search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Movie"

    • நல்ல படம் எடுத்தால் மக்கள் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
    • துபாயிலும் ஒரு நண்பர் இறந்தவர்களை சமூக சேவையாக அடக்கம் செய்து வருகிறார்.

    தஞ்சாவூர்:

    பிரபல திரைப்பட நடிகரும் இயக்குனருமான சசிக்குமார் நடித்து அண்மையில் வெளிவந்துள்ள அயோத்தி திரைப்படம் தஞ்சாவூர் ராணி பேரடைஸ் தியேட்டரில் திரையிடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தஞ்சாவூரில் நடைபெறும் நந்தன் என்கிற புதிய திரைப்பட சூட்டிங்கில் கலந்து கொள்ள வந்த நடிகர் சசிக்குமார் அயோத்தி திரைப்படத்தை திரையரங்கில் பொதுமக்களுடன் அமர்ந்து பார்வையிட்டார்.

    பின்னர் அவர் பேசும் போது, சாதி மதம் தாண்டி மனிதம் தான் முக்கியம், மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற விஷயம் இந்த படத்தில் சொல்லப்பட்டுள்ளது.

    நிஜ வாழ்க்கையில் நடந்த, நடக்கின்ற எல்லோரும் கடந்து வந்துள்ள, செய்தியைத்தான் இந்த படத்தில் சொல்லி இருக்கிறோம். நல்ல படம் எடுத்தால் மக்கள் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார்.

    தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    தமிழர்கள் நாம் வட மாநிலத்தவர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறோம்.

    அதைத்தான் இந்த படத்தில் சொல்லப்பட்டுள்ளது, இந்த படத்தின் கதை அனைவரின் வாழ்க்கையிலும் நடக்கின்ற ஒரு விசயம் தான்.

    இந்தப் படத்தில் வருவது போன்று துபாயிலும் ஒரு நண்பர் இறந்தவர்களை சமூக சேவையாக அடக்கம் செய்து வருகிறார்.

    இது போல மதுரையிலும் ஒருவர் செய்து வருகிறார். எல்லாருடைய வாழ்க்கையிலும் கடந்து வந்த விஷயம் .

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் நடிகர் துரை சுதாகர், திரையரங்க நிர்வாகிகள், ரசிகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    • வண்ணார்பேட்டையில் ஒரு திரையரங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு காட்சி சினிமா இலவசமாக பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    • சிறப்பு காட்சியை பயிற்சி கலெக்டர் கோகுல் தொடங்கி வைத்தார்.

    நெல்லை:

    சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு இன்று பாளை வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு திரையரங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு காட்சி சினிமா இலவசமாக பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    அதன்படி தியேட்டரில் பொன்னியின் செல்வன் திரைப்படம் சிறப்பு காட்சியாக ஒளிபரப்பப்பட்டது. இதனை பயிற்சி கலெக்டர் கோகுல் தொடங்கி வைத்தார். அவர் மாற்றுத் திறனாளி குழந்தைகளுடன் அமர்ந்து படத்தை பார்த்தார்.

    இதில் பார்வையற்றோர், காது மற்றும் வாய் பேச முடியாத, ஊனமுற்றோர் என ஏராளமான மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு சினிமாவை பார்த்து மகிழ்ந்தனர்.

    இந்த நிகழ்ச்சியின் போது பேசிய மாற்றுத்திறனாளியான உதவி கலெக்டர் கோகுல், மாற்றுத்திறனாளிகள் தன்னம்பிக்கையோடு போராட வேண்டும் என தெரிவித்தார்.

    • அய்யப்ப சுவாமி பற்றிய திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாநடைப்பெற்றது.
    • பாஜக. தலைவர் செந்தில்வேல் கலந்து கொண்டு இசை, ட்ரெய்லரை வெளியிட்டார்.

    அனுப்பர்பாளையம் : 

    திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் உள்ள அய்யப்பன் கோவிலில் திருப்பூரை சேர்ந்த சஞ்சய் மணிகண்டன் என்பவர்இயக்கத்தில்,இசையமைப்பாளர் குட்லக் ரவி இசையில் தயாரிக்கப்பட்டுள்ள "ஸ்ரீராஜ மணிகண்டன்" என்ற அய்யப்ப சுவாமி பற்றிய திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாநடைப்பெற்றது.

    இதில் திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக. தலைவர் செந்தில்வேல் கலந்து கொண்டு இசை, ட்ரெய்லரை வெளியிட்டார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க. ஆன்மீக மேம்பாட்டு தலைவர், எம்.எஸ்.நகர் மண்டல தலைவர் வேலுச்சாமி ,செயலாளர் பழனியப்பன், குமார பாலா பவுண்டேஷன் சேர்மன் சதீஷ்குமார்,பூண்டி நகர தலைவர் ஜெயப்பிரகாஷ்மற்றும் திரைப்பட நடிகர்கள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் , பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • காங்கயம் நகரில் உள்ள திரையரங்குகளிலும் இப்படம் ஒருவாரம் திரையிடப்பட்டது.
    • நகா்மன்றக் கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா்சூரியபிரகாஷ் தலைமை வகித்தாா்.

    காங்கயம்:

    தமிழ்த் திரைப்பட இயக்குநா் ஆா்.பாா்த்திபன் இயக்கி, நடித்த இரவின் நிழல் திரைப்படம் கடந்த ஜூலை 15 ந் தேதி தமிழகம் முழுவதும் வெளியானது. 'நான் லீனியா் சிங்கிள் ஷாட்' படம் என்ற வகையில் எடுக்கப்பட்ட இப்படம் பலதரப்பினராலும் பாராட்டப்பட்டது.இந்தப் படத்துக்கு ஆா்.பாா்த்திபன் கேளிக்கை வரிவிலக்கு கோரி தமிழக அரசிடம் விண்ணப்பித்திருந்தாா்.காங்கயம் நகரில் உள்ள திரையரங்குகளிலும் இப்படம் ஒருவாரம் திரையிடப்பட்டது.

    இந்நிலையில் திருப்பூா் மாவட்டம், காங்கயம் நகா்மன்றக் கூட்டம் நடைபெற்றது.நகா்மன்றக் கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா்சூரியபிரகாஷ் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா்வெங்கடேஷ்வரன், நகா்மன்ற துணைத் தலைவா்கமலவேணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    கூட்டத்தில் ஆா்.பாா்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் திரைப்படத்துக்கு வரிவிலக்கு அளித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இது குறித்து நகராட்சி ஆணையா் வெங்கடேஷ்வரன் கூறியதாவது:-

    திரைப்படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிப்பது குறித்த தமிழ்நாடு உள்ளாட்சி அதிகார அமைப்புகளின் கேளிக்கை வரிச் சட்டத்தின்படி, இரவின் நிழல் படத்துக்கு வரிவிலக்கு கோரி தமிழக அரசிடம் இயக்குநா் ஆா்.பாா்த்திபன் கோரிக்கை விடுத்திருந்தாா். இக்கோரிக்கை மனு மீதான உள்ளாட்சி நகா்மன்றங்களின் முடிவினை அனுப்பிவைக்குமாறு சென்னை நகராட்சி இயக்குநா் கடிதம் மூலம் தெரிவித்திருந்தாா்.இதையடுத்து, நடைபெற்ற காங்கயம் நகா்மன்றக் கூட்டத்தில் இரவின் நிழல் படத்துக்கு வரிவிலக்கு அளித்து ஏகமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றாா்.

    தயாரிப்பாளர் நீல்கிரீஸ் முருகனின் நீல்கிரீஸ் ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் கூத்தன் திரைப்படத்தின் முன்னோட்டம். #Koothan
    தயாரிப்பாளர் நீல்கிரீஸ் முருகன் அவர்களின் நீல்கிரீஸ் ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் புத்தம் புதிய திரைப்படம் கூத்தன். 

    சினிமாவை பின்னனியாக கொண்டு இந்தப்படம் உருவாகியுள்ளது. சினிமாவில் நடிகர்கள் பின்னால் நடனமாடும் ஜீனியர் ஆர்ட்டிஸ்ட்களின் வாழ்வியலை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தை எழுதி இயக்குகிறார் A L வெங்கி. சினிமாவை பின்னனியாகக் கொண்டு இதுவரை நிறையப்படங்கள் வந்திருந்தாலும், இந்தப்படம் புதிய கோணத்தில் இதுவரை இல்லாத துணை நடிகர்களின் வாழக்கையை பேசும் படமாக இருக்கும்.

    அறிமுக நாயகன் ராஜ்குமார், அறிமுக நாயகிகள் ஸ்ரிஜிதா, சோனால், கீரா, ஆகியோர் நாயகன் நாயகியாக் இப்படத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் (பிரபுதேவா தம்பி) நாகேந்திர பிரசாத், விஜய் டிவி முல்லை, கோதண்டம், இயக்குநர் பாக்யராஜ், ஊர்வசி, மனோபாலா, ஜீனியர் பாலையா, கவிதாலயா கிருஷ்னன், ஸ்ரீரஞ்சனி, பரத் கல்யாண், ராம்கி, கலா மாஸ்டர் என ஒரு திரையுலக பட்டாளமே நடித்திருக்கிறார்கள். 

    இந்தப்ப்டத்தில் பாலாஜி இசையமைக்கிறார். ஒளிப்பதிவு மாடசாமி, படத்தொகுப்பு பீட்டர் பாபியா, கலை சி.ஜி.ஆனந்த், நடனம் அஷோக் ராஜா, சுரேஷ், நிர்வாக தயாரிப்பு மனோஜ் கிருஷ்ணா, தயாரிப்பு நீல்கரிஸ் முருகன்.

    இப்படம் அக்டோபர் 12ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.
    கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 படத்தை திரையிட அனுமதிக்கக்கூடாது என சாய்மீரா பட நிறுவனம் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. #KamalHaasan #Vishwaroopam2
    சென்னை:

    நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் இம்மாதம் வெளியாக உள்ள விஸ்வரூபம் படத்திற்கு தடை கேட்டு பிரமிட் சாய்மீரா நிறுவனம் ஐகோர்ட்டில் கடந்த 2-ம் தேதி மனு தாக்கல் செய்தது.

    2008-ம் ஆண்டு மர்மயோகி என்ற படத்தில் கமல் நடிக்க படத்தை தயாரிப்பதற்காக ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கும், பிரமிட் சாய்மீரா நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டது. ரூ.100 கோடி செலவில் தயாரிக்க திட்டமிடப்பட்ட அந்தப் படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக ரூ.6.90 கோடி வழங்கப்பட்டது. 

    அத்துடன் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிப்பதற்காக கமல்ஹாசனுக்கு ரூ.4 கோடி கொடுக்கப்பட்டது. அந்தப்பணம் ‘மர்மயோகி’ படம் தயாரிக்க பயன்படுத்தப்படாமல், “உன்னைபோல் ஒருவன்” படத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    ஏற்கெனவே ரூ.6.90 கோடி கேட்டு சாய்மீரா நிறுவனத்தால் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ‘விஸ்வரூபம் 2’ படத்தை ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியிடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ‘விஸ்வரூபம் 2’ படத்தை தயாரிக்க கமல் பலரிடம் கடன் வாங்கியுள்ள நிலையில், ‘மர்மயோகி’ படத்திற்கு கொடுத்த சம்பளம் ரூ.4 கோடியை வட்டியுடன் சேர்த்து ரூ.5.44 கொடுக்க வேண்டும்.

    இல்லையென்றால் ‘விஸ்வரூபம் 2’ படத்தை வெளியிடத்தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், கமல்ஹாசன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பிரமிட் சாய்மீரா நிறுவனம் ரூ.4 கோடி மட்டுமே கொடுத்ததாகவும், அந்த பணம் மர்மயோகி படத்தின் ஆரம்பகட்ட பணிகளுக்கு செலவிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

    மர்மயோகி படத்துக்கு வேறு தயாரிப்பாளர் கிடைத்ததும் அந்த பணத்தை திருப்பி வழங்கிவிடுவதாக கமல்ஹாசனின் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து, விஸ்வரூபம் படத்துக்கு தடை விதிக்க முடியாது என கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.
    கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 படத்தை திரையிட அனுமதிக்கக்கூடாது என சாய்மீரா பட நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. #KamalHaasan #Vishwaroopam2
    சென்னை:

    நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் இம்மாதம் வெளியாக உள்ள விஸ்வரூபம் படத்திற்கு தடை கேட்டு பிரமிட் சாய்மீரா நிறுவனம் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. 

    கடந்த 2008-ம் ஆண்டு மர்மயோகி என்ற படத்தில் கமல் நடிக்க படத்தை தயாரிப்பதற்காக ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கும், பிரமிட் சாய்மீரா நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டது. ரூ.100 கோடி செலவில் தயாரிக்க திட்டமிடப்பட்ட அந்தப் படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக ரூ.6.90 கோடி வழங்கப்பட்டது. 

    அத்துடன் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிப்பதற்காக கமல்ஹாசனுக்கு ரூ.4 கோடி கொடுக்கப்பட்டது. அந்தப்பணம் ‘மர்மயோகி’ படம் தயாரிக்க பயன்படுத்தப்படாமல், “உன்னைபோல் ஒருவன்” படத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    ஏற்கெனவே ரூ.6.90 கோடி கேட்டு சாய்மீரா நிறுவனத்தால் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ‘விஸ்வரூபம் 2’ படத்தை ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியிடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ‘விஸ்வரூபம் 2’ படத்தை தயாரிக்க கமல் பலரிடம் கடன் வாங்கியுள்ள நிலையில், ‘மர்மயோகி’ படத்திற்கு கொடுத்த சம்பளம் ரூ.4 கோடியை வட்டியுடன் சேர்த்து ரூ.5.44 கொடுக்க வேண்டும்.

    இல்லையென்றால் ‘விஸ்வரூபம் 2’ படத்தை வெளியிடத்தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
    சோனி பிக்சர்ஸ் நிறுவனம் யூடியூபில் ரெட்-பேன்ட் டிரெயிலருக்கு பதில் முழு திரைப்படத்தையும் பதிவேற்றம் செய்திருக்கிறது.


    சோனி பிக்சர்ஸ் நிறுவனம் ரெட்-பேன்ட் டிரெயிலருக்கு பதில் காலி தி கில்லர் முழு திரைப்படத்தையும் யூடியூபில் பதிவேற்றம் செய்திருக்கிறது. 

    இதுகுறித்து வெளியாகியிருக்கும் தகவல்களில் சோனி நிறுவனம் 89 நிமிடங்கள் 46 நொடிகள் ஓடக்கூடிய முழு திரைப்படத்தையும் ஜூலை 3-ம் தேதி தனது யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்ததாக கூறப்படுகிறது. CBR.com எனும் வலைத்தளம் இந்த விஷயத்தை முதலில் கண்டறிந்ததாக கூறப்படுகிறது.

    யூடியூப் தளத்தில் இருந்து திரைப்படம் எடுக்கப்படும் வரை முழு திரைப்படமும் எட்டு மணி நேரம் லைவில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில் திரைப்படத்தை சுமார் ஏழு ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்த்து இருந்தாக கூறப்படுகிறது.

    தவறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்ட திரைப்படத்தை தவரவிட்டவர்கள் இனி யூடியூபில் பணம் செலுத்தி இந்த திரைப்படத்தை பார்க்க முடியும். ஒரு மணி நேரம் 29 நிமிடங்கள் ஓடக்கூடிய காலி தி கில்லர் திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் ஜெர்மனியில் வெளியிடப்பட்டது. ஜான் மேத்யூஸ் இயக்கிய இந்த திரைப்படத்தின் டிவிடி கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் வெளியிடப்பட்டது.
    ×