search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் முககவசம் அணியாதவர்கள் வெளியேற்றம்
    X

    நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் முககவசம் அணியாதவர்கள் வெளியேற்றம்

    • கொரோனா தொற்று மீண்டும் தீவிரமாகி வருகிறது.
    • முககவசம் வழங்கப்பட்டு மருத்துவமனைக்கு செல்ல நோயாளிகளின் உறவினர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    நாமக்கல்:

    நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் தீவிரமாகி வருகிறது. இதனால் அந்தந்த மாநிலங்கள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் தமிழகத்தில் அரசு மருத்து வமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள், அவர்களுடன் இருப்பவர்கள், பாது காவலர்கள், பணியாளர்கள் என அனைவரும் ஏப்ரல் 1 முதல் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பிறப்பித்து இருந்தார்.

    அதன்படி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முகக்கவசம் அணியாமல் வந்த நோயாளிகளின் உறவினர்களை அங்கிருந்து பாதுகாவலர்கள் வெளியேற்றினர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பிறகு முக கவசம் வழங்கப்பட்டு மருத்துவமனைக்கு செல்ல நோயாளிகளின் உறவினர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    Next Story
    ×