என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "love failure"
புதுச்சேரி:
முத்தியால்பேட்டை குருசித்தானந்தா கோவில் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மனைவி வாசுகி (45). இவர்கள் முத்தியால்பேட்டையில் தள்ளுவண்டியில் டிபன் கடை வைத்து நடத்தி வருகின்றனர். இவர்களுடைய மகன் செல்வகணபதி (25). இவர் புதுவை தனியார் கல்லூரியில் கேட்டரிங் படித்து வருகிறார்.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனியாக இருந்த செல்வகணபதி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே போய் விட்டு வீட்டுக்கு வந்த வாசுகி கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததை பார்த்து சந்தேகம் அடைந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மகன் செல்வகணபதி தூக்கில் தொங்குவதை கண்டு அலறினார்.
உடனே தூக்கில் இருந்து மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் செல்வகணபதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதகுறித்து முத்தியால்பேட்டை போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது செல்வகணபதியின் செல்போனை ஆய்வு செய்து பார்த்ததில் சமூகவளைத்தளத்தில் ஏற்பட்ட காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்வதாக (சேட்டஸ்) போட்டிருந்தாக கூறப்படுகிறது.
மேலும் போலீசார் வேறு காரணங்களால் தற்கொலை செய்து கொண்டாரா? என்பதும் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெரம்பலூர் அருகே உள்ள துறைமங்கலம் அரசு அலுவலர்கள் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். அரசு ஊழியர். இவரது மகன் ராஜகுமாரன் (வயது 22). இவர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு வேலைக்கு ஏதும் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டின் அருகே ராஜ குமாரன் எலி மருந்தை (விஷம்) தின்று மயங்கி கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜகுமாரன் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், இறந்து போன ராஜகுமாரன் காதல் தோல்வியால் எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியை சேர்ந்தவர் மணிவேல் (வயது 29). இவர் கடந்த 1 வருடத்திற்கு முன்பு திருப்பூர் மாவட்டம் பல்லடம் கள்ளிப்பாளையத்தில் உள்ள ஒரு மில்லில் விடுதியில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை பாத்ரூமுக்கு சென்றார். வெகுநேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. சந்தேகம் அடைந்த சக ஊழியர்கள் சென்று பார்த்தபோது பாத்ரூமுக்கு பயன்படுத்தப்படும் ஆசிட்டை குடித்த நிலையில் துடிதுடித்தார்.
அதிர்ச்சியடைந்த அவர்கள் மணிவேலை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மணிவேலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மணிவேல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முதல்கட்ட விசாரணையில் காதல் தோல்வியால் மணிவேல் தற்கொலை செய்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது என்று போலீசார் கூறினர்.
சூலூர்:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் அஜித்குமார் (வயது 22). இவர் கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள கைத்தறி கூடத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
அஜித்குமார் ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்தார். ஆனால் அவர் காதலிக்க மறுத்து விட்டார். இதனால் கடந்த சில நாட்களாக அஜித்குமார் மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
சம்பவத்தன்று அறையில் இருந்த இவர் காதல் தோல்வியால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த சக ஊழியர்கள் இது குறித்து கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட அஜித்குமாரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் சென்னீர் குப்பத்தை சேர்ந்தவர் கிருஷ்ண குமார் (21).
இவர் கோவை மதுக்கரையில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கல்லூரி விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் கிருஷ்ண குமார் தங்கி இருந்த அறை கதவு உள்பக்கம் பூட்டப்பட்டு இருந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் மதுக்கரை போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கிருஷ்ண குமார் மின் விசிறியில் போர்வையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
அவரது வலது கை பிளேடால் அறுக்கப்பட்டு இருந்தது. அவர் வைத்திருந்த செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். போலீஸ் விசாரணையில் காதல் தோல்வியால் கிருஷ்ண குமார் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. அவரது செல்போனில் காதல் தோல்வி குறித்த ஸ்டேட்டஸ் இருந்தது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்