search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mohan bhagwat"

    மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், சபரிமலை தீர்ப்பு அமைதியின்மைக்கும், சமுதாயத்தில் பிளவுக்கும் வழிவகுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். #Sabarimala #SabarimalaVerdict #RSS #MohanBhagwat
    மும்பை:

    மகாராஷ்டிராவின் நாக்பூரில் இந்த ஆண்டு விஜய தசமி விழா நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்டு  பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் அரசாங்கம்  மாற்றியமைந்தாலும் எல்லைகள் மீதான தாக்குதலை அண்டை நாடுகள் நிறுத்தவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

    சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பானது இயற்கையை கருத்தில் கொள்ளவில்லை எனவும், சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மரபுவழி மற்றும் முற்றுமுழுதான சமுதாய பிரிவினையை  ஏற்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு என தனி சட்டம் இயற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், ஆர்.எஸ்.எஸ் பல கோடி மக்களின் உணர்வை உள்ளடக்கியதாகவும், ராமரின் பிறந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். #Sabarimala #SabarimalaVerdict #RSS #MohanBhagwat
    அயோத்தியில் ராமர் கோயில் அமைவதை எதிர்க்கட்சிகளால்கூட வெளிப்படையாக தடுக்க முடியாது என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். #Ramtemple #MohanBhagwat
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம், அரித்துவார் நகரில் யோகா குரு பாபா ராம்தேவ் நடத்திவரும் பதாஞ்சலி பீடத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உரையாற்றினார்.

    அயோத்தியில் ராமர் கோயில் அமைவதை எதிர்க்கட்சிகளால்கூட வெளிப்படையாக தடுக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

    அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. ஆனால், இதற்கு உகந்த காலம் கைகூட சிறிது நேரம் ஆகலாம். எல்லா அரசாங்கங்களுக்கும் சில வரம்பு எல்லைகள் உள்ளன. அந்த வரம்புக்குள்தான் அவர்கள் செயல்பட முடியும்.

    ஆனால், சாதுக்களுக்கும் ஜீயர்களுக்கும் அத்தகைய கட்டுப்பாடுகள் கிடையாது. மதம், நாடு மற்றும் சமூகத்தின் உயர்வுக்காக அவர்கள் பாடுபட வேண்டும்.

    ராமபிரான் இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தெய்வம் என்பதால் அயோத்தியில் ராமர் கோயில் அமைவதை  எதிர்க்கட்சிகளால்கூட வெளிப்படையாக தடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். #Ramtemple #MohanBhagwat
    ராஜஸ்தானில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், பெண்களின் ஆதரவின்றி நாடு வளர்ச்சி அடையாது என கூறியுள்ளார். #MohanBhagwat #RSS
    ஜெய்ப்பூர்  :

    ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் இன்று நடந்த கூட்டம் ஒன்றில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், ’குடும்ப விவகாரங்களை பெண்கள் கையாண்டு வருவதும், பெரிய துறைகளில் பெண்கள் தலைவர்களாக செயல்படுவதும் நல்ல ஒரு அடையாளம். பெண்கள் ஆண்களை விட குறைந்தவர்கள் அல்ல.  அவர்களின் ஆதரவின்றி நாடு வளர்ச்சி அடையாது.

    தற்போது மக்கள் தங்கள் மனநிலையை மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. பெண்களை அவர்கள் அடிமைகளாக நடத்துவதற்கு பதிலாக பெண் கடவுளாக நடத்த வேண்டும்.

    பெண்களின் பாதுகாப்பிற்கான கடுமையான சட்டங்களை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.  சட்டத்திற்கு என வரம்பு உள்ளது. பெண்கள் பாதுகாப்பு பற்றிய சமூக விழிப்புணர்வினை உருவாக்கவும் மற்றும் சமூகத்தில் அவர்களுக்கான மதிப்பினை உயர்த்துவதற்காகவும் பொதுமக்கள் பணியாற்ற வேண்டும்’ என பகவத் தெரிவித்தார். #MohanBhagwat #RSS
    ராமர் கோவில் தீர்ப்பை விரைவாக வழங்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் கூறியுள்ளார். #MohanBhagwat #RSS

    புதுடெல்லி:

    அயோத்தி ராமர் கோவில் போராட்டங்கள் தொடர்பாக எழுத்தாளர் ஹேமந்த் சர்மா எழுதிய 2 புத்தகங்கள் வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது.

    இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத், பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    அயோத்தியில் இருந்த ராமர் கோவில் இடிக்கப்பட்டது என்பது உண்மையான சம்பவம். இதை அனைவரும் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும். ராமர் கடவுள் என்பது இந்துக்களின் அடையாளம். அது இந்துக்களின் நம்பிக்கை.

    இதற்கு ஆதாரங்கள் தேவையில்லை. அப்படி கேட்பதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

    அயோத்தியில் ராமர் கோவில் தாமதம் இல்லாமல் கட்டப்பட வேண்டும் என்பதை இந்த நாடே விரும்புகிறது. அப்படி ராமர்கோவில் கட்டப்பட்டு விட்டால், இந்து - முஸ்லிம்களிடையே உள்ள கருத்து வேற்றுமைகள் மறைந்து விடும்.

    ராமர் கோவில் தொடர்பான வழக்கு தீர்ப்புகளை விரைவாக வழங்க வேண்டும். நீண்ட காலத்திற்கு இழுத்து கொண்டு செல்லக்கூடாது. இந்த சமூகம் தான் முதன்மையானது. அவர்களுக்கு உண்மையும், நீதியும் கிடைக்க வேண்டும்.


    மதநம்பிக்கைகள் மீது கேள்வி எழுப்பக்கூடாது. அது பல நூற்றாண்டுகளாக மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

    இவ்வாறு மோகன்பகவத் பேசினார்.

    பாரதிய ஜனதா அமித்ஷா பேசும்போது, ராமர் கோவில் விவகாரத்தில் 500 ஆண்டுகளாக மவுன போராட்டம் நடந்து வருகிறது. ராமஜென்ம பூமி போராட்டம் தான் சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவில் நடந்த மிகப்பெரிய போராட்டம் ஆகும்.

    அங்கு ராமர் கோவில் கட்டப்பட வேண்டியது அனைவரின் விருப்பம். அயோத்தியில் கடந்த காலத்தில் நடந்த சம்பவம் காட்டு மிராண்டித்தனமானது என்பதற்கு சாட்சியமாக உள்ளது என்று கூறினார்.

    மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் பேசும் போது, அயோத்தி தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. அதற்கு அனைத்து சமூகத்தினரும் உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்று கூறினார்.

    ஆங்கிலம் உள்பட எந்த மொழிக்கும் ஆர்எஸ்எஸ் எதிரானவர்கள் இல்லை என அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் இன்று பேசியுள்ளார். #RSSVision #MohanBhagwat
    புதுடெல்லி:

    ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பில் எதிர்கால இந்தியா என்ற 3 நாள் கருத்தரங்கம் டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த கருத்தரங்கில் மத்திய மந்திரிகள், பாலிவுட் பிரபலங்கள் உள்பட பல துறைகளில் இருந்து முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    கருத்தரங்கில் இன்று பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்,  “ஆங்கிலம் உள்பட எந்த ஒரு மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. ஆங்கிலத்தில் புலமை பெற்ற பேச்சாளர்கள் தேவைப்படுகின்றனர். நமது கலாச்சாரத்தையும் நவீன கல்வி முறையையும் உள்ளடக்கிய புதிய கல்விக்கொள்கை தேவை” என கூறினார்.

    மேலும் அவர் பேசுகையில், “பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் வன்முறைகள் எதிர்க்கப்பட வேண்டியவையே. இதில், எப்போதும் இரட்டை நிலைப்பாடு கிடையாது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை ஆர்.எஸ்.எஸ் என்றும் ஏற்றுக்கொள்ளாது. அயோத்தியில் ராமர் கோவில் விரைந்து கட்டப்பட வேண்டும்” என்றார்.
    குறிப்பிட்ட ஒரு கட்சிக்காக பணியாற்ற ஆர்எஸ்எஸ் என்றும் தொண்டர்களை கேட்டுக்கொண்டது இல்லை என அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் இன்று பேசியுள்ளார். #RSSVision #MohanBhagwat
    புதுடெல்லி:

    ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பில் எதிர்கால இந்தியா என்ற 3 நாள் கருத்தரங்கம் டெல்லியில் நேற்று தொடங்கியது. இந்த கருத்தரங்கில் மத்திய மந்திரிகள், பாலிவுட் பிரபலங்கள் உள்பட பல துறைகளில் இருந்து முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    கருத்தரங்கில் இன்று பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்,  “ஒரு குறிப்பிட்ட கட்சிக்காக பணியாற்றுவதற்காக தொண்டர்களை நாங்கள் ஒருபோதும் கேட்கவில்லை. தேசிய ஆர்வத்தில் பணியாற்றி வருபவர்களுடன் இணைந்து பணியாற்றுமாறு அவர்களிடம் கூறி வருகிறோம். ஆர்.எஸ்.எஸ் அரசியலில் இருந்து விலகியே இருக்கிறது. ஆனால், தேசிய நலன்களைப் பற்றிய கருத்துக்களைக் கொண்டுள்ளோம்” என கூறினார்.

    நேற்று மோகன் பகவத் பேசும் போது காங்கிரஸ் கட்சியை வெகுவாக புகழ்ந்திருந்தார். “காங்கிரஸ் கட்சி தன்னலம் பார்க்காத பல தலைவர்களை நாட்டுக்கு தந்துள்ளது” என அவர் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    காங்கிரஸின் வடிவத்தில் ஒரு பெரிய சுதந்திர இயக்கம் நாட்டில் வளர்ந்தது. அந்த இயக்கம் பல தலைசிறந்த ஆளுமைகளை பெற்றெடுத்தது என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று பேசினார். #RSSVision #MohanBhagwat
    புதுடெல்லி:

    ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பில் எதிர்கால இந்தியா என்ற 3 நாள் கருத்தரங்கம் டெல்லியில் இன்று தொடங்கியது. இந்த கருத்தரங்கில் மத்திய மந்திரிகள், பாலிவுட் பிரபலங்கள் உள்பட பல துறைகளில் இருந்து முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், காங்கிஸ் கட்சியை புகழ்ந்து பேசினார். “காங்கிரஸின் வடிவத்தில் ஒரு பெரிய சுதந்திர இயக்கம் நாட்டில் வளர்ந்தது. அந்த இயக்கம் எல்லாவற்றையும் தியாகம் செய்யக் கூடிய பல தலைசிறந்த ஆளுமைகளை பெற்றெடுத்தது. அவர்கள் நம்மை இன்றும் ஊக்குவித்து வருகின்றனர். அந்த இயக்கமானது சாதாரண மக்களை சுதந்திர போராட்டத்தில் இணைப்பதற்கு ஊக்குவித்தது. சுதந்திரம் அடைந்ததில் காங்கிரஸுக்கு பெரிய பங்கு உண்டு” என கூறினார். 

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், மோகன் பகவத் காங்கிரஸை புகழ்ந்துள்ளது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. 
    மோடி, அமித்ஷா, மோகன் பகவத் 3 பேரிடம் இந்தியா அடிமைப்பட்டு கிடக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். #RahulGandhi #PMModi

    புதுடெல்லி:

    அகில இந்திய காங்கிரஸ் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கான தேசிய மாநாடு டெல்லியில் நடந்தது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:-

    நமது நாடு இன்று, பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த 3 தலைவர்களின் கைகளில் அடிமைப்பட்டுள்ளது. அடுத்த 6 மாதம் முதல் ஓராண்டுக்குள்ளாக இந்தியாவின் அனைத்து எதிர்க்கட்சிகளும் அவர்களுக்கு எதிராக ஒன்றிணையும். அப்போது, நரேந்திர மோடி, அமித்ஷா, மோகன் பாகவத் ஆகியோர் இந்தியாவின் பலம் என்ன என்பதை அறிவார்கள்.

    ‘இந்தியாவை 3 நபர்களால் ஆட்சி செய்ய முடியாது. இந்தியாவை அதன் மக்களே ஆட்சி செய்கின்றனர்’ என்பதையும் அவர்கள் உணர்வார்கள். பா.ஜ.க.வில் உள்ள எம்.பி.க்கள் உள்ளிட்ட எவருக்குமே பேச அனுமதியில்லை. அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் குரலே கேட்கிறது.

    இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பலத்தை அறிந்துள்ள காங்கிரஸ் கட்சி, சட்டப்பேரவை, மக்களவை, மாநிலங்களவை மூலமாக அரசியலில் அவர்களை முன்னேற்றி அதிகாரமளிக்க விரும்புகிறது.


    இந்த விவகாரத்தில் காங்கிரஸ்-பா.ஜ.க. இடையேயான வித்தியாசத்தை ஓர் உதாரணமாக குறிப்பிட விரும்புகிறேன். காங்கிரஸ் கட்சி மக்களை ஒரு பேருந்தில் ஏற்றி, அதனை இயக்கும் அதிகாரத்தை அவர்களின் கையில் கொடுத்து, பேருந்தை அவர்களைக் கொண்டே இயக்குகிறது.

    ஆனால், பா.ஜ.க.வைப் பொருத்தவரையில் அக்கட்சி மக்களை பேருந்தில் ஏற்றி, அமைதியாக இருக்க வைக்கிறது. பின்னர் அந்தப் பேருந்தை ஆர்.எஸ்.எஸ். மூலமாக இயக்குகிறது.

    நாட்டில் திறமைசாலைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார். உண்மையில் அவ்வாறு இல்லை. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடத்தில் திறமை நிறைந்துள்ளபோதும், முன்னேறுவதற்கு அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட வில்லை. எப்போதுமே உண்மையாக உழைப்பவர்கள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றனர். அவர்களது உழைப்பால் கிடைக்கும் லாபத்தை பிறர் அனுபவிக்கின்றனர்.

    கடந்த 70 ஆண்டுகளாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு துணை நிற்கும் காங்கிரஸ் கட்சி, அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க தொடர்ந்து போராடும்.

    இவ்வாறு அவர் பேசினார். #RahulGandhi #PMModi

    ×