என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலம் மாவட்டத்தில் 38 பேருக்கு கொரோனா
- 38 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
- அதில், சேலம் மாநகராட்சியில் 18 பேருக்கு தொற்று.
சேலம்:
சேலத்தில் நேற்று 38 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதில், சேலம் மாநகராட்சியில் 18 பேர், மேச்சேரி, நங்கவள்ளி, வீரபாண்டி, பனமரத்துப்பட்டி பகுதியில் தலா 3, ஆத்தூர் நகராட்சி, மேட்டூர் நகராட்சியில் தலா 2 பேர், தாரமங்கலம், மகுடஞ்சாவடி, கொளத்தூர் பகுதியில் தாலா ஒருவர் என சேலம் மாவட்டத்தில் 37 பேரும், தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் என 38 பேருக்கு தொற்று உறுதியானது. இன்றும் மேலும் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Next Story






