search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆட்டிறைச்சி"

    • இறைச்சி கடைகளை அனுமதி பெற்று நடத்துபவர்கள் யாரும் பொது இடங்களில் கழிவுகளை கொட்டுவது இல்லை.
    • கோழி இறைச்சி கழிவுகளை வாங்கிச் சென்று தாங்கள் வளர்க்கும் இறால் மற்றும் மீன்களுக்கு பயன்படுத்துகிறார்கள்.

    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதி பெறாத கடைகளில் இருந்து இறைச்சி கழிவுகள் பொது இடங்களில் கொட்டப்படுவது தொடர்பாக தமிழ்நாடு அனைத்து இறைச்சி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்க தலைவரான ராயபுரம் அலியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    முறைப்படி இறைச்சி கடைகளை அனுமதி பெற்று நடத்துபவர்கள் யாரும் பொது இடங்களில் கழிவுகளை கொட்டுவது இல்லை. கடைகளில் மாநகராட்சி ஊழியர்களே நாங்கள் தனித்தனியாக பிரித்து வைத்திருக்கும் கழிவுகளை எடுத்துச் சென்று விடுவார்கள். கோழி இறைச்சியில் இருந்துதான் அதிக அளவில் கழிவுகள் குவியும். மற்றபடி ஆட்டு இறைச்சியில் இருந்து அதிக கழிவுகள் குவிவதில்லை.

    ஏனென்றால் ஆட்டிலுள்ள உறுப்புகளில் அனைத்துமே பயன்படுபவைதான். கோழி இறைச்சி கழிவுகளை சில கம்பெனிகள் வாங்கி சென்று விடுகின்றன. இறால் பண்ணை மீன் வளர்ப்பு போன்ற பண்ணைகளில் இருந்து வருபவர்கள் கோழி இறைச்சி கழிவுகளை வாங்கிச் சென்று தாங்கள் வளர்க்கும் இறால் மற்றும் மீன்களுக்கு பயன்படுத்துகிறார்கள்.

    இதே போன்று மாநகராட்சி நிர்வாகமும் சென்னையில் இறைச்சி கடைகளில் கழிவுகளை சேகரிக்க அனுமதி வழங்கி விடலாம். இதன் மூலம் அந்த கழிவுகள் தேங்காமல் பார்த்துக் கொள்ள முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்

    • தீபாவளி பண்டிகையையொட்டி மதுரையில் மல்லிகை பூக்கள் ரூ.1,200-க்கு விற்பனை ஆட்டிறைச்சி விலை ரூ.ஆயிரத்தை தொட்டது
    • பிற்பகலில் இருந்தே ஆட்டிறைச்சி விற்பனை களைகட்டியது

    மதுரை

    நாடு முழுவதும் உற்சாகத்துடன் தீபாவளி பண்டிகை நாளை (திங்கள் கிழமை) கொண்டாடப்படுகிறது. மதுரையிலும் வழக்கமான உற்சாகத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் முன்னேற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

    மார்க்கெட்கள் மற்றும் பஜார் கடைகளில் தேவையான பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. மாசி வீதிகள், காமராஜர் சாலை, நேதாஜி ரோடு, பெரியார் பஸ் நிலையப் பகுதி, பைபாஸ் ரோடு, சிம்மக்கல், யானைக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    சாலையோர கடைகளும் அதிகரித்துள்ளதால் பொருட்களை வியாபாரிகளும் போட்டி போட்டு குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் மதுரையில் தீபாவளி வியாபாரம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

    மல்லிகை ரூ.1200

    மதுரை பூ மார்க்கெட்டில் இன்று ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1200 -க்கு விற்கப்பட்டது.முல்லை ரூ.1200-க்கும், பிச்சி ரூ.1000-க்கும், கனகாம்பரம் ரூ.1500-க்கும், அரளி, சம்பங்கி 150-க்கும், மரிக்கொழுந்து ரூ.100-க்கும் , தாமரைப்பூ ரூ.10-க்கும் விற்பனையாகி வருகிறது.

    பூ மார்க்கெட்டில் இன்று ஏராளமானோர் திரண்டு ஆர்வமாக வாங்கி வருவதால் பூக்களின் விலை மாலையில் சற்று அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ஆட்டிறைச்சி ரூ.1000

    மதுரையில் தீபாவளி பண்டிகையொட்டி அசைவ பிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆங்காங்கே இறைச்சி கடைகள் போடப்பட்டுள்ளன. இன்று பிற்பகலில் இருந்தே ஆட்டிறைச்சி விற்பனை களைகட்டியது.

    சாலை ஓரம் மற்றும் இறைச்சி கடைகளில் சுமார் 5 ஆயிரம் ஆடுகள் தீபாவளி பண்டிகைக்காக வெட்டப்படுகின்றன.

    சில நாட்களுக்கு முன்பு வரை கிலோ ரூ.800 முதல் ரூ.900 வரை விற்கப்பட்ட ஆட்டிறைச்சி தீபாவளியையொட்டி ரூ. ஆயிரமாக அதிகரித்தது.

    ஆடுகளின் விலை ஏற்றம் காரணமாக இறைச்சி விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பட்டாசு கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. விதவிதமான பட்டாசுகள் இந்த ஆண்டு விற்பனைக்கு வந்துள்ளதால் குடும்பத்துடன் வந்து பொதுமக்கள் பட்டாசுகளை வாங்கி சென்றனர்.

    ×