search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manipur riots"

    • கிராமத்திற்குள் நுழைந்து தாக்குதல்
    • குகி-சோ பரிவினர் அதிக அளவில் வசித்து வரும் கிராமம்

    மணிப்பூர் மாநிலம் கங்போப்கி மாவட்டத்தில் இன்று காலை தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் குழு, மூன்று பேரை சுட்டுக்கொலை செய்துள்ளது. இதில் உயிரிழந்த மூன்று பேரும் குசி-சோ பிரிவினரை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

    இம்பால், கங்போப்கி மாவட்டங்களின் எல்லையான ஐரேங்- கரன் பகுதிகளில் வாகனத்தில் வந்த பயங்கரவாதிகள், கிராம மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். தாக்குதல் நடைபெற்ற கிராமம், பழங்குடியினர் அதிக அளவில் வாழ்ந்து வரும் மலைப்பகுதியில் அமைந்துள்ளது.

    மணிப்பூரில் கடந்த மே மாதத்தில் இருந்து நடைபெற்று வரும் வன்முறையால் இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    • வெள்ளிக்கிழமை பாதுகாப்புப்படை வீரர்கள்- கும்பல் இடையே சண்டை
    • 3 பேர் உயிரிழந்த நிலையில், 50 பேர் காயம் அடைந்தனர்

    மணிப்பூரில் முற்றிலும் அமைதி திரும்ப மத்திய மற்றும் மாநில அரசுகள் முழு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இருந்தபோதிலும், ஆங்காங்கே சில இடங்களில் வன்முறை நடைபெற்ற வண்ணம் உள்ளது.

    கடந்த வெள்ளிக்கிழமை காலை மத்திய பாதுகாப்புப்படைக்கும் ஆயுதம் ஏந்திய கும்பலுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் மூன்று பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயம் அடைந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மணிப்பூர் மாநில மந்திரி சபை கூட்டம், அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் தலைமையில் நடைபெற்றது. அப்போது வெள்ளிக்கிழமை சம்பவத்தில் மத்திய பாதுகாப்புப்படையின் தேவையற்ற நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த விசயத்தை மத்திய அரசிடம் தெரிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், பதற்றம் அதிகமாக இடங்களில் சர்ச்சைக்குரிய ஆயுதப்படை சிறப்பு அதிகாரம் சட்டத்தின்படி, ஆயுதப்படைக்கான அதிகாரத்தை விரிவு படுத்தவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பதற்றமான பகுதியில் வீரர்களுக்கான அதிகாரம் மேலும் ஆறு மாதத்திற்கு நீட்டிக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    வன்முறையின்போது வீடுகளை இழந்தவர்களுக்கு நான்கு மாதத்திற்குள் நிரந்தரமான வீடுகள் அமைத்துக் கொடுக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான செலவு 75 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    பிரேன் சிங் தலைமையிலான பா.ஜனதா அரசு, முதன்முறையாக பாதுகாப்புப்படை மீது விமர்சனம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ராணுவ தடுப்புகளை அகற்ற ஆயிரக்கணக்கானோர் நேற்று முன்தினம் திரண்டனர்
    • ஏற்கனவே ராணுவ முகாமில் இருந்து ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன

    மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ந்தேதி இரு பிரிவினர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல், பின்னர் வன்முறையாக வெடித்து இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    தற்போது அமைதி நிலவி வருவதாகவும், மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் தெரிவித்து வருகின்றன.

    இதற்கிடையே ஆங்காங்கே வன்முறை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில், இன்று காலை டெங்நவுபால் மாவட்டத்தில் பாதுகாப்புப்படை வீரர்களுக்கும், ஆயுதமேந்திய கும்பலுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது. இந்த சண்டை இன்னும் நீடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த சண்டையில் காயம் குறித்த எந்த தகவலும் வெளியாகவிலலை. சூழ்நிலையை கவனித்து வருவதாக பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.

    நேற்று முன்தினம பிஷ்னுபுர் மாவட்டத்தில் உள்ள பௌகாக்சாயோவில் ராணுவ தடுப்புகளை அகற்ற ஆயிரக்கணக்கானோர் கூடினர். இந்த நிலையில் இன்று துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.

    மணிப்பூர் வன்முறை வெடித்தபோது, ராணுவ முகாமில் உள்ள ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த ஆயுதங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    நேற்றுதான் ஐந்த மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது.

    • ராணுவ தடுப்பு இருப்பதால் சொந்த வீட்டிற்கு செல்ல முடியவில்லை என பள்ளத்தாக்கில் உள்ளவர்கள் குற்றச்சாட்டு
    • ராணுவ தடுப்புகளை முற்றுகையிட அழைப்பு விடுத்த நிலையில், முழு ஊரடங்கு அமல்

    மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவினருக்கு இடையிலான மோதல் ஏற்பட்டு, பின்னர் வன்முறையாக மாறியது. மே மாதம் 3-ந்தேதியில் இருந்து வன்முறை பரவத் தொடங்கியது. இந்த வன்முறையில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    பிரதமர் மோடி பாராளுமன்ற மக்களவையிலும், சுதந்திர தின விழா உரையின்போதும் மணிப்பூர் கலவரம் குறித்து பேசினார். அங்கு அமைதி நிலவி வருவதாக தெரிவித்தார். அம்மாநில முதல்வரும் தற்போது மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

    இதற்கிடையே பள்ளத்தாக்கில் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று மாலையில் இருந்து தடுப்பு நடவடிக்கையாக பிஷ்னுபுர், காக்சிங், தவுபால், இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு ஆகிய ஐந்து மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மணிப்பூர் ஒருமைப்பாட்டிற்கான ஒருங்கிணைப்பு குழு (COCOMI), பெண்கள் பிரிவு ஆகியவை சார்பில் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும், பிஷ்னுபுர் மாவட்டத்தில் உள்ள பவுகாக்சாயோ இகாயில் உள்ள ராணுவ தடுப்புகளை அகற்ற வரவேண்டும் என அழைப்பு விடுத்திருந்தது. இந்த நிலையில்தான் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    காலை ஐந்து மணியில் இருந்து மாலை 6 மணி வரை ஊரடங்கு தளர்வு இருந்து வந்தது. தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்படடுள்ளது.

    இன்று முற்றுகையிடும் திட்டத்தை COCOMI திரும்ப பெற வேண்டும் என அரசு சார்பில் கேட்கப்பட்டிருந்தது. மேலும், பாதுகாப்பு தொடர்பாக அரசு எடுக்கும் முயற்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தது.

    ஆனால், COCOMI மீடியா ஒருங்கிணைப்பாளர், ஏதாவது அசம்பாவிதம் நடைபெற்றால், அதற்கு அரசுதான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

    ராணுவ தடுப்பால் தங்களது வீடுகளுக்கு செல்ல முடியவில்லை என பள்ளத்தாக்கில் உள்ளவர்கள் தெரிவித்து வருகின்றனர். மே 3-ந்தேதி ஏற்பட்ட வன்முறையின்போது, பலர் தங்களது வீடுகளை காலி செய்து வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே, மணிப்பூரில் சகஜமான நிலைதான் இருந்து வருகிறது என்று மத்திய அரசு தெரிவித்து வருகிறது. ஆனால், வன்முறை தொடர்கிறது என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம் செய்துள்ளார்.

    இதுகுறித்து ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டரில் (X) "4 மாதங்களுக்கு பிறகும் வன்முறை தொடரத்தான் செய்கிறது. ஆனால், டபுள் என்ஜின் எனக் கூறும் மோடி அரசு, மணிப்பூரில் சூழ்நிலை சகஜமான நிலையில்தான் இருக்கிறது என்று கூறுகிறது. ஜி20 மாநாடு டெல்லியில் நடந்து கொண்டிருக்கும்போது, மணிப்பூரில் ஐந்து மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஊரடங்கில் இருக்கப் போகிறது" என்றார்.

    • இரு சமூகத்தினர் இடையே மோதல் நீடித்து வருகிறது.
    • மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிக் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    இம்பால்:

    மணிப்பூரில் பெரும் பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மே மாதம் பெரும் கலவரம் மூண்டது. அதன்பின்னர் இரு சமூகத்தினர் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த வன்முறையில் 160-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள் ஏராளமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிக் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    குகி ஆதிக்கம் செலுத்தும் சுராசந்த்பூர் மற்றும் மைதேயி அதிகம் உள்ள பிஷ்னுபூர் மாவட்ட எல்லை பகுதிகளில் பல நாட்கள் அமைதிக்கு பிறகு துப்பாக்கிச்சூடு நடந்தது. இரு தரப்பினர் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.

    நரஜ்சேனாவை ஒட்டிய கிராமங்களில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியானார்கள். மணிப்பூர் காவல்துறை இதை தெரிவித்து உள்ளது. 7 பேருக்கு குண்டு காயம் அல்லது பிற காயங்கள் ஏற்பட்டுள்ளது.

    கொய்ரென்டாக் பகுதியுள்ள கிராமத்தில் 30 வயதான ஜங்மின் லுன் காங்டே என்பவர் குண்டு பாய்ந்து பலியானார். அவர் கிராம பாதுகாப்பு தன்னார்வலர் ஆவார். மற்றொரு சம்பவத்தில் தினுங்கே பகுதியை சேர்ந்த 40 வயதான விவசாயி சலாம் ஜோதின் துப்பாக்கி சூட்டுக்கு பலியானார்.

    கொய்ரெண்டாக் மற்றும் தினுங்கே பகுதிகளுக்கு இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார், அசாம் ரைபிள்ஸ் படையினர், ராணுவம், மத்திய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    • ஒருநாள் சட்டசபை கூட்டத்திற்கு குகி-ஜோமி பழங்குடியின அமைப்பு எதிர்ப்பு
    • நாகா எம்.எல்.ஏ-க்கள் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது

    மணிப்பூரில் இரண்டு பிரிவினருக்கு இடையிலான மோதல் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில் 170 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது அமைதி நிலவி வருகிறது. புலம்பெயர்ந்தவர்களை, அவர்களது சொந்த இடத்தில் மீண்டும் அமர வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் இன்று மணிப்பூர் சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது. இன்று ஒருநாள் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மணிப்பூர் வன்முறை தொடர்பான விவாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, ஒருநாள் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி-ஜோமி பழங்குடியின அமைப்பு, கலந்து கொள்ளமாட்டோம் எனத் தெரிவித்துள்ளது. இந்த சமூகத்தினரை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.-க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளமாட்டோம் என அறிவித்துள்ளனர்.

    தற்போதைய சூழ்நிலையில் மெய்தி சமூகத்தினர் அதிகமாக வாழும் இம்பால் பகுதிக்கு செல்வது பாதுகாப்பனது அல்ல எனத் தெரிவித்துள்ளனர். சட்டமன்றம் இம்பாலில்தான் உள்ளது. நாகா எம்.எல்.ஏ-க்கள் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.

    சட்டசபை கூட்டத்தை நடத்த தடைவிதிக்க குகி-ஜோமி சமூகத்தினர் கவர்னருக்கு வேண்டுகோள் விடுத்த நிலையில், அரசு அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது.

    பிப்ரவரி- மார்ச் மாதத்தில் பட்ஜெட்டிற்கு செசனுக்காக சட்டமன்றம் கூடியது. அதன்பின் தற்போது ஒருநாள் கூட இருக்கிறது.

    • பல்லாயிரக்கணக்கில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • துணைநிலை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

    மணிப்பூரில் மைதேயி இன மக்களுக்கும் குகி இன மக்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. கடந்த வாரம் 3 குகி இனத்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதால் மீண்டும் அம்மாநிலத்தில் பதட்டம் நிலவுகிறது. இந்த நிலையில் குகி இன அமைப்புகள் இன்று (திங்கட்கிழமை) சாலை முடக்கம் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன.

    இதன்படி இன்று திமாபூர்-இம்பால் இடையேயான தேசிய நெடுஞ்சாலை குகி இன அமைப்பினர் பல்லாயிரக்கணக்கில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு துணைநிலை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • எஸ்.சி., எஸ்.டி. ஊழியர்கள் நலச்சங்கத்தின் நெல்லை மாவட்ட கிளை சார்பில் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோபாலன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    நெல்லை:

    மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி மக்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலை கண்டித்து மத்திய- மாநில அரசின் எஸ்.சி., எஸ்.டி. ஊழியர்கள் நலச்சங்கம் நெல்லை மாவட்ட கிளை சார்பில் இன்று சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட தலைவர் சுந்தரம் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் இசக்கிமுத்து முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்று பேசினார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோபாலன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர்கள் மணிப்பூரில் பழங்குடியின மக்களுக்கு ராணுவ பாதுகாப்பு வழங்க வேண்டும், கலவரத்துக்கு துணை போகும் மாநில அரசை உடனடியாக கலைத்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரிராம், மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன், பகுஜன் சமாஜ் தேவேந்திரன், முன்னாள் கவுன்சிலர் சுடலைக்கண்ணு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சேகர், தென்காசி மாவட்ட தலைவர் முருகையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் திரண்டு வந்து மறியலில் ஈடுபட்டனர்.
    • மறியலால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இம்பால்:

    மணிப்பூரில் கடந்த 2 வாரங்களாக வன்முறைகள் ஓய்ந்து அமைதி திரும்பிய நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் கலவரம் மூண்டது. உக்ருல் மாவட்டத்தில் நாகா மக்கள் அதிகம் வசிக்கும் குகிதேவாய் கிராமத்தில் இரவு தொடர்ந்து துப்பாக்கி சூடு சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. இதையடுத்து போலீசார் மற்றும் வனத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த 3 வாலிபர்கள் கொடூரமாக கொல்லப்பட்டு கை, கால்கள் வெட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியது.

    3 பேர் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், பழங்குடி சமூக மக்கள் வசித்து வரும் மலை மாவட்டங்களில் மீண்டும் அசாம் ரைபிள் படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் எனக்கோரியும் காங்போக்பி மாவட்ட பழங்குடி இன பெண்கள் மறியல் போராட்டத்தில் குதித்தனர்.

    தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் திரண்டு வந்து மறியலில் ஈடுபட்டனர். இன்று 2-வது நாளாக இந்த போராட்டம் நடந்தது. இந்த மறியலால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன.

    இந்த போராட்டத்தையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுடைய இடத்திற்கு திரும்பவும், மணிப்பூரில் அமைதி ஏற்படவும் அரசு தொடர்ந்து செயலாற்றி வருகிறது
    • தவறு செய்வது மனித இயல்வு. அதை நாம் மன்னிக்கவும், மறக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும்

    மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவினருக்கு இடையிலான மோதல் மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இரண்டு பெண்களுக்கு எதிராக நிகழ்ந்த கொடூர செயல் அனைவரையும் பதைபதைக்கச் செய்தது. இதற்கு நாடு தழுவிய அளவில் கண்டனம் கிளம்பியது. தற்போது மணிப்பூரில் அமைதி திரும்பிய வண்ணம் உள்ளது.

    இந்த நிலையில் மூன்று முக்கிய விசயங்கள்தான் மணிப்பூரில் விலைமதிப்பற்ற உயிர்ப்பலிக்கு முக்கிய காரணம் என அம்மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.

    77-வது சுதந்திர தினவிழாவையொட்டி தேசியக் கொடி ஏற்றி வைத்து பிரேன் சிங் பேசியதாவது:-

    'குறிப்பிட்ட தவறான புரிதல்கள், சுயநலனுக்கான செயல்கள், நாட்டை சீர்குலைப்பதற்கான வெளிநாட்டு சதி ஆகியவை மணிப்பூரில் விலைமதிப்பற்ற உயிர்களை காவு வாங்கியுள்ளது. ஏராளமானோர் நிவாரண முகாமலில் வசிக்க காரணமாகிவிட்டது.

    பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுடைய இடத்திற்கு திரும்பவும், மணிப்பூரில் அமைதி ஏற்படவும் அரசு தொடர்ந்து செயலாற்றி வருகிறது. சொந்த வீட்டிற்கு உடனடியாக செல்ல முடியாதவர்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள வீட்டிற்கு மாற்றப்படுவார்கள். தவறு செய்வது மனித இயல்வு. அதை நாம் மன்னிக்கவும், மறக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். அரசியலமைப்பு வழங்கியுள்ளதற்கு எதிராக அரசு எதையும் செய்யவில்லை. யாரும் அவ்வாறு செய்ய முடியாது.

    ஒரு குடும்பம் ஒரு வாழ்வாதாரம் என்ற திட்டத்தை வழங்கவும், மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.

    • மணிப்பூரில் துணை ராணுவ படையினர் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
    • சமூக வலைதளங்களில் வெளியாகும் அதிகார பூர்வமற்ற வதந்தியான தகவல்கள் பெரும் வன்முறை ஏற்பட வழிவகுக்கின்றன.

    புதுடெல்லி:

    மணிப்பூரில் இரு சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையில் கலவரம், தீவைப்பு, வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. குகி பழங்குடி இனத்தை சேர்ந்த 2 பெண்களை ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி மானபங்கம் செய்தபடி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இதன் தொடர்ச்சியாக மணிப்பூரில் துணை ராணுவ படையினர் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு சமூக வலைதள பயன்பாடும் ஒரு காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    சமூக வலைதளங்களில் வெளியாகும் அதிகார பூர்வமற்ற வதந்தியான தகவல்கள் பெரும் வன்முறை ஏற்பட வழிவகுக்கின்றன.

    இதை தொடர்ந்து மணிப்பூரில், "பிரிவினைவாத, தேசவிரோத, வகுப்புவாத மற்றும் பிளவுபடுத்தும் நிகழ்ச்சி நிரல்களை" ஊக்குவிக்கும் எந்தவொரு சமூகவலைதள குழுக்களில் இருந்தும் வெளியேறுமாறு மாநில அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து அரசு துறைகளும் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மாநில உள்துறை ஆணையர் ரஞ்சித்சிங் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

    • பிரதமர் மோடி 2 நிமிடம் மட்டுமே மணிப்பூர் பற்றி பேசி உள்ளார்.
    • மணிப்பூர் பிரச்சினை முடிந்து விட்டது போல பாராளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளிக்கிறது.

    சென்னை:

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் திருச்சி சிவா எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    மணிப்பூர் மாநிலத்தில் 100 நாட்களுக்கு மேலாக பதட்டம் நிலவுகிறது. 100-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1 லட்சம் பேர் இடம் பெயர்ந்து பதுங்கி வாழ்கின்றனர்.

    இப்போது ஒரு தகவல் வெளிவந்துள்ளது. மணிப்பூரை சேர்ந்த 230 பேர் மியான்மர் காடுகளில் தவிக்கின்றனர்.

    மணிப்பூர் விவகாரத்தில் பிரதமரின் விளக்கம் தேவை என்பதே எதிர்க்கட்சிகளின் ஒருமித்த கோரிக்கையாக இருந்தது. ஆனால் பிரதமர் மோடி 2 நிமிடம் மட்டுமே மணிப்பூர் பற்றி பேசி உள்ளார். பெண்கள் அவமானப்படுத்தப்பட்டது பற்றி விளக்கம் அளிக்கவில்லை.

    மணிப்பூர் பிரச்சினை முடிந்து விட்டது போல பாராளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளிக்கிறது. மணிப்பூர் பற்றி பிரதமர் மோடி ஒருநாளும் கவலைப்படவில்லை. தி.மு.க.வை கண்டு பிரதமர் மோடி, உள் துறை மந்திரி அமித்ஷா அச்சம் அடைந்துள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×