search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pudukadai"

    புதுக்கடை அருகே விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    தேங்காய்பட்டணம் தோப்புவீதி பகுதியை சேர்ந்தவர் சராபுதீன் (வயது 20). இவரது நண்பர் நித்திரவிளை நம்பாலி பகுதியை சேர்ந்த நசீக் (20).

    இவர்கள் 2 பேரும் இன்று அதிகாலை ஒரே மோட்டார் சைக்கிளில் புதுக்கடைக்கு சென்று கொண்டிருந்தனர். புதுக்கடை அருகே நெடுந்தட்டு பகுதியில் அவர்கள் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது சாலை ஓரத்தில் இருந்த ஒரு டிஜிட்டல் போர்டில் மோதியது. பிறகு அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதிய மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்தது.

    இந்த விபத்தில் சராபுதீன், நசீக் ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே சராபுதீன் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நசீக்கை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார். இந்த விபத்து பற்றி புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுக்கடை அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் கணபதி (வயது 53. இவர் நேற்று மாலை தேங்காய்பட்டினத்தில் இருந்து புதுக்கடை நோக்கி மினி டிம்போவை ஓட்டி வந்து கொண்டிருந்தார்.

    அப்போது தேங்காய் பட்டினம் பாலத்தடி அருகே வரும்போது எதிரே மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். எதிர்பாராதவிதமாக மினி டெம்போ- மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தூக்கி வீசப்பட்டு 2 பேரும் படுகாயம் அடைந்தனர். விபத்தை அறிந்த அக்கம் பக்கத்தினர் அங்கு கூடி காயம் அடைந்தவர்களை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    சம்பவம் குறித்து புதுக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    அதில் மோட்டார் சைக்கிளில் வந்தது கீழ்குளம் பகுதியை சேர்ந்த மெரீன்ராஜ் (22) மற்றும் அவரது நண்பர் வினிஸ் (24) என்பது தெரிய வந்தது.

    இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வினிஸ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காதல் தோல்வி அடைந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    தேங்காய்பட்டணம் ஐயனி விளை பகுதியை சேர்ந்தவர் செல்வநாயகம். இவரது மகன் சுஜின் (வயது 22). இவர் படந்தாலுமூட்டில் மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் ஒர்க்ஷாக் நடத்தி வந்தார். 

    சுஜின் கடந்த சில நாட் களாக யாரிடமும் பேசாமல் விரக்தியுடன் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அணைக்கரை காட்டு பகுதியில் ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில்  பிணமாக கிடந்தார். இதை பார்த்தவர்கள் புதுக்கடை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்- இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    மேலும் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சுஜின் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அதில் தோல்வி அடைந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. 

    இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×