி கூட்டத்தில் பரபரப்பு
    • சாலை வசதி கேட்டு பொதுமக்கள் முற்றுகை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று சாதாரண கூட்டம் நடைபெற்றது.

    கவுன்சிலர்கள் கேள்வி

    இவ்கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சசிகலா சூரியகுமார் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் நந்தகுமார் அனைவரையும் வரவேற்றார். துணை தலைவர் தனபால் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர் சூரியகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டனர்.

    அப்போது 14-வது வார்டு உறுப்பினர் குருசேவ் தங்கள் வார்டில் குடிநீர் பிரச்சினை உள்ளது தினசரி குடிநீர் வழங்கி வந்த நிலையில் தற்போது 4 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வழங்கப்படுகிறது.

    இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் பிரச்சினை ஏற்படுகிறது மேலும் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே கழிவுநீர் கால்வாய் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன.

    இதனால் சுத்திகரிப்பு ஆலையம் அமைக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார். அப்போது கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என். கே.ஆர்.சூரியகுமார் தற்போது மின்சார கட்டணம் அதிகளவில் வருவதால் தினசரி வழங்குவது கடினம் பேரூராட்சி போதுமான வருவாய் இல்லை என பதில் அளித்தார். இதனால் கவுன்சிலர் குருசேவ் மாவட்ட ஊராட்சி குழு தலைவருக்கு வாக்குவாதம் நடைப்பெற்றது.

    மேலும் 11 வது வார்டு உறுப்பினர் மகேந்திரன் தன்னுடைய வார்டில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தவேண்டும் என கேள்வி எழுப்பினார்.

    அதற்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக பதில் கூறினார். அதன் பிறகு பேரூராட்சி வார்டு உறுப்பினர்களின் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சாதாரண கூட்டம் நடைபெற்றது.

    பொதுமக்கள் முற்றுகை

    அதன் பிறகு பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட தம்பா தெருவில் கடந்த சில ஆண்டுகளாக மண் சாலையாக உள்ளது தார் சாலை அமைக்க கோரிக்கை வைத்தனர். ஆனால் இந்நாள் வரை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை .

    இதனால் தம்பா தெருவில் இருந்த பொது மக்கள் பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்று முறையிட்டனர். இதனால் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என். கே.ஆர்.சூரியகுமார் பொதுமக்களுடைய பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் அங்கிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் நாட்டறம்பள்ளி பகுதியில் மிகவும் பரபரப்பு காணப்பட்டது.

    Next Story
    ×