search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறிஞ்சி"

    • காஞ்சிபுரம் நாற்திணைகளும் ஒருங்கே அமையப் பெற்ற நிலப்பரப்பாகும்.
    • காஞ்சியைச் சுற்றியுள்ள மலைத்தொடர்களும், குன்றுகளும் குறிஞ்சித் திணைக்கு உட்பட்டதாகும்.

    வேகவதி, பாலாறு, செய்யாறு ஆகிய ஆறுகள் ஓடுகின்ற காஞ்சியில் பண்டைய காலத்திலிருந்தே வைணவம் தழைத்து வளர்ந்துள்ளது.

    திருமால் உறைவிடங்களாக தமிழ் நிலத்தின் நாற்திணைகளிலும் வைணவக்கடவுள் வழிபாடு சிறப்புற்றிருந்தது என்பதைக் காண்கிறோம்.

    காஞ்சிபுரம் நாற்திணைகளும் ஒருங்கே அமையப் பெற்ற நிலப்பரப்பாகும்.

    காஞ்சியைச் சுற்றியுள்ள மலைத்தொடர்களும், குன்றுகளும் குறிஞ்சித் திணைக்கு உட்பட்டதாகும்.

    இப்பகுதி முழுவதும் காடு சூழ்ந்த முல்லைப் பகுதியாகவும், மூன்று ஆறுகள் ஓடுகின்ற செழித்த வேளாண் பூமியாக

    மருதத்திணையாகவும், கடல் மல்லை போன்ற கடற்கரைப் பட்டினம் கொண்ட நெய்தல் நிலமாகவும், காஞ்சீபுரம்

    அன்றிலிருந்து இன்று வரை விளங்குகிறது.

    இத்தகு புவியியல் அமைப்பு சார்ந்த இந்நிலப்பரப்பில் தமிழ் மரபின் நாற்திணைக்கும் தலைவனாக திருமால் விளங்கியுள்ளமையும் அறிய முடிகிறது.

    பக்தி இயக்கக்காலத்தில் வைணவம் காஞ்சியில் பொது சமயமாக தொழிலாளர், பழங்குடியினர், விலக்கப்பட்டோர் ஆகியோரையும் அரவணைத்துச் செல்லும் அருள் நெறியாக தழைத்திருந்தது என்றால் அது மிகையில்லை.

    திருமாலின் 108 திவ்விய தேங்களில் பெருமாள் கோவில் என அழைக்கப்பட்ட திருத்தலம் அமைந்ததால் தனிச் சிறப்புப் பெற்ற ஊர் காஞ்சியாகும்.

    ×