search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kanchipuram"

    • ஸ்ரீஸ்ருங்கி பேரர் எனும் முனிவரின் குமாரர்கள் ஹேமன் மற்றும் சுக்லன்.
    • இவர்கள் கௌதம முனிவரிடம் வேதம் பயின்று வந்தனர்.

    ஸ்ரீவரதராஜர் கோவிலில் உள்ள 'வையமாளிகை பல்லி' தரிசனம் சிறப்பானது.

    ஸ்ரீஸ்ருங்கி பேரர் எனும் முனிவரின் குமாரர்கள் ஹேமன் மற்றும் சுக்லன்.

    இவர்கள் கௌதம முனிவரிடம் வேதம் பயின்று வந்தனர்.

    தினமும் குருவின் பூஜைக்குத் தேவையான தீர்த்தம் மற்றும் ஹோம சமித்துகளை சேகரித்துத் தருவது இவர்களின் வழக்கம்.

    ஒரு நாள் குரு முன் வைத்த தீர்த்தக் குடத்தில் இருந்து இரண்டு பல்லிகள் குதித்து வெளியேறின.

    சீடர்களது கவனக்குறைவே இதற்குக் காரணம் என்று எண்ணிய கௌதமர், இருவரையும் பல்லிகளாகும்படி சபித்தார்.

    பிறகு, தவறுணர்ந்து சாப விமோசனம் வேண்டிய சீடர்களிடம், "ஒன்றுக்கு நூறாக பலன் தரும் சத்தியவிரத சேத்திரம் (காஞ்சி) சென்று ஸ்ரீ வரதராஜரை தியானித்து தவம் செய்தால் நலம் பெறலாம்!" என்றார் குரு.

    அதன்படியே, சீடர்கள் இருவரும் பல்லி ரூபத்தில் இங்கு வந்து தவம் செய்தனர்.

    பிற்காலத்தில், யானை ரூபத்தில் இருந்த இந்திரன், ஸ்ரீநரசிம்மர் அருளால் சுயரூபம் அடைந்த போது இவர்களும் சாப விமோசனம் பெற்றனர்.

    இவர்களின் கதையைக் கேட்ட இந்திரன் தங்கம்- வெள்ளியாலான இரு பல்லி ரூபங்களை இங்கு பிரதிஷ்டை செய்தான்.

    இதைத் தொட்டு வணங்கு பவர்களுக்கு சகல தோஷங்களும் பாவங்களும் நீங்கி ஐஸ்வரியங்கள் பெருகும் என்பது ஐதீகம்.

    அயோத்தி மன்னன் சகரனின் மகன் அசமஞ்சனும், அவன் மனைவியும் சாபத்தால் பல்லிகள் ஆயினர்.

    பின்னர் உபமன்யு முனிவரது அறிவுரைப்படி இங்கு வந்து ஸ்ரீவரதராஜரை தரிசித்து அருள்பெற்றனர்.

    இவர்கள் நினைவாக அமைந்ததே பல்லி ரூபங்கள் என்றும் ஒரு தகவல் உண்டு.

    • ஸ்ரீ வரதராஜர் என்ற பெயர் இங்குள்ள உற்சவரையே குறிக்கும்.
    • ஆனால், இங்கு ஸ்ரீவரதராஜ பெருமாள் உற்சவரின் இருபுறமும் ஸ்ரீ பூமாதேவியே அருள் பாலிக்கிறார்.

    ஸ்ரீ வரதராஜர் என்ற பெயர் இங்குள்ள உற்சவரையே குறிக்கும்.

    எல்லா வைணவத் திருக் கோவில்களிலும் உற்சவருக்கு இரு புறமும், முறையே ஸ்ரீதேவி- பூதேவி நாச்சியார்கள் இருப்பர்.

    ஆனால், இங்கு ஸ்ரீவரதராஜ பெருமாள் உற்சவரின் இருபுறமும் ஸ்ரீ பூமாதேவியே அருள் பாலிக்கிறார்.

    மாலிக்காபூரின் படையெடுப்பின்போது, பாதுகாப்பு கருதி இங்கிருந்த உற்சவ விக்கிரகங்கள் உடையார்பாளையம் ஜமீனுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

    போர் அபாயம் நீங்கி, மீண்டும் உற்சவர்களை எடுத்து வந்தபோது இரண்டு உபய நாச்சியார்களும் பூமி பிராட்டியாகவே அமைந்து விட்டனராம்!

    பிரம்மனின் யாகத்தில் இருந்து தோன்றியவர் என்பதால், வெப்பத்தின் காரணமாக பெருமாளின் திருமுகத்தில் வடுக்கள் ஏற்பட்டனவாம்.

    அவற்றை உற்சவரின் திருமுகத்தில் காணலாம்.

    • 'பூலோகத்தில் ஓர் ஏழையாகப் பிறக்கக் கடவது!' என்று சாபம் கொடுத்தான்.
    • ஸ்ரீவரதராஜ பெருமாள் திருக்கோவில், சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

    ஒரு முறை 'சிறந்தது இல்லறமா? துறவறமா?' என்ற தர்க்கம் எழுந்தபோது, 'துறவறமே சிறந்தது!' என்று தீர்ப்பளித்தார் பிரகஸ்பதி.

    மாற்றுக் கருத்து கொண்ட இந்திரன் கோபம் கொண்டான்.

    'பூலோகத்தில் ஓர் ஏழையாகப் பிறக்கக் கடவது!' என்று சாபம் கொடுத்தான்.

    அதன்படி பூமியில் ஏழையாகப் பிறந்து உணவுக்கு வழியில்லாமல் துன்புற்றார் பிரகஸ்பதி.

    இந்த நிலையில் ஒரு நாள் அவர் உணவருந்தும்போது நாய் ஒன்று தொல்லை தந்தது.

    அவர் அதை விரட்டினார். கோபம் கொண்ட நாய், 'நீ நாயாக பிறப்பாய்!' என்று அவரை சபித்தது.

    இதனால் மிகவும் வருந்திய பிரகஸ்பதி இறுதியில், பரத்வாஜ முனிவரின் அறிவுரைப்படி இங்கு வந்து பெருமாளை வழிபட்டு சாப விமோசனம் பெற்றாராம்.

    எனவே, இங்கு வழிபட்டால் குரு தோஷங்கள் அகலும் என்பது ஐதீகம்.

    ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில், சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

    தொண்டரடிப்பொடி வாயில் கோபுரம், ஸ்ரீகருடன் சந்நிதி வாயில் கோபுரம் உட்பட இன்னும் 4 கோபுரங்களும் உண்டு.

    புண்ணியகோடி விமானமும், புனரமைக்கப்பட்டு 27.1.1991-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    • காஞ்சிபுரம் கருட சேவையும், தேர் உற்சவமும் மிகவும் புகழ்பெற்றவையாகும்.

    இப்போது கோவில் இருக்குமிடம் ஒரு காலத்தில் (பல நூற்றாண்டுகளுக்கு முன்) அத்திமரங்கள் சூழ்ந்த மலையாக

    இருந்ததாகவும், அப்போது பிரம்மா யாகம் செய்து அந்த யாகத்திலிருந்து இவர் (ஸ்ரீ அத்தி வரதர்) வந்ததாகவும்,

    அதிலிருந்து அவரை பிரம்மா பூஜித்து வந்ததாகவும் ஒரு சில காலத்திற்குப் பின்னர் ஸ்ரீ அத்திகிரி வரதர் அர்ச்சகர்

    கனவில் வந்து தான் பிரம்மாவின் யாக குண்டத்திலிருந்து வந்ததால், தனது உடல் எப்போதும் தகிப்பதாகவும்,

    எனவே தன்னை தினந்தோறும் மூன்று வேளையும் நூற்றுக்கணக்கான குடம் நீர் கொண்டு அபிஷேகம்

    செய்யும்படியும், அவ்வாறு முடியாமல் போனால் நிரந்தரமாக புஷ்கரணியில் (குளத்து நீரில்)

    எழுந்தருளச் செய்யும்படியும் ஆணையிட்டதாகவும், அவருக்கு தினந்தோறும் மூன்று வேளையும்

    நூற்றுக்கணக்கான குடம் நீர் கொண்டு அபிஷேகம் செய்வது கஷ்டமாக இருந்ததால் அவரை குளத்தில்

    எழுந்தருளச் செய்வது என்று முடிவு செய்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

    ஆனால், அவரை குளத்தில் எழுந்தருளச் செய்துவிட்டால் மூலவருக்கு எங்கு போவது என்று அந்த அர்ச்சகர்

    கவலைப்படவே, மீண்டும் வரதர் கனவில் வந்து பக்கத்தில் சில மைல் தொலைவில் "பழைய சீவரம்' என்னும் ஊரில்

    மலைமேல் தன்னைப்போலவே ஒரு பிரதிபிம்பமாக ஒரு வரதர் இருப்பதாகவும் அவரைக் கொண்டுவந்து பிரதிஷ்டை

    செய்து பூஜித்துக் கொள்ளும்படியும், தன்னை 40 வருடங்களுக்கு ஒருமுறை வெளிக்கொண்டுவந்து

    ஒரு மண்டல காலம் வெளியில் பூஜை செய்து விடும்படியும் ஆணையிட்டதாகவும் அதன்படியே பழைய

    சீவரத்திற்குச் சென்று பார்த்தபோது அவர்கள் பெருமாள் கூறிய அதே இடத்தில் இவரைப் போலவே ஒரு

    பிரதி பிம்பமாக இருந்தவரைக் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்து (தற்போது உள்ள மூலவர்)

    இவரைத் தண்ணீருக்குள் எழுந்தருளச் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

    தற்போதும் வருடத்திற்கு ஒரு குறிப்பிட்ட தினத்தன்று காஞ்சியில் உள்ள வரதராஜப் பெருமாள் காஞ்சியிலிருந்து

    பழைய சீவரத்திற்கு பார்வேட்டை உற்சவமாக சென்று வருவது இதன் அடிப்படையில்தான் என்று கூறப்படுகிறது.

    காஞ்சிபுரம் கருட சேவையும், தேர் உற்சவமும் மிகவும் புகழ்பெற்றவையாகும்.

    இன்றும் லட்சக்கணக்கான மக்கள் வந்து இந்த சேவையை தரிசித்துச் செல்வதன் மூலம் இதனுடைய சிறப்பு நமக்குப் புலனாகிறது.

    • அதே இடத்தில் ஒரு மண்டபம் கட்டி, அதில் வைத்து பூஜித்ததாகவும் சொல்லப்படுகிறது.
    • பிற்பாடு சில காலம் கழிந்து அந்த இடத்தில் பெருமாள் இருப்பது சிலரால் கண்டுபிடிக்கப்பட்டது.

    அனந்தசரஸ் புஷ்கரணிக்குள் ஒரு மண்டபம் அமைத்து அதில் ஸ்ரீ அத்தி வரதரை எழுந்தருளியிருக்கும்படி செய்துள்ளார்கள்.

    இவரை இங்கு எழுந்தருளியிருக்கச் செய்தது பற்றி பலவாறு கூறப்பட்டு வருகிறது.

    வெள்ளைக்காரர்கள் ஆட்சிக் காலத்தில் கோவில் சிலைகள் அனைத்தையும் அவர்கள் நாட்டிற்குக் கடத்திச் சென்ற

    வேளையில், இந்த ஸ்ரீ அத்திவரதரையும் நாடு கடத்திவிடுவார்களோ என்று அச்சத்தில் அப்போது இதனை

    ஆராதித்து வந்தவர்கள் இவரை பூமிக்கடியில் பள்ளம் தோண்டி புதைத்திருந்தனர்.

    பிற்பாடு சில காலம் கழிந்து அந்த இடத்தில் பெருமாள் இருப்பது சிலரால் கண்டுபிடிக்கப்பட்டு அவரை

    அங்கேயே ஆராதித்து வந்தார்கள் என்றும் அவருக்கு அதே இடத்தில் ஒரு மண்டபம் கட்டி,

    அதில் வைத்து பூஜித்ததாகவும் சொல்லப்படுகிறது.

    அந்த மண்டபத்தைச் சுற்றிலும் பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்கியதால் அதையே ஒரு குளமாக மாற்றி

    நிரந்தரமாக தண்ணீருக்குள்ளேயே அவரை வைத்துவிட்டதாகவும், 40 வருடத்திற்கு ஒருமுறை அவரை வெளியே எடுத்து

    ஒரு மண்டல காலத்திற்கு அவரை பூஜித்ததாகவும், பின்னர் அதற்குள் அவரை வைத்துவிட்டதாகவும் ஒரு சிலரால் கூறப்பட்டு வருகிறது.

    • இக்குளத்தில் நீர் எப்போதும் வற்றுவதில்லை.
    • அதனால் பெருமாள் யார் கண்ணுக்கும் புலப்படமாட்டார்.

    இக்கோவிலின் மிகச்சிறப்பாக போற்றப்படுவது ஆதி அத்தி வரதர்.

    வரதராஜ பெருமாள் ஆலயத்தின் உள்ளே இருக்கும் அனந்தசரஸ் புனித குளத்தின் அடியில் வீற்றிருக்கும் அத்திவரதர் பெருமாளை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும்.

    ஏனெனில் அவர் பக்தர்களின் கண்ணுக்குப் புலப்படாது வீற்றிருப்பது அனந்தசரஸ் திருக்குளத்தின் அடியில்.

    இக்கோவிலின் நூறுகால் மண்டபத்தின் அருகில் நீருக்கு அடியில் உள்ள நான்கு கால் மண்டபத்தில் தன்னை மறைத்துக்கொண்டு பக்தர்களின் எண்ணத்தோடு அருள்பாலித்து வருகிறார்.

    இக்குளத்தில் நீர் எப்போதும் வற்றுவதில்லை.

    அதனால் பெருமாள் யார் கண்ணுக்கும் புலப்படமாட்டார்.

    பெருமாளின் திருமேனி மிகப்பெரிய அத்தி மரத்தால் வடிவமைக்கப்பட்டு, பிரம்மதேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    அனந்தசரஸ் திருக்குளத்தில் மூழ்கியிருக்கும் பெருமாள் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேலே வந்து 24 நாட்களுக்கு சயன மற்றும் 24 நாட்களுக்கு நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலிப்பார்.

    பேரருளாளன் அத்தி வரதரை வசந்த மண்டபத்தில் 48 நாள்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு வைப்பர்.

    தரிசனம் தந்தபின், மீண்டும் அனந்த தீர்த்தத்தில் பெருமாள் சயனிக்கச் சென்று விடுவார்.

    • இவர் 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கி காட்சியளிக்கின்றார்.
    • பெருமாளை தரிசித்த பிறகு, பிரகாரத்தில் உள்ள தங்கப்பல்லியை தரிசிக்கும் வழக்கம் உள்ளது.

    திருக்குளத்தின் கிழக்குத்திசையில் சக்கரத்தாழ்வார் என பேசப்படுகின்ற சுதர்சன ஆழ்வார் சந்நிதி அமைந்துள்ளது.

    தமிழகத்தில் எங்கும் காணமுடியாத மிகப்பெரிய அளவில் சுதர்சன ஆழ்வார் திருமேனி காட்சி தருகின்றது.

    இவர் 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கி காட்சியளிக்கின்றார்.

    பெருமாளை தரிசித்த பிறகு, பிரகாரத்தில் உள்ள தங்கப்பல்லியை தரிசிக்கும் வழக்கம் உள்ளது.

    முனி குமாரர்கள் இருவர் முனிவரின் சாபத்தினால் பல்லிகளாகி இந்தத் தலத்துக்கு வந்து தவம் செய்து சாபவிமோசனம் பெற்றதாக ஒரு வரலாறு உண்டு.

    அவர்களின் நினைவாக இந்திரன் தங்கத்தால் ஆன பல்லி ஒன்றையும், வெள்ளியால் ஆன பல்லி ஒன்றையும் இங்கே ஸ்தாபித்தான். ஆயினும் இப்போது தங்கப்பல்லி மட்டும்தான் உள்ளது.

    இதைத் தொட்டு வணங்கினால் எல்லா தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

    நம் தலைக்கு மேலே, உயரத்தில் நிறுவப்பட்டுள்ள சுமார் 3 அடி நீளம் உள்ள தங்கப்பல்லியை, படிகளில் ஏறிக் கையால் அதன் உடல் முழுவதும் தொட்டு வணங்கும் பழக்கம் உள்ளது.

    இதனால் வடமாநிலத்தவர்கள் இத்தலத்தை பல்லி கோவில் என்றே அழைக்கிறார்கள்.

    • மூலவர் வரதர் மேற்கு பார்த்தவாறு திருநின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
    • பிரம்மா தன் மனம் பரிசுத்தமாவதற்கு காஞ்சியில் யாகம் செய்தார்.

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆலயம் காஞ்சியின் தெற்கே, நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.

    மூலவர் வரதர் மேற்கு பார்த்தவாறு திருநின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    தாயார் பெருந்தேவியார் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

    திருவேங்கடம் என்றால் திருமலையையும், பெருமாள் கோவில் என்றால் அது காஞ்சிபுரத்தையும் குறிக்கும் அளவுக்கு இக்கோவில் சிறப்பு வாய்ந்தது.

    ஐராவதம் யானையே மலைவடிவம் கொண்டு நாராயணனைத் தாங்கி நின்றமையால் இத்தலம் அத்திகிரி என்றும் அழைக்கப்படுகிறது.

    பிரம்மா தன் மனம் பரிசுத்தமாவதற்கு காஞ்சியில் யாகம் செய்தார்.

    அவ்வமயம் அவருடைய பத்தினியாகிய சரஸ்வதியை விடுத்து மற்ற இரு மனைவியராகிய சாவித்திரி, காயத்திரி ஆகியோருடன் இருந்து யாகம் செய்யத் தொடங்கினர்.

    அதனை அறிந்த சரஸ்வதி மிகவும் கோபம் கொண்டு வேகவதி என்ற ஆறாய் வந்து யாகத்தை அழிக்க முயற்சி செய்தாள்.

    பிரம்மாவின் வேண்டுகோளின்படி மகாவிஷ்ணு யதோத்தகாரியாக வந்து பிறந்த மேனியாக குறுக்கே சயனித்துக் கொண்டார்.

    பிரம்மாவின் யாகம் பூர்த்தியான உடனே யாக குண்டத்திலிருந்து புண்ணியகோடி விமானத்துடன் பெருமாள் தோன்றினார்.

    பின்பு, பிரம்மா அத்திமரத்தில் ஒரு சிலை வடித்து இங்கே பிரதிஷ்டை செய்தார்.

    வேண்டும் வரம் தருபவர் என்பதால் இவர், "வரதராஜர்' எனப் பெயர் பெற்றார்.

    வரதராஜபெருமாளின் தேவிக்கு பெருந்தேவி என்றுபெயர்.

    24 நான்கு படிகள் ஏறி அத்திகிரியை அடைய வேண்டும்.

    • காஞ்சிபுரம் நாற்திணைகளும் ஒருங்கே அமையப் பெற்ற நிலப்பரப்பாகும்.
    • காஞ்சியைச் சுற்றியுள்ள மலைத்தொடர்களும், குன்றுகளும் குறிஞ்சித் திணைக்கு உட்பட்டதாகும்.

    வேகவதி, பாலாறு, செய்யாறு ஆகிய ஆறுகள் ஓடுகின்ற காஞ்சியில் பண்டைய காலத்திலிருந்தே வைணவம் தழைத்து வளர்ந்துள்ளது.

    திருமால் உறைவிடங்களாக தமிழ் நிலத்தின் நாற்திணைகளிலும் வைணவக்கடவுள் வழிபாடு சிறப்புற்றிருந்தது என்பதைக் காண்கிறோம்.

    காஞ்சிபுரம் நாற்திணைகளும் ஒருங்கே அமையப் பெற்ற நிலப்பரப்பாகும்.

    காஞ்சியைச் சுற்றியுள்ள மலைத்தொடர்களும், குன்றுகளும் குறிஞ்சித் திணைக்கு உட்பட்டதாகும்.

    இப்பகுதி முழுவதும் காடு சூழ்ந்த முல்லைப் பகுதியாகவும், மூன்று ஆறுகள் ஓடுகின்ற செழித்த வேளாண் பூமியாக

    மருதத்திணையாகவும், கடல் மல்லை போன்ற கடற்கரைப் பட்டினம் கொண்ட நெய்தல் நிலமாகவும், காஞ்சீபுரம்

    அன்றிலிருந்து இன்று வரை விளங்குகிறது.

    இத்தகு புவியியல் அமைப்பு சார்ந்த இந்நிலப்பரப்பில் தமிழ் மரபின் நாற்திணைக்கும் தலைவனாக திருமால் விளங்கியுள்ளமையும் அறிய முடிகிறது.

    பக்தி இயக்கக்காலத்தில் வைணவம் காஞ்சியில் பொது சமயமாக தொழிலாளர், பழங்குடியினர், விலக்கப்பட்டோர் ஆகியோரையும் அரவணைத்துச் செல்லும் அருள் நெறியாக தழைத்திருந்தது என்றால் அது மிகையில்லை.

    திருமாலின் 108 திவ்விய தேங்களில் பெருமாள் கோவில் என அழைக்கப்பட்ட திருத்தலம் அமைந்ததால் தனிச் சிறப்புப் பெற்ற ஊர் காஞ்சியாகும்.

    • காஞ்சி வைணவ சமயத்தின் இருக்கையாகும் கச்சி அட்டபுயகரம் புகழ் மிக்கது.
    • சோழர்கள் காஞ்சியைத் தமது வடபுலத் தலைநகராகக் கொண்டிருந்தனர்.

    கரிகாலன் இமயமலையில் புலிச்சின்னத்தைப் பொறிக்க வடதிசை சென்ற போது இந்நகரின் வளமையைக் கேட்டு,

    நான்கு காலங்கள் சதுரத்திற்குக் காஞ்சி மாநகருக்கு குன்று போல் மதில் அமைத்து, குடி அமர்த்தினான் என்பார் சேக்கிழார்.

    இந்த வரலாற்றுச் செய்தியைச் சோழர் செப்பேடுகளும் கூறுகின்றன.

    கி.பி. 300 முதல் கி.பி. 900 வரை பல்லவர், 900 முதல் 1300 வரை சோழப் பேரரசர் ஆளுகையின் கீழ் இவ்வூர் இருந்தது.

    கோதாவரி ஆறு வரையும் அதற்கப்பாலும் பரந்த அவர்கள் ஆட்சிப் பகுதியில் வடபகுதிக்கு அது துணைத் தலைநகராய் இவ்வூர் அமைந்திருந்தது.

    அக்காலக் காஞ்சியில் யோக முனிவர்களும், யோகினிகளும் போற்றும் யோகபீடம் இருந்தது என்பர் சேக்கிழார்.

    அங்கு உருத்திரசோலை, தவசிகள் தொட்டால் யாவற்றையும் பொன்னாக மாற்றும் சிலை. அந்தணர் இருக்கை

    , அரசர் குலப்பெருந்தெருக்கள், ஆயுதங்கள் பயிலும் இடங்கள், யானை, குதிரை ஏற்றம் பயிலிடங்கள்,

    வணிகர் வாழ் மாநகர்கள், வேளாண் குடிப் பெருஞ்செல்வர் வாழ் இடங்கள் அனுஸோமர்,

    பிரதிலோமர் ஆகிய குடி மக்கள் தொழில் புரிந்து வாழும் பகுதிகள் தனித்தனியாக இருந்த குறிப்புகள் உள்ளன.

    சோழர்கள் காஞ்சியைத் தமது வடபுலத் தலைநகராகக் கொண்டிருந்தனர்.

    காஞ்சிபுரத்தில் அசோகன் எடுத்த பௌத்த ஸ்தூபம் ஒன்று இருந்தது.

    அது சுமார் 100 அடி உயரத்திற்கு மேல் இருந்தது.

    நூற்றுக்கும் மேற்பட்ட பௌத்தப் பள்ளிகள் இருந்தன.

    இவற்றில் பவுத்த சமயத்தில் தீவிரப்பிரிவைச் சார்ந்த ஆயிரக்கணக்கான பிக்குகள் வசித்தார்கள் என்று ஹூவான் 'சுவாங்' குறிப்பிடுகிறார்.

    கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் இங்கு பவுத்தமும் சிறந்திருந்தது. இங்கு வசுந்தரா என்னும் பெயர் பெற்ற தாராதேவிக்கு ஒரு கோவில் இருந்தது.

    காஞ்சி வைணவ சமயத்தின் இருக்கையாகும் கச்சி அட்டபுயகரம் புகழ் மிக்கது.

    அலகளந்த பெருமாள் கோவில், பரமேச்சுர விண்ணகரம் என்னும் வைகுந்த பெருமாள் கோவில், பச்சைவண்ணன் கோவில் முதலிய கோவிந்தன் கோவில்கள் புகழ் மிக்கவை.

    அருளாளப் பெருமாள் கோவில் என்னும் வரதராசர் கோவில் வைணவப் பெரியார் ராமானுஜரின் வாழ்க்கையில் முக்கிய இடம் பெற்றது.

    தொண்டை மண்டலத்துக்கே சிறந்த தலைவராகக் காஞ்சிமாநகர், 18-ஆம் நூற்றாண்டு வரை சீரும் சிறப்புமாகத் திகழ்ந்தது.

    • பெருமாள் `தாமோதரன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
    • நாபிக்கமலத்திற்குக் கீழே நீண்ட தழும்புடன் பெருமாள் காட்சி தருவது அபூர்வம்.

    மாலவனின் திருநாமங்கள் ஆயிரம். அந்த ஆயிரம் திருநாமங்களில் பன்னிரு திருநாமங்களான கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதனன், திருவிக்ரமன், வாமணன், ஸ்ரீதரன், ரிஷிகேசன், பத்மநாபன், தாமோதரன் முதலானவை மிகவும் புகழ் பெற்றவை. இங்கே நாம் பார்க்க இருப்பது, தாமோதரன் என்ற திருநாமத்துடன் பெருமாள் வீற்றிருக்கும் ஒரு ஆலயத்தைத்தான்.

    பக்தர்களிடம் என்றென்றும் நீங்காத அன்புடையவர், பக்தர்களால் எப்போதும் தேடப்படுபவர், தாய் யசோதையால் கயிற்றினால் கட்டப்பட்ட காரணத்தினால் வயிற்றில் தழும்பினை ஏற்றுக்கொண்டவர், தாமோதரன். சமஸ்கிருதத்தில் `தாமா' என்றால் `கயிறு', `உதாரம்' என்றால் `வயிறு' என்று பொருள்படும். இதனாலேயே பெருமாள் `தாமோதரன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    காஞ்சிபுரத்திற்கு அருகில் புகழ்பெற்ற தாமல் என்ற கிராமத்தில் அமைந்துள்ள தலம், திருமாலழகி உடனாய தாமோதரப் பெருமாள் திருக்கோவில். இத்திருத்தலத்தில் நாபிக்கமலத்திற்குக் கீழே நீண்ட தழும்புடன் பெருமாள் காட்சி தருவது எங்கும் காணப்படாத அபூர்வ காட்சியாகும்.

    சுமார் ஆயிரம் ஆண்டு களுக்கு முன் இத்திருக்கோவில், மத்வ சமூகத்தைச் சேர்ந்தவர் களால் ஆராதனை செய்யப்பட்டு வந்தது. காலப்போக்கில் வைணவர்களுக்கு தானமாக இந்த கோவில் வழங்கப்பட்டதால் 'தானமல்லபுரம்' என்று அழைக்கப்பட்டுள்ளது.

    பின்னர் மருவி இவ்வூர் 'தாமல்' என்றானதாக தெரிகிறது. கி.பி. 556-ம் ஆண்டு பல்லவர் செப்பேடுகளில் தாமல் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. தாமலில் பிறந்த பல்கண்ணன் எனும் புலவர், பாண்டியன் அறிவுடைநம்பியின் அவையில் வீற்றிருந்தவர். இவரை தாமப் பல்கண்ணனார் என்று அழைப்பர். இவருக்கு கொடையாக அளிக்கப்பட்ட ஊர் என்பதால் 'தானமல்லம்' என்று அழைக்கப்பட்டு, பின் மருவி 'தாமல்' என்று ஆகியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

    வெண்ணெய் திருடும் குழந்தை கண்ணன் மீது, அக்கம் பக்கத்தவர்கள் யசோதையிடம் குறை சொல்லிக் கொண்டே இருந்தார்களாம். யசோதாதேவி கண்ணனின் விஷமத்தைக் பொறுக்க முடியாமல், ஒரு கயிற்றைக் கொண்டு உரலுடன் சேர்த்துக் கட்டிவிட்டாள். அன்பிற்குக் கட்டுப்பட்டு கண்டுண்ட கண்ணன், உரலுடன் இரண்டு மரங்களுக்கு இடையில் புகுந்து இரு தேவர்களுக்கு சாப விமோசனம் அளித்தருளினான். இதைக்கண்டு அனைவரும் வியந்து போனார்கள். கண்ணனின் வயிற்றில் கயிறு பதிந்து, அது வடுவாக மாறியது.

    வயிற்றில் பதிந்த வடுவின் காரணமாக அவருக்கு 'தாமோதரன்' என்ற திருப்பெயர் உண்டானது. கண்ணனின் இந்த லீலைகளில் மனதைப் பறிகொடுத்த மகரிஷிகள் சிலர், பெருமாளிடம் "இதே திருப்பெயருடன் இத்தலத்தில் எழுந்தருளி மக்களைக் காத்தருள வேண்டும்" என்று பிரார்த்தித்துக் கொண்டனர். அதை ஏற்றுக்கொண்ட பெருமாள், மகாலட்சுமித் தாயாருடன் தாமல் திருத்தலத்தில் தாமோதரன் என்ற திருநாமம் கொண்டு எழுந்தருளினார். இத்தலத்துப் பெருமாள் கேட்டதைக் கொடுக்கும் தாமோதரனாகவும், கேட்டதைக் கொடுக்கும் திருமாலழகியாக தாயாரும் எழுந்தருளி பக்தர்களின் பிரார்த்தனை களைப் பூர்த்தி செய்து வருகிறார்கள்.

    ராஜகோபுரமின்றி சுற்றுச் சுவர்களுடன் காட்சி தரும் இக் கோவிலின் நுழைவாசல் பகுதியில், இரண்டு கருடாழ்வார்கள் சுதைச் சிற்பமாக வீற்றிருக்கிறார்கள். மூலவர் தாமோதரப் பெருமாள் கருவறையில் உபய நாச்சியார்களோடு அழகு மிளிரக் காட்சி தந்து அருள்வதைக் காணக் கண்கோடி வேண்டும். இத்திருத் தலத்தில் தாமோதரன் நான்கு திருக்கரங்களோடு நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கிறார். நான்கு திருக்கரங்களும் முறையே சங்கு, சக்கரம் ஏந்தியும், வரத, ஊரு ஹஸ்த முத்திரைகளுடனும் காணப்படுகின்றன.

     ஆலயத்தின் அர்த்த மண்டபத்தில் அமைந்துள்ள தேவியர்களுடன் உற்சவர் வீற்றிருக்கிறார். ஸ்ரீதேவி- பூதேவி உடனாய தாமோதரப் பெருமாள் என்பது இவரது பெயர். திருமாலழகி என்ற அழகிய திருநாமத்தோடு, தனிச் சன்னிதியில் அமர்ந்த கோலத்தில் தாயார் காட்சியளிக்கிறார்.

    இந்த தாயாருக்கு நான்கு கரங்கள் உள்ளன. இவரது உற்சவத் திருமேனியின் திருநாமமும் திருமாலழகி என் பதுதான். மற்றொரு தனிச் சன்னிதியில் ஆண்டாள் காட்சி தருகிறார். இச்சன்னிதியில் ஆண்டாளின் உற்சவர் திருமேனியும் இருக்கிறது. முன் மண்டபத்தில் விஷ்வக்சேனர், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருப்பாணாழ்வார், குமுதவல்லி, திருமங்கையாழ்வார், திருக்கச்சி நம்பி, ராமானுஜர், வேதாந்த தேசிகர் முதலான ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியார்களின் சிலை வடிவங்கள் காணப்படுகின்றன. ஆஞ்சநேயர் ஒரு சிறிய சன்னிதியில் எழுந்தருளியுள்ளார்.

    பொதுவாக பெருமாள் நெற்றியில் திருமண், ஸ்ரீசூர்ணத்துடன் காட்சியளிப்பது வழக்கம். ஆனால் இத்தலத்தில் மூலவர் தாமோதரப் பெருமாள், ரோகிணி நட்சத்திரம் அன்று நெற்றியில் கஸ்தூரி திலகத்துடன் ராஜ அலங்காரத்தில் அருள்கிறார். மத்வர்களுக்கு மதிப்பு தரும் வகையில் இத்தல உற்சவர் தினமும் கஸ்தூரித் திலகத்துடன் காட்சி தருகிறார். வைகானஸ ஆகம விதிப்படி இத்தலத்தில் வழிபாடுகள் நடைபெறுகின்றன. இத்தலத்தின் தீர்த்தம் விபுல ஸரஸ் என்பதாகும். தல விருட்சமாக வில்வம் மற்றும் புன்னை மரங்கள் உள்ளன.

    இத்தலத்து மூலவரின் கால்களில் வெள்ளிக் கொலுசுகள் மின்னுகின்றன. குழந்தைச் செல்வம் வேண்டுபவர்கள் இத்தலத்திற்கு வந்து தாமோதரப் பெருமாளை வணங்கி, குழந்தைச் செல்வம் தந்தருளுமாறு வேண்டிக்கொள்கிறார்கள். தாமோதரப் பெருமாளின் திருவருளால் மழலைச் செல்வம் வாய்க்கப் பெற்ற பின்னர், இத்தலத்திற்கு வந்து பெருமாளுக்கு வெள்ளிக்கொலுசை சமர்ப்பித்து வணங்கி மகிழ்கிறார்கள்.

    இவ்வாலயத்தில் சித்திரையில் மகாசாந்தி ஹோமம் மற்றும் கோடை உற்சவம், வைகாசி மாதத்தில் வஸந்த உற்சவம், ஆனி மாதத்தில் தாமோதரப் பெருமாள் லட்சார்ச்சனை, கருட சேவை, அன்னக்கூட திருப்பாவாடை உற்சவம், ஆடியில் தாயாருக்கு திருவிளக்கு பூஜை, ஆவணியில் பவித்ரோத்சவம், புரட்டாசி மாதம் முழுவதும் திருப்பதி ஸ்ரீனிவாச திருக்கோலத்தில் பெருமாள் சேவை சாதித்தல், கார்த்திகையில் ஆஞ்சநேயர் லட்சார்ச்சனை, மார்கழியில் ஆண்டாள் போகி உற்சவம், மாசியில் மாசி மகம், பங்குனியில் பங்குனி உத்திரத் திருக்கல்யாண உற்சவம் முதலான விழாக்கள் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.

    இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை, பக்தர்களின் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    சென்னையில் இருந்து வேலூா் செல்லும் நெடுஞ்சாலையிலும், காஞ்சிபுரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் தாமல் கிராமம் உள்ளது. திருப்புட்குழி என்ற இடத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஆலயத்தை அடையலாம்.

    • தடுப்பு கட்டைகள் உடைந்து விழுந்ததில் அருகே நின்றிருந்த இருசக்கர வாகனங்கள் நசுங்கியது.
    • சரக்கு ரெயில் விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இருந்து காயில் ஏற்றி வந்த சரக்கு ரெயில் காஞ்சிபுரம் பழைய ரெயில் நிலைத்தில் விபத்தில் சிக்கியது. தண்டவாளத்தில் இருந்த தடுப்புகளை உடைத்து கொண்டு அருகில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதியது.

    வாகனங்கள் மீது ரெயில் மோதியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில், ரெயில் தண்டவாளத்தில் இருந்து வெளியேறி சாலைக்கு வந்து நின்றது. சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்தில் சிக்கிய சம்பவம் குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    ×