search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "my soil-my people"

    • ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம் தமிழகத்தில் தாமரை மலர உறுதுணையாக அமையும்.
    • மாவட்ட பா.ஜ.க. தலைவர் தரணி ஆர்.முருகேசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள் நடைபயணமானது தமிழகத்தில் தாமரை மலர உறுதுணையாக அமையும் என்று ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க தலைவர் தரணி ஆர்.முருகேசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் மாலைமலர் நிருபருக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் கட்சியை பலப்படுத்தவும், பா.ஜ.க. அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை மக்களுக்கு எடுத்துக் கூறவும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் நடைபயண திட்டத்தை அறிவித்துள்ளார்.இந்த நடைபயணம் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பஸ் நிலையம் அருகே இன்று (வெள்ளிக்கிழமை) மாலை தொடங்குகிறது.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு அண்ணாமலையின் நடைபயணத்தை மாலை 5.45 மணிக்கு விழா நடைபெறும் இடத்தில் தொடங்கி வைக்கிறார்.முன்னதாக அங்கு நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார்.

    இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜனதா மூத்த தலைவர் எச்.ராஜா மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.இன்று நடைபயணம் தொடங்கும் அண்ணாம லை,ராமேசுவரம் நகருக்குள் சென்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்கிறார். முதல் நாள் பயணத்தை ராமேசுவரத்தில் முடிக்கும் அவர் இரவு ராமேசுவரத்திலேயே தங்குகிறார்.நாளை (29-ந்தேதி) காலை ராமேசுவரத்தில் இருந்து நடைபயணம் புறப்படும் அண்ணாமலை தங்கச்சிமடம்,பாம்பன் பகுதிகளில் மக்களை சந்திக்கிறார்.தொடர்ந்து ராமநாதபுரம் செல்லும் அவர் பொதுமக்களை சந்தித்துவிட்டு இரவு ராமநாதபுரத்தில் தங்குகிறார்.நடைபயண தொடக்க விழாவுக்கான மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளன.எனது தலைமையிலான ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க சார்பில் வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.நடை பயண தொடக்க நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.மத்திய அமைச்சர் உள்ளிட்ட பா.ஜ.க.வினரை வரவேற்ப தற்காக ராமேசுவரம் பஸ் நிலையத்தில் இருந்து பாம்பன் பாலம் வரை சாலையின் இருபுறமும் பா.ஜ.க. கொடிகள் மற்றும் பேனர்கள் வைக்கப் பட்டுள்ளன. விழா மேடை யானது பாராளுமன்ற கட்டிடத்தை போன்று வடிவமைக்கப் பட்டுள்ளது. மத்திய அமைச்சர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மீண்டும் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் வரை மாவட்ட காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளது.இந்த நடைபயணமானது தமிழ கத்தில் தாமரை மலர ஏதுவாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.தமிழக மக்கள் இந்த நடை பயணத்தில் பங்கேற்று பா.ஜ.க.விற்கு முழு ஆதரவையும் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ஜ.க.வின் என் மண் என் மக்கள் யாத்திரை பந்தல்கால் நடும் விழா நடந்தது.
    • 2024 தேர்தல் தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்ப–டுத்தும் என தெரிவித்தார்.

    கீழக்கரை

    தமிழ்நாடு பா.ஜ.க. சார்பில் வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னெடுத்து பிரசாரம் மேற்கொள்ளும் வகையில் ராமேசுவரத்தில் இருந்து பா.ஜ.க. மாநிலத்த–லைவர் அண்ணாமலை தலைமையில் 'என் மண், என் மக்கள் யாத்திரை' வருகிற 28-ந்தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்க உள்ளார்.

    இதனையொட்டி, ராமே–சுவரம் பேருந்து நிலையம் அருகே உள்ள இடத்தில் பிரமாண்டமாக பந்தல் அமைக்கும் பணிக்காக பூமி பூஜை மற்றும் பந்தல்கால் நடும் விழா நேற்று நடை–பெற்றது. மாவட்டத் தலை–வர் தரணி ஆர்.முருகேசன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் முன் னிலையில் பூமி பூஜை மற்றும் பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்ட பொறுப்பாளர் கே.முரளிதரன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் பவர் நாகேந்திரன், மாவட்ட பொதுச்செயலாளர் மணி–மாறன், ஆத்மா கார்த்திக், நகர் தலைவர் ஸ்ரீதர் மற்றும் நிர்வாகிகள் ராமச்சந்திரன், கணேசன், சங்கிலி, ஞான–குரு, கதிரவன், அரசம்மாள், செல்வி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    இதனைத் தொடர்ந்து கருப்பு முருகானந்தம் நிரு–பர்களிடம் கூறியதா–வது:-

    வரும் 28-ந்தேதி தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நாளாக அமையவுள்ளது. பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை, அரசியல் மாற்றத்திற்கான ஒரு யாத்தி–ரையை ராமேசுவரத்தில் இருந்து தொடங்க உள்ளர். என் மண் என் மக்கள் என்ற யாத்திரையை துவக்கி வைக்க மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 28-ந்தேதி மாலை ராமேசுவரம் வருகை தர உள்ளார். இந்த யாத்திரையில் பங்கெடுப்பதற்கு பல லட் சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தமிழ்நாட்டில் இருந்து ராமேசுவரத்திற்கு வர உள்ளனர். ராமநாதபுரம் மண் தேசியத்திற்கும், தெய் வீ–கத்திற்கும் உறு–துணை–யாக இருக்கும் என்று நிரூபிக்கும் வகையில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து மட்டும் லட்சம் பேர் கலந்துகொள்ள உள்ளனர்.

    அதற்கான பணியை துவங்கி உள்ளோம். அனைத்து குக்கிராமத்தில் இருந்து பொதுமக்கள் கலந்துகொள்ள உள்ளனர். இந்த யாத்திரை தொடக்கமே அரசியல் மாற்றத்தத்தை ஏற்படுத்தும். யாத்திரை நிறைவடையும் போது தமி–ழகத்தில் பா.ஜ.க. ஒரு அசைக்க முடியாத கட்சியாக என்ற நிலை ஏற்படுத்தும். 2024 தேர்தல் தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்ப–டுத்தும் என தெரிவித்தார்.

    ×