என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுக்கடை அருகே காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்11 Jun 2018 12:30 PM GMT (Updated: 11 Jun 2018 12:30 PM GMT)
காதல் தோல்வி அடைந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:
தேங்காய்பட்டணம் ஐயனி விளை பகுதியை சேர்ந்தவர் செல்வநாயகம். இவரது மகன் சுஜின் (வயது 22). இவர் படந்தாலுமூட்டில் மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் ஒர்க்ஷாக் நடத்தி வந்தார்.
சுஜின் கடந்த சில நாட் களாக யாரிடமும் பேசாமல் விரக்தியுடன் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அணைக்கரை காட்டு பகுதியில் ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்தவர்கள் புதுக்கடை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்- இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சுஜின் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அதில் தோல்வி அடைந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X