search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரி விலக்கு"

    • உள்நாட்டு பருத்தி வியாபாரிகள் மற்றும் செயற்கை இழை பஞ்சு தயாரிப்பாளர்கள், ஜவுளித்தொழிலில் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
    • கோவைக்கு வருகை தந்த, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், சைமா தலைவர் சுந்தரராமன் தலைமையிலான குழுவினர் நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.

    திருப்பூர்:

    உக்ரைன் - ரஷ்யா இடையே நீடிக்கும் போர், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரி மற்றும் செயற்கை இழை பஞ்சு மீதான, தரக்கட்டுப்பாட்டு உத்தரவுகள் போன்றவற்றால், உள்நாட்டு பருத்தி வியாபாரிகள் மற்றும் செயற்கை இழை பஞ்சு தயாரிப்பாளர்கள், ஜவுளித்தொழிலில் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.அதனால் மிக நீண்ட பருத்தி மீதான இறக்குமதி வரிவிலக்கு மற்றும் நிதி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோவைக்கு வருகை தந்த, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், சைமா தலைவர் சுந்தரராமன் தலைமையிலான குழுவினர் நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.

    • காங்கயம் நகரில் உள்ள திரையரங்குகளிலும் இப்படம் ஒருவாரம் திரையிடப்பட்டது.
    • நகா்மன்றக் கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா்சூரியபிரகாஷ் தலைமை வகித்தாா்.

    காங்கயம்:

    தமிழ்த் திரைப்பட இயக்குநா் ஆா்.பாா்த்திபன் இயக்கி, நடித்த இரவின் நிழல் திரைப்படம் கடந்த ஜூலை 15 ந் தேதி தமிழகம் முழுவதும் வெளியானது. 'நான் லீனியா் சிங்கிள் ஷாட்' படம் என்ற வகையில் எடுக்கப்பட்ட இப்படம் பலதரப்பினராலும் பாராட்டப்பட்டது.இந்தப் படத்துக்கு ஆா்.பாா்த்திபன் கேளிக்கை வரிவிலக்கு கோரி தமிழக அரசிடம் விண்ணப்பித்திருந்தாா்.காங்கயம் நகரில் உள்ள திரையரங்குகளிலும் இப்படம் ஒருவாரம் திரையிடப்பட்டது.

    இந்நிலையில் திருப்பூா் மாவட்டம், காங்கயம் நகா்மன்றக் கூட்டம் நடைபெற்றது.நகா்மன்றக் கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா்சூரியபிரகாஷ் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா்வெங்கடேஷ்வரன், நகா்மன்ற துணைத் தலைவா்கமலவேணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    கூட்டத்தில் ஆா்.பாா்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் திரைப்படத்துக்கு வரிவிலக்கு அளித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இது குறித்து நகராட்சி ஆணையா் வெங்கடேஷ்வரன் கூறியதாவது:-

    திரைப்படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிப்பது குறித்த தமிழ்நாடு உள்ளாட்சி அதிகார அமைப்புகளின் கேளிக்கை வரிச் சட்டத்தின்படி, இரவின் நிழல் படத்துக்கு வரிவிலக்கு கோரி தமிழக அரசிடம் இயக்குநா் ஆா்.பாா்த்திபன் கோரிக்கை விடுத்திருந்தாா். இக்கோரிக்கை மனு மீதான உள்ளாட்சி நகா்மன்றங்களின் முடிவினை அனுப்பிவைக்குமாறு சென்னை நகராட்சி இயக்குநா் கடிதம் மூலம் தெரிவித்திருந்தாா்.இதையடுத்து, நடைபெற்ற காங்கயம் நகா்மன்றக் கூட்டத்தில் இரவின் நிழல் படத்துக்கு வரிவிலக்கு அளித்து ஏகமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றாா்.

    • தபால்துறை சார்பாக மூத்த குடிமக்களுக்கு சிறப்பு சேமிப்பு திட்டம் செயபடுத்தப்படுகிறது.
    • இந்த சேமிப்பு திட்டத்தில் 60 வயது முடிவடைந்தவர்கள் சேரலாம்.

    சேலம்:

    தபால் துறை சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பான சேமிப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    அதன்படி சேலம் மேற்கு கோட்டம் சார்பில் தபால்காரரும், தாத்தா பாட்டியும் என்ற தலைப்பில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலகத்தில் பணிபுரியும் தபால்காரர்கள் மூலம் இந்த திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த சேமிப்பு திட்டத்தில் 60 வயது முடிவடைந்தவர்கள் சேரலாம்.

    அதே போன்று 50 வயது முடிந்த பாதுகாப்பு பணியாளர்கள், 55 வயது முடிவடைந்த விருப்ப ஓய்வு பெற்றவர்கள் சேரலாம். குறைந்த பட்சம் ரூ.1,000-ம் முதல் அதிக பட்சம் ரூ.15 லட்சம் வரை சேமிக்கலாம். வருமான வரி சட்டத்தின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படும் என்று சேலம் மேற்கு கோட்ட தபால் கண்காணிப்பாளர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

    ×