search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maintenance works"

    • அரியலூர் துணைமின் நிலையத்தில் வருகின்ற 17-ந்தேதி (சனிக்கிழமை)பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என சங்கராபுரம் உதவி செயற்பொறியாளர் தெரிவித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் வட்டம் அரியலூர் துணைமின் நிலையத்தில் வருகின்ற 17-ந்தேதி (சனிக்கிழமை)பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இந்த பராமரிப்பு பணிகளால் சங்கராபுரம் வட்டத்திலுள்ள அரியலூர், அத்தியூர், சின்னக்கொள்ளியூர், பெரியக்கொள்ளியூர், வடகீரனூர், மையனூர், சீர்பனந்தல், எடுத்தனூர், அருளம்பாடி, செளரியார்பாளையம், வடமாமந்தூர், கடுவனூர், இளையனார்குப்பம், ஜம்படை, திருவரங்கம், கள்ளிப்பாடி, ஓடியந்தல், வானாபுரம், பகண்டை, கூட்ரோடு, மரூர், கடம்பூர், ரெட்டியார்பாளையம், கரையாம்பாளையம், எகால், மற்றும் ஏந்தல் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களுக்கு காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என சங்கராபுரம் உதவி செயற்பொறியாளர் தெரிவித்தார்.

    • நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • பஞ்சநதிக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையை அடுத்த ஈச்சங்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

    எனவே மருங்குளம், ஈச்சங்கோட்டை, நடுவூர், கொல்லாங்கரை, சூரியம்பட்டி, கொ.வல்லுண்டாம்பட்டு, வேங்கைராயன்குடிகாடு, கோவிலூர், வடக்கூர், பொய்யுண்டார்கோட்டை, பாச்சூர், செல்லம்பட்டி, துறையூர், சூரக்கோட்டை, வாண்டையார் இருப்பு, மடிகை, காட்டூர், மேலஉளூர், கீழஉளூர், பொன்னாப்பூர் கிழக்கு, பொன்னாப்பூர் மேற்கு, ஆழிவாய்க்கால், பஞ்சநதிக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது.

    மேற்கண்ட தகவலை தஞ்சை புறநகர் பகுதி மின்வாரிய உதவி செயற்பொ றியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

    • களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை அமைந்துள்ளது.
    • தினசரி உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பயணிகளும் தலையணைக்கு வந்து செல்கின்றனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை அமைந்துள்ளது. வனத்துறை யினரால் சுற்றுச்சூழல் சுற்றுலா மையமாக அறிவிக்க ப்பட்டுள்ள தலையணையில் ஓடும் தண்ணீர் மூலிகைகளை தழுவியபடி அதிக குளுமையுடன் ஓடி வருவதால் அதில் குளிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தினசரி உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பயணிகளும் தலையணைக்கு வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில் கோடை வெயிலின் தாக்கத்தால் தலையணையில் தண்ணீர் வரத்து குறைந்தது. மேலும் வனப்பகுதியில் அடிக்கடி காட்டுத் தீ விபத்துகளும் ஏற்பட்டு வந்தன. இதற்கிடையே பராமரிப்பு பணிகளுக்காக களக்காடு தலையணை இன்று முதல் மூடப்படுவதாக வனத்துறை யினர் அறிவித்துள்ளனர்.

    • நீடாமங்கலம் துணைமின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது.
    • பெரம்பூர், கானூர், சர்வமான்யம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் துணைமின் நிலைய மின்பாதை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

    எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் நீடாமங்கலம், சித்தமல்லி, ரிஷியூர், ஒளிமதி, பச்சகுளம்,

    பெரம்பூர், கானூர், பருத்திக்கோட்டை, சர்வமான்யம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலநேத்திரம் தெரிவித்தார்.

    • அதம்பார், வேலங்குடி ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • முகுந்தனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் பேரளம், அதம்பார், வேலங்குடி ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை 6-ந்தேதி (செவ்வாய்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    எனவே இந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின்வினிே்யாகம் பெறும் பேரளம், கொல்லுமாங்குடி, கொட்டூர், கொல்லாபுரம், பூந்தோட்டம், அதம்பார்,

    விலாகம், எரவாஞ்சேரி, ஸ்ரீவாஞ்சியம், வேலங்குடி, நல்லாடை, காலியாக்குடி, திருக்கொட்டாரம், பாவட்டகுடி, கடகம், சிறுபுலியூர், முகுந்தனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை பேரளம் உதவி செயற்பொறியாளர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

    • நாளை மறுநாள் மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • கொங்கந்தான்பாறை, பொன்னாக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் நெல்லை நகர்ப்புற வினியோக பிரிவு பொறியாளர் முத்துக்குட்டி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மின் தடை ஏற்படும் பகுதிகள்

    மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை மறுநாள் (16-ந்தேதி) காலை 9 மணி முதல் 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது.

    மேலப்பாளையம் கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின்ரோடு, சந்தை பகுதிகள், குலவணிகர்புரம் மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகர், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹாமீம்புரம், மேலக்கருங்குளம்,

    முன்னீர்பள்ளம், ஆரைக்குளம், அன்னை நகர், தருவை, ஓமநல்லூர், கண்டித்தான்குளம், ஈஸ்வரியாபுரம் ஆஸ்பத்திரி ரோடு,குலவணிகர்புரம், தெற்கு பைபாஸ் ரோடு,மேல குலவணிகர்புரம், பஜார் திடல், ஜின்னா திடல், டவுன் ரோடு, அண்ணா வீதி, பசீரப்பா தெரு, கணேச புரம், செல்வ காதர் தெரு, உமறுபுலவர் தெரு, ஆசாத் ரோடு, பி.எஸ்.என். கல்லூரி,பெருமாள்புரம், பொதிகை நகர், அரசு ஊழியர் குடியிருப்பு (என்.ஜி.ஓ. காலனி), அன்பு நகர், மகிழ்ச்சி நகர், திருநகர், திருமால்நகர், பொறியியல் கல்லூரி பகுதி, புதிய பஸ் நிலையம், ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள் புரம், கொங்கந்தான்பாறை, பொன்னாக்குடி, அடை மிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி மற்றும் தாமரைச்செல்வி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • செவ்வாய்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.
    • 31 கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் சிவகுரு வெளியிட்டுள்ள செய்தி க்குறிப்பில் கூறி இருப்பதாவது:- 

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கோட்டத்தை சேர்ந்த கண்டமங்கலம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வருகிற 16 -ந்தேதி( செவ்வாய்கிழமை )காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும். இதனால் கண்டமங்கலம், சின்னபாபுசமுத்திரம், வழுதாவூர், கெங்கராம்பா ளையம், பி.எஸ். பாளையம், பள்ளித்தென்னல், நவமா ல்காப்பேரி, நவமால்மருதூர், சேஷங்கனூர், பண்ண க்குப்பம், கொத்தாம்பாக்கம், பக்கமேடு, கலிங்கமலை, கோ ண்டூர், வெள்ளாழங்குப்பம், அரங்கநாதபுரம், ஆழியூர், எல்.ஆர்.பாளையம், பெரியபாபு சமுத்திரம், கெண்டியங்குப்பம், வனத்தா ம்பாளையம், குயிலாப்பா ளையம், தாண்ட வமூர்த்திகுப்பம், அம்மண ங்குப்பம், கலித்திரம்பட்டு, பள்ளிப்புதுப்பட்டு, கரைமேடு, பூசாரிபாளையம், வி.பூதூர், திருமங்கலம், இரசப்புத்தி ரபாளையம் உள்ளிட்ட 31 கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • கரூர் உழவர் சந்தையில் ரூ.48 லட்சத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • இந்த உழவர் சந்தை தினமும் காலை 4.30 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற்று வருகின்றது.

    கரூர்:

    கரூர் உழவர்சந்தை பழைய பஸ்நிலைய பகுதியில் செயல்பட்டு வருகிறது. கரூர் உழவர்சந்தை 2000-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு மொத்தம் 60 கடைகள் உள்ளன. கரூர் உழவர்சந்தைக்கு தினமும் சராசரியாக 120 விவசாயிகள் வருகை புரிகின்றனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நுகர்வோர்கள் தினமும் வருகை புரிந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். 18 மெட்ரிக் டன் வரை காய்கறிகள் வரத்து உள்ளன. தீபாவளி, பொங்கல் போன்ற சிறப்பு பண்டிகை நாட்களில் 150 முதல் 160 விவசாயிகள் வருகை புரிவார்கள்.

    அப்போது 25 மெட்ரிக் டன் காய்கறிகள் வரத்து இருக்கும். இந்த உழவர் சந்தை தினமும் காலை 4.30 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கரூர் உழவர்சந்தையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கரூர் உழவர்சந்தையை மேம்படுத்தும் வகையில் தண்ணீர் வசதி, கழிப்பறை வசதி, நடைபாதை சீரமைப்பு, கடைகளில் மேற்கூரைகள், தளங்கள் அமைப்பது, அலுவலக மேற்கூரை, உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதுகுறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, கரூர் உழவர்சந்தையில் தற்போது ரூ.48 லட்சம் மதிப்பில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் கடைகள், அலுவலகங்கள் சீரமைப்பு செய்வது உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.மேலும் இப்பணிகள் 1 மாதத்திற்கு நடைபெறும் எனவும், அதுவரை கரூர் உழவர்சந்தை தினமும் காலை 8 மணி வரைதான் நடைபெறும் எனவும் தெரிவித்தார். கரூர் உழவர்சந்தையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 8 மணியுடன் விற்பனை முடிவடையும். பராமரிப்பு பணிகள் முடிவடைந்த பிறகு உழவர்சந்தை வழக்கம்போல் செயல்படும் என அறிவிப்பு பலகை நுழைவுவாயிலில் வைக்கப்பட்டிருந்தது.

    • மதுரையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
    • மேற்கண்ட தகவலை சமயநல்லூர் கோட்ட மின்னியல் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    சமயநல்லூர் துணை மின் நிலையத்தில் உள்ள அலங்காநல்லூர் பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நாளை (11-ந்தேதி) காலை 9மணி வரை மாலை 5மணி வரை பரவை, பரவை காலனி, கோவில்பாப்பாகுடி, பொதும்பு, அதலை, வட்டக்குறிச்சி, கீழநெடுங்குளம், குமாரம், அரியூர், சபரி கார்டன், ரங்கராஜபுரம், பிள்ளையார்நத்தம், மணியஞ்சி, வடுகப்பட்டி பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை சமயநல்லூர் கோட்ட மின்னியல் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    • நீலக்குடி துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது.
    • வண்டம்பாளை, சேந்தமங்கலம், பெரும்புகளூர், திருபயத்தங்குடி உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

    திருவாரூர்:

    திருவாரூர் மின்வாாிய உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நீலக்குடி துணைமின்நிலையத்தில் வருகிற 6-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது.

    இதனால் இந்த துணைமின்நிலைத்தில் இருந்து மின்வினியோகம் பெறும், நன்னிலம் துணை மின்நிலையம் மற்றும் நீலக்குடி, வைப்பூர், நடப்பூர், வாழ்குடி, கீழதஞ்சாவூர்,

    பிபல்லாளி, செல்வபுரம், மூலங்குடி, பழையவலம், திருவாதிரை மங்கலம், காரையூர், திருப்பள்ளிமுக்கூடல், ராராந்திமங்கலம், சுரக்குடி, கங்களாஞ்சேரி, வண்டம்பாளை, சேந்தமங்கலம், பெரும்புகளூர், திருபயத்தங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 6-ந் தேதி காலை 9 மணிமுதல் மதியம் 2 மணி வரை மின்வினியோம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிவகாசி பகுதியில் நாளை மின்தடை ஏற்படும்.
    • இந்த தகவலை மின்வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

    சிவகாசி

    சிவகாசி கோட்டத்தில் உள்ள பாறைப்பட்டி, சிவகாசி அர்பன், நாரணாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (29-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    ஆதலால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பாறைப்பட்டி, பள்ளப்பட்டி, விஸ்வநத்தம், மாரியம்மன் கோவில், ஜக்கம்மாள் கோவில், பஸ் நிலையம், நாரணாபுரம் ரோடு, சிவகாசி அர்பன், காரணேசன் பள்ளி, பழனியாண்டவர்புரம் காலனி, நேரு ரோடு, நெல்கடை முக்கு, தபால் நிலையம், பராசக்தி காலனி ஆகிய பகுதிகளில் இருந்து நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    அதேபோல் வடக்கு ரதவீதி, வேலாயுதரஸ்தா, அண்ணா காலனி, லிங்க புரம் காலனி, ராஜிவ்காந்தி நகர், கண்ணாநகர், அம்மன்நகர், காமராஜர்புரம் காலனி, 56 வீட்டு காலனி, ஐஸ்வர்யாநகர், அரசன்நகர், சீனிவாசநகர், பர்மாகாலனி, போஸ் காலனி, முத்துராமலிங்கநகர், இந்திராநகர், முருகன் காலனி, எம்.ஜி.ஆர்.காலனி, மீனாட்சி காலனி ஆகிய பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய அதிகாரி பாவநாசம் தெரிவித்துள்ளார்.

    • எறையூர் துணைமின்நிலையத்தில் அவசர பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

    கள்ளக்குறிச்சி:

    எறையூர் துணைமின்நிலையத்தில் அவசர பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை எறையூர் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட புகைப்பட்டி, அயன்குஞ்சரம். பாளையகுஞ்சரம், கூத்தனூர், நரிப்பாளையம், பெரியகுறுக்கை, வடுகப்பாளையம்,எறையூர், வடகுறும்பூர், எஸ்.மலையனூர், எல்லைகிராமம், கூவாடு, தேன்குணம், நெய்வனை, எதலவாடி மற்றும் பில்ராம்பட்டு ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்துறை செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

    ×