search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mangadu"

    • காமாட்சி என்றால் கருணையும் அன்பும் நிறைந்தவள் என்று அர்த்தம்.
    • கடுந்தவம் இருந்து ஈஸ்வரனை அடைந்தவள் காமாட்சி அம்மன்.

    தெய்வங்கள்கூட மிக்க வைராக்கியத்துடன், தாங்கள் நினைத்ததைச் சாதிக்கின்றனர்.

    ஊண், உணவு, உறக்கம் இழந்து, தவமாய் தவமிருந்து தாங்கள் அடைய வேண்டியதை அடைந்திருக்கின்றனர் என்று புராணங்கள் கூறுகின்றன.

    இதற்கு உதாரணமாய்த் திகழும் தெய்வம் மாங்காடு காமாட்சி அம்மன்!

    காமாட்சி என்றால் கருணையும் அன்பும் நிறைந்தவள் என்று அர்த்தம்.

    கடுந்தவம் இருந்து ஈஸ்வரனை அடைந்தவள் காமாட்சி அம்மன்.

    நினைத்ததைச் சாதித்துப் பெற்றாள் இந்த அம்மன்.

    • அம்மன் இருகரங்களுடன் காட்டப்பட்டுள்ளாள்.
    • மகா மண்டபத்தின் தென் திசையில் இச்சன்னதி அமைந்துள்ளது.

    மகா மண்டபத்தின் தென் திசையில் இச்சன்னதி அமைந்துள்ளது.

    இதன் நடுவே பத்ரபீடத்தின் மீது பஞ்ச அக்னிகள் சுவாலையுடன் தோன்ற, நடுவே உள்ள சுடரின் பின்புறம் காமாட்சி

    ஒரு மா மரத்தின் முன்புறம் இடது காலை ஊன்றி வலது காலை மேல் தூக்கி வளைத்து ஒற்றைக்காலில் தவம் செய்யும் காட்சி செப்புத் திருமேனியாக காணப்படுகிறது.

    அம்மன் இருகரங்களுடன் காட்டப்பட்டுள்ளாள்.

    வலது கை உத்திராட்ச மாலையை சின் முத்திரையில் பற்றிய நிலையில் உச்சித் தலைமீது காட்டப்பட்டுள்ளது.

    இடது கரம் மார்புக்குக் குறுக்கே தியான கரமாக நீண்டுள்ளது.

    கட்டை விரலும், சுட்டு விரலும் இணைந்து சின் முத்திரை காட்டும் நிலையிலும் ஞானக்கரங்களுடன் தவ நிலையில் தோன்றும் காமாட்சி ஆன உடையாளுடைய திருமேனிகள் காண்பதரிது.

    ஆனால் இங்கு காமாட்சியின் தவக்காட்சி பஞ்சலோகங்களில் வார்க்கப்பட்டு வனப்போடு காட்சியளிக்கிறது.

    அன்னை ஒற்றைக்காலில் நிற்கும் நிலை தியானத்தைச்சுட்டும் கரங்கள், அக்கமாலை ஏந்தி சின் முத்திரை காட்டும் கரம், முகப்பொலிவு, காமரூபினியாக காணப்படும்.

    கண்களின் கனிவு, யாவும் காண்போரை வியக்க வைக்கிறது. சமய வாதிகளைச் சிந்திக்க வைக்கிறது.

    பாமர மக்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்துகிறது.

    ஆன்மீக வாதிகளின் கவனத்தை ஈர்க்கிறது. இச்செப்பு வடிவம் கி.பி. 14,15 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது.

    • பிரகாரத்தின் கீழ் திசையிலும் கோபுர வாயிலைக் காணலாம்.
    • இக்கோவில் மகா மண்டபத்தை எட்டுக் கல்தூண்கள் அலங்கரிக்கின்றன.

    இக்கோவில் மகா மண்டபத்தை எட்டுக் கல்தூண்கள் அலங்கரிக்கின்றன.

    இத்தூண்களில் மயில் வாகனம், கொடிப்பெண், குந்துச்சிம்மன், சீரும்யாளி, யானை, யானை மீது சிம்மம் சண்டை செய்யும் காட்சி, தாமரை மலர் ஏந்தி நிற்கும் சூரியன், அழகிய அன்னம் ஆகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

    இம்மண்டபத் தூண்கள் கீழும் மேலும் நடுவிலும் சதுரமாக அமைந்து இடைப்பகுதி 16 பட்டை வடிவில் செதுக்கப்பட்டுள்ளது.

    அவ்வாறு முக மண்டபத்தூண்களும், பதினாறு (16) பட்டைகளுடன் அலங்கரிக்கின்றன.

    இரண்டாம் திருச்சுற்று மிகப்பெரிய அளவில் அண்மைக்காலத்தில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

    இப்பிரகாரத்தின் வடதிசை வாயிலில் பெரிய கோபுரம் உயர்ந்த நிலையில் ஏழு நிலைகளை உடைய கோபுரமாக அமைந்து காட்சி அளிக்கிறது.

    பிரகாரத்தின் கீழ் திசையிலும் கோபுர வாயிலைக் காணலாம்.

    • சுவரைச் சுற்றிலும் அழகிய அரைத்தூண்கள் அலங்கரிக்கின்றன.
    • சிகரகத்தின் மேல் 5 ஸ்தூபிகள் அமைந்து காணப்படுகின்றன.

    இது அதிஸ்டானம், சுவர், பிரஸ்தரம், கிரீவம், சிகரம், ஸ்தூபி என்னும் ஆறு(6) அங்கங்களை உடையதாக அமைந்துள்ளது.

    அதிட்டானம் என்னும் அடிப்பகுதி உபானம் ஜகதி, குமுதம், கண்டம், பட்டிகை, வேதிகை என்னும் ஆறு உறுப்புகளை உடையது.

    அதிட்டானத்தைச் சுற்றிலும் விஜயநகரக் கால கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

    அதிட்டானத்தின் மேல் அம்மன் கோவில் சுவர் பகுதி எழுப்பப்பட்டுள்ளது.

    சுவரைச் சுற்றிலும் அழகிய அரைத்தூண்கள் அலங்கரிக்கின்றன.

    கருவறைச் சுவரில் தெற்கு, மேற்கு வடக்கு ஆகிய திசைகளில் தேவகோஷ்ட மாடங்கள் அலங்கரிக்கின்றன.

    மாடங்களின் பக்கங்களில் அரைத் தூண்களும், மேற்புறம், கூரை, கிரீவம், சாலை வடிவுடைய சிகரம் ஆகிய பகுதிகளுடன் கோஷ்ட மாடங்கள் காணப்படுகின்றன.

    சுவரின் பக்கங்களில் உள்ள அகாரை என்னும் பகுதியில் ஒற்றைக் கால் பஞ்சரங்கள் அலங்கரிக்கின்றன.

    சுவரின் மேல் கூரை என்னும் பிரஸ்தரம் அமைந்துள்ளது.

    இது எழுதகம், கபோதகம், வியாளம் என்னும் மூன்று உறுப்புகளைப் பெற்றுத் திகழ்கிறது.

    கூரை மேல் விமானத்தளம் அமைந்துள்ளது.

    இத்தளங்கள் கர்ணக்கூடு, சாலை, பஞ்சரம், என்னும் உறுப்புகளுடன் மாறி மாறி அலங்கரிக்கின்றன.

    தளங்களைச் சுற்றிலும் அழகிய சிற்ப வடிவங்கள் கதை உருவங்களாகக் காணப்படுகின்றன.

    விமான கிரீவம் செவ்வக வடிவுடையது.

    கிரீவத்தின் மேல் சாலை வடிவுடைய சிகரம் அலங்கரிக்கின்றது.

    சிகரங்களின் பக்கங்களில் மகாநாசிகள் அலங்கரிக்கின்றன.

    சிகரகத்தின் மேல் 5 ஸ்தூபிகள் அமைந்து காணப்படுகின்றன.

    இவ்விதம் அம்மன் கோவில் விமானம் அதிட்டானத்திலிருந்து பிரஸ்தனம் வரை கருங்கல் திருப்பணியாக அமைந்துள்ளது.

    அதன் மேல் உள்ள தளங்களும், கிரீவம் மற்றும் சிகரப்பகுதிகள் செங்கல்லும் சுதையும் கொண்டு எழுப்பப்பட்டுள்ளது.

    விமானம் சுமார் 30 அடிக்கும் மேல் உயரம் உடையது. கி.பி. 15,16 ஆம் நூற்றாண்டுகளில் இவ்விமானம் எழுப்பப்பட்டுள்ளது.

    • கருவறை நடுவே ஸ்ரீசக்கரம் உள்ளது.
    • கீழ் இடக்கரம் மோதகத்தைப் பற்றியுள்ளது.

    தொண்டை நாட்டின் புகழ் பெற்ற அம்மன் ஆலயங்களில் மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் புகழ் பெற்றது.

    காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலைப் போன்றே மாங்காடு அம்மன் கோவிலும் சமயச் சிறப்பும் கலைச்சிறப்பும் பெற்றது.

    இயற்கையான சூழலில் மக்கள் குடியிருப்புகள் உள்ள பகுதியில் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது.

    சோழர் காலத்தில் எழுப்பப்பட்ட இக்கோவில் விஜய நகர காலத்தில் முழுமையான திருப்பணிப் பெற்று விரிவு படுத்தப்பட்டுள்ளது.

    இக்கோவில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், முகமண்டபம், முகப்பு மண்டபம், முதல் திருச்சுற்று பிரகாரம், இரண்டாம் திருச்சுற்று கோபுர வாயில் போன்ற பல்வேறு பகுதிகளைப் பாங்குறப் பெற்றுத் திகழ்கிறது.

    கோவில் கருவறை சதுர வடிவுடையது. கருவறை சுவரை ஒட்டி அம்மன் வடிவம் வழிபாட்டில் உள்ளது.

    கருவறை நடுவே ஸ்ரீசக்கரம் உள்ளது.

    கருவறை முன் அர்த்த மண்டபம் அமைந்துள்ளது.

    இது தூண்கள் எதுவுமின்றி சதுரவடிவில் எளிமையாக காணப்படுகிறது.

    அம்மன் கோவில் கருவறை மற்றும் அர்த்த மண்டப புறச்சுவர்களில் பஞ்ச கோஷ்டங்கள் அமைந்துள்ளன.

    இக்கோஷ்டங்களில் மூன்று மாடங்களில் இறைவடிவங்கள் அமைக்கபட வில்லை.

    பொதுவாக சக்திகளின் வடிவங்கள் அமைக்கப் படுவதுண்டு.

    இங்கு அர்த்த மண்டப கோஷ்டம் ஒன்றில் இடம்புரி விநாயகரின் சிற்பவடிவம் ஒன்று அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறது.

    இதன் மேற்கரங்கள் அங்குசத்தையும், பாசத்தையும் பற்றியுள்ளது.

    கீழ்வலக்கரம் தந்தத்தை கடக முத்திரையில் பிடித்துள்ளது.

    கீழ் இடக்கரம் மோதகத்தைப் பற்றியுள்ளது.

    மற்றொரு கோஷ்டத்தில் காளியின் வடிவம் வழிபாட்டில் உள்ளது.

    கருவறையையும் அர்த்த மண்டபத்தையும் சுற்றி வலம்வர திருச்சுற்று பாதை உள்ளது.

    திருச்சுற்று பாதையைச் சுற்றிலும் உருளை வடிவிலான கல்தூண்கள் அலங்கரிக்கின்றன.

    இத்தூண்களின் மேல் பகுதி வெட்டுப் போதிகையுடன் உள்ளது.

    இந்த திருச்சுற்றை அலங்கரிக்கும் பகுதிகள் இடைச்சோழர் காலத்தவை.

    கன்னியாகுமரியில் அம்மன் கோவில் திருச்சுற்றுத் தூண்களை ஒத்த அமைப்பில், இவை காணப்படுகின்றன.

    மாங்காடு அருகே கால் டாக்சி டிரைவரை தாக்கி கார் கடத்தப்பட்ட சம்பவத்தில் போலீசார் சிறப்பாக பணியாற்றி 3 மணி நேரத்தில் காரை மீட்டனர்.
    பூந்தமல்லி:

    மாங்காட்டை அடுத்த பரணிபுத்தூரில் சவாரி ஏற்ற வருமாறு இன்று காலை 6 மணி அளவில் தனியார் கால்டாக்சி நிறுவனத்துக்கு அழைப்பு வந்தது.

    இதையடுத்து டிரைவர் செல்வம் காருடன் அந்த இடத்திற்கு சென்றார். நீண்ட நேரம் வரை பயணிகள் யாரும் வரவில்லை.

    சந்தேகம் அடைந்த அவர் கால்டாக்சி நிறுவனத்தில் பதிவான செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டார். ஆனால் அந்த போன் சுவிட்ஆப் செய்யப்பட்டிருந்தது.

    இதைதொடர்ந்து அவர் சவாரியை ரத்து செய்து விட்டு காரை ஓட்ட முயன்றார். அப்போது மறைந்திருந்த 4 வாலிபர்கள் திடீரென செல்வத்தை தாக்கி கீழே தள்ளினர். பின்னர் காரை ஓட்டி கடத்தி சென்று விட்டனர். அதிர்ச்சி அடைந்த செல்வம் இது பற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அனைத்து போலீஸ் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டு கார் கடத்தல் கும்பல் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போரூர் உதவி கமி‌ஷனர் சந்திரசேகரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணகுமார், சார்லஸ், ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் கால் டாக்சியில் இருந்த ஜி.பி.ஆர்.எஸ். கருவி மூலம் கார் செல்லும் இடத்தை கண்காணித்து விரட்டிச் சென்றனர்.

    காலை 9 மணி அளவில் ஊரப்பாக்கம் அருகே கடத்தல் காரை போலீசார் மடக்கினர். உடனே அதில் இருந்த 3 வாலிபர்கள் தப்பி ஓடிவிட்டனர். ஒருவர் மட்டும் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்து காரை மீட்டனர். பிடிபட்ட வாலிபரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    கார் கடத்தப்பட்ட 3 மணி நேரத்தில் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் சிறப்பாக பணியாற்றிய போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர். #Tamilnews
    மாங்காட்டில் 5 டன் எடை கொண்ட 150 மூட்டைகளில் குட்கா போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் குடோன் உரிமையாளர் உள்பட 4 பேரை கைது செய்தனர்.
    பூந்தமல்லி:

    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை சட்ட விரோதமாக விற்கப்படுவதையடுத்து போலீசார் தீவிர சோதனை நடத்தி குட்காவை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    சமீபத்தில் கோவையில் இயங்கிய குட்கா தொழிற்சாலையை போலீசார் கண்டு பிடித்து ‘சீல்’ வைத்தனர். இந்த நிலையில் மாங்காடு போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் உள்ள குடோனில் குட்கா போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு சப்ளை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் தீவிர சோதனை நடத்தி வந்தனர். மாங்காடு அருகே பரணிபுத்தூரை அடுத்த பெரிய பணிச்சேரியில் உள்ள ஒரு குடோனில் நேற்று இரவு போலீசார் சோதனை நடத்தினர்.

    அங்கு 5 டன் எடை கொண்ட 150 மூட்டைகளில் குட்கா போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அங்கிருந்த ஏஜெண்டு முருகன், ஊழியர்கள் தணிகாசலம், செல்வராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    போலீஸ் விசாரணையில் குட்கா போதை பொருட்களை பதுக்கி விற்பனை செய்தது காட்டுப்பாக்கத்தை சேர்ந்த கனகலிங்கம் என்பது தெரியவந்தது.

    குடோன் உரிமையாளரான பரணிபுத்தூரை சேர்ந்த புஷ்பகுமாரிடம் கனகலிங்கம் குடோனை வாடகைக்கு எடுத்துள்ளார். அதில் குட்காவை மொத்தமாக வாங்கி பதுக்கி பல்வேறு பகுதிகளுக்கு சப்ளை செய்து வந்துள்ளார்.

    கனகலிங்கம் குட்காவை பதுக்கியது குறித்து குடோன் உரிமையளர் புஷ்பகுமாருக்கு 3 மாதத்துக்கு முன்பு தெரியவந்தது. ஆனால் அவர் அதுபற்றி போலீசாருக்கு தெரிவிக்கவில்லை.

    கனகலிங்கத்திடம் அதிக வாடகை வாங்கிக் கொண்டு குட்காவை பதுக்க அனுமதித்துள்ளார். இதையடுத்து போலீசார் குடோன் உரிமையாளர் புஷ்பகுமாரையும் கைது செய்தனர்.

    தலைமறைவான மொத்த வியாபாரியான கனகலிங்கம், உடந்தையாக இருந்த அவரது தம்பி தர்மன் ஆகியோரை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மாங்காட்டில் உள்ள இந்த குடோனுக்கு கோவையில் இருந்து குட்கா போதை பொருட்கள் சப்ளை செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. #Tamilnews #Gutkha
    ×