search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "infection"

    • சுகாதாரத்துறையும் கொரோனா பரிசோதனைகளை அதிகரித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
    • கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் இன்னும் வரவில்லை.

    புதுச்சேரி:

    புதுவையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரிதத்து வருகிறது.

    இதனையடுத்து சுகாதாரத்துறையும் கொரோனா பரிசோதனைகளை அதிகரித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடி க்கைகளை எடுத்துள்ளது. புதுவை மாநிலத்தில் 827 கொரோனா பரிசோ தனைகள் செய்யப்பட்டன.

    இதில் புதுவையில் 55 பேர், காரைக்காலில் 23 பேர், ஏனாமில் 2 பேர், மாகியில் 2 பேர் என மொத்தம் 82 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதில் புதுவையில் 7 பேர், காரைக்காலில் 2 பேர் என மொத்தம் 9 பேர் மருத்துவமனையிலும், 262 பேர் வீட்டு தனிமையிலும் என மொத்தம் 271 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    இன்று 15 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு ஏதும் இல்லை. தற்போது ஜிப்மரில் ஒருவரும், கோரிமேடு மார்பக மருத்துவமனையில் 2 பேரும், கோவிட் கேர் சென்டர்களில் 6 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.

    இத்தகவல்களை சுகாதா ரத்துறை தெரிவித்துள்ளது.புதுவையில் கடந்த சில தினங்களாக கொரோனா படிப்படியா அதிகரித்து வருகிறது. இது புதுவை மக்களிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    இருந்தபோதிலும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் இன்னும் வரவில்லை. முகக் கவசம் அணிவது கட்டாயம் என்று அரசு அறிவித்துள்ள நிலையில் நேற்று பொது இடங்களில் திரிந்த பொதுமக்கள் பெரும்பாலானவர்கள் முகக் கவசம் அணியவில்லை.

    ஒரு சதவீதத்துக்கும் முறை வானவர்கள் மட்டுமே முகக் கவசம் அணிந்திருந்தனர். அதே நேரத்தில் சுற்றுலா பயணிகளும் முகக் கவசம் அணியாமலேயே புதுவையை வலம் வந்தனர்.

    • கொரோனா தொற்று மீண்டும் தீவிரமாகி வருகிறது.
    • முககவசம் வழங்கப்பட்டு மருத்துவமனைக்கு செல்ல நோயாளிகளின் உறவினர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    நாமக்கல்:

    நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் தீவிரமாகி வருகிறது. இதனால் அந்தந்த மாநிலங்கள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் தமிழகத்தில் அரசு மருத்து வமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள், அவர்களுடன் இருப்பவர்கள், பாது காவலர்கள், பணியாளர்கள் என அனைவரும் ஏப்ரல் 1 முதல் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பிறப்பித்து இருந்தார்.

    அதன்படி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முகக்கவசம் அணியாமல் வந்த நோயாளிகளின் உறவினர்களை அங்கிருந்து பாதுகாவலர்கள் வெளியேற்றினர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பிறகு முக கவசம் வழங்கப்பட்டு மருத்துவமனைக்கு செல்ல நோயாளிகளின் உறவினர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    • 38 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
    • அதில், சேலம் மாநகராட்சியில் 18 பேருக்கு தொற்று.

    சேலம்:

    சேலத்தில் நேற்று 38 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதில், சேலம் மாநகராட்சியில் 18 பேர், மேச்சேரி, நங்கவள்ளி, வீரபாண்டி, பனமரத்துப்பட்டி பகுதியில் தலா 3, ஆத்தூர் நகராட்சி, மேட்டூர் நகராட்சியில் தலா 2 பேர், தாரமங்கலம், மகுடஞ்சாவடி, கொளத்தூர் பகுதியில் தாலா ஒருவர் என சேலம் மாவட்டத்தில் 37 பேரும், தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் என 38 பேருக்கு தொற்று உறுதியானது. இன்றும் மேலும் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

    வெங்கடேஸ்வரா நகரில் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது

    கரூர்:

    கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் - தாந்தோணிமலை செல்லும் வழியில் வெங்கடேஸ்வரா நகர் உள்ளது. இந்த நகரில் சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியிலிருந்து டெக்டைல்ஸ், கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் நூற்றுக்கணக்கில் சென்று வருகின்றனர்.

    ராயனூர் முதல் தாந்தோணிமலை வரை வெங்கடேஸ்வர நகர் வழியாக சாக்கடை கால்வாய் செல்கிறது. இந்த சாக்கடை கால்வாய் மாத கணக்கில் சுத்தம் செய்யாததால், பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பைகள் அதிக அளவு தேங்கி கழிவுநீர் வெளியேற முடியாமல் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசு தொல்லையுடன், குடியிருப்பு பகுதிகளில் ஈக்கள் அதிகமாக வருவதுடன், தொற்று நோய் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

    மாணவ, மாணவிகள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் உள்ளிட்டவர்களுக்கு தொற்றுநோய் ஏற்பட்டு டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவுவதற்கு முன்பு, பொதுமக்களை பாதுகாத்திடும் வகையில் கரூர் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக சாக்கடை கால்வாயை சுத்தம் செய்து சுகாதாரமாக பராமரித்திட வேண்டும், கழிவுநீர் தேங்காத வகையில் சாக்கடை கால்வாயை தொடர்ந்து சுத்தம் செய்திட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெங்கடேஸ்வரா நகர் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதி கரித்தும், குறைந்தும் என மாறி, மாறி நிலவி வருகிறது.
    • நேற்று மட்டும் 35 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதி கரித்தும், குறைந்தும் என மாறி, மாறி நிலவி வருகிறது. நேற்று மட்டும் 35 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் சேலம் மாநகராட்சியில் 11 பேருக்கும், சேலம் சுகாதார மாவட்டத்தில் ஓமலூர், சங்ககிரி, வீரபாண்டி, தாரமங்கலம், மேச்சேர், கொளத்தூர், எடப்பாடி பகுதிகளில் 10 பேருக்கும், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் ஆத்தூர், பனமரத்துப்பட்டி, கெங்கவல்லி, பெத்த நாயக்கன்பாளையம், வாழப்பாடி பகுதிகளில் 7 பேருக்கும், நகராட்சி பகுதி களில் 2 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தருமபுரி, நாமக்கல் மாவட்டத்தில் இருந்து சேலம் வந்த 5 பேருக்கும் தொற்று உறுதி செயயப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் இது வரை 1.30 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.28 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,762 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

    • 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • சேலம் வந்த 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவல் திடீரென அதிகரித்தும், குறைந்தும், வருகிறது. அந்த வகையில் நேற்று 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியில் 6 பேருக்கும், சேலம் சுகாதார மாவட்டத்தில் ஓமலூர், வீரபாண்டி, சேலம், தாரமங்கலம், எடப்பாடி பகுதி களில் 8 பேருக்கும், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் ஆத்தூர், அயோத்தியாப்பட்டணம் பகுதி களில் 2 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி, ஈரோடு, நாமக்கல், கள்ளக்குறிச்சி, சென்னை மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • கொரோனா பாதிப்பு தற்போது குறைய தொடங்கி உள்ளது.
    • தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவ–மனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    சேலம்:

    சேலத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது குறைய தொடங்கி உள்ளது. அதன்படி நேற்று முன்தினம் சேலம் மாவட்டத்தில் 37 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. நேற்று 36 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சியில் 15 பேரும், சேலம் சுகாதார மாவட்டத்தில் ஓமலூர், வீரபாண்டி, தாரமங்கலம், மேச்சேரி, காடையாம்பட்டி பகுதிகளில் 10 பேரும், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் ஆத்தூர், தலைவாசல், பனமரத்துப்பட்டி, அயோத்தியாப்பட்டணம் பகுதிகளில் 8 பேருக்கும், நகராட்சிகளில் 3 பேருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவ–மனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    • சேலம் மாவட்டத்தில் நேற்று 54 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது ஆஸ்பத்திரி ஆய்வகங்களில் நடத்தப்பட்ட பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
    • இன்றும் காய்ச்சல், தீராத சளி உள்ளிட்ட தொந்தரவுகளால் சிலர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் நேற்று 54 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது ஆஸ்பத்திரி ஆய்வகங்களில் நடத்தப்பட்ட பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் சேலம் மாநகராட்சியில் 11 பேர், வீரபாண்டி-4 பேர், கெங்கவல்லி-3 பேர், பனமரத்துப்பட்டி -2 பேர், மேட்டூர் நகராட்சி, அயோத்தியாப்பட்டணம், ஆத்தூர்,கொளத்தூர், சங்ககிரி, ஓமலூர் தலா ஒருவர் என சேலம் மாவட்டத்தில் 26 பேர், பிற மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த தலா 8 பேர், சென்னை- 6 பேர், கரூர்-3 பேர், கிருஷ்ணகிரி-2 பேர், கள்ளக்குறிச்சி ஒருவர் என 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்தது.

    இன்றும் காய்ச்சல், தீராத சளி உள்ளிட்ட தொந்தரவுகளால் சிலர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ரத்தம், சளி ஆகியவை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்பது குறித்த விபரம் இன்று மாலை சுகாதார துறை சார்பாக வெளியிடப்படும் அறிக்கையில் தெரியவரும்.

    • சேலம் சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 55 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டிருந்தனர்.
    • இந்நிலையில் நேற்று புதிதாக 56 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 55 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று புதிதாக 56 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அதேநேரத்தில் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 64 பேர் குணமடைந்து விட்டதால் நேற்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மாவட்டத்தில் தற்போது 447 பேர் மட்டும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • 688 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    • கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சுகாதார, மருத்துவ துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

    2 ஆயிரத்து 127 பேர்

    சேலம் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாத தொடக்கத்தில் தினசரி கொரோனா பாதிப்பு சேலம் மாவட்டத்தில் 33 ஆகவும் நாமக்கல் மாவட்டத்தில் 15 ஆகவும் இருந்தது. பின்பு பாதிப்பு அதிகரித்து வந்தது. ஜூலை 15-ந்தேதி தினசரி பாதிப்பு சேலத்தில் 83 ஆகவும், நாமக்கல்லில் 21 ஆகவும் அதிகரித்தது. தொடர்ந்து பாதிப்புகள் அதிகமான நிலையில் நேற்று பாதிப்பு எண்ணிக்கை சேலத்தில் 65 ஆகவும், நாமக்கல்லில் 34 ஆகவும் இருந்தது.

    ஜூலை மாதத்தில் மட்டும் சேலம் மாவட்டத்தில் 1328 பேருக்கும், நாமக்கல் மாவட்டத்தில் 799 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஒரே மாதத்தில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மொத்தம் 2 ஆயிரத்து 127 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் அரசு, தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றனர். கொரோனா பாதிப்பினால் யாரும் இறக்கவில்லை என்பது ஆறுதலை அளிக்கிறது.

    688 பேருக்கு சிகிச்சை

    சேலம் மாவட்டத்தை பொருத்தவரை இதுவரை மொத்தம் 1 லட்சத்து 29 ஆயிரத்து 476 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். 1 லட்சத்து 27 ஆயிரத்து 235 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். தற்போது 479 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை கொரோனாவால் 1762 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள்.

    நாமக்கல் மாவட்டத்தை பொருத்தவரை இதுவரை மொத்தம் 68 ஆயிரத்து 897 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். 68 ஆயிரத்து 154 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். தற்போது 209 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை கொரோனாவால் 534 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள்.

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் தற்போது 688 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவ தால் சுகாதார, மருத்துவ துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 67 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 421 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

    பிற மாவட்டங்களில் தினசரி பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஈரோட்டில் கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 67 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்து 139 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் சிகிச்சையில் இருந்த 61 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 984 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 421 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மாவட்டத்தில் மெல்ல மெல்ல கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என சுகாதாரத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

    • சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 77 பேர் நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டிருந்தனர்.
    • நேற்று புதிதாக 74 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தநிலையில் தற்போது குறைய தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் 77 பேர் நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று புதிதாக 74 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சேலம் மாநகராட்சியில் 23 பேர், வீரபாண்டி, பனமரத்துப்பட்டியில் தலா 4 பேர், ஓமலூரில் 3 பேர், மேட்டூர், ஆத்தூரில் தலா 2 பேர், அயோத்தியாப்பட்டணம், காடையாம்பட்டி, கொளத்தூர், மகுடஞ்சாவடி, மேச்சேரி, கொங்கணாபுரம், தாரமங்கலம், நங்கவள்ளி ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப் பட்டுள்ளனர்.

    சேலம் மாவட்டத்திற்கு நாமக்கல்லில் இருந்து வந்த 6 பேர், ஈரோடு, வேலூரில் வந்த தலா 5 பேர், கரூர், சென்னையில் இருந்து வந்த தலா 4 பேர், கள்ளக்குறிச்சியில் இருந்து வந்த 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    நாமக்கல் மாவட்டம்

    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. நேற்று மட்டும் 33 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.

    இதுவரை இந்த மாவட்டத்தில் கொரோனா வால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68,710 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 67,953 பேர் சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 534 பேர் இறந்துவிட்ட நிலையில் மீதமுள்ள 223 பேரில் பலர் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டும், சிலர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மொத்தம் 107 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    ×