search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "love failure"

    புதுவை முத்தியால்பேட்டையில் காதல் தோல்வியால் கல்லூரி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை குருசித்தானந்தா கோவில் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மனைவி வாசுகி (45). இவர்கள் முத்தியால்பேட்டையில் தள்ளுவண்டியில் டிபன் கடை வைத்து நடத்தி வருகின்றனர். இவர்களுடைய மகன் செல்வகணபதி (25). இவர் புதுவை தனியார் கல்லூரியில் கேட்டரிங் படித்து வருகிறார்.

    இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனியாக இருந்த செல்வகணபதி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே போய் விட்டு வீட்டுக்கு வந்த வாசுகி கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததை பார்த்து சந்தேகம் அடைந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மகன் செல்வகணபதி தூக்கில் தொங்குவதை கண்டு அலறினார்.

    உடனே தூக்கில் இருந்து மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் செல்வகணபதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதகுறித்து முத்தியால்பேட்டை போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது செல்வகணபதியின் செல்போனை ஆய்வு செய்து பார்த்ததில் சமூகவளைத்தளத்தில் ஏற்பட்ட காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்வதாக (சேட்டஸ்) போட்டிருந்தாக கூறப்படுகிறது.

    மேலும் போலீசார் வேறு காரணங்களால் தற்கொலை செய்து கொண்டாரா? என்பதும் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தருமபுரியில் காதல் தோல்வி அடைந்த மினி பஸ் டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    தருமபுரி:

    தருமபுரி டவுன் அம்பேத்கார் நகரை சேர்ந்த மாதப்பன் மகன் சத்தியநாதன் (வயது 23). இவர் மினி பஸ்சில் டிரைவராக இருந்தார். ஏற்கனவே காதல் தோல்வியால் பாதிக்கப்பட்ட இவர் கையிலும், நெஞ்சிலும் பிளேடால் கிழித்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

    இந்த நிலையில் நேற்று இரவு 9.30 மணிக்கு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து மாதப்பன் கொடுத்த புகாரின்பேரில் தருமபுரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருச்சியில் காதல் தோல்வியால் மனமுடைந்த மெக்கானிக் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருச்சி:

    திருச்சி எடமலைப்பட்டிபுதூர் கே.ஆர்.எஸ். நகரை சேர்ந்தவர் எட்வின் சகாயராஜ். இவரது மகன் அந்தோணி (வயது 24), ஏ.சி.மெக்கானிக். இவர் சாந்தி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதற்கிடையே பெண் வீட்டில் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. மேலும் சாந்தியின் பெற்றோர் அவருக்கு வேறு ஒரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர்.

    இது குறித்து சாந்தி போனில் அந்தோணியிடம் தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த அந்தோணி தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி கடந்த 5ந் தேதி ஏ.சி. எந்திரங்களை சுத்தம் செய்ய உதவும் திராவகத்தை குடித்துள்ளார். ஆனால் எந்த மாற்றமும் இல்லாமல் 2 நாட்கள் இருந்துள்ளார். அடுத்த 2 நாட்களில் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். 

    அவர்கள் அந்தோணியை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சைகள் முடிந்து வீடு திரும்பியுள்ளார். இதற்கிடையே மீண்டும் வயிற்றுவலி ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து திருச்சி எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   
    பெரம்பலூர் அருகே காதல் தோல்வியால் அரசு ஊழியரின் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே உள்ள துறைமங்கலம் அரசு அலுவலர்கள் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். அரசு ஊழியர். இவரது மகன் ராஜகுமாரன் (வயது 22). இவர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு வேலைக்கு ஏதும் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டின் அருகே ராஜ குமாரன் எலி மருந்தை (விஷம்) தின்று மயங்கி கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜகுமாரன் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், இறந்து போன ராஜகுமாரன் காதல் தோல்வியால் எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 
    பல்லடத்தில் காதல் தோல்வியால் மில் தொழிலாளி ஆசிட் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பல்லடம்:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியை சேர்ந்தவர் மணிவேல் (வயது 29). இவர் கடந்த 1 வருடத்திற்கு முன்பு திருப்பூர் மாவட்டம் பல்லடம் கள்ளிப்பாளையத்தில் உள்ள ஒரு மில்லில் விடுதியில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் காலை பாத்ரூமுக்கு சென்றார். வெகுநேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. சந்தேகம் அடைந்த சக ஊழியர்கள் சென்று பார்த்தபோது பாத்ரூமுக்கு பயன்படுத்தப்படும் ஆசிட்டை குடித்த நிலையில் துடிதுடித்தார்.

    அதிர்ச்சியடைந்த அவர்கள் மணிவேலை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மணிவேலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மணிவேல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முதல்கட்ட விசாரணையில் காதல் தோல்வியால் மணிவேல் தற்கொலை செய்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது என்று போலீசார் கூறினர்.

    காதல் தோல்வி அடைந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    தேங்காய்பட்டணம் ஐயனி விளை பகுதியை சேர்ந்தவர் செல்வநாயகம். இவரது மகன் சுஜின் (வயது 22). இவர் படந்தாலுமூட்டில் மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் ஒர்க்ஷாக் நடத்தி வந்தார். 

    சுஜின் கடந்த சில நாட் களாக யாரிடமும் பேசாமல் விரக்தியுடன் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அணைக்கரை காட்டு பகுதியில் ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில்  பிணமாக கிடந்தார். இதை பார்த்தவர்கள் புதுக்கடை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்- இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    மேலும் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சுஜின் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அதில் தோல்வி அடைந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. 

    இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கருத்தம்பட்டி அருகே காதல் தோல்வி அடைந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சூலூர்:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் அஜித்குமார் (வயது 22). இவர் கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள கைத்தறி கூடத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    அஜித்குமார் ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்தார். ஆனால் அவர் காதலிக்க மறுத்து விட்டார். இதனால் கடந்த சில நாட்களாக அஜித்குமார் மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று அறையில் இருந்த இவர் காதல் தோல்வியால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த சக ஊழியர்கள் இது குறித்து கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட அஜித்குமாரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவையில் கையை பிளேடால் அறுத்து கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவை:

    திருவள்ளூர் மாவட்டம் சென்னீர் குப்பத்தை சேர்ந்தவர் கிருஷ்ண குமார் (21).

    இவர் கோவை மதுக்கரையில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    கல்லூரி விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் கிருஷ்ண குமார் தங்கி இருந்த அறை கதவு உள்பக்கம் பூட்டப்பட்டு இருந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் மதுக்கரை போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கிருஷ்ண குமார் மின் விசிறியில் போர்வையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    அவரது வலது கை பிளேடால் அறுக்கப்பட்டு இருந்தது. அவர் வைத்திருந்த செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். போலீஸ் விசாரணையில் காதல் தோல்வியால் கிருஷ்ண குமார் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. அவரது செல்போனில் காதல் தோல்வி குறித்த ஸ்டேட்டஸ் இருந்தது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    ×