search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளாத்திகுளம் அருகே அரசு தொழில்நுட்ப மையத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
    X

    விளாத்திகுளம் அருகே அரசு தொழில்நுட்ப மையத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

    • அரசு தொழில்நுட்ப மையத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
    • நிகழ்ச்சியில் தாசில்தார் ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே நாகலாபுரம் உமறுப்புலவர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசு தொழில்நுட்ப மையத்தை கடந்த ஜூலை 13-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

    இந்நிலையில் நேற்று அமைச்சர் கீதாஜீவன் மற்றும் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். நிகழ்ச்சியில் தாசில்தார் ராமகிருஷ்ணன், புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிக்குமார், புதூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், செல்வராஜ், மும்மூர்த்தி, சின்னமாரிமுத்து, அன்புராஜன், ராமசுப்பன், புதூர் நகர செயலாளர் மருதுபாண்டியன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஞானகுருசாமி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×