search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mechanic suicide"

    திருச்சியில் காதல் தோல்வியால் மனமுடைந்த மெக்கானிக் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருச்சி:

    திருச்சி எடமலைப்பட்டிபுதூர் கே.ஆர்.எஸ். நகரை சேர்ந்தவர் எட்வின் சகாயராஜ். இவரது மகன் அந்தோணி (வயது 24), ஏ.சி.மெக்கானிக். இவர் சாந்தி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதற்கிடையே பெண் வீட்டில் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. மேலும் சாந்தியின் பெற்றோர் அவருக்கு வேறு ஒரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர்.

    இது குறித்து சாந்தி போனில் அந்தோணியிடம் தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த அந்தோணி தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி கடந்த 5ந் தேதி ஏ.சி. எந்திரங்களை சுத்தம் செய்ய உதவும் திராவகத்தை குடித்துள்ளார். ஆனால் எந்த மாற்றமும் இல்லாமல் 2 நாட்கள் இருந்துள்ளார். அடுத்த 2 நாட்களில் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். 

    அவர்கள் அந்தோணியை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சைகள் முடிந்து வீடு திரும்பியுள்ளார். இதற்கிடையே மீண்டும் வயிற்றுவலி ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து திருச்சி எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   
    தஞ்சை பகுதியில் மெக்கானிக் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை சேப்பனவாரி நடுக்குளம் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மகன் பிரபு (வயது 22). மெக்கானிக். இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிபட்டு வந்தார். இதில் மனமுடைந்த அவர் நேற்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். 

    இதுபற்றிய புகாரின் பேரில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இதேபோல் அம்மாபேட்டை அருகே உள்ள புதூர் கலைமகள் நகரைச் சேர்ந்தவர் தெய்வீகராஜன். இவர் நேற்று விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி தெய்வீக ராஜனின் மனைவி பாலசரஸ்வதி அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சை அருகே களிமேடு மேலத்தெருவைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் ராஜமணிகண்டன் (வயது21). இவர் தீராத வயிற்று வலியால் அவதிபட்டு வந்தார். இதில் மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

    இதுபற்றிய புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×