search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொரோனா"

    • ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் மீண்டும் கொரோனா வார்டு
    • 298 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கொரானா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    இதையடுத்து மாவட்டம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதிப்பு மற்றும் சளி தொல்லையால் அவதிப்படுபவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. நேற்று மாவட்டம் முழுவதும் 298 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ராஜாக்கமங்கலம், தக்கலை ஒன்றிய பகுதிகளில் தலா ஒருவரும், நாகர்கோவில் மாநகரப் பகுதியில் 2 பேரும், குருந்தன்கோடு ஒன்றிய பகுதியில் 2 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கொரோனா அதிகரித்து வருவதையடுத்து முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்து றை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். கொரோனா பரவல் அதிகரித்து உள்ளதால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள மத்திய அரசு உத்தர விட்டுள்ளது.

    அதன்படி தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகளை சுகாதாரத்து றை மேற்கொண்டு வரு கிறது. ஏப்ரல் முதல் வாரத்தில் ஒத்திகை நடை பெற உள்ளது. இந்த நிலையில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பு நடவ டிக்கைகள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

    மருத்துவ கல்லூரி முதல்வர் பிரின்ஸ்பயஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அருள் பிரகாஷ் உறைவிட மருத்துவர் டாக்டர் ஜோசப்சென் மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து மருத்துவக்கல்லூரி முதல்வர் பிரின்ஸ்பயஸ் கூறியதாவது:-

    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் தற்பொழுது காய்ச்சலுக்காக தனி புற நோயாளிகள் பரிசோதனை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சல் காய்ச்ச லுக்கு தனி வார்டும் செயல்பட்டு வருகிறது.

    ஏற்கனவே கொரோனா பரவல் இருந்த கால கட்டத் தில் கொேரானா சிகிச்சை வார்டுகள் தனியாக இருந்தது. தற்போது அங்கு மீண்டும் கொரானா சிகிச்சை வார்டுதொடங்கப்பட உள்ளது. பரிசோதனை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். போதுமான அளவு ஆக்ஸி ஜன் மருந்துகள் உள்ளது. பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை.பாதிப்பு அதிகமாக ஏற்பட் டால் அதை சமாளிக்கவும் தயார் நிலையில் உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாவட்டம் முழுவதும் மருத்துவ முகாம்கள் நடத்தப் பட்டு வருகிறது.
    • தினமும் 2, 3 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது

    நாகர்கோவில் :

    தமிழகத்தில் மீண்டும் கொேரானா பாதிப்பு அதிக ரிக்க தொடங்கியுள்ளது.

    இதையடுத்து முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வரு கிறது. பள்ளித்தேர்வுகளை முன்கூட்டியே நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. கொரோ னாவை கட்டுப்படுத்தும் விதத் தில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண் டும் என்று அரசு வேண்டு கோள் விடுத்துள்ளது. மாவட்டம் முழுவதும் மருத்துவ முகாம்கள் நடத்தப் பட்டு வருகிறது.

    குமரி மாவட்டத்திலும் மருத்துவ முகாம்கள் நடை பெற்று வருகிறது. நடமாடும் மருத்துவ குழு மூலமாகவும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளிலும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்டத்தில் ஏற்கனவே நடந்து வரும் மருத்துவ முகாம்களில் தினமும் 2, 3 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது. மேலும் சளி பாதிப் பால் 25-க்கும் மேற்பட் டோர் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

    இது ஒரு புறம் இருக்க கொரோனா பாதிப்பும் அதிகரித்து வருவதாக குமரி மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே கடந்த மாதத்தில் 15 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் இந்த மாதத்தில் இதுவரை 25-க்கும் மேற் பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவு றுத்தப்பட்டுள்ளது. அரசு தெரிவித்துள்ள விதிமுறை களை கடைபிடிக்க வேண் டும் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. குமரி மாவட்ட எல்லை பகுதிகளிலும் சுகா தா ரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள்.

    வெளிநாடுகளில் இருந்து வருபவர்களும் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

    • சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 67 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 421 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

    பிற மாவட்டங்களில் தினசரி பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஈரோட்டில் கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 67 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்து 139 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் சிகிச்சையில் இருந்த 61 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 984 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 421 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மாவட்டத்தில் மெல்ல மெல்ல கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என சுகாதாரத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

    • புதிதாக 43 பேருக்கு தொற்று
    • பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் சுற்றித் திரிபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியது.

    முதலில் மேற்கு மாவட்ட பகுதிகளில் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் தற்போது நாகர்கோவில் நகரப் பகுதியிலும் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. கடந்த 25 நாட்களில் 549 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகரித்து வருவ தையடுத்து மாவட்டம் முழுவதும் கொரோனா சோதனையை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரி கள் நடவடிக்கை மேற்கொ ண்டுள்ளனர்.

    நேற்று ஒரே நாளில் 906 பேருக்கு சோதனை நடத்தப்பட்டது. அதில் 43 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 17 பேர் ஆண்கள், 26 பேர் பெண்கள் ஆவார்கள். பாதிக்கப்பட்டவர்களில் இரண்டு பெண் குழந்தைகளும் அடங்கும். சமீபகால மாக பெண்களே அதிகமாக கொரோனாவால் பாதிக்க ப்பட்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில் மாநகர பகுதியில் 13 பேருக்கு தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே மருத்துவ மாணவர்கள் 3 பேர் ெகாேரானாவால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று மேலும் ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டு தயார் நிலையில் உள்ளது.அங்கு 8 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    ஆசாரிபள்ளம் ஆஸ்பத்தி ரியில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட பெண் ஒருவருக்கு கடந்த வாரம் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் கொரோனா சோதனை மேற் கொள்ள ப்பட்ட நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் அவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். அவரை டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள். தற்போது அவர் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    கொேரானாவை கட்டுப்படுத்தும் வகை யில் முகக்கவசம் சோத னையை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை அதி காரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து அரசு அலுவலகங்களுக்கு பணிக்கு வந்தவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து பணிக்கு வந்திருந்தனர்.

    பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் சுற்றித் திரிபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். பொதுமக்கள் கொரோ னாவை கட்டுப்படுத்தும் வகையில் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று வேண்டு கோள் விடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கலெக்டர் தெரிவித்து ள்ளார்.

    • சேலம் மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 11 பேருக்கு கொரோனா.
    • கொரோனா தொற்று மீண்டும் தற்போது வேகம் எடுத்துள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில் மீண்டும் தற்போது வேகம் எடுத்துள்ளது.

    சேலம் மாவட்டத்தில் கடந்த 22-ந் தேதி 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் 23-ந் தேதி தொற்று எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது. நேற்று மேலும் 11 பேருக்கு தொற்று ஏற்பட்டது.

    தொற்று பாதிபபு ஏற்பட்டவர்கள் ஆஸ்பத்திரி மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஏற்கனவே 48 பேர் சிகிச்சையில் இருந்த நிலையில் நேற்று 4 பேர் வீடு திரும்பினர். இதனால் மேலும் 55 பேர் வீடு மற்றும் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையில் உள்ளனர்.

    இனி வரும் நாட்களில் கொேரானா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பொது மக்கள் முககவசம் அணிவதுடன், சமூக இடைவெளியையும் கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

    • சேலம் மாவட்டத்தில் வேகமாக பரவும் கொரோனாவால் ஒரே நாளில் 13 பேர் பாதிக்கப்பட்டனர்.
    • மகுடஞ்சாவடியில் 4 பேர் உள்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில் மீண்டும் தற்போது வேகம் எடுத்துள்ளது.

    நேற்று முன்தினம் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் நேற்று பாதிப்பு எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது . இதில் சேலம் மாநகராட்சியில் மட்டும் 5 பேருக்கும், எடப்பாடி, நங்கவள்ளி, மேட்டூர் பகுதிகளில் தலா ஒருவருக்கும், மகுடஞ்சாவடியில் 4 பேர் உள்பட 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதனால் இனி வரும் நாட்களில் மேலும் வேகமாக ெகாரேனா பரவ வாய்ப்பு உள்ளது. நேற்று 4 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மேலும் 39 பேர் ஆஸ்பத்திரிகளிலும், வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    அதிகாரிகள் வலியுறுத்தல்

    இனி வரும் நாட்களில் கொேரானா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பொது மக்கள் முககவசம் அணிவதுடன், சமூக இடைவெளியையும கடை பிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர். 

    ×