search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "minister kn nehru"

    • திருச்சியில் முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளை சார்பில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடை பெற்றது.
    • குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    திருச்சி,

    முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளை சார்பில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, அனைத்து சமுதாய தலைவர்களுக்கு மாமன்னர் புலித்தேவன் விருது வழங்கும் விழா திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள அருண் ஓட்டலில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.

    விழாவுக்கு முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் கே.எஸ்.சுப்பையா பாண்டியன் தலைமை தாங்கினார். திருச்சி மாநகராட்சி முன்னாள் கவுன்சிலரும், முன்னாள் பொது சுகாதாரக் குழு தலைவருமான டாக்டர் எஸ்.தமிழரசி சுப்பையா குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.

    விழாவில் தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி அனைத்து சமுதாய தலைவர்களுக்கும் புலித்தேவன் விருது வழங்கி பேசினார். அப்போது அமைச்சர் கூறும்போது, நீங்கள் (டாக்டர் கே.எஸ்.சுப்பையா பாண்டியன், தமிழரசி சுப்பையா) தி.மு.க.வில் இணைந்து தொடர்ச்சியாக மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறீர்கள். உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன் என தெரியவில்லை. ஆனால் என்றைக்கும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பேன் என்றார்.

    இந்த விழாவில் அமைச்சர் கே.என்.நேருவுக்கும் விழா குழு சார்பில் புலித்தேவன் விருதினை அறக்கட்டளை தலைவர் டாக்டர் கே.எஸ்.சுப்பையா பாண்டியன் வழங்கினார்.

    திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் கலந்துகொண்டு தேவர் ஜெயந்தி மலரினை பெற்றார். விழாவில் தி.மு.க. மத்திய மாவட்ட செயலாளர் க.வைரமணி, எம்.எல்.ஏ.க்கள் காடுவெட்டி என்.தியாகராஜன், எஸ்.ஸ்டாலின் குமார், சவுந்தரபாண்டியன்,

    எஸ்.கதிரவன், மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர்கள் முத்துசெல்வன், விஜயா ஜெயராஜ், பகுதி செயலாளர்கள் மோகன்தாஸ், கனகராஜ், கமல் முஸ்தபா, கே.எஸ்.நாகராஜ், கோட்டத் தலைவர்கள் துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன், பகுதிச் செயலாளர்கள் காஜாமலை விஜி, ராம்குமார், இளங்கோ,

    ரோட்டேரியன் டாக்டர் கே.சீனிவாசன், சுமதி பப்ளிகேஷன் வசந்த குமார், மாநகராட்சி கவுன்சிலர்கள் ஜெ.கலைச்செல்வி, நாகராஜ், கலைச்செல்வி மற்றும் டோல்கேட் சுப்பிரமணியன், பா.ஜான் ராஜ்குமார் ஆகியோருக்கு புலித்தேவன் விருது வழங்கப்பட்டது. முடிவில் டாக்டர் எஸ். விஜய் கார்த்திக் சுப்பையா, எஸ். மருதுபாண்டி, கே.ஆர்.கே. ராஜா ஆகியோர் நன்றி கூறினர்.

    • காவிரி ஆற்றில் 300 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது.
    • அதே போன்று பாலாறு தென்பெண்ணை ஆறு போன்ற நீர் நிலைகளில் நீரானது கடலில் வீணாக கலக்கிறது.

    சென்னை:

    சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றல் மேலாண்மைக்கான தேசிய அளவிலான ஒரு நாள் கருத்தரங்கினை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றல் திட்டங்களை முன்னிலைப்படுத்தி 2031-ம் ஆண்டு வரையிலான தொலை நோக்குத் திட்டத்தை செயல்படுத்த முக்கிய அம்சங்களை உருவாக்கியுள்ளது.

    மேம்படுத்தப்பட்ட சுகாதாரத்தின் இலக்குகளை அடைவதற்கு கழிவுநீர் அமைப்பு மிகவும் முக்கியமானது என்றாலும், குடிநீரை வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கினாலும், கழிவு நீர் அமைப்பின் முக்கியத்துவத்தை புறக்கணிக்க முடியாது. அதாவது நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் நீரில் 80 சதவீதம் கழிவு நீராக வெளியேறும்.

    இந்த கழிவு நீர் முறையாக சேகரிக்கப்படாமல் மறுசுழற்சி மேற்கொள்ளாமல் அப்புறப்படுத்தப்பட்டால் கடுமையான நீர்மாசு பிரச்சினைகளை உருவாக்கும்.

    இதனை கருத்தில் கொண்டு தான் தமிழக அரசு கழிவுநீர் அமைப்பில் இருந்து வெளியேறும் நீரில் இருந்து மறுசுழற்சி பயன்பாடு போன்ற வழிமுறைகளை ஆராய்ந்து சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் நகர்புற வளர்ச்சி என்பது மிகவும் அத்தியாவசியமாகிறது. ஜல் ஜீவன் திட்டத்தினை விரைந்து செயல்படுத்திட உரிய கால அவகாசத்தினை மத்திய அரசு வழங்கிட வேண்டும்.

    காவிரி ஆற்றில் 300 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. அதே போன்று பாலாறு தென்பெண்ணை ஆறு போன்ற நீர் நிலைகளில் நீரானது கடலில் வீணாக கலக்கிறது. இதனை மக்களுக்கு பயன்படுத்தும் வகையில் நீரேற்றும் திட்டத்தினை செயல்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருச்சி மாநகராட்சியில் உள்ள சாலைகளை அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.
    • மழைக்காலத்தில் தார் போட்டால் பிடிக்காது. அதுமட்டுமல்லாமல் 40, 50 ஆண்டுகால குடிநீர் குழாய்களை மாற்ற வேண்டி இருக்கிறது.

    திருச்சி:

    திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரியாற்றில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இணைந்து நடத்திய வெள்ளம் ஏற்படும் போது மேற்கொள்ளப்படும் மீட்பு நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை பயிற்சி நடந்தது.

    இதனை தொடங்கி வைத்து பார்வையிட்ட நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னையில் எவ்வளவு வெள்ளம் வந்தாலும் அதனை வெளியேற்றுவதற்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. சென்னையை வெள்ளம் பாதிக்காத வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விட்டது. திருப்புகழ் கமிட்டி பரிந்துரை செய்த படி ரூ. 935 கோடியில் எல்லா இடங்களிலும் பணிகள் நடந்து வருகின்றன.

    குறித்த காலத்துக்குள் பணிகள் பூர்த்தியடையாமல் இருப்பதற்கு காரணம் மின் வயர்கள், டெலிபோன் வயர்கள், பாதாள சாக்கடை பைப்புகள், மெட்ரோ வாட்டர் பைப்புகள் புதைக்கப்பட்டுள்ளன. மேலும் மின் கம்பங்களும், மரங்களும் இருக்கின்றன. இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக எடுத்து விட்டு தான் வடிகால் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

    இதற்கிடையே போக்குவரத்துக்கு சங்கடங்கள் ஏற்படும் என்பதால் சில இடங்களில் சாலையை துண்டிக்க முடியாத நிலை இருக்கிறது. இருப்பினும் ஒப்பந்ததாரர்களை முதலமைச்சரும், நானும் பணிகளை வேகப்படுத்த சொல்லி இருக்கிறோம். இப்போது பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. அது மட்டுமல்லாமல் இணைப்புகள் வழங்கப்படாத பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக மோட்டார் உள்ளிட்ட வசதிகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளது.

    எனவே இந்த முறை நிறைய வெள்ளம் பாதித்த பகுதிகளில் வெள்ளம் பாதிக்காது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரும், சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் இதனை முன்னின்று கவனித்து வருகிறார்கள்.

    திருச்சி மாநகராட்சியில் உள்ள சாலைகளை அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் தார் போட்டால் பிடிக்காது. அதுமட்டுமல்லாமல் 40, 50 ஆண்டுகால குடிநீர் குழாய்களை மாற்ற வேண்டி இருக்கிறது.

    பாதாள சாக்கடை குழாய்கள், குடிநீர் குழாய்கள் பதிக்காமல் சாலையை போட்டாலும் வீணாகிவிடும். தற்போதைய நிலையில் 576 சாலைகளில் 276 சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நகரில் மழைநீர் வடிகால் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
    • பல இடங்களில் கால்வாய் அமைக்கும் போதும் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் அதிகமாக இருப்பதால் அதை சரி செய்ய சற்று தாமதம் ஏற்படுகிறது.

    சென்னை:

    சென்னை தலைமை செயலகத்தில் சென்னை தினத்தை ஒட்டி சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் நடந்த கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி போன்றவற்றில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினார்.

    இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:-

    சென்னையில் நேற்று ஒரு நாள் பெய்த மழைக்கு தண்ணீர் பல இடங்களில் தேங்கியது தெரிய வந்ததும் துரிதமாக வடிய வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    நகரில் மழைநீர் வடிகால் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. பல இடங்களில் கால்வாய் அமைக்கும் போதும் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் அதிகமாக இருப்பதால் அதை சரி செய்ய சற்று தாமதம் ஏற்படுகிறது.

    மேலும், சென்னை நகர் பகுதியில் ஒரு சில இடங்களில் 40 சதவீத பணிகளும், ஒரு சில இடங்களில் 50 சதவீத பணிகளும், ஒரு சில இடங்களில் 70 சதவீத பணிகளும் நடைபெற்று உள்ளது. ஒப்பந்ததாரரிடம் அதிகமான ஆட்கள் இல்லாத காரணத்தினால் தாமதமாக பணிகள் நடைபெற்று வருகிறது.

    எனவே இதில் ஏற்படும் சிரமங்களை சிலகாலம் பொதுமக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் .

    ஆற்றங்கரைப் பகுதியில் அடுத்த ஆண்டுதான் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடையும் .

    ஆகவே இந்த பருவ மழைக்கு சென்னையில் சில பகுதிகளில் மழை நீர் தேங்கும். ஆனால் கடந்த காலங்கள் போல் அதிக அளவில் மழை பெய்தால் மழை நீர் தேங்குவதற்கான வாய்ப்பு இல்லை .

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்த கேள்விக்கு, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டேவிதார் முதல்-அமைச்சரிடம் அறிக்கை வழங்கி இருப்பதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கையை முதல்-அமைச்சர் மேற்கொள்வார் என்றும் அமைச்சர் கே.என் நேரு தெரிவித்தார்.

    • தி.மு.க. முதன்மை செயலளரும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே. என். நேரு தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைக்கிறார்.
    • கே.என். அருண்நேரு, மத்திய மாவட்ட தி.மு.க. பொறு ப்பாளர் க. வைரமணி, லால்குடி சட்டமன்ற உறுப்பினர் அ. சவுந்தர பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

    திருச்சி:

    திருச்சி லால்குடி வட்டம் மேல வாழை தி.மு.க. கிளைச் செயலாளரும், தொழிலதி பருமான என்ஜினியர் எஸ்.மரிய பிரான்சிஸ் -. டார்த்தி ஐசந் தம்பதியரின் மகன் என்ஜினியர் எம்.ஃப்ரெட்ரிக், திருவாரூர் மன்னார்குடி புதுக்குடி ஏ. பஞ்சாட்சரம் பி.சீலா ராணி மகள் என்ஜினியர் பி.ஷைலா திருமண விழா நாளை (திங்கட்கிழமை) காலை 8:30 மணிக்கு மத்திய பஸ் நிலையம் ஃபெமினா ஹோட்டல் லோட்டஸ் ஹாலில் நடக்கிறது. என்ஜினியர் சா. மரிய பிரான்சிஸ் வரவேற்று பேசுகிறார்.

    தி.மு.க. முதன்மை செயலளரும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே. என். நேரு தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைக்கிறார். கே.என். அருண்நேரு, மத்திய மாவட்ட தி.மு.க. பொறு ப்பாளர் க. வைரமணி, லால்குடி சட்டமன்ற உறுப்பினர் அ. சவுந்தர பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

    இதில் திருச்சி மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் காடு வெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஸ்டாலின் குமார், பழனியாண்டி, கதிரவன், நகராட்சி தலைவர் துரை மாணிக்கம், ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன், ஒன்றிய குழு துணைத் தலைவர் நத்தம் பெரியய்யா, வடக்கு ஒன்றிய செயலாளர் கே.வி பேட்டை தமிழ் செல்வன், மாவட்ட துணைச் செயலாளர் துரை கந்தசாமி, மாவட்ட துணைச் செயலாளர் வைதேகி முருகேசன், மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன், ஓய்வு பெற்ற ஆசிரியர் பாலகிருஷ்ணன் ஆகியோர் மணமக்களை வாழ்த்தி பேசுகிறார்கள். விழாவில் கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் திரளாக பங்கேற்கிறார்கள்.விழா நிறைவில் புதுக்கோட்டை ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பஞ்சாட்சரம் நன்றி கூறுகிறார்.

    • திருச்சி ராம்ஜி நகர் கே. கள்ளிக்குடியில் என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி அமைந்துள்ளது.
    • அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குரூப் 1 தேர்வில் டி.எஸ்.பி. பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முசிறி எஸ். காயத்ரி, சி.சிந்து, கபிலன்,வேளாண்துறை அதிகாரியாக தேர்வு செய்யப்பட்ட அருண் ஜூலியஸ் உள்ளிட்ட மாணவ மாணவியரை பாராட்டி பரிசு வழங்கி பேசுகிறார்

    திருச்சி,

    திருச்சி ராம்ஜி நகர் கே. கள்ளிக்குடியில் என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி அமைந்துள்ளது. இங்கு மத்திய மாநில அரசு பதவிகளுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி மையத்தில் பயின்ற 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நாடு முழுவதும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ்.தேர்வுகளில் வெற்றி பெற்று பணியாற்றி வருகிறார்கள்.

    இந்த நிலையில்சமீபத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்விலும் என்.ஆர்.ஐ.ஏ. எஸ். அகாடமி மாணவர்கள் சாதித்தனர். இதை தொடர்ந்து அந்த மாணவர்களுக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு பாராட்டு விழா நடத்தப்படுகிறது.

    என்.ஆர்.ஐ. ஏ.எஸ்அ காடமி தலைவர் ஆர். விஜயாலயன் வரவேற்று பேசுகிறார். தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குரூப் 1 தேர்வில் டி.எஸ்.பி. பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முசிறி எஸ். காயத்ரி, சி.சிந்து, கபிலன்,வேளாண்துறை அதிகாரியாக தேர்வு செய்யப்பட்ட அருண் ஜூலியஸ் உள்ளிட்ட மாணவ மாணவியரை பாராட்டி பரிசு வழங்கி பேசுகிறார்.

    மேலும் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவில் கல்வியாளர்கள்,என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி மாணவ- மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் என்.ஆர். பப்ளிக் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    முடிவில் மாணவர் எம்.மணிவண்ணன் நன்றி கூறுகிறார்.

    • நகர்ப்புறங்களில் குப்பை வரி வசூலிக்கப்படுவது மத்திய அரசு 2014 -ல் கொண்டு வந்த சட்டத்தின் அடிப்படையில்தான்.
    • ஈரோட்டில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தின் கீழ் பைப்புகள் போடுவதில் சில இடங்களில் குறைபாடு இருந்தது. ஆனால் நகரில் குடிநீர் போதுமான அளவு வழங்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து நகர்ப்புற உள்ளாட்சித் துறை அலுவலர்களுடன் அமைச்சர் நேரு தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது.

    பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் குறைபாடுகளை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழு தற்போது விசாரணை நடத்தி வருகிறது. உள்ளாட்சித் துறையில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து அறிக்கை பெற்றதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    2-ம் கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் குறித்து முதல்-அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    அத்திட்டத்தின் கீழ் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. அது கிடைக்கப்பெற்றதும் பணிகள் துவங்கும். தமிழக முதல்-அமைச்சர் நகர்ப்புற உள்ளாட்சி மேம்பாட்டிற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.

    அதன் கீழ் பல்வேறு குடிநீர், சாலை வசதி கழிவுநீர் கால்வாய் அமைப்பது குறித்த திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ஈரோடு மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சிகளில் அது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இவ்வாய்வில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கை வைத்துள்ளனர். அவைகள் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நகர்ப்புறங்களில் குப்பை வரி வசூலிக்கப்படுவது மத்திய அரசு 2014 -ல் கொண்டு வந்த சட்டத்தின் அடிப்படையில்தான். ஈரோட்டில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தின் கீழ் பைப்புகள் போடுவதில் சில இடங்களில் குறைபாடு இருந்தது. ஆனால் நகரில் குடிநீர் போதுமான அளவு வழங்கப்பட்டு வருகிறது.

    கொரோனா காலக்கட்டத்தில் நகராட்சி கடைகள் வாடகை கட்டாததற்கு விலக்கு அளிக்கப்படாது. கடைகளின் வாடகையை நம்பிதான் நகராட்சிகள் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ஈரோடு மாநகராட்சி சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டைகள், விற்பனை வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

    இதில் அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு 964 சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கினார். இதனைத் தொடர்ந்து சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.1 கோடியே 4 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பில் 127 வண்டிகளை வழங்கினார்.

    • திருச்சி ஒருங்கிணைந்த பஸ் முனைய பணியின் இரண்டாவது டெண்டர் விடப்பட்டுள்ளது.
    • பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் பைப்புகளை பதிப்பதற்கு சாலைகளை தோண்டி தான் ஆக வேண்டி இருக்கிறது.

    திருச்சி :

    திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு இன்று திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் மா.பிரதீப் குமார் தலைமை தாங்கினார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போதைப்பொருள் ஒழிப்பு உறுதி மொழியை வாசிக்க மாணவிகள் அந்த உறுதியை ஏற்றுக்கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் அந்த மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகளை வைத்து இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்வினை நடத்தி இருக்கிறார். இதில் வழங்கி உள்ள அறிவுரைகளை இங்கு இருக்கக்கூடிய ஐ.ஜி., டி.ஐ.ஜி., கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பின்பற்றுவார்கள்.

    சட்டமன்ற உறுப்பினர்களிடமும் போதைப்பொருளை தடுக்க காவல்துறைக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டிருக்கிறோம். இங்கே பேசிய சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது ஒவ்வொரு பள்ளிகளிலும் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்திருக்கிறார். போலி லாட்டரி சீட்டு விற்பனையை தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    திருச்சி ஒருங்கிணைந்த பஸ் முனைய பணியின் இரண்டாவது டெண்டர் விடப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் பைப்புகளை பதிப்பதற்கு சாலைகளை தோண்டி தான் ஆக வேண்டி இருக்கிறது. அந்த பணிகள் முடிவடைந்த இடங்களில் சாலைகள் போடும் பணி வேகமாக நடக்கிறது. மழைக்காலங்களில் சாலை போட்டால் தார் ஒட்டாது. பத்து ஆண்டுகளாக சாலையே போடாதவர்களிடம் எதையும் நீங்கள் கேட்கவில்லை. சாலை போடும் எங்களிடம் மட்டும் கேள்வியாக கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக சென்னையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. திருச்சி நிகழ்ச்சியில் மேயர் மு.அன்பழகன், எம்.எல்.ஏ.க்கள் சௌந்தரபாண்டியன், இனிகோ இருதயராஜ், கதிரவன், பழனியாண்டி, அப்துல் சமது, மத்திய மண்ட ஐ.ஜி. சந்தோஷ் குமார், டி.ஐ.ஜி. சரவணசுந்தர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், மண்டல தலைவர்கள் துர்காதேவி, ஜெய நிர்மலா மற்றும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்.

    இந்த உறுதி ஏற்பு நிகழ்வில் பங்கேற்ற ஐந்து மாணவிகள் லேசான மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு விளையாட்டு மைதானத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மயக்கம் தெளிந்தனர். நீண்ட நேரம் வெயிலில் நீண்ட காரணத்தினால் அவர்களுக்கு சோர்வு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த சம்பவத்தில் ஆசிரியை ஒருவரும் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    • திருச்சியில் மேலும் ஒரு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அமைக்க முதல்வருக்கு கோரிக்கை விடுத்திருக்கின்றோம்.
    • மற்ற மாவட்டங்களை விட திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கூடுதல் வசதிகளுடன் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    திருச்சி :

    திருச்சி மாவட்டத்தில் இன்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். அதன்படி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட லாவண்யா கார்டன் பகுதியில் புதிய நியாய விலைக்கடையினை அமைச்சர் கே.என்.நேரு திறந்துவைத்து, பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் சவுந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், தியாகராஜன், அப்துல் சமது, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ஜெயராமன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

    இதையடுத்து திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை நுண்கதிரியல் பிரிவில் மேம்பட்ட மார்பக ஊடுகதிர் பரிசோதனை எந்திரம், டிஜிட்டல் புளூரோஸ்கோபி எந்திரம், டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி, டாப்ளர் அல்ட்ரா சவுண்ட் எந்திரம் என ரூ.3.70 கோடி மதிப்பிலான 4 அதிநவீன கதிரியக்க எந்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடந்தது. நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு இந்த அதிநவீன எந்திரங்களை மக்கள் பயன்பாட்டிற்காக மருத்துவ சேவைக்காக தொடங்கி வைத்தார்.

    பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுவரை இருந்த மார்பக புற்றுநோய் கண்டறியும் எந்திரத்தின் வாயிலாக 5 மி.மீ. வரை இருந்தால் மட்டுமே பாதிப்பு தெரியும். இந்த புதிய நவீன எந்திரத்தில் 1 மி.மீ. அளவுக்கு இருந்தாலும் தெரிந்துவிடும். மேலும் அதிநவீன எக்ஸ்ரே கருவிகளையும் முதலமைச்சரும், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரும் இந்த நுண் கதிரியல் துறைக்கு வழங்கி உள்ளார்கள்.

    திருச்சியில் மேலும் ஒரு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அமைக்க முதல்வருக்கு கோரிக்கை விடுத்திருக்கின்றோம். மற்ற மாவட்டங்களை விட திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கூடுதல் வசதிகளுடன் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் முதலமைச்சர் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளார். கலெக்டர் பிரதீப் குமார் இரவு 1 மணிக்கு முக்கொம்பு அணைக்கு சென்று அதிகாலை 2 மணி வரை அங்கே இருந்து ஊரக உள்ளாட்சி அதிகாரிகள், தாலுகா அதிகாரிகள், காவல்துறையுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனைகள் வழங்கி உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கலெக்டர் பிரதீப் குமார் பேசும்போது, இப்போது முக்கொம்பு அணைக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்ட ஒரு லட்சத்து 50 ஆயிரம் கன அடி நீர் ஜேடர்பாளையம் அணைக்கு வந்துவிட்டது. தண்ணீர் வேகமாக வருவதால் ஐந்து, ஆறு மணி நேரத்தில் அந்த தண்ணீர் அணைக்கு வந்து விடும். கரையோரம் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    காவிரி மற்றும் கொள்ளிடத்தில் நீர் வரத்து அதிகமாக இருப்பதால் யாரும் தண்ணீரில் இறங்க வேண்டாம். தண்ணீரின் மேற்பகுதியை பார்க்கும் போது நீரோட்டம் இல்லாதது போன்று இருக்கும். ஆனால் அடியில் மிக மிக வேகமாக தண்ணீர் சென்று கொண்டிருக்கும். எனவே மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளித்து ஆற்றில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்

    மாநகராட்சி மேயர் மு‌.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் ஆர். வைத்தியநாதன், அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர்.த.நேரு, சட்டமன்ற உறுப்பினர்கள் அ.சௌந்தர பாண்டியன், செ.ஸ்டாலின் குமார், ந.தியாகராஜன், எம்.பழனியாண்டி, ப.அப்துல் சமது, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர். அருண்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அறிவாலயத்தில் உள்ள அரங்கில் அமர வைக்கப்பட்ட கவுன்சிலர்களுக்கு முதலில் அறிவுரை வழங்கப்பட்டன.
    • கட்சியின் முதன்மை செயலாளரான அமைச்சர் கே.என்.நேரு கூட்டத்தை நடத்தினார்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் தி.மு.க. கவுன்சிலர்கள் 153 பேர் உள்ளனர். இவர்களில் சில கவுன்சிலர்கள் தான் சிறப்பாக செயல்படுகின்றனர்.

    ஒரு சில கவுன்சிலர்கள் மக்கள் பிரச்சினைகளில் சரிவர பணியாற்றவில்லை என்று கட்சியின் மேலிடத்துக்கு புகார்கள் சென்றன.

    இதன் அடிப்படையில் தி.மு.க. மேலிடம் இன்று 98 கவுன்சிலர்களை அண்ணா அறிவாலயத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தது.

    அதன்படி இன்று காலை 8 மணிக்கே தி.மு.க. கவுன்சிலர்கள் அண்ணா அறிவாலயம் வந்திருந்தனர். 15-க்கும் மேற்பட்ட பெண் கவுன்சிலர்களும் வந்திருந்தனர். மேயர், துணை மேயரும் கூட்டத்துக்கு வந்திருந்தனர்.

    அறிவாலயத்தில் உள்ள அரங்கில் அமர வைக்கப்பட்ட கவுன்சிலர்களுக்கு முதலில் அறிவுரை வழங்கப்பட்டன. கட்சியின் முதன்மை செயலாளரான அமைச்சர் கே.என்.நேரு கூட்டத்தை நடத்தினார்.

    கூட்டத்தில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு, கட்சியின் துணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை, தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா ஆகியோரும் பங்கேற்றனர்.

    கவுன்சிலர்கள் மத்தியில் அமைச்சர் கே.என். நேரு பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக்க பாடுபட்டு வருகிறார். அவர் பல்வேறு திட்டங்களை மக்களுக்காக அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

    அந்த திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு சென்றடைய நீங்கள் கடுமையாக பாடுபட வேண்டும். மக்களிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும். ஆனால் ஒரு சில கவுன்சிலர்கள் மீது புகார்கள் வருகிறது.


    கவுன்சிலர்களும் சிலர் வார்டு பக்கம் முழுமையாக சென்று பணிகளை கவனிப்பதில்லை.

    இவ்வாறு கூறிவிட்டு நடைமுறையில் உள்ள சில குறைபாடுகளை அமைச்சர் கே.என்.நேரு சுட்டிக்காட்டி பேசினார்.

    மழை காலம் வருவதால் கால்வாய் தூர்வாரும் பணியில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    அதன் பிறகு ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களை வைத்து கொண்டு அந்த பகுதி கவுன்சிலர்களின் செயல்பாடுகள் பற்றி கேட்டறிந்தார்.

    சில வார்டுகளில் பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் தலையீடு உள்ளது பற்றியும் விசாரித்தார். மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்துங்கள். புகார்களுக்கு ஆளாக கூடாது என்றும் அறிவுறுத்தினார்.

    பெண் கவுன்சிலர்களின் கணவர்களையும் அழைத்து உங்கள் தலையீடு இருக்க கூடாது என்றும் அறிவுறுத்தினார். மேலும் சில கவுன்சிலர்கள் மீது புகார்கள் வந்திருந்ததால் அந்த கவுன்சிலர்களிடமும் தனியாக விசாரணை நடத்தி அறிவுரை கூறினார்.

    அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற இந்த கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    முதல்-அமைச்சர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறி முதற்கட்டமாக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கொடுத்து இருக்கிறார் என கேஎன் நேரு கூறியுள்ளார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் அரசு சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

    இதில் அமைச்சர் கே.என். நேரு பேசியதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் மழை அதிகமாக பெய்து, சென்னை மாநகரம் பெரிய அளவில் பாதித்தது. சென்னையை போன்று பல்வேறு நகரங்களும் பாதிக்கின்ற நிலை ஏற்பட்டது. அந்த பகுதிகளில் எல்லாம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சென்னையில் 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் கிட்டத்தட்ட 500 பேருக்கு மேல் இறந்திருக்கிறார்கள். ஆனால், இந்த முறை அதே அளவுக்கு மழை பெய்தும் கூட 3 பேர் தான் அவர்களுடைய உடல் நலமின்மை காரணமாக தான் இறந்தனர்.

    ஓரிரு இடங்களை தவிர மற்ற இடங்களில் ஒரே நாளில் நீரை அகற்றி பொதுமக்களுக்கு சிரமம் இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி செயல்பட்டு கொண்டிருக்கின்றது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறி முதற்கட்டமாக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கொடுத்து இருக்கிறார். சாலைகளை சீரமைப்பதற்காக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். நகராட்சி நிர்வாக துறைக்கு பேரீடர் தொகையாக ரூ.300 கோடி வழங்கி உள்ளார். கிட்டத்தட்ட ரூ.1000 கோடிக்கு முதல்-அமைச்சர் அனுமதி அளித்து இருக்கிறார்.

    முக ஸ்டாலின்

    ஒருவர் 5 ஆண்டு காலம் ஒரே இடத்தில் குடியிருக்கிறார் என்றால் அந்த இடத்திற்கு அவருக்கு பட்டா வழங்க வேண்டும் என ஏற்கனவே தலைவர் கலைஞர் சொல்லி இருக்கிறார். எனவே உங்களிடம் வாங்கிய மனுக்களுக்கு உரிய முறையில் பரிசீலித்து நல்ல தீர்வு மாவட்ட நிர்வாகம் வழங்கும். உறுதுணையாக நாங்கள் இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    குறைதீர்க்கும் முகாமில் தி.மு.க. மாவட்ட துணை அமைப்பாளர் மல்லிகா திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக நிர்வாகிகள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

    இதையும் படியுங்கள்...20 பொருட்களுடன் பொங்கல் பரிசு தொகுப்பு -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

    ×