என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Jasmine"
- கடந்த வாரங்களில் அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் வந்ததால் பூக்களின் தேவை அதிகரித்து இருந்தது. இந்த நிலையில் தற்போது முகூர்த்த தினங்கள், திருவிழா இல்லாததால் பூக்களின் தேவை குறைந்துள்ளது.
- இன்று சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட் விலை நிலவரம் (1 கிலோ கணக்கில்) ரூ.2400, ரூ.2600, ரூ.2800 என்ற விலையில் விற்கப்பட்டது.
அன்னதானப்பட்டி:
சேலம் பழைய பஸ் நிலையத்தில் வ.உ.சி. பூ மார்க்கெட் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுக்கு பனமரத்துப்பட்டி, கம்மாளப்பட்டி, ஜல்லூத்துப்பட்டி, ஓமலூர்,
காடையாம்பட்டி, தீவட்டிப்பட்டி, கன்னங்கு றிச்சி, வாழப்பாடி,பேளூர், வீராணம், டி.பெருமா பாளையம் உள்ளிட்ட சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
பெங்களூரு, சென்னை, கோவை மற்றும் தமிழகத்தின் பல்வேறு நகரங்கள் மற்றும் மாவட்டங்களுக்கும் இங்கிருந்து பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. திருமண முகூர்த்த தினங்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பூக்களின் விலை அதிக ரிப்பது வழக்கம். கடந்த வாரங்களில் அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் வந்ததால் பூக்களின் தேவை அதிகரித்து இருந்தது. இந்த நிலையில் தற்போது முகூர்த்த தினங்கள், திருவிழா இல்லாததால் பூக்களின் தேவை குறைந்துள்ளது.இன்று சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட் விலை நிலவரம் (1 கிலோ கணக்கில்) வருமாறு:-
குண்டுமல்லிகை-ரூ.1400, முல்லை- ரூ. 800, ஜாதிமல்லிகை-ரூ.400, காக்கட்டான்ரூ-.320, கலர் காக்கட்டான்- ரூ.280, மலைக்காக்கட்டான்-ரூ.280, அரளி-ரூ. 280, வெள்ளை அரளி-ரூ.280,
மஞ்சள் அரளி- ரூ.280, செவ்வ ரளி-ரூ. 320, ஐ.செவ்வரளி-ரூ.320, நந்தியாவட்டம்- ரூ.280, சி.நந்திவட்டம்-ரூ.280, சம்மங்கி -ரூ.50, சாதா சம்மங்கி-ரூ.50 என்கிற விலையில் விற்கப்பட்டு வருகிறது. கடந்த வாரங்களில் முகூர்த்த தினங்கள், பண்டிகை நாட்கள் சீசன் காரணமாக குண்டு மல்லிகை ஒரு கிலோ ரூ.2400, ரூ.2600, ரூ.2800 என்ற விலையில் விற்கப்பட்டது. ஆனால் தற்போது சீசன் இல்லாததால் பூக்களின் விலை சரிபாதி யாக சரிந்துள்ளது. வரும்
நாட்களில் முகூர்த்த
தினங்கள் மற்றும் பண்டிகை நாட்கள் வரும் போது மீண்டும் பூக்கள் விற்பனை சூடுபிடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
- தீபாவளி பண்டிகையையொட்டி மதுரையில் மல்லிகை பூக்கள் ரூ.1,200-க்கு விற்பனை ஆட்டிறைச்சி விலை ரூ.ஆயிரத்தை தொட்டது
- பிற்பகலில் இருந்தே ஆட்டிறைச்சி விற்பனை களைகட்டியது
மதுரை
நாடு முழுவதும் உற்சாகத்துடன் தீபாவளி பண்டிகை நாளை (திங்கள் கிழமை) கொண்டாடப்படுகிறது. மதுரையிலும் வழக்கமான உற்சாகத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் முன்னேற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
மார்க்கெட்கள் மற்றும் பஜார் கடைகளில் தேவையான பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. மாசி வீதிகள், காமராஜர் சாலை, நேதாஜி ரோடு, பெரியார் பஸ் நிலையப் பகுதி, பைபாஸ் ரோடு, சிம்மக்கல், யானைக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
சாலையோர கடைகளும் அதிகரித்துள்ளதால் பொருட்களை வியாபாரிகளும் போட்டி போட்டு குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் மதுரையில் தீபாவளி வியாபாரம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
மல்லிகை ரூ.1200
மதுரை பூ மார்க்கெட்டில் இன்று ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1200 -க்கு விற்கப்பட்டது.முல்லை ரூ.1200-க்கும், பிச்சி ரூ.1000-க்கும், கனகாம்பரம் ரூ.1500-க்கும், அரளி, சம்பங்கி 150-க்கும், மரிக்கொழுந்து ரூ.100-க்கும் , தாமரைப்பூ ரூ.10-க்கும் விற்பனையாகி வருகிறது.
பூ மார்க்கெட்டில் இன்று ஏராளமானோர் திரண்டு ஆர்வமாக வாங்கி வருவதால் பூக்களின் விலை மாலையில் சற்று அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஆட்டிறைச்சி ரூ.1000
மதுரையில் தீபாவளி பண்டிகையொட்டி அசைவ பிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆங்காங்கே இறைச்சி கடைகள் போடப்பட்டுள்ளன. இன்று பிற்பகலில் இருந்தே ஆட்டிறைச்சி விற்பனை களைகட்டியது.
சாலை ஓரம் மற்றும் இறைச்சி கடைகளில் சுமார் 5 ஆயிரம் ஆடுகள் தீபாவளி பண்டிகைக்காக வெட்டப்படுகின்றன.
சில நாட்களுக்கு முன்பு வரை கிலோ ரூ.800 முதல் ரூ.900 வரை விற்கப்பட்ட ஆட்டிறைச்சி தீபாவளியையொட்டி ரூ. ஆயிரமாக அதிகரித்தது.
ஆடுகளின் விலை ஏற்றம் காரணமாக இறைச்சி விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
பட்டாசு கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. விதவிதமான பட்டாசுகள் இந்த ஆண்டு விற்பனைக்கு வந்துள்ளதால் குடும்பத்துடன் வந்து பொதுமக்கள் பட்டாசுகளை வாங்கி சென்றனர்.
- தஞ்சை பூக்கார தெருவில் பூச்சந்தை அமைந்துள்ள ஏராளமான கடைகள் உள்ளன.
- நேற்று மல்லிகைப்பூ கிலோ ரூ.1000-க்கு விற்கப்பட்டது. இன்று இரண்டு மடங்காக விலை உயர்ந்து கிலோ ரூ.2000-க்கு விற்பனையாகியது.
தஞ்சாவூர்:
தஞ்சை பூக்கார தெருவில் பூச்சந்தை அமைந்துள்ளது. இங்கு ஏராளமான கடைகள் உள்ளன.
திண்டுக்கல், ஓசூர், நிலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து தினமும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.
இதே போல் இங்கிருந்து வெளி மாவட்டங்களுக்கும் பூக்கள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும்.
பண்டிகை காலங்கள், சுபமுகூர்த்த நாட்களில் பூக்களின் விலை கணிசமாக அதிகரிக்கும்.
இதேபோல் வரத்து குறைவாக இருந்தாலும் விலை அதிகரிக்கும்.
இந்த நிலையில் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தீபாவளிக்கு பூக்களின் தேவை அதிகம் என்பதால் அதன் விலையும் கிடுகிடுவென அதிகரித்து உள்ளது.
அதன்படி நேற்று மல்லிகைப்பூ கிலோ ரூ.1000-க்கு விற்கப்பட்டது.
இன்று இரண்டு மடங்காக விலை உயர்ந்து கிலோ ரூ.2000-க்கு விற்பனையாகியது.
இதேப்போல் முல்லைப் பூ விலையும் இரண்டு மடங்கு உயர்ந்து கிலோ ரூ.2000-க்கு விற்கப்பட்டது.
இதேபோல் கனகாம்பரம் ரூ.1500, செவ்வந்தி ரூ.200, அரளி ரூ.300, ஆப்பிள் ரோஸ் ரூ.200-க்கும் விற்பனையாகின.
இது குறித்து பூ வியாபாரி சந்திரசேகரன் கூறும்போது:-
தீபாவளி பண்டிகை என்பதால் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. பொதுமக்களும் ஆர்வத்துடன் பூக்கள் வாங்கி செல்கின்றனர் என்றார்.
- சத்தியமங்கலம் மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து அதிகரித்தது. ஆனால் பூக்களை கொள்முதல் செய்ய வியாபாரிகள் பலர் வரவில்லை.
- இதனால் தற்போது 1 கிலோ மல்லிகை ப்பூ ரூ.300-க்கு விற்பனை யானது.
சத்தயமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமஙகலம், சிக்கரசம் பட்டி உள்பட சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் பரப்பளவில் மல்லிகைப்பூ, முல்லைப்பூ உள்பட பல்வேறு பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இந்த பகுதிகளில் இருந்து பூக்களை பறித்து சத்திய மங்கலத்தில் செயல்படும் பூ மார்க் கெட்டுக்கு விற்ப னைக்கு கொண்டு வரப்படு கிறது. வியாபாரிகள் கொள்முதல் செய்து ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதி களுக்கு அனுப்பி வைக்கின்ற னர்.
மேலும் கேரளா, ஆந்திரா என வெளி மாநில வியாபாரிகள் வந்து பூக்க ளை மொத்தமாக கொள் முதல் செய்து வருகிறார்கள். இதனால் பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்களில் தேவை அதிகரித்து பூக்களின் விலையும் அதிகமாக இருக்கும்.
அதே போல் கடந்த மாதம் ஓணம் பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்கள் தொடர்ந்து வந்ததது.இதை யொட்டி கேரளா மாநிலத்து க்கு அதிகளவு பூக்கள் ஏற்று மதி செய்யப்பட்டது. தேவை அதிகரிப்பால் கடந்த மாதம் மல்லிகை ப்பூ கிலோ ரூ.4 ஆயிரத்துக்கு மேல் விற்ப னை செய்யப்பட்டது.
இந்த நிலையில் சத்தியமங்கலம் பகுதியில் பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்கள் இல்லாத தால் பூக்களின் தேவை தொடர்ந்து குறைந்து வரு கிறது.
தற்போது வெப்ப கால நிலை நிலவுவதால் பூக்கள் உற்பத்தி 3 டன்னில் இருந்து 5 டன்னாக அதி கரித்தது. இதனால் தேவை யை விட உற்பத்தி அதிகமாக உள்ளதால் விலையும் படிப்படியாக குறைந்து வரு கிறது.
கடந்த மாதம் ரூ.4 ஆயிரத்துக்கு மேல் மல்லி கைப்பூ விற்பனை செய்ய ப்பட்டது. அது படிப்படியாக குறைந்து கடந்த சில நாட்களாக மல்லிகைப்பூ ரூ.600-க்கு விற்பனையா னது.
இந்த நிலையில் சத்தியமங்கலம் மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து அதிகரித்தது. ஆனால் பூக்களை கொள் முதல் செய்ய வியாபாரிகள் பலர் வரவில்லை. இதனால் தற்போது 1 கிலோ மல்லிகை ப்பூ ரூ.300-க்கு விற்பனை யானது. இதே போல் ரூ.300-க்கு விற்பனை செய்யபப்ட்ட முல்லைப்பூ ரூ.100 ஆக குறைந்தது. ேமலும் மற்ற பூக்களின் விலையும் குறைந்தது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
- சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் முகூர்த்த தினங்கள் இல்லாததால் மல்லிகைப்பூ விலை குறைந்து ரூ.௩௫௦-க்கு விற்பனையானது.
- மல்லிகை விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் பல்வேறு வகையான பயிர்களை அதிகளவில் பயிரிட்டு அறுவடை செய்து வருகிறார்கள்.
இதே போல் சத்திய மங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர், சிக்கரசம் பட்டி, புது வடவள்ளி, ராஜன் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் பலர் மல்லிகைப்பூ உள்பட பல்வேறு பூக்கள் பயிரிட்டு உள்ளனர்.
இந்த பகுதிகளில் விளையும் பூக்களை சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே செயல்படும் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சத்தியமங்கலத்தில் விற்பனை செய்யப்படும் மல்லிகைப் பூக்கள் உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கு விற்பனை செய்யப்படும் பூக்கள் பொதுமக்கள் விரும்பி வாங்குகிறார்கள். இதனால் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் இங்கு வந்து பூக்களை அதிகளவில் கொள்முதல் செய்கிறார்கள்.
மேலும் இந்த பகுதிகளில் விளையும் மல்லிகைப் பூக்கள் சிங்கப்பூர், துபாய், சார்ஜா உள்பட பல வெளி நாடுகளுக்கு நறுமணப் பொருட்கள் தயாரிக்க ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதனால் இங்கு மல்லிகைப்பூ சாதாரண நாட்களில் ரூ.500 வரையும் முகூர்த்தம் மற்றும் விழாக் காலங்களில் ரூ.3 ஆயிரம் வரையும் வியாபாரிகள் கொள்முதல் செய்கிறார்கள். கேரளா மாநிலத்தில் நடக்கும் விஷேச நாட்களில் விலை மேலும் உயர்ந்து காணப்படும்.
இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு முகூர்த்த நாட்கள் தொடர்ச்சியாக வந்தது. இதனால் மல்லிகைப்பூக்கள் தேவை அதிகரித்தது. இதன் காரணமாக மல்லிகைப் பூ ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக முகூர்த்த நாட்கள் இல்லாததால் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை குறைந்தது. கடந்த ஒரு மாதமாக 1 கிலோ மல்லிகைப்பூ ரூ.2 ஆயிரத்துக்கு மேல் விற்பனையானது.
ஆனால் முகூர்த்தம் மற்றும் விஷேச நாட்கள் இல்லாததால் வியாபாரிகள் ஒரு சிலர் மட்டுமே வந்திருந்தனர்.
இதனால் நேற்று 1 கிலோ மல்லிகை ரூ.350-க்கு விற்பனை செய்யப்பட்டது. மல்லிகை விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டி பூக்கள் விலை நிலவரம் வருமாறு:
மல்லிகை ரூ.350, முல்லை ரூ.100, காக்கடா ரூ.75, செண்டு மல்லி ரூ.28, கனகாம்பரம் ரூ.550, சம்பங்கி ரூ.10, அரளி ரூ.50, செவ்வந்தி ரூ.120 விற்பனையானது.
- மதுரையில் மல்லிகைப்பூ விலை கிடுகிடு உயர்ந்துள்ளது.
- 200-க்கும் மேற்பட்ட சில்லறை மற்றும் மொத்த விற்பனை மலர் வியாபாரிகள் உள்ளனர்.
மதுரை
மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலையம் அருகே ஒருங்கிணைந்த மலர் வணிக வளாகம் உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட சில்லறை மற்றும் மொத்த விற்பனை மலர் வியாபாரிகள் உள்ளனர்.
இங்கு மதுரை மட்டுமன்றி விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு வருகின்றன. எனவே மாட்டுத்தாவணி மலர் சந்தையில் நாள்தோறும் சராசரியாக 50முதல் 60 டன்னுக்கும் மேலாக பூக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
மாட்டுத்தாவணி மலர் சந்தையில் கடந்த சில நாட்களாக ரூ500 முதல் ரூ700 வரை மல்லிகைப்பூ விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் இன்று அதன் விலை கிலோ ரூ.1600ஆக உயர்ந்தது. அதேபோல பிச்சி கிலோ ரூ.400, முல்லைரூ.300, செண்டு மல்லி ரூ.70, பட்டன் ரோஸ் ரூ.80 விலைக்கு விற்கப்பட்டு வருகின்றன.
மதுரை மாட்டுத்தாவணி சில்லரை மலர் வணிகர் சங்கத் தலைவர் ராமச்சந்திரனிடம் கேட்டபோது, "மதுரையில் அடுத்த சில நாட்கள் முகூர்த்த காலம் என்பதால், மல்லிகைப்பூவின் விலையில் மாற்றம் இருக்காது" என்று தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்