search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tax Exemption"

    • உள்நாட்டு பருத்தி வியாபாரிகள் மற்றும் செயற்கை இழை பஞ்சு தயாரிப்பாளர்கள், ஜவுளித்தொழிலில் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
    • கோவைக்கு வருகை தந்த, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், சைமா தலைவர் சுந்தரராமன் தலைமையிலான குழுவினர் நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.

    திருப்பூர்:

    உக்ரைன் - ரஷ்யா இடையே நீடிக்கும் போர், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரி மற்றும் செயற்கை இழை பஞ்சு மீதான, தரக்கட்டுப்பாட்டு உத்தரவுகள் போன்றவற்றால், உள்நாட்டு பருத்தி வியாபாரிகள் மற்றும் செயற்கை இழை பஞ்சு தயாரிப்பாளர்கள், ஜவுளித்தொழிலில் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.அதனால் மிக நீண்ட பருத்தி மீதான இறக்குமதி வரிவிலக்கு மற்றும் நிதி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோவைக்கு வருகை தந்த, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், சைமா தலைவர் சுந்தரராமன் தலைமையிலான குழுவினர் நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.

    • 20 வருடங்களுக்கு மேலாக உயிரை பணயம் வைத்து நாட்டுக்காக எல்லை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு தற்போது ஓய்வு பெற்றுள்ளோம்.
    • திண்டுக்கல் மாவட்டத்திலும் முன்னாள் மத்திய துணை ராணுவ படை வீரர்களுக்கு வீட்டு வரி, குடிநீர் வரி ஆகியவற்றிற்கு விலக்கு அளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் பூங்கொடி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய துணை ராணுவ படை வீரர்கள் 10க்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனு அளிக்க வந்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது, திண்டுக்கல் மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட முன்னாள் மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் வசித்து வருகிறோம். 20 வருடங்களுக்கு மேலாக உயிரை பணயம் வைத்து நாட்டுக்காக எல்லை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு தற்போது ஓய்வு பெற்றுள்ளோம்.

    கோயம்புத்தூர், கடலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வீட்டு வரி, குடிநீர் வரி ஆகியவற்றிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்திலும் முன்னாள் மத்திய துணை ராணுவ படை வீரர்களுக்கு விலக்கு அளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பொதுமக்கள் அன்றாடம் உபயோகிக்கும் மளிகை பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என விக்கிரமராஜா வலியுறுத்தினார்
    • மளிகை பொருட்களின் உயர்வுக்கு, பெட்ரோல், டீசல், மின்சாரம் விலை உயர்வு தான் காரணமாக அமைகிறது என்றார்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் வியாபாரிகள் சங்க மாவட்ட கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் வியாபாரிகள் சங்க தலைவர் சுந்தர் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக இணை செயலாளர் இப்ராஹிம் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு செயலாளார் கார்மல்ராஜ் துணைத் தலைவர் தேவா, பொருளாளர் ஜாபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக அரியலூர் மாவட்ட மருந்து வணிகர் சங்க மாவட்ட தலைவர் கருணாகரன் தலைமையிலான மருந்து வணிகர் சங்கத்தினர், மாநில தலைவர் விக்ரமராஜாவுக்கு நினைவு பரிசு மற்றும் சால்வை அணிவித்தனர். இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அரியலூர் மாவட்ட தலைவர் விஜயகுமார், மாவட்ட செயலாளர் ராஜா ஜெயராமன், மாவட்ட பொருளாளர் கந்தசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.துணைத் தலைவர்கள் நடராஜ், செல்வராஜ் பி ஜி ரமேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்ட வணிகர் சங்க பேரமைப்பு மாநிலத்தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது,பொங்கல் தொகுப்பில் மளிகைப்பொருட்களை தமிழக முதல்வர் வழங்காததை மாநில வணிகர் சங்க பேரமைப்பு வரவேற்கிறது. மேலும், மக்களுக்கு தமிழக அரசு பொங்கல் தொகுப்பாக வழங்கும் ரூ.1000 பணத்தை கொண்டு எங்களை போல சாமானிய வியாபாரிகளிடம் மக்கள் பொருட்களை வாங்க முதல்வர் வழிவகுத்துள்ளார். இதனால் அரசுக்கு வருவாய் கிடைக்கும்.ஆன்லைன் விற்பனை மூலம் மக்களை ஏமாற்ற முயற்சிக்கும் நிறுவனங்கள் மீது மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் இழப்பு கணக்கை அரசுக்கு காட்டுவதுடன், பணியாளர்கள் 10,000 பேரை திடீர் என வேலையை விட்டு நீக்கியுள்ளனர். இது மக்களை ஏமாற்றும் வேலை.சந்தையில் விற்கப்படும் எண்ணெயை ஆய்வு செய்யும் அதிகாரிகள், தரமற்ற எண்ணெய் உற்பத்தி செய்யப்படும் இடத்தை கண்டறிந்து தடை செய்ய வேண்டும். பொதுமக்கள் அன்றாடம் உபயோகிக்கும் மளிகை பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும். மளிகை பொருட்களின் உயர்வுக்கு, பெட்ரோல், டீசல், மின்சாரம் விலை உயர்வு தான் காரணமாக அமைகிறது என்றார். முடிவில் துணைச் செயலாளர் வியாகுலம் நன்றி கூறினார்.

    • ஸ்ரீ சாய்பாபா கோவிலுக்கு, வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
    • கோவில் அறக்கட்டளை, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

    புனே:

    மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள சீரடி ஸ்ரீசாய்பாபா கோயில் அறக்கட்டளைக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் விதிக்கப்பட்ட ரூ.175 கோடி வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சீரடி ஸ்ரீ சாய்பாபா கோயில் அறக்கட்டளை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

    ​​ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் ஒரு அறக்கட்டளை என்று கருதிய வருமான வரித்துறை 2015-16ஆம் ஆண்டுக்கான வரி மதிப்பீடின் போது, நன்கொடையாக பெறப்பட்ட தொகைக்கு 30 சதவீதம் வருமான வரி விதித்தது.

    இதற்காக 183 கோடி ரூபாய் வரி செலுத்த வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதை அடுத்து அறக்கட்டளை சார்பில், உச்சநீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் வரி நிர்ணயம் செய்யப்படும் வரை செலுத்த வேண்டிய வரிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.

    இதை ஏற்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தானை ஒரு மத அறக்கட்டளையாக ஏற்று, கடந்த மூன்று ஆண்டுகளில் விதிக்கப்பட்ட ரூ.175 கோடிக்கான வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிறு வணிகத்தை பாதுகாக்கும் வகையில் ஜி.எஸ்.டி. விலக்கு வரம்பு ரூ.40 லட்சமாக உயர்த்தப்படுவதாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்தார். #TaxExemption #SmallBusiness #ArunJaitley #GST
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பை செயல்படுத்தும் வகையில் பல்வேறு மறைமுக வரிகளுக்கு பதிலாக சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமல்படுத்தப்பட்டது. இந்த வரி அமலாக்கம் குறித்த ஆலோசனை மற்றும் முடிவுகள் எடுப்பதற்காக ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த கவுன்சிலின் 32-வது கூட்டம் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், சிறு வணிகத்தை பாதுகாப்பதற்காக அவற்றின் ஜி.எஸ்.டி.க்கான விலக்கு வரம்பை இரு மடங்காக உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டது. இது வருகிற நிதியாண்டு (ஏப்ரல் 1-ந்தேதி) முதல் அமலுக்கு வருகிறது.



    தற்போது ஆண்டுக்கு ரூ.20 லட்சம் வரை விற்று முதல் கொண்ட சிறு வணிக நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு வரும் நிலையில், இனிமேல் இந்த வரம்பை ரூ.40 லட்சமாக அதிகரிக்க கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    வடகிழக்கு மாநிலங்களில் ரூ.10 லட்சமாக இருந்த இந்த விலக்கு வரம்பு, இனிமேல் ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.5,200 கோடி வரை அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என கணக்கிடப்பட்டு இருக்கிறது.

    இதைப்போல ஜி.எஸ்.டி. கூட்டு திட்டத்துக்கான ஆண்டு விற்று முதல் வரம்பும் ரூ.1 கோடியில் இருந்து ரூ.1½ கோடியாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. சிறு வணிகர்கள் தங்கள் விற்றுமுதலுக்கு ஏற்ப 1 சதவீத வரி செலுத்தினால் போதுமானது என அருண் ஜெட்லி கூறினார்.

    இதைப்போல ரூ.50 லட்சம் வரை விற்று முதல் கொண்டிருக்கும் சேவை வழங்குவோர் மற்றும் வினியோகஸ்தர்கள் (சரக்கு மற்றும் சேவை) 6 சதவீத வரியுடன் ஜி.எஸ்.டி. கூட்டு திட்டத்தை தேர்வு செய்ய முடியும் என்று கூறிய அருண் ஜெட்லி, இந்த 2 திட்டங்கள் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளம் பெற முடியும் எனவும் தெரிவித்தார்.

    இதைத்தவிர ரியல் எஸ்டேட் மற்றும் லாட்டரி துறைகளை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவது தொடர்பாக ஆய்வு செய்வதற்கு மந்திரிகள் கொண்ட 2 குழுக்கள் இந்த கவுன்சில் கூட்டத்தில் அமைக்கப்பட்டது. மேலும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் மாநிலங்களுக்கு இடையேயான விற்பனைக்கு 2 ஆண்டுகள் வரை 1 சதவீத பேரிடர் வரி வசூலிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.  #TaxExemption #SmallBusiness #ArunJaitley #GST 
    ×