search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெளி மாவட்டங்களில் இருந்து  சேலம் வந்த 12 பேருக்கு கொரோனா
    X

    வெளி மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த 12 பேருக்கு கொரோனா

    • 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • சேலம் வந்த 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவல் திடீரென அதிகரித்தும், குறைந்தும், வருகிறது. அந்த வகையில் நேற்று 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியில் 6 பேருக்கும், சேலம் சுகாதார மாவட்டத்தில் ஓமலூர், வீரபாண்டி, சேலம், தாரமங்கலம், எடப்பாடி பகுதி களில் 8 பேருக்கும், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் ஆத்தூர், அயோத்தியாப்பட்டணம் பகுதி களில் 2 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி, ஈரோடு, நாமக்கல், கள்ளக்குறிச்சி, சென்னை மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×