search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mill worker suicide"

    புதுவையில் கடன் தொல்லையால் மன உளைச்சலில் மில் தொழிலாளி வி‌ஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை உருளையன் பேட்டை சுப்பையா நகர் 5-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ் (வயது 51). ரோடியர் மில் தொழிலாளி. இவருக்கு பாரதிதேவி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    மில் மூடப்பட்டு சம்பளம் வழங்கப்படாததால் குடும்ப செலவுக்கு கிருஷ்ணராஜ் பலரிடம் பணம் கடன் வாங்கி இருந்தார்.

    ஆனால், அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் கிருஷ்ணராஜ் திண்டாடி வந்தார். மேலும் பணம் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு நச்சரித்து வந்தனர். இதனால் கிருஷ்ணராஜ் மன உளைச்சலில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று கிருஷ்ணராஜ் மனைவி பாரதிதேவி சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். இதையடுத்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த கிருஷ்ணராஜ் நேற்று இரவு தனக்குத்தானே வி‌ஷ ஊசி போட்டு கொண்டார்.

    மேலும் ஒரு உருக்கமான கடிதத்தையும் எழுதி வைத்திருந்தார். அதில், கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்ததால் இந்த முடிவை தேடி கொள்வதாக அதில் எழுதி இருந்தார்.

    இன்று காலை அவரது மகன் மற்றும் மகள் எழுந்து பார்த்த போது தந்தை வி‌ஷ ஊசி போட்டு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பல்லடத்தில் காதல் தோல்வியால் மில் தொழிலாளி ஆசிட் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பல்லடம்:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியை சேர்ந்தவர் மணிவேல் (வயது 29). இவர் கடந்த 1 வருடத்திற்கு முன்பு திருப்பூர் மாவட்டம் பல்லடம் கள்ளிப்பாளையத்தில் உள்ள ஒரு மில்லில் விடுதியில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் காலை பாத்ரூமுக்கு சென்றார். வெகுநேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. சந்தேகம் அடைந்த சக ஊழியர்கள் சென்று பார்த்தபோது பாத்ரூமுக்கு பயன்படுத்தப்படும் ஆசிட்டை குடித்த நிலையில் துடிதுடித்தார்.

    அதிர்ச்சியடைந்த அவர்கள் மணிவேலை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மணிவேலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மணிவேல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முதல்கட்ட விசாரணையில் காதல் தோல்வியால் மணிவேல் தற்கொலை செய்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது என்று போலீசார் கூறினர்.

    ×