search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Markandeyan MLA"

    • சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் ஆகியவற்றை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    • 15-வது நிதி குழு மானியத் திட்டத்தில் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் விஸ்தரிப்பு செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி அந்த பணிகளை தொடங்கி வைத்தார்.

    எட்டயபுரம்:

    எட்டயபுரம் பேரூராட்சி யில் ரூ. 3 கோடியே 4 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகள், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் தார்ச்சாலை அமைத்தல், பேவர்பிளாக் சாலை அமைத்தல் மற்றும் பேரூராட்சி பொதுநிதியில் கட்டப்பட்ட மன்ற கூட்ட அரங்கம் திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடந்தது.

    எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிர மணியன் முன்னிலை வகித்தார்.

    இதில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ. 11 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், ரூ. 7 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை, பேரூராட்சி பொதுநிதி திட்டத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மன்ற கூட்ட அரங்கம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

    தொடர்ந்து கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் கீழ் 11-வது வார்டு பகுதியில் ரூ. 1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், 3-வது வார்டு பகுதியில் ரூ. 79 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைத்தல், 15-வது நிதி குழு மானியத் திட்டத்தில் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் விஸ்தரிப்பு செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி அந்த பணிகளை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதா கிருஷ்ணன், பேரூராட்சி துணை தலைவர் கதிர்வேல், கவுன்சிலர்கள் மணி கண்டன், விஜயலட்சுமி, மாதவன், ராமலட்சுமி அய்யம்மாள், மைக்கேல்ராஜ், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முனியசாமி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பனை விதைகள் நடும் பணியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • விழாவில் ஊராட்சிமன்ற தலைவர் ஆரோக்கியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே வேம்பார் கடற்கரை பகுதியில் பனை விதைகள் நடும் பணியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    விழாவில் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சின்னமாரிமுத்து, வேம்பார் தெற்கு ஊராட்சிமன்ற தலைவர் ஆரோக்கியராஜ், ஒன்றிய குழு உறுப்பினர்கள் செல்வமணி, சுமதி இம்மானுவேல், செந்தூர்பாண்டியன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன், துணை அமைப்பாளர் அந்தோணிராஜ், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை தலைவர் பால்பாண்டி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரஞ்சித்குமார், வடக்கு மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் எப்ரோமீனா மேரி, ஒன்றிய துணை செயலாளர் புனிதா, ஒன்றிய சிறுபான்மையினர் நல அணி அமைப்பாளர் தர்மநேசசெல்வின், ஒன்றிய கலை இலக்கிய அணி அமைப்பாளர் மாரியப்பன், ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் மாரியப்பன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பாரதிதாசன், மீனவர் அணி துணை அமைப்பாளர் மரியசிங்கம், தொண்டரணி துணை அமைப்பாளர் சிம்மராசி, கிளை செயலாளர்கள் ராஜபாக்கியம், நல்லமுத்து, சரவணன், கண்ணன், முனியசாமி, அழகர்சாமி, ஆதிநாராயணன், சேவியர் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்பப்பணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அரியநாயகிபுரம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் கூடுதலாக 4 வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணி தொடக்க விழா நடைபெற்றது.
    • அதனை விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள அரியநாயகிபுரம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ. 85 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக 4 வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணியினை விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் ஜெயபிரகாஷ், ராஜன், துணை ஆய்வாளர் ரமேஷ், பள்ளி தலைமை ஆசிரியை கனி, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் நகர செயலாளர் வேலுச்சாமி, விளாத்தி குளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ்,

    ஊராட்சிமன்ற தலைவர் மாரியம்மாள், விளாத்தி குளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், சமூகவலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் உட்பட தி.மு.க. நிர்வாகிகள், ஆசிரிய-ஆசிரியைகள், கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • புதூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 17 கிராம ஊராட்சிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டங்களுக்கு ரூ.42 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான புதிய பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்து.
    • அதனை விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 17 கிராம ஊராட்சிகளுக்கு ஸ்வச் பாரத் இயக்கத்தின் மூலம் திடக்கழிவு மேலாண்மை திட்டங்களுக்கு ரூ.42 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான புதிய பேட்டரி வாக னங்கள் வழங்கப்பட்து. அதனை விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் புதூர் தி.மு.க. ஒன்றிய செயலர்கள் செல்வராஜ், ராதாகிருஷ்ணன், மும்மூர்த்தி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொது சுகாதார மைய கட்டிட பணிகளை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் உமா செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விளாத்திகுளம்:

    எட்டயபுரம் அருகே கீழஈரால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 56.40 லட்சம் மதிப்பீட்டில் வட்டார பொது சுகாதார மைய கட்டிட பணிகளை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் உமா செல்வி, கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன், கீழஈரால் ஊராட்சிமன்ற தலைவர் பச்சைப்பாண்டி, ஒன்றிய குழு உறுப்பினர் சுமதி இம்மானுவேல், எட்டயபுரம் பேரூராட்சிமன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், ஒன்றிய துணைச் செயலாளர் ஜெயமுத்து, கிளைச் செயலாளர் சண்முகவேல், இளைஞர் அணி மகேந்திரன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கி ணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட மருத்துவர்கள், செவிலியர்கள் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இலவச மருத்துவ உபகரணங்களை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • நிகழ்ச்சியில் புதூர் ஒன்றியச் செயலர்கள் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட மருத்துவ அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இலவச மருத்துவ உபகரணங்களை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    நிகழ்ச்சியில் புதூர் ஒன்றியச் செயலர்கள் செல்வராஜ், ராதாகிருஷ்ணன், மும்மூர்த்தி, ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியச் செயலர் காசி விஸ்வநாதன், புதூர் நகர செயலர் மருதுபாண்டியன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஞானகுருசாமி, வட்டார மருத்துவ அலுவலர் ரவீந்திரன், புதூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் ஜெயவேல் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • விளாத்திக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கலெக்டர் செந்தில்ராஜ் மற்றும் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்து குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்தினர்.
    • பள்ளியில் சமையலராக வேலை செய்யும் ஒருவரிடம், பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்தனர்.

    விளாத்திகுளம்:

    தமிழக முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் விளாத்திக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்1-ம் முதல் 5-ம் வகுப்பு பயிலும் மாணவ -மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படுவதை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் மற்றும் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்து குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்தினர்.

    மேலும் பள்ளியில் சமையலராக வேலை செய்யும் ஒருவரிடம் குழந்தைகளுக்கு உணவு சமைக்கும்போது வாரத்துக்கு ஒரு முறை நகம் வெட்ட வேண்டும் தலையில் தொப்பி அணிய வேண்டும் என பல்வேறு வழிமுறை ஆலோசனைகளை வழங்கி உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்தனர்.

    நிகழ்ச்சியில் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீனிவாசன், தாசில்தார் ராமகிருஷ்ணன், பள்ளி தலைமை ஆசிரியை இந்திராணி, விளாத்திகுளம் பேரூராட்சி தலைவர் சூர்யா அய்யன்ராஜ், துணைத் தலைவர் வேலுச்சாமி, மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன், முன்னாள் வார்டு கவுன்சிலர் ராமமூர்த்தி, சட்டமன்ற தொகுதி தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், உட்பட துறை சார்ந்த அதிகாரி கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மகாராஜா பர்மிங்காம் நகரில் உலக அளவில் நடைபெற்ற பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
    • இதனயைடுத்து கிரிக்கெட் வீரர் மகாராஜாவை, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ,, நேரில் அழைத்து பாராட்டி அவருக்கு ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கினார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, பசுவந்தனை அருகே உள்ள மீனாட்சிபுரம் ஊராட்சி, கே.துரைச்சாமிபுரம் கிராமத்தை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி மகாராஜா என்ற விளையாட்டு வீரர் கடந்த மாதம் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் உலக அளவில் நடைபெற்ற பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றார். இதனயைடுத்து கிரிக்கெட் வீரர் மகாராஜாவை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ,, நேரில் அழைத்து பாராட்டி அவருக்கு ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கினார். அப்போது தமிழ்நாடு அரசின் சார்பில் விரைவில் ஊக்கத்தொகை பெற்று தரவும், கொரோனா காலகட்டத்தில் தந்தையை இழந்த மகாராஜாவிற்கு அரசு பணி விரைவில் கிடைத்திடவும் நடவடிக்கை எடுப்பதாக மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. உறுதி அளித்தார்.

    • முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அரசன்குளம் முதல் வேடப்பட்டி வரையில் ரூ.52.42 லட்சம் மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கப்பட உள்ளது.
    • புதிய சாலை பணிகளை பூமி பூஜை செய்து மார்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், புளியங்குளம் ஊராட்சியில் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அரசன்குளம் முதல் வேடப்பட்டி வரை யில் ரூ.52.42 லட்சம் மதிப்பீட்டிலும், புளிய ங்குளம் முதல் வேடபட்டி வரையில் ரூ.51.34 லட்சம் மதிப்பீட்டிலும் புதிய சாலை பணிகளை மார்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவபாலன், சீனிவாசன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன், புளியங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி, ஒன்றிய குழு உறுப்பினர் சுமதி இம்மானுவேல், மாவட்ட பிரதிநிதி செந்தூர் பாண்டியன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் ராஜபாண்டி, புளியங்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராம், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கனகராஜ், கிளைச் செயலாளர்கள் பொன்முருகன், பரமசிவம், முத்துகருப்பசாமி, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய சிறுபான்மையினர் நல அணி அமைப்பாளர் தர்மநேசசெல்வின், கிழக்கு ஒன்றிய கலை இலக்கிய அணி அமைப்பாளர் மாரியப்பன், கிழக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வேல்முருகன், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், தி.மு.க. சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார், மாணவர் அணி முனியசாமி, கிருஷ்ண குமார், கள உறுப்பினர்கள் முத்துப்பாண்டி, ஷேவக பெருமாள், கனகராஜா, முருகன், பாலகிருஷ்ணன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • விருசம்பட்டி கிராமத்தில் 15-வது நிதி குழு 2022-23 திட்டத்தின் கீழ் ரூ. 38 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட பணிகளை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
    • அப்போது பணிகளை துரிதமாக முடித்திட பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள விருசம்பட்டி கிராமத்தில் குழந்தைகள் நேயப்பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நடுநிலைப் பள்ளியில் உள்ள 2 வகுப்பறை கட்டிடங்ககள், 15-வது நிதி குழு 2022-23 திட்டத்தின் கீழ் ரூ. 38 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 5.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிறுத்த கட்டிடத்தை மார்கண்டேயன் எம்.எல்.ஏ., தூத்துக்குடி மாவட்ட கூடுதல் கலெக்டர் தாக்ரே சுபம் ஞானதேவ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பணிகளை துரிதமாக முடித்திட பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

    ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், சீனிவாசன், பொறியாளர் அலெக்ஸ், விளாத்திகுளம் தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, ஒன்றிய குழு உறுப்பினர் சுமதி இமானுவேல், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் மாரியப்பன் மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விளாத்திகுளம் பகுதிகளில் மரங்கள் நடும் திட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., தலைமையில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் தனது சொந்த நிதியிலிருந்து 7 அடி உயர மரக்கன்றுகளும், அவற்றைப் பாதுகாப்பதற்கான வலைகளும் வழங்குவதாக மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., கிராம மக்களிடம் உறுதியளித்தார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 1 கோடி மரங்கள் நடும் திட்டத்தின் ஆலோசனைக் கூட்டம் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., தலைமையில் நடைபெற்றது.

    இதில் புதூர் ஊராட்சி ஒன்றிய மணியக்காரன்பட்டி ஊராட்சி, தவசலிங்கபுரம்,

    மணியக்காரன்பட்டி, சக்கனாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் 1 கோடி மரங்கள் வளர்ப்பதன் முன்னெடுப்பாக மார்க்கண்டே யன் எம்.எல்.ஏ. கிராம மக்களை நேரில் சந்தித்து வேப்பமரம், புங்கைமரம் உள்ளிட்ட மரங்கள் நடுவதன் அவசியம் குறித்தும் மரம் நடுவதன் மூலம் கிடைக்கும் பலன்கள் குறித்தும் கிராம மக்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

    மேலும் தனது சொந்த நிதியிலிருந்து 7 அடி உயர மரக்கன்றுகளும் அவற்றைப் பாதுகாப்பதற்கான வலைகளும் வழங்குவதாக மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., கிராம மக்களிடம் உறுதியளித்தார்.

    கூட்டத்தில் புதூர் மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஞானகுருசாமி, ஊராட்சி தலைவர் நாகராணி, ஒன்றிய குழு உறுப்பினர் சுமதி, இம்மானுவேல், தொழிலதிபர் சுப்பா, ஊராட்சி துணை தலைவர் ராமசுப்பு, கிளை செயலாளர்கள் சூர்பாண்டி, சுப்பையா, பிரதிநிதி பெரிய தங்கம், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு தொழில்நுட்ப மையத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
    • நிகழ்ச்சியில் தாசில்தார் ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே நாகலாபுரம் உமறுப்புலவர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசு தொழில்நுட்ப மையத்தை கடந்த ஜூலை 13-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

    இந்நிலையில் நேற்று அமைச்சர் கீதாஜீவன் மற்றும் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். நிகழ்ச்சியில் தாசில்தார் ராமகிருஷ்ணன், புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிக்குமார், புதூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், செல்வராஜ், மும்மூர்த்தி, சின்னமாரிமுத்து, அன்புராஜன், ராமசுப்பன், புதூர் நகர செயலாளர் மருதுபாண்டியன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஞானகுருசாமி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×