என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
புதுக்கடை அருகே விபத்து - 2 வாலிபர்கள் பலி
நாகர்கோவில்:
தேங்காய்பட்டணம் தோப்புவீதி பகுதியை சேர்ந்தவர் சராபுதீன் (வயது 20). இவரது நண்பர் நித்திரவிளை நம்பாலி பகுதியை சேர்ந்த நசீக் (20).
இவர்கள் 2 பேரும் இன்று அதிகாலை ஒரே மோட்டார் சைக்கிளில் புதுக்கடைக்கு சென்று கொண்டிருந்தனர். புதுக்கடை அருகே நெடுந்தட்டு பகுதியில் அவர்கள் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது சாலை ஓரத்தில் இருந்த ஒரு டிஜிட்டல் போர்டில் மோதியது. பிறகு அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதிய மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்தது.
இந்த விபத்தில் சராபுதீன், நசீக் ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே சராபுதீன் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நசீக்கை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார். இந்த விபத்து பற்றி புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்