search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "faith"

    • சரீரத்தை விட மதிப்பு மிக்கது நமது ஜீவன்.
    • நானே உயிர்த்தெழுதலும், ஜீவனுமாயிருக்கிறேன்.

    சரீரத்திற்கு தேவையானவற்றை மனிதர்கள் சேமிக்கிறார்கள். ஆனால் சரீரத்தை விட மதிப்பு மிக்கது நமது ஜீவன். அது நித்திய நித்திய காலம் வாழக்கூடியது என்பதை உணர முடியாமல் மனிதன் இருப்பது வருந்தத்தக்கது.

    கல்வி கற்கின்ற ஒருவன் தான் வேலைவாய்ப்பு பெற, அடுத்து என்ன படிக்க வேண்டும் என கற்றவர்களிடம் ஆலோசனை கேட்கிறான். நோய்வாய்ப்பட்ட ஒருவர், ஏற்கனவே வியாதிப்பட்டு குணமடைந்த ஒருவரிடம் எந்த மருத்துவரிடம் சிகிச்சை பெற்றீர்கள் என விசாரிக்கிறார்.

    இப்படியாக எல்லாவற்றிற்கும் ஆலோசனை கேட்கும் நாம் மரித்தும் உயிரோடு எழுந்த இயேசுவிடம், நமது நித்திய வாழ்வுக்கான வழியை கேட்டு தெரிந்து கொள்ள விருப்பமற்றவர்களாக இருக்கிறோம்.

    'மரித்தேன், ஆனாலும் சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன். நான் மரணத்திற்கும் பாதாளத்திற்கும் உரிய திறவுகோல்களை உடையவனாயிருக்கிறேன்' (வெளி 1:18) என இயேசு கூறுகிறார்.

    கடவுளிடம் வேண்டினால் விண்ணுலகை அடையலாம் என்றும், நன்மை செய்தால் மறுவாழ்வு உண்டு என்றும் பொதுவாக நம்மில் சிலர் நினைப்பது உண்டு.

    ஆனால் வேத வசனத்தில் தேவன் நமக்கு ஜீவனைத் தந்திருக்கிறார். அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறது (1 யோவான் 5:11,12) என்று கூறப்பட்டுள்ளது.

    அதாவது கடவுள் நமக்கு நித்திய முடிவில்லாத வாழ்வை தந்தது உண்மைதான். ஆனால் அந்த வாழ்வு அவருடைய குமாரனாகிய கிறிஸ்துவில் இருக்கிறது என்றும், கிறிஸ்துவை உடையவன் ஜீவனை உடையவன் என்றும் வேதம் கூறுகிறது.

    இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் தங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் பொழுது, தாங்கள் ஆசீர்வாதமாக இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள். குறிப்பாக செல்வச்செழிப்பான வாழ்க்கை மற்றும் வியாதி இல்லாத வாழ்க்கை வாழ்பவர்கள், தாங்கள் ஆசீர்வாதமாக இருப்பதாக எண்ணிக்கொள்வது உண்டு. ஆனால் இவை அனைத்தும் உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்கள்.

    இவை எல்லாவற்றிற்கும் மேலான ஆசீர்வாதத்தை கடவுள் நமக்கு வைத்திருக்கிறார். அது தான் நித்திய வாழ்வு. முடிவில்லாத வாழ்க்கை. நிரந்தரமாக வாழ்கிற வாழ்க்கை. மரித்த பின்பு ஒரு வாழ்க்கையா? என நம்மில் சிலர் வாக்குவாதம் பண்ணுவது உண்டு.

    ஆனால் வேதம் கூறுகிறது, "கிறிஸ்துவை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை பெற்றுக்கொள்வான்.

    என்னிடத்தில் விசுவாசமாய் இருக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்கு சொல்லுகிறேன்" (யோவான் 16.7).

    "நித்திய ஜீவனை தருவேன் என்பதே அவர் நமக்குத் தந்த வாக்குத்தத்தம்" (1 யோவான் 2:25).

    இந்த பூமியில் தன்னுடைய வாழ்வை காப்பாற்ற போராடுகிற மனிதன், தான் மரித்த பின்பு தன்னுடைய சரீரத்தை விட்டு பிரிகிற ஜீவன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என யோசிக்க தவறி விடுகிறான்.

    "ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும், அது அவனுக்கு ஜீவன் அல்ல" என்று (லூக் 12:15) வேதம் கூறுகிறது. "மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?

    மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?" என்று (மத்.16.26) வேதம் கூறுகிறது.

    "நானே உயிர்த்தெழுதலும், ஜீவனுமாயிருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்" (யோவான் 1.25) என்று இயேசு கூறுகிறார். தன்னை விசுவாசிக்கிறவர்களுக்கு நித்திய வாழ்வு மட்டுமல்ல, உலக ஐசுவரியங்களையும் கொடுக்க தேவன் விரும்புகிறார்.

    "நாம் எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்க வேண்டும் என்பதே நம் தேவனுடைய விருப்பம். கர்த்தருடைய ஆசீர்வாதமே ஐசுவரியத்தை தரும்" (நீதிமொழிகள் 10-12).

    "என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின் படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்" என்று பிலிப்பியர் 4:20 கூறுகிறது.

    எப்படி கிறிஸ்து வழியாக நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வது நிச்சயமோ, அதுபோல இவ்வுலகில் நம்முடைய எல்லா தேவைகளும் கிறிஸ்து வழியாக நிறைவாக்கப்படும் என்று வேதம் கூறுகிறது.

    எதை உடுப்போம்; எதை குடிப்போம் என்று கவலைப் படாதீர்கள். "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு கூடக் கொடுக்கப்படும்" (மத்தேயு 6:31-33) என்பதே கர்த்தருடைய வார்த்தை.

    கடவுள் நமக்கு ஐசுவரியங்களைத் தருவது நிச்சயம். ஆனால் முதலாவது தேவனுடைய ராஜ்யத்தில் நித்தியகாலம் வாழ்கிற வாழ்க்கையை நாம் விரும்பித் தேட வேண்டும். அப்படி நாம் செய்யும் போது இவ்வுலகில் நாம் மகிழ்ச்சியாக வாழ என்ன தேவையோ, அவை எல்லாவற்றையும் சேர்த்து தர அவர் வல்லமை உள்ள தேவன்.

    ஒருவேளை இன்று ஏதோ ஒரு தேவையைக் குறித்து கவலையோடு இருக்கிறீர்களா? கலங்காதீர்கள். அவரை விசுவாசிக்கிற ஒவ்வொருவரையும் கர்த்தர் எல்லா ஆசீர்வாதங்களாலும் நிரப்ப விரும்புகிறார். ஏனென்றால் அவர் உங்களை நேசிக்கிறார். இம்மையிலும் மறுமையிலும் நாம் ஆசீர்வதிக்கப்பட அவரை விசுவாசத்தோடு ஏற்றுக்கொள்வோம், ஆமென்.

    • ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம் தமிழகத்தில் தாமரை மலர உறுதுணையாக அமையும்.
    • மாவட்ட பா.ஜ.க. தலைவர் தரணி ஆர்.முருகேசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள் நடைபயணமானது தமிழகத்தில் தாமரை மலர உறுதுணையாக அமையும் என்று ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க தலைவர் தரணி ஆர்.முருகேசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் மாலைமலர் நிருபருக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் கட்சியை பலப்படுத்தவும், பா.ஜ.க. அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை மக்களுக்கு எடுத்துக் கூறவும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் நடைபயண திட்டத்தை அறிவித்துள்ளார்.இந்த நடைபயணம் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பஸ் நிலையம் அருகே இன்று (வெள்ளிக்கிழமை) மாலை தொடங்குகிறது.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு அண்ணாமலையின் நடைபயணத்தை மாலை 5.45 மணிக்கு விழா நடைபெறும் இடத்தில் தொடங்கி வைக்கிறார்.முன்னதாக அங்கு நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார்.

    இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜனதா மூத்த தலைவர் எச்.ராஜா மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.இன்று நடைபயணம் தொடங்கும் அண்ணாம லை,ராமேசுவரம் நகருக்குள் சென்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்கிறார். முதல் நாள் பயணத்தை ராமேசுவரத்தில் முடிக்கும் அவர் இரவு ராமேசுவரத்திலேயே தங்குகிறார்.நாளை (29-ந்தேதி) காலை ராமேசுவரத்தில் இருந்து நடைபயணம் புறப்படும் அண்ணாமலை தங்கச்சிமடம்,பாம்பன் பகுதிகளில் மக்களை சந்திக்கிறார்.தொடர்ந்து ராமநாதபுரம் செல்லும் அவர் பொதுமக்களை சந்தித்துவிட்டு இரவு ராமநாதபுரத்தில் தங்குகிறார்.நடைபயண தொடக்க விழாவுக்கான மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளன.எனது தலைமையிலான ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க சார்பில் வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.நடை பயண தொடக்க நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.மத்திய அமைச்சர் உள்ளிட்ட பா.ஜ.க.வினரை வரவேற்ப தற்காக ராமேசுவரம் பஸ் நிலையத்தில் இருந்து பாம்பன் பாலம் வரை சாலையின் இருபுறமும் பா.ஜ.க. கொடிகள் மற்றும் பேனர்கள் வைக்கப் பட்டுள்ளன. விழா மேடை யானது பாராளுமன்ற கட்டிடத்தை போன்று வடிவமைக்கப் பட்டுள்ளது. மத்திய அமைச்சர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மீண்டும் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் வரை மாவட்ட காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளது.இந்த நடைபயணமானது தமிழ கத்தில் தாமரை மலர ஏதுவாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.தமிழக மக்கள் இந்த நடை பயணத்தில் பங்கேற்று பா.ஜ.க.விற்கு முழு ஆதரவையும் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நல்ல படம் எடுத்தால் மக்கள் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
    • துபாயிலும் ஒரு நண்பர் இறந்தவர்களை சமூக சேவையாக அடக்கம் செய்து வருகிறார்.

    தஞ்சாவூர்:

    பிரபல திரைப்பட நடிகரும் இயக்குனருமான சசிக்குமார் நடித்து அண்மையில் வெளிவந்துள்ள அயோத்தி திரைப்படம் தஞ்சாவூர் ராணி பேரடைஸ் தியேட்டரில் திரையிடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தஞ்சாவூரில் நடைபெறும் நந்தன் என்கிற புதிய திரைப்பட சூட்டிங்கில் கலந்து கொள்ள வந்த நடிகர் சசிக்குமார் அயோத்தி திரைப்படத்தை திரையரங்கில் பொதுமக்களுடன் அமர்ந்து பார்வையிட்டார்.

    பின்னர் அவர் பேசும் போது, சாதி மதம் தாண்டி மனிதம் தான் முக்கியம், மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற விஷயம் இந்த படத்தில் சொல்லப்பட்டுள்ளது.

    நிஜ வாழ்க்கையில் நடந்த, நடக்கின்ற எல்லோரும் கடந்து வந்துள்ள, செய்தியைத்தான் இந்த படத்தில் சொல்லி இருக்கிறோம். நல்ல படம் எடுத்தால் மக்கள் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார்.

    தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    தமிழர்கள் நாம் வட மாநிலத்தவர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறோம்.

    அதைத்தான் இந்த படத்தில் சொல்லப்பட்டுள்ளது, இந்த படத்தின் கதை அனைவரின் வாழ்க்கையிலும் நடக்கின்ற ஒரு விசயம் தான்.

    இந்தப் படத்தில் வருவது போன்று துபாயிலும் ஒரு நண்பர் இறந்தவர்களை சமூக சேவையாக அடக்கம் செய்து வருகிறார்.

    இது போல மதுரையிலும் ஒருவர் செய்து வருகிறார். எல்லாருடைய வாழ்க்கையிலும் கடந்து வந்த விஷயம் .

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் நடிகர் துரை சுதாகர், திரையரங்க நிர்வாகிகள், ரசிகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    • 6 முதல் 60 வயது வரையுள்ள பெண்கள் ஊர்வலமாக வந்து கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
    • கன்னி பெண்கள் சேகரித்து வைத்த விநாயகரை ஆற்றில் விட்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தேத்தாக்குடியில் மார்கழி மாதம் முழுவதும் பெண்கள் வீட்டு வாசலில் கோலமிட்டு அறுகம்புல் சாண விநாயகர் வைப்பது வழக்கம்.

    திருமணம் ஆகாத பெண்கள் மார்கழி மாதம் பிடித்து வைத்த பிள்ளையாரை ஆற்றில் கரைத்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

    இதன் அடிப்படையில் காணும் பொங்கலை யொட்டி செல்லியம்மன் கோவில் வளாகத்தில் 6 முதல் 60 வயது வரையுள்ள பெண்கள் ஊர்வலமாக வந்து உப்பாற்றின் அருகே கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

    பின், கன்னி பெண்கள் சேகரித்து வைத்த விநாயகரை ஆற்றில் விட்டனர். நிகழ்ச்சிக்கு பல ஊர்களில் இருந்து பெண்கள் வந்து நட்பை பரிமாறி கொண்டனர்.

    • ஸ்ரீமதி தொடர்பான வழக்குகளை நடத்தி வரும் வழக்கறிஞர்கள் மேல்முறையீட்டிற்காக உச்சநீதிமன்றம் சென்று இருக்கிறார்கள் எனவே அந்த நீதிபதிகளாவது நல்ல ஒரு தீர்வை வழங்க வேண்டும்.
    • நிபுணர் குழுவினர் கருத்தைக் கேட்டு தவறாக நீதி வழங்குவது பொதுமக்கள் மத்தியில் நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை குறைந்துவிடும்.

    நாகப்பட்டினம்:

    முக்குலத்து புலிகள் அமைப்பின் நிறுவன தலைவர் ஆறு.சரவணன் நிருபர்களிடம் கூறியதாவது,

    கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக் பள்ளியில் படித்த ஸ்ரீமதி மரணம், தற்கொலை எனவும் கொலையோ அல்லது பாலியல் துன்புறுத்தலோ இல்லை என உயர் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.

    நீதிமன்றத்தை தான் மக்கள் நம்பி இருக்கிறார்கள்.

    நீதிமன்றங்கள் இப்படி தவறுதலான ஒரு நீதியை வழங்கினால் மக்கள் நீதிமன்றங்கள் மீது உள்ள நம்பிக்கை இல்லாமல் போய் விடும்.

    நிபுணர் குழுவினர் கருத்தைக் கேட்டு தவறாக நீதி வழங்குவது பொதுமக்கள் மத்தியில் நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை குறைந்துவிடும்.

    தமிழக முதல்வர் ஸ்ரீமதி உயிரிழப்புக்கு உரிய நீதியையும் நிவாரணம் வழங்குவதற்கான முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.

    அதே போல ஸ்ரீமதி தொடர்பான வழக்குகளை நடத்தி வரும் வழக்கறிஞர்கள் மேல்முறையீட்டிற்காக உச்சநீதிமன்றம் சென்று இருக்கிறார்கள்.

    அந்த நீதிபதிகளாவது நல்ல ஒரு தீர்வை வழங்க வேண்டும்.

    தொடர்ச்சியாக தென் மாவட்டங்களில் ஒண்டிவீரன் விழாவிற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    அதேபோல புலித்தேவன், மருது பாண்டியன் மற்றும் ஆக.30 நடைபெற்ற பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும், சுதந்திரத்திற்காக பாடுபட்டு உயிர்நீத்த மன்னர்கள் மற்றும் மாவீரர்களின் புகழை பரப்புவதற்கு எல்லா மக்களும் நேரில் சென்று பார்த்து வழிபட வேண்டும்.

    ஆனால் அவர்கள் வழிபடாத அளவிற்கு தமிழக அரசு 144 உத்தரவை பிறப்பிப்பதாகவும், அதிமுக அரசு தொடர்ச்சியாக இந்த 144 தடை உத்தரவை செய்திருந்தது.

    திமுக அரசு 144 தடை உத்தரவை அகற்ற வேண்டும் என்றார்.

    புலித்தேவனின் 307வது பிறந்தநாள்

    நெல்லை சீமையை ஆண்டு வெள்ளையரை எதிர்த்து போரிட்ட முதல் சுதந்திரப் போராட்ட மாமன்னர் பூலித்தேவனின் 307வது பிறந்தநாளை ஒட்டி நாகை மாவட்டம் காமேஸ்வரத்தில் முக்குலத்துப்புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு.சரவணத்தேவர் பூலித்தேவனின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து சிறப்புரை ஆற்றினார்.

    இந்த கூட்டத்தில், இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட மாவீரன் பூலித்தேவனுக்கு அரசின் சார்பில், சென்னை தலைநகரில் உருவச்சிலை அமைக்க வேண்டும்.

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பூலித்தேவன் விழாவுக்கு போடப்படும் 144 தடையை நீக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கோவில் நேர்த்திக்கடனுக்காக தனது நாக்கை துண்டாக அறுத்து பின்னர் மயங்கி விழுந்த பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலம் டார்சாமா கிராமத்தில் உள்ள பிஜேசன் அம்மன் கோவிலுக்கு கவுத்தி டோமர் என்ற பெண் தினமும் சென்று வழிபட்டுள்ளார். இந்நிலையில், நேற்று கோவிலுக்கு சென்ற அவர் திடீரென தனது நாக்கை துண்டாக அறுத்தார். இதனை அடுத்து ரத்தம் அதிகளவில் வெளியேறியதால அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.

    இதன் பின்னர், கோவிலில் இருந்த மற்றவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் கூறுகையில், “தான் வேண்டியது நடந்தால் நாக்கை அறுத்துக்கொள்வதாக அவர் வேண்டியுள்ளார். தனது வேண்டுதலை நிறைவேற்ற நேற்று தனது நாக்கை கோவிலில் வைத்து அறுத்துள்ளார்” என தெரிவித்தனர்.

    திருமணம் ஆனதில் இருந்து காலை, மாலை என இருவேளையும் அந்த கோவிலுக்கு செல்லும் தனது மனைவி, விஷேச நாட்களில் கோவிலிலேயே இருப்பார் வீட்டுக்கு வருவது இல்லை என கவுத்தி டோமரின் கணவர் தெரிவித்துள்ளார். 
    ×