என் மலர்

    நீங்கள் தேடியது "saibaba temple"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஸ்ரீ சாய்பாபா கோவிலுக்கு, வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
    • கோவில் அறக்கட்டளை, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

    புனே:

    மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள சீரடி ஸ்ரீசாய்பாபா கோயில் அறக்கட்டளைக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் விதிக்கப்பட்ட ரூ.175 கோடி வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சீரடி ஸ்ரீ சாய்பாபா கோயில் அறக்கட்டளை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

    ​​ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் ஒரு அறக்கட்டளை என்று கருதிய வருமான வரித்துறை 2015-16ஆம் ஆண்டுக்கான வரி மதிப்பீடின் போது, நன்கொடையாக பெறப்பட்ட தொகைக்கு 30 சதவீதம் வருமான வரி விதித்தது.

    இதற்காக 183 கோடி ரூபாய் வரி செலுத்த வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதை அடுத்து அறக்கட்டளை சார்பில், உச்சநீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் வரி நிர்ணயம் செய்யப்படும் வரை செலுத்த வேண்டிய வரிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.

    இதை ஏற்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தானை ஒரு மத அறக்கட்டளையாக ஏற்று, கடந்த மூன்று ஆண்டுகளில் விதிக்கப்பட்ட ரூ.175 கோடிக்கான வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலில் 3 நாட்கள் நடந்த சமாதி நூற்றாண்டு சிறப்பு பூஜையின்போது 5 கோடியே 97 லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர். #Saibabatemple #Saibabasamadhicentenary
    மும்பை:

    மராட்டிய மாநிலம் சீரடியில் பிரசித்தி பெற்ற சாய்பாபா கோயில் அமைந்துள்ளது. இங்கு திரளான பக்தர்கள் வந்து சாய்பாபா அருள் பெற்று செல்வது வழக்கம். 

    இதற்கிடையே, சீரடி சாய்பாபா சமாதி நிலையை அடைந்த நூற்றாண்டு விழா இந்த ஆண்டு சீரடியில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

    கடந்த 17-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரையிலான மூன்று நாட்களில் நடைபெற்ற பூஜையின்போது உண்டியல் வருமானமாக 2.52 கோடி ரூபாயும், ஆன்லைன் முன்பதிவு உள்பட பல்வேறு கவுன்ட்டர்களில் ரசீது விற்பனை மூலமாக சுமார் 83 லட்சம் ரூபாயும் வசூலானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ஆன்லைன் மூலமாகவும் காசோலை, கேட்போலை மூலமாக ரூ.1.41 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. இதுதவிர அகமத்நகர் மாவட்டத்தில் உள்ள சாய்பாபா கோயில் மூலம் ரூ.1.46 கோடி ரொக்க நன்கொடை கிடைத்தது.

    மேலும், தங்கம் மற்றும் வெள்ளி நகைகளாக ரூ.28.24 லட்சம், வெளிநாட்டுப் பணமாக ரூ.24.55 லட்சம், கட்டண தரிசனம் மூலம் ரூ.78 லட்சம், ஆன்லைன் நுழைவுச்சீட்டு மற்றும் லட்டு விற்பனை மூலம் ரூ.28.52 லட்சம் என இந்த 3 நாட்களில் சாய்பாபா சமிதி நிர்வாகத்துக்கு 5 கோடியே 97 லட்சம் ரூபாய் நன்கொடையாக சேர்ந்ததாக சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளையின் தலைமை செயல் அலுவலர் ருபல் அகர்வால் தெரிவித்துள்ளார். #Saibabatemple #Saibabasamadhicentenary 
    ×