search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கடை அருகே விபத்து - 2 வாலிபர்கள் பலி
    X

    புதுக்கடை அருகே விபத்து - 2 வாலிபர்கள் பலி

    புதுக்கடை அருகே விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    தேங்காய்பட்டணம் தோப்புவீதி பகுதியை சேர்ந்தவர் சராபுதீன் (வயது 20). இவரது நண்பர் நித்திரவிளை நம்பாலி பகுதியை சேர்ந்த நசீக் (20).

    இவர்கள் 2 பேரும் இன்று அதிகாலை ஒரே மோட்டார் சைக்கிளில் புதுக்கடைக்கு சென்று கொண்டிருந்தனர். புதுக்கடை அருகே நெடுந்தட்டு பகுதியில் அவர்கள் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது சாலை ஓரத்தில் இருந்த ஒரு டிஜிட்டல் போர்டில் மோதியது. பிறகு அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதிய மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்தது.

    இந்த விபத்தில் சராபுதீன், நசீக் ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே சராபுதீன் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நசீக்கை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார். இந்த விபத்து பற்றி புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×