என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
3 பேர் கொலை எதிரொலி: மணிப்பூரில் பெண்கள் 2-வது நாளாக மறியல்
- தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் திரண்டு வந்து மறியலில் ஈடுபட்டனர்.
- மறியலால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இம்பால்:
மணிப்பூரில் கடந்த 2 வாரங்களாக வன்முறைகள் ஓய்ந்து அமைதி திரும்பிய நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் கலவரம் மூண்டது. உக்ருல் மாவட்டத்தில் நாகா மக்கள் அதிகம் வசிக்கும் குகிதேவாய் கிராமத்தில் இரவு தொடர்ந்து துப்பாக்கி சூடு சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. இதையடுத்து போலீசார் மற்றும் வனத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த 3 வாலிபர்கள் கொடூரமாக கொல்லப்பட்டு கை, கால்கள் வெட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியது.
3 பேர் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், பழங்குடி சமூக மக்கள் வசித்து வரும் மலை மாவட்டங்களில் மீண்டும் அசாம் ரைபிள் படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் எனக்கோரியும் காங்போக்பி மாவட்ட பழங்குடி இன பெண்கள் மறியல் போராட்டத்தில் குதித்தனர்.
தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் திரண்டு வந்து மறியலில் ஈடுபட்டனர். இன்று 2-வது நாளாக இந்த போராட்டம் நடந்தது. இந்த மறியலால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன.
இந்த போராட்டத்தையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்