என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Pudukadai"
நாகர்கோவில்:
தேங்காய்பட்டணம் தோப்புவீதி பகுதியை சேர்ந்தவர் சராபுதீன் (வயது 20). இவரது நண்பர் நித்திரவிளை நம்பாலி பகுதியை சேர்ந்த நசீக் (20).
இவர்கள் 2 பேரும் இன்று அதிகாலை ஒரே மோட்டார் சைக்கிளில் புதுக்கடைக்கு சென்று கொண்டிருந்தனர். புதுக்கடை அருகே நெடுந்தட்டு பகுதியில் அவர்கள் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது சாலை ஓரத்தில் இருந்த ஒரு டிஜிட்டல் போர்டில் மோதியது. பிறகு அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதிய மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்தது.
இந்த விபத்தில் சராபுதீன், நசீக் ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே சராபுதீன் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நசீக்கை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார். இந்த விபத்து பற்றி புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் கணபதி (வயது 53. இவர் நேற்று மாலை தேங்காய்பட்டினத்தில் இருந்து புதுக்கடை நோக்கி மினி டிம்போவை ஓட்டி வந்து கொண்டிருந்தார்.
அப்போது தேங்காய் பட்டினம் பாலத்தடி அருகே வரும்போது எதிரே மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். எதிர்பாராதவிதமாக மினி டெம்போ- மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தூக்கி வீசப்பட்டு 2 பேரும் படுகாயம் அடைந்தனர். விபத்தை அறிந்த அக்கம் பக்கத்தினர் அங்கு கூடி காயம் அடைந்தவர்களை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து புதுக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் மோட்டார் சைக்கிளில் வந்தது கீழ்குளம் பகுதியை சேர்ந்த மெரீன்ராஜ் (22) மற்றும் அவரது நண்பர் வினிஸ் (24) என்பது தெரிய வந்தது.
இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வினிஸ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்